pm logo

பாரதிதாசன் கவிதைகள் :
வேங்கையே எழுக


poems of pAratitAcan
vEngkaiyE ezuka
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பாரதிதாசன் கவிதைகள் :
வேங்கையே எழுக

Source:
வேங்கையே எழுக
பாவேந்தர் பாரதிதாசன்
பூம்புகார் பதிப்பகம்,
63, பிராட்வே, சென்னை 600 108
விலை ரூ 12.90
பூம்புகார் வெளியீட்டு எண் 74
முதற் பதிப்பு: ஏப்ரல் 1978, இரண்டாம் பதிப்பு ஏப்ரல் 1990
--------------

வேங்கையே எழுக - உள்ளடக்கம்
1. நாட்டுக்கு நான்
2. வருக விடுதலை வாழ்வு
3. ஆட்பட்டிருப்பது வெட்கம்
4. வெல்க தமிழ் நாடு
5. விடுதலைப்‌ பாட்டு
6. மக்கள் பாசறை
7. பட்டாளம் கிளம்பிற்றுக் கொட்டடா பறை
8. ஆளவந்தார்க்கு இறுதி அறிக்கை
9. கொலைப்படை வேண்டும்
10. குடும்பத்தோடு புறப்படு
11. புகழைத் தேடு
12. திராவிட நாட்டுக் கொடி வணக்கம்
13. எங்கள்‌ கொடி
14. சென்னை பற்றிச் சண்டையா?
15. தனியாக்கப் போராங்கோ
16. திராவிடர் ஒன்று படவேண்டும்
17. திராவிடர் மீட்சி
18. மெதுப்போக்குத் திராவிடனுக்கு முற்போக்குத் திராவடன் மொழிதல்
19. திராவிட நாட்டுத் தொண்டால் வரும் இன்பம்
20. ஒன்று சேர வேண்டும்
21. திராவிட நாட்டுப் பண்
22 பெரியார் அறப்போர்
23. எவர் பெரியார் அவர் வாழ்க
24. பெரியார் போர் வெல்லும்
25. ஞாலப் பெரியார் பாதை
26. குடியரசில் இதுவோ கதி
27. புதுப் போர்
28. எதுபிரிவினை மனப்பான்மை
29. காமராசர் ஆட்சியில் ஓட்டை
30. நேருவின் ஆட்சி
31. இந்தித் திணிப்புச் சரியல்ல!
32. இந்தி ஒழிக
33. இராசாசி வயிற்றெரிச்சல்
34. வெல்க!
35. கீழறுப்பான் வாழுவானா?
35. மீட்சிப்‌ பத்து
37. மிடிமை தீரக் கடமை புரிவீர்
38. அவர் செல்லும் பாதை
39. போர் தொடங்கு!
40. வருக போரே!
41. சூயென்லாய் சீனரின் நோய்
42 வலை விரித்தான் ஆச்சாரி
43. இந்திப் போர் மூளுக
44. புதுவாழ்வு வேண்டும்
45. படித்தவன் அழுகை
46. வெல்வதுறுதி
47. விடுதலை நம் உரிமை
48. எங்கள் நாடு தனிநாடு
49. எரிமலைச் சீற்றம்
50. வேங்கையே எழுக!
51. தன் கையே தனக்குதவி
52. தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான்
53. தீமை தீமை
54. சீறும் புலிகள் நாம்
55. இந்திப் பேயாட்டம்
56. அரிமா இடத்தில் நரிமாவா?
57. இந்தித் திணிப்பு
58. இந்தி எதற்கு?
59. குருதி பொங்கினால் ...
60. காற்றை விதைத்துப் புயலை அறுக்காதீர்
61. இந்தியை எதிர்ப்போம்
62. எல்லாத் துறையிலும் இந்தி ஒழிக
63. தமிழர் ஓங்கினர் வாள்
64. அடிமைத் தமிழன் தொல்லை
65. வடக்கின் இடக்கு அடக்கு
66. புறப்பாட்டுப் பாடு
67. வரலாற்றில் வெற்றிகொள்
68. இந்தி முக்காலமும் இல்லை என்று முழங்கு
--------

1. நாட்டுக்கு நான்

தமிழுக்குப் பிள்ளை -- அவன்
தளை நீக்கும் மறவன்
நமதன்பு நாட்டை -- இனி
நான் காக்கக் கடவேன்.
அமிழ் தொக்கும் தமிழர் -- நல்
அறம் காக்கும் மறவர்
தமை ஈன்ற நாடு -- தமிழ்த்
சான்றோரின் வீடே.

சாவைத் தொலைத்தேன் -- தமிழ்த்
தாய்க்கு வாழ் கின்றேன்
பா ஒன்றி னாலே -- தமிழ்ப்
பண்பாடு காப்பேன்.
நாவை அசைத்தால் -- ஒரு
நானூறி லக்கம்
மூவேந்தர் பேரர் -- பகை
முற்றும் தொலைப்பார்.

ஞாலம் முழங்கும் -- தமிழ்
நான் மறை நன்றே
காலந் திரும்பும் -- தெற்குக்
கடலும் ஒதுங்கும்
சோலைகள் காண்பேன் -- அங்குத்
தென்னகர் காண்பேன்
நாலு திசைகள் -- தமிழ்
நாடென் றடங்கும்
-------------

2. வருக விடுதலை வாழ்வு

வருக விடுதலை வாழ்வு
விடுதலை வாழ்வே வாவா-.-. எம்‌
வெற்றிப்‌ பயனே வாவா
கெடுதலை மாய்த்தாய்‌ வாவா... ஓரு
கீம்மை தொலைத்தாய்‌ வாவா
தடதடவென்றே. சா. எனும்‌
குடையை இடித்தாய்‌ வாவா
அடிமை தவிர்த்தாய்‌ வாவா... நல்‌
அன்பில்‌ உயர்ந்தாய்‌ வாவா!
வாழ்வின்‌ பயனே வாவா... தமிழ்‌
மக்கள்‌ விருப்பே வாவா
தாழ்வு தவிர்த்தாய்‌ வாவா... எம்‌
தமிழின்‌ காப்பே வாவா
ஏழ்மை துடைத்தாய்‌ வாவா... நல்‌
இன்பக்‌ கடலே வாவா | |
ஆழப்‌ புதைத்தாய்‌ மடமை... நல்‌
அறிவில்‌ உயர்ந்தாய்‌ வாவா!
ஒரு மொழியால்‌ ஓர்‌ இனமாம்‌-.- அவ்‌
வோரினமே ஒரு நாடாம்‌
ஒரு நாடின்னொரு நாட்டைப்‌... போய்‌
ஓடுக்குதல்‌ ஒப்பாய்‌ வாவா
ஒருவன்‌ வாழ ஒருவன்‌
உழைக்க வேண்டும்‌ என்னும்‌
இருளைப்‌ பிளப்பாய்‌ வாவா... இங்‌
கெவர்க்கும்‌ ஒளியே வாவா!
ஊணும்‌ உடையும்‌ வீடும்‌. நல்‌
உயிரின்‌ நலமொடு கல்வி |
பேணும்‌ வகையில்‌ யாண்டும்‌-- காணில்‌
பெரியர்‌ சிறியவர்‌ இல்லை!
ஆணுரிமை பெண்ணுரிமை-.- நல்‌
அறத்தின்‌ காப்பே வாவா
வாணாள்‌ இடையில்‌ தமிழர்‌. பெற்ற
மாசு நுடைத்தாய்‌ வாவா!
உரிமை வாழ்வே வாவா.--.எம்‌
ஒற்றுமை விளைவே வாவா
பெரிது முயன்றார்‌ தமிழா்‌..-அவர்‌
பெற்றதோர்‌ பேறே வாவா
அரிது புரிந்தார்‌ தமிழர்‌. அவர்‌
ஆர்ந்த புகழே வாவா
வரைகடல்‌ உலகும்‌ தமிமழும்‌-.வானும்‌
வாழ்நாள்‌ வாழ்வாய்‌ வாவா!
------------

3. ஆட்பட்டிருப்பது வெட்கம்

இசை : காபி தாளம்‌ - ஆதி

மிடிமையே கொடுக்கும்‌ குடிமையே கெடுக்கும்‌
அடிமை வாழ்வும்‌ ஒரு வாழ்வா?-.நம்‌
கொடிய தளை அறுக்க உரிமைக்‌ கொடி பறக்கக்‌
கூடிப்‌ படை எடுத்தல்‌ தாழ்வா?
படிமன்னார்‌ தொழும்‌ மூன்று முடி மன்னர்‌ வழி
வந்தோம்‌
பழிமன்ன வாழ்திடலாமா?....நாம்‌
தொடுத்தது போர்‌! பகை தொலைந்தது பார்‌ என்று
சொல்லிட இரண்டு நாள்‌ ஆமா?
ஒருகுடி ஓரினம்‌! ஒருமொழி கொண்டவர்‌
ஓன்று பட்டார்‌ என்ற பேச்சு. நேர்‌
திருவிலாப்‌ பகைவர்‌ செவியினிலே வீழட்டும்‌
இர்ந்து போகும்‌ அவர்‌ மூச்சு!

உருவற்றுப்‌ போகட்டும்‌ தமிழினம்‌ என்றென்றே
ஓயாதுழைக்கும்‌ ஒரு கோட்டி. - அதன்‌
கருவற்றுப்‌ போம்படி. செய்வோம்‌ நமக்குள்ள
கைகள்‌ எட்டுக்‌ கோடி ஈட்டி!
ஆளாக வந்தவர்‌ ஆள்வதும்‌ ஆண்டவர்‌
ஆட்பட்டிருப்பதும்‌ டெகம்‌... மறத்‌
தோளாய்‌ இருந்தவை தோலாயின என்று
சொன்னால்‌ இவ்‌ வையகம்‌ சிரிக்கும்‌.
தூளாய்ப்‌ பறந்திடும்‌ வஞ்ச நெடுங்குன்றம்‌
தூங்கும்‌ தமிழர்‌ விழித்தால்‌--பின்‌
ஆளப்‌ பிறந்தவர்‌ ஆளுகின்றாரென |
அறிவோர்‌ வரைவார்‌ எழுத்தால்‌!
வாழ்க்கையிலோர்‌ சுவை, வையத்திலோர்‌ புகழ்‌!
வாரிரோ தமிழ்ச்‌ சங்கங்காள்‌!--வெந்‌
தீக்காட்டில்‌ வாழ்கின்ற செந்தமிழ்‌ நாட்டன்னை
மீட்க நமையழைக்‌ கின்றாள்‌! |
வீழ்ச்‌ அறிந்ததில்லை வேங்கைகளே எழுவீர்‌
வீரம்‌ நமைப்‌ பிரிந்ததில்லை....நம்‌
தாய்க்கா விலங்கு? தமிழ்க்கா துயரமிங்குத்‌
தாக்குவீர்‌! தீர்ந்தது தொல்லை!
--------------------

4. வெல்க தமிழ் நாடு

வெல்க தமிழ்நாடு :
இலங்கறத்தால்‌ வீரத்தால்‌ புகழைச்‌ செய்த

இத்‌ தமிழகத்‌ தாய்க்கு வடக்கன்‌ இட்ட
விலங்கறுக்கப்‌ புறப்பட்டான்‌ தமிழர்‌ குந்தை!
வெல்கவே வெல்கவே என்றார்‌ நாட்டார்‌[.
கலங்காத நெஞ்சத்து மறவர்‌ கூட்டக்‌

கடலொன்று படை என்று தொடரும்‌'போதும்‌
துலங்கா மூஞ்சிக்‌ கூட்டம்‌ ஒன்று மட்டும்‌
துட்டடித்துக்‌ கொண்டிருத்தல்‌ வெட்கக்‌ கேடு! .
தமிழினத்தைத்‌ தலை கவிழ்த்துத்‌ தமிழகத்தில்‌
குன்னினத்தை வளர்ப்பதென்ற பார்ப்பான்‌ ஆட்சி
நமைநோக்கி எளிய உரை மூன்று சொன்ன
நாக்கறுக்கப்‌ புறப்பட்டான்‌ தமிழர்‌ தந்‌ைத!

குமிழ்‌ வெல்க தமிழ்‌ வெல்க என்றார்‌ நாட்டார்‌;
துமிழர்‌ படை தரைகிழியத்‌ தொடரும்‌ போதும்‌
உமிழ்‌ பார்ப்பான்‌ எச்சிலுக்கோர்‌ கூட்டம்‌ மட்டும்‌.
உட்கார்ந்து கொண்டிருத்தல்‌ வெட்கக்கேடு!
ஆளவந்தார்‌ காலடியில்‌ அமிழ்து கண்டே
அதற்காகப்‌ போராடும்‌ கூட்டம்‌ ஓன்று
மீளுக நம்‌ தாயகமே என்று கூறி

“மேற்‌ சொல்லும்‌ மற்றுமொரு பெரிய கூட்டம்‌!
கோளரிகாள்‌, சிறுத்தைகளே, இவ்விரண்‌ டில்‌
குறிகெட்டுத்‌ திரிகின்ற நரிக்‌ கூட்டத்தின்‌
ஊளளை பெறும்‌ வெற்றியது நாட்டின்‌ தோல்வி
உயர்நோக்கம்‌ தோற்பின்‌ அது நாட்டின்‌ வெற்றி
சீரில்லை) 8றப்பில்லை அன்னையான

திருநாட்டை. மீட்பதிலே ஆசையில்லை
கூரில்லை அறிவினிலே; கொள்கை யில்லாக்‌
கோடரியின்‌ காம்புகளைக்‌ கான்றுமிழ்ந்து
நேரில்லை யாருமே தமிழர்க்கென்று
நிலமதிரத்‌ திரண்டெழுந்து தில்லி என்ற
பேரில்லை என்றாக்கித்‌ தீர்க்க வேண்டும்‌
பெற்றதமிழ்‌ நாட்டைநாம்‌ பெறுதல்‌ வேண்டும்‌!
-----------------

5. விடுதலைப்‌ பாட்டு

நாயும்‌ ஓப்பாத அடிமை வாழ்வை
நாலு கோடித்‌ தமிழரா ஒப்புவர்‌?
தாய்‌ நாட்டிற்கும்‌ தமிழர்‌ நாடென்றுபேர்‌!
தமிழருக்கே மறவர்‌ என்று போர்‌!
(நாயும்‌ ஒப்பாத)
தேய்தல்‌ வளர்தல்‌ தங்கள்‌ வழக்கம்‌
தேயாப்‌ புகழ்செயல்‌ எங்கள்‌ வழக்கம்‌!
தாயகத்தின்‌ மீட்டிப்‌ போரினில்‌
சாவும்‌, தமிழர்க்‌ கமிழ்தாய்‌ இனிக்கும்‌!
(நாயும்‌ ஒப்பாத)
வீரம்‌ பிறந்த நாட்டிற்‌ பிறந்தவர்‌;
வெற்றித்‌ தமிழர்‌; உலகிற்‌ சிறந்தவர்‌;
ஆரியர்‌ அல்லார்‌; மறைந்திருந்தே
அம்பு பாய்ச்சும்‌ பூரியர்‌ அல்லர்‌!
்‌.. (நாயும்‌. ஒப்பாத)
குறை ஓன்று தாயகம்‌ கொள்ளவும்‌ பாரோம்‌
குன்று பெயரினும்‌ உள்ளுரம்‌ தீரோம்‌
சிறையும்‌ நோயும்‌ கட்டிலும்‌ தென்றலும்‌!
செந்நீர்‌ சிந்தல்‌ தேன்சிந்து பாடல்‌!
(நாயும்‌ ஒப்பாத)
-----------

6. மக்கள் பாசறை

காங்கிரசு தீங்கரசானதால்‌ அதனைத்‌.
தமிழர்‌ ஒதுக்கித்‌ தள்ளினர்‌, மற்றும்‌
சட்ட மன்றினர்‌ தந்நலச்‌ சுவரில்‌
முட்டித்‌, தமிழரை முழுவதும்‌ இழந்தனர்‌,
கட்சித்‌ தலைவர்கள்‌ மக்களைக்‌ கைவிட்டுத்‌
குமக்குத்‌ தலைவர்‌ தாம்‌என்று வாழ்ந்தனர்‌.
ஆதலின்‌ தமிழர்‌ அனைவரும்‌ இந்நாள்‌.
எவர்க்கும்‌ எந்த நிறுவனத்திற்கும்‌
கட்டுப்‌ படாமல்‌ ஒர்‌ பாசறை கண்டனர்‌,
**தலைவர்‌ பெரியார்‌” என்று தாம்‌ கொண்டனர்‌.
மக்கட்‌ பாசறை எக்கட்டிக்கும்‌
எத்தலை வர்க்கும்‌ அடக்கம்‌ இல்லை
என்பதை மீண்டும்‌ மீண்டும்‌ இயம்புவோம்‌.
அரசியல்‌ அறிந்தவர்‌ அறமுணர்ந்தவர்‌
இதனை கன்றி எண்ண வேண்டும்‌
்‌ “விடுதலை தமிழகத்திற்கு வேண்டும்‌.” *
சாற்றும்‌ இஃது தமிழரின்‌ மூச்சே
ஆதலின்‌ இந்தாள்‌ தமிழர்‌ அனைவரும்‌
உருவால்‌ பலர்‌எனில்‌ உணர்வால்‌ ஒருவரே.
இந்நாள்‌ எதிரிகள்‌ குமிழருக்‌ இருப்பினும்‌ .
தமிழகத்தைத்‌ தமிழரே ஆள்வதாய்ச்‌
சாற்றினும்‌ அதிலே குவறொன்றுமில்லை.
தமிழைப்‌ பேசும்‌ தமிழக நிலைமை
இதுஎனில்‌, மற்றத்‌ தமிழகம்‌ எவ்வாறு?
தனிநாடல்ல கேர.எம்‌!. தமிழகம்‌
குனிநாடல்ல தெலுங்கம்‌! தமிழகம்‌
குனிநாடல்ல கன்னடம்‌! தமிழகம்‌
ஆயினும்‌ அவற்றின்‌ நிலைமை வேறே.
அங்குளார்‌ அயலார்க்‌ கடங்கி வாழ்குவா்‌
தம்நிலை உணர்கிலார்‌! தகுதி காண்கிலர்‌
உணர்வார்‌ விரைவில்‌! உணரச்‌ செய்வோம்‌.
இறக்கட்டும்‌ பாசறைக்‌ கதவு! அயல்மேந்‌
பறக்கட்டும்‌ தமிழர்‌ பட்டாளம்‌! அயலார்‌
தொடர்பினை அறுத்துத்‌ தொலையச்‌ செய்யட்டும்‌.
இங்குத்‌ தமிழ்க்கொடி யேறுக
எங்கும்‌ பின்‌ ஏறும்‌! பெறியார்‌ வெல்கவே.
--------------

7. பட்டாளம் கிளம்பிற்றுக் கொட்டடா பறை

நன்கு கோடித்‌ தமிழர்‌ பட்டாளம்‌
நாட்டை மீட்கக்‌ இளம்பிற்று கண்டாய்‌
இங்கு செய்யும்‌ வடவரின்‌ ஆட்டம்‌
செல்லாதென்று கொட்டு வெற்றிப்‌ பறை!
நாங்கள்‌ அல்ல ஆட்பட்டிருப்பவர்‌,
நாங்கள்‌ நாட்டை அளப்‌ பிறந்தவர்‌!
வேங்கை எழுந்தபின்‌ நரிகட்டுங்கே
வேலை இல்லை என்று நீ கொட்டு!
ஆண் டவர்க்கு வாய்த்தது தொண்டோ
ஆந்‌ தகுதியும்‌ வடவருக்குண்டோ?
தோண்ட வேண்டாம்‌ வடவர்‌ சாக்குழியென்று
சொல்லி கொட்டடா கொட்டு வெற்றிப்‌ : பறை!
பழைய வரலாறு தெரியாத தங்கள்‌
பாட்டன்மாரைக்‌ கேட்டால்‌ சொல்லு வர்‌
அழையா வீட்டில்‌ நுழைந்த திடக்சே
அழியப்‌ போவது வடக்கே வடக்கே!
----------------

8. ஆளவந்தார்க்கு இறுதி அறிக்கை

எடுப்பு
இந்த.
இறுதி அறிக்கையை
ஆளவந்தார்க்கு விடுப்போம்‌-- அவர்‌ |
இணங்கி வராவிடில்‌,
கிளர்ச்சிப்‌ படையெடுப்போம்‌!
உடன்‌ எடுப்பு
பிறர்க்கிட மின்றித்‌ திராவிட நாட்டைப்‌
பிரித்திட வேண்டும்‌ இப்போதே-- இதைப்‌
பின்னும்‌ வடக்கர்‌ சரக்கிளை அற்கப்‌
பெருஞ்சந்தை ஆக்குதல்‌ தீதே!

இந்த--
இறுதி அறிக்கையை
ஆளவந்தார்க்கு விடுப்போம்‌!
அடிகள்‌
இறைமையும்‌ ஆட்சி முறைமையும்‌ மக்கள்‌
இண க்கமும்‌ ஆம்‌ அமைப்போடு மண்ணில்‌
எவர்க்கும்‌ அரசியல்‌ நுணுக்கம்‌ உணர்த்திய
இன்பத்‌ திராவிட நாடு |
கறைபட்டு மற்றவர்கையில்‌ அகப்பட்டுக்‌
காலமெல்லாம்‌ பட்ட பாடு-.நன்று ட
கருதுகின்றோம்‌ இனி வரைந்திட வேண்டும்‌
பு.நிய இலக்கிய ஏடு! :

இந்த--
இறுதி அறிக்கையை
ஆளவந்தார்க்கு விடுப்போம்‌: ப
ஆங்கிலர்‌ தம்மை அடுத்தார்‌! துருக்கரின்‌
ஆட்சியை ஆதரித்தார்‌...நம்‌
ஆள்வலி கொண்ட திராவிடர்‌ தம்மை
அழுத்த இவ்வாறு செய்தார்‌.
கங்குதரும்‌ ஆளவந்தார்க்கும்‌ சிறைக்கும்‌
திராவிடர்‌ அஞ்சுதல்‌ இல்லை--- எழில்‌
தெற்கு முனைவங்கம்‌ மேல்க&ீழ்க்‌ கடல்கள்‌
திராவிட நாட்டினர்‌ எல்லை.

இந்த--
இறுதி அறிக்கையை,
ஆளவந்தார்க்கு விடுப்போம்‌!
வேதத்தின்‌ பேர்சொல்லித்‌ தெற்கை வளைக்க
விளைத்தனர்‌ சூழ்ச்சிகள்‌ அந்நாள்‌... வந்த
வெள்ளையர்‌ ஆட்சி: தொலைப்பவன்‌ பேரால்‌
விழுங்க நினைத்தனர்‌ இந்நாள்‌. ன கி
சாதி மதங்கள்‌ வடவர்‌ காலூன்றும்‌
சாரக்கட்டானது கண்டோம்‌-- நம்‌
தாயகம்‌ காக்கத்‌ திராவிட மக்கள்‌
அனைவரும்‌ ஒன்றெனக்‌ கொண்டோம்‌?
இந்த
இறுதி அறிக்கையை |
ஆளவந்தார்க்கு விடுப்போம்‌!

குயில்‌ 15-- 8.47
-------------

9. கொலைப்படை வேண்டும்

பீரிட்டடிக்கும்‌ உடல்‌ குருதி கண்டால்‌
(சோரா திருந்திடப்‌ பழகு--வரும்‌
போர்‌ வீரனுக்கிதே அழகு!
(பீரிட்டடிக்கும்‌ உடற்குறுதி)

நேரிட்ட போரிலே உனள்விழுப்‌ புண்ணில்‌ .
நின்பகை நடுமார்பில்‌ நீ செய்த. புண்ணில்‌ |
(பீரிட்டடிக்கும்‌ உடற்குருஇ)

மீன்‌ உண்ணத்தான்‌ வேண்டும்‌ தேடு: நீ
மிக உண்ணத்தான்‌ வேண்டும்‌ ஆடு!
நான்‌ உண்டதுண்டு புலிக்கறியி னோடு
. தில்ல கரடிக்‌ கறியை! உயர்வென்று பாடு...
(பீரிட்டடிக்கும்‌ உடற்குருதி)

ஊன்வாங்க வேண்டாம்‌, உயிரோடு வாங்கி
உடம்பு துடித்திரக்‌ கத்தியைத்‌ தாங்கித்‌
தேன்வாங்கக்‌ கூடழிப்‌ பான்போல்‌ _ ஓரிகித்‌
திறம்‌ செய்க; உயிரினிற்‌ கண்ணோட்டம்‌ நீங்கி -
(பீரிட்டடிக்கும்‌ உடற்குருதி)

வடபாங்கில்‌ முன்னாளில்‌ தமிழரை வென்றார்‌
வந்திட்ட ஆரியர்‌ உடும்பையும்‌ இதின்றார்‌..
இடம்பெற்ற பின்சைவம்‌ மிகநல்ல தென்றார்‌ :
இன்று தேவைப்படல்‌ கொலைப்படை அன்றோ?.
(பீரிட்டடிக்கும்‌ உடற்குருதி)

எண்ணாயிரம்‌ தமிழ்‌ மக்களைக்‌ கமுவால்‌
இழித்த குருதியைத்‌ தேனென்றான்‌ விழியால்‌
பண்ணப்‌ பழகடா பச்சைப்‌ . படுகொலை
பைந்தமிழர்க்கெலாம்‌ உயிரடா விடுதலை!
(பீரிட்டடிக்கும்‌ உடற்குருதி)
-----------

10. குடும்பத்தோடு புறப்படு

வீட்டைப்‌ பூட்டிக்‌ குடும்பத்தோடு
நாட்டை மீட்க இன்றே ஓடு!
காட்டிய தாம்‌ கைவரிசை தில்லி! அதைச்‌
சீட்டுக்‌ இழிந்து போனதென்று சொல்லி. (வீட்டை)

ஆட்டுவாராம்‌ அடக்குவாராம்‌
அழிப்பாராம்‌ ஒழிப்பாராம்‌
ஓட்டுவாராம்‌ நம்மை அவ்வடக்கர்‌. மேலும்‌
குட்டுவாராம்‌ கத்தியை அவ்விடக்கர்‌ (வீட்டை)

வெற்றி பெற்றால்‌ மீள்வதென்று
வீழ்ச்சியுற்றால்‌ சாவதென்று
நற்றமிழன்னைக்குறுதி கூறு! -அட
நாம்‌ தமிழர்‌! நாம்‌ தமிழர்‌ ஏறு!! (வீட்டை)

செந்தமிழைச்‌ கொல்லச்‌ சொல்லிச்‌ |
சீரகத்தை அழிக்கச்‌ சொல்லி
இந்தியினைக்‌ கற்கச்‌ சொல்லிச்‌ சொல்லி--.ஒரு
மந்தியாட்டம்‌ ஆடியதாம்‌ தில்லி, ' (வீட்டை)

தாய்க்கரிசி இல்லை என்பார்‌
குமிழர்க்கெல்லாம்‌ தொல்லை என்பார்‌,
வாய்க்கரிசி போட்டுக்‌ கொண்டு முந்து---நல்ல
போர்ப்‌ பரிசு நீ பெற நினைந்து! (வீட்டை)
-------------

11. புகழைத் தேடு

சோறு வேண்டும்‌ துணிவேண்டும்‌--.நல்ல
கூரை வேண்டும்‌ வேறென்ன வேண்டும்‌? (சோறு)

ஆறு செல்ல சர்தி வேண்டுமெனில்‌
அது பெற்ற பின்பும்‌ ஆசையா தூண்டும்‌? (சோறு)

ஈறு வேண்டும்‌ உன்‌ ஆசைக்கு! மேன்மேல்‌
ஏற்றம்‌ வேண்டினால்‌ புகழ்‌ தேட வேண்டும்‌

நாறு வேண்டும்‌ மலருக்கு! நீ தமிழ்‌
நாட்டுக்கு நாளும்‌ உழைத்திட வேண்டும்‌. (சோறு)

புகமாசை கொள்ளுக: பொருளாசை தள்ளுக!
புகமொன்றே நிலைஎன்ற தேவர்சொல்‌ எண்ணுக!
இகழ்வரும்‌ மிகுபொருள்‌ தேடுங்கால்‌! தமிழ்‌ மீட்பில்‌
என்ன நேர்ந்தாலும்‌ அவை எலாம்‌ இன்பமே. (சோறு)

அழூயே இயங்கியில்‌ நீ செல்லுகின்றாய்‌;
தமிழன்‌ வீரன்‌ என்று சொல்லுகின்றான்‌?
பழுது போக்கித்‌ தமிழகம்‌ மீட்பையேல்‌
பார்ப்பான்‌ நல்லதோர்‌ தமிழனைப்‌ பார்ப்பான்‌, (சோறு)

தமிழன்‌ உயர்ந்தவன்‌ என்று சொல்கின்றாய்‌;
தமிழன்‌ வீரன்‌ என்று சொல்கின்றாய்‌!
தமிழன்‌ அடிமை எனும்‌ பழி போக்குங்கால்‌
தமிழா உன்புகழ்‌ நிலையாக்குகின்றாய்‌! (சோறு)
---------

12. திராவிட நாட்டுக் கொடி வணக்கம்

வானில் உயர்ந்த திராவிட நாட்டு
மணிக்கொடி தன்னை வணங்குவோம்!
நானில மேல்அதன் மாண்பினைக் காண்பதில்
நாம் நன்றுசேர இணங்குவோம்.

ஊனுடைமை உயிர் யாவும் திராவிடர்
மானத்தைக் காப்பதற் கல்லவோ?
ஆனதைப் பார்க்கட்டும் ஆளவந்தார் -- அவர்
ஆர்ப்பாட்டங்கள் நமை வெல்லவோ?

விண்ணிடை ஏறிய எங்கள் மணிக்கொடி
வெல்க வெல்க வெல்க வெல்கவே!
மண்ணில் உயர்ந்த திராவிட நாட்டினர்
மாட்சி மணிக்கொடி வெல்கவே!

திண்மையும் உண்மையும் வண்மையும் கொண்ட
திராவிடர் மாக்கொடி வாழ்கவே!
ஒண்சுடர் வான்நிலை உள்ளளவும் புகழ்
ஓங்கித் திராவிடம் வாழ்கவே!
----------------

13. எங்கள்‌ கொடி

எங்கள்‌ நோக்கம்‌ எங்கள்‌ உறுதி

வைகறை இருட்டையும்‌ செங்கதிர்‌ நகைப்பையும்‌
இராவிடர்‌ மணிக்கொடி குறிக்கும்‌
வாழ்விருள்‌ தவிப்போர்‌
தனிப்பெரும்‌ புரட்சியை
வரவேற்றல்‌ கொடியின்‌ நோக்கம்‌.
துய்யபன்‌ ஞூறாயிரம்‌
இராவிட மக்கள்‌
கொடி நெடுந்தறியினைச்‌ சூழ்ந்தே
தோய்கருஞ்‌ சட்டையால்‌
துயருளம்‌ காட்டியும்‌
சுடர்விழிகள்‌ நாளின்மேல்‌ வைத்தும்‌,
ஐயகோ வாரிரோ
இராவிட மக்களே
ஆன ௨ம்‌ மானத்தைக்‌ காப்பீர்‌
அடிமழயைினை மிடிமையினை
மாற்றுவீர்‌ என்னவே
அழைத்தனர்‌; இதைமறுத்தே
வையகம்‌ எதிர்க்கட்டும்‌!
அதிகார மக்கள்தஈம்‌
வாட்படை யோடும்‌ வரட்டும்‌;
வன்சிறை இதோ என்று
காட்டட்டும்‌ இராவிடம்‌
மீட்பதெம்‌ குறியாகுமே.

குயில்‌ I—4—48
------------------

14. சென்னை பற்றிச் சண்டையா?

எடுப்பு

சென்னை நகருக்காகத் தீராது சண்டையிட்டீர்
இன்பத் திராவிடரே -- நீவிர் உலகில்
எல்லோரும் என் மைந்தரே.

உடன் எடுப்பு

என்னதென்ன தென்பீர் இனத்திற் பகைகொள்வீர்
தென்தமிழ்க் கிள்ளையே, என்தெலுங்குப் பிள்ளையே.
(சென்னை)

அடிகள்

என்னைத் தன்னடிமை என்றான் -- என்னருமக்கள்
யாரும் தன்னடிமை என்றான்.
சென்னை நகருள்ளிட்ட திராவிட மாநிலம்
தன்னுடைமை என்றானே வடநாட்டுப் பகைவோனே.
(சென்னை)

முற்றத்தை மூத்தவனும் -- இளையனான
முதிரன்பில் வாய்த்தவனும்
பெற்றுக் கொள்வதில் சண்டை உற்று நலிவதுண்டோ?
பெருவீட்டை மீட்பதொன்றே இருவர்க்கும் கடனன்றோ?
(சென்னை)

பெயரினால் வேறுபட்டீர் -- மக்களே நீங்கள்
பிறப்பினால் ஒன்று பட்டீர்
அயர்வினால் அனைவரும் அயலானுக் காட்பட்டீர்
அறமறந்தீர், உங்கள் திறமறந்தீர், நாளும்
(சென்னை)
--------------

15. தனியாக்கப் போராங்கோ

தமிழ்நாட்டைத் தமிழர்களைத்
தனியாக்கப் போராங்கோ
உமிஇடிக்கப் போராங்கோ நல்ல
உரல்உடைக்கப் போராங்கோ -- நம்ப (தமிழ்)

தமிழ் பேசும் மாகாணம்
தனிஎன்று சொன்னாங்கோ
தெலுங்குபேசும் அண்டைவீட்டைச்
சண்டை பிடிக்கச் சொன்னாங்கோ

நமது மலையாளிகளை
நாம் பகைக்கச் சொன்னாங்கோ
நலமேதான் பண்ணி நமைக்
கலகஞ் செய்யச் சொன்னாங்க (தமிழ்)

தெலுங்கு நம்ம தெருவை விட்டு,
தெலுங்கு நாடு போகணும்,
மலையாளத்தார் இங்கிருந்தால்
மானம் விட்டுச் சாகணும்,

கன்னடத்தார் கன்னடநா
டெங்கே என்று தேடணும்,
களிதுளுவர் முகவரியைக்
கண்டுபிடிக்க ஓட ணும் (தமிழ்)

தமிழ் தெலுங்கு மலையாளம்
கன்னடரும் துளுவரும்
தனித்தனியாய்ப் பண்ணாங்கோ
இது நல்லதே இண்ணாங்கோ.

நமது சேரன் மலையாளி
என்று தள்ளி விட்டாங்கோ
நாலில் ஒரு பங்கை மட்டும்
தமிழ் நாடாக் கிட்டாங்கோ (தமிழ்)

கன்னடம் தெலுங்கு துளு
நாடுகாத்து வந்தாங்க
கண்ட அந்தச் சோழ பாண்டி
மன்னரையும் நொந்தாங்கோ
மன்னு தமிழ் நூலையெல்லாம்
மறக்கும்படி சொன்னாங்கோ
வரிப்புலி, வில், கயற்கொடிகள்
மாற்றங்கொள்ள வச்சாங்கோ (தமிழ்)

சேரன்நிலம் தமிழ்நிலமாய்ச்
செப்பும் நூலைக் சொன்னாங்கோ
தெலுங்குநிலம் தமிழ்நிலமே
இல்லை என்று பண்ணாங்கோ
ஊரில் இனித் திராவிடநாடு
உருப்படுமா இண்ணாங்கோ;
ஒவ்வொன்றுக்கும் பகைமூட்டி
ஒழிப்பம் என்று சொன்னாங்கோ (தமிழ்)

தெலுங்கு மலையாள மெல்லாம்
திராவிட நாடில்லையாம்
சேர்துளுவம் கன்னடமும்
திராவிட நாடில்லையாம்
இலகு திராவிடம் பிரிக்க
வந்தால் அடிப்பாங்களாம்
எழுந்து வரும் திராவிடரை
விழுந்து கடிப்பாங்களாம்! (தமிழ்)
---------------

16. திராவிடர் ஒன்று படவேண்டும்

திராவிடர்‌ ஒன்றுபட வேண்டும்‌
நாமெல்லாம்‌ திராவிடர்கள்‌ என்ற எண்ணம்‌

நம்‌ உளத்தில்‌ வேரூன்ற வேண்டும்‌! மேலும்‌
நாமெல்லாம்‌ ஒரே வகுப்பார்‌ என்ற எண்ணம்‌
நன்றாக நம்‌ உணர்வில்‌ ஏற வேண்டும்‌

தஇமையுற நமையெல்லாம்‌ சமயம்‌, சாதி
சிதறடிக்க இடங்‌ கொடுத்தல்‌ நமது குற்றம்‌
ஆமை உயிர்‌ காக்குந்தன்‌ முதுகின்‌ ஓட்டை
அகற்றென்றால்‌ அவ்வாமை கேட்கலாமா?
ஒற்றுமையைக்‌ காப்பதற்கு மதமா? அன்றி
ஓன்றாகச்‌ சேர்க்கத்தான்‌ மதமா? சாதி,

அற்ற இடம்‌ அல்லவோ அன்பு வெள்ளம்‌
அணை கடந்து விளைநிலத்தில்‌ பாயக்‌ கூடும்‌?
பற்றற்றோம்‌ என்பவர்கள்‌ சமயம்‌, சாதிப்‌
படுகுழி நீக்குக! என்னும்‌ முரசும்‌ கேட்டோம்‌.
உற்ற நலம்‌ உணர்ந்திடுக: திராவிடர்கள்‌
"உள்ளூர ஒன்றுபட்டால்‌ வாழ்தல்‌ கூடும்‌.
மக்கள்‌ தம்மைப்‌ பிரிப்பதென ஒன்றிருந்தால்‌
மடமைதான்‌ அது என்பேன்‌. நாமெல்லோரும்‌
திக்கற்ற பிள்ளைகளாய்‌ இருக்கின்றோம்‌, இத்‌
தய நிலை நீக்குவதற்கு முடியும்‌ நம்மால்‌!
எக்குறையும்‌ தீர்த்துவிடும்‌: வறுமை போகும்‌
எந்நலமும்‌ பெற்றிடுவோம்‌; அனைவருக்கும்‌
சர்க்கரைப்‌ பந்தலிலே தேன்‌ மாரி பெய்யும்‌;
சாதிவெறி சமய வெறி தலை கவிழ்ந்தால்‌!

கும்‌ தலையில்‌ ஆணியைத்தா மேயடித்துத்‌
குரம்புதனை அதிற்கட்டிப்‌ பிறரிடத்தில்‌
குந்துவிடும்‌ மடமைதனை என்ன என்பேன்‌!
சாதி சமயத்தினிலே வீழ்ந்தோர்‌ அன்றே
தொந்தி பெருத்தோர்‌ அடியில்‌ வீழ்ந்தோரர்‌ ஆவார்‌
தூவென்று சாதி மதம்‌ கான்றுமிழ்ந்தால்‌
அந்த நொடியே நமது மிடி பறக்கும்‌;
அடுத்த நொடி. திராவிடரின்‌ கொடி பறக்கும்‌.
உடையினிலே ஓன்றாதல்‌ வேண்டும்‌! உண்ணும்‌
உணவினிலே ஒன்றாதல்‌ வேண்டும்‌; நல்ல
நடையினிலே ஒன்றாதல்‌ வேண்டும்‌; பேசும்‌
நாவிலும்‌ எண்ணத்திலும்‌ ஒன்றாதல்‌ வேண்டும்‌ |
மடைதிறந்த வெள்ளம்போல்‌, நம்‌ தேவைக்கும்‌,
மாற்றாரை ஓழிப்பதற்கும்‌, ஏறிப்‌ பாயும்‌
படையினிலே ஒன்றாதல்‌ வேண்டும்‌; வாழ்வின்‌
பயன்சாண வேண்டுமென்றோ திராவிடர்கள்‌?

குயில்‌ 7 2-48
-------------

17. திராவிடர் மீட்சி

திராவிட நாட்டின் பெயர்

நான் "மூவேந்தர் நாடெ."ன நவில்வதும்
"தென் மறவர் நாடெ"ன்று செப்பலும்
"பழந்தமிழ் நாடெ"னப் பகர்வதும், இந்நாள்
வழங்கு "திராவிடர் நாடெ"ன வரைவதும்,
ஒன்றே! அதுதான், தொன்று தொட்டு
வென்று புகழோங்கு நம் அன்னை நாடு!

திராவிடம் தமிழ்மொழி

திராவிடம் என்று செப்பிய தேன் எனில்
"திருத்தமிழம எனும் செந்தமிழ்ப் பெயரை
வடவர் திரமிளம் என்று வழங்கினர்.
திரமிளம், பிறகு திராவிடம் ஆனது.
வேட்டியை வடவர் வேஷ்டி எனினும் அவ்
வேட்டி திரிந்த வேஷ்டியும் தமிழே!
அதுபோல்,
திருத்தமிழகத்தைத் திராவிடம் என்றால்
இரண்டும் தமிழே என்பதில் ஐயமேன்?

மூவேந்தர்:

மூவேந்தரென மொழியப் பெறுவோ
பாவேந்தர் புகழ் கயற்கொடிப் பாண்டியன்,
போரில் நிகரிலாப் புலிக்கொடிச் சோழன்
சீருறு விற்கொடிச் சேரன் ஆவார்,
இம் மூவேந்தர் இனத்தவர் தமிழர்
இம் மூவேந்தர் செம்மொழி தமிழே!

மொழித் திரியினால் பெயர் மாற்றம்

நெடிய இத் தமிழகம் இடைக்காலத்தில்
தமிழ்நா டாந்திரம், தனி ஒரு கேரளம்
அமையும் துளுவம், கன்னடம் ஆகப்
பிரிவுற்றது தமிழ்ப் பேச்சின் திரிபினால்!
கோழி என்று கூறலே தமிழாம்
கோடி என்று கூறல் தெலுங்காம்
கோளி என்றி கூறல் கேரளமாம்
கோலி என்றி கூறல் கன்னடமாம்
கோழி என்று கூறல் துளுவமாம்
தமிழ் மொழி இவ்வாறு தான்திரிந்திடினும்
அனைத்தும் தமிழே ஆகும் அன்றிப்
பிறமொழி என்று பேசவும் படுமோ?

அனைத்தும் பழந்தமிழ் நாடே
கன்னட நாடெனக் கவின்மலையாள
நன்னர் நாடென ஆந்திர நாடெனப்
பன்னும் துளுவநா டெனப்பற் பலபெயர்
பகரினும் அனைத்தும் பழந்தமிழ் நாடே
அன்றி அவைதாம் அயல் நாடுகளா?

குள்ள நோக்கம் :

இவையெலாம் தமிழகம் இல்லை எனவும்
இவைகள் ஒழித்த இடுக்கு நிலமே
தமிழ் நாடெனவும், அத் தமிழ்நாடுதனை
அமைவுறப் பிரி்த்தே அமைப்பீர் எனவும்
விள்ளுகின்றார் சிலர் விரித்த நோக்கிலார்.

நீங்கள் சொல்வீர்களா?

தெள்ளு தமிழாம் திரைக்கடல் தன்னை
உள்ளும் புறமும் ஆய்ந்துணர்ந்த தமிழரே
தமிழைக் காத்த, நம்தமிழ் இலக்கியமாம
அமுதைத் தன் வரலாற்றினால் உயர்த்திய
தமிழ்ச் சேனைத் தமிழன் என்று
செப்பவும் மறுப்பிரோ? சேரன் நாட்டினை
நம்தமிழ் நாடென நவில மறுப்பிரோ?
விற்கொடி உம்மினும் வேறா சொல்வீர்?
கன்னடம் துளுவம் கவின் ஆந்திரம் இவை
பன்னருஞ் சோழன், பாண்டியன் ஆண்ட
வண்டமிழ் நாடா? வடவர் நாடா?
கயலோ புலியோ கவினுறு தமிழர்க்கு
அயலோ பகைவர் அயலெனக் கூறினும்?
திராவிட நாட்டை முழுதும் மீட்போம்

பன்னூற்றாண்டு முதல் இந்நாள் மட்டும்
வென்றார் இல்லை என்றும், வெல்ல
நின்றார் இல்லை என்றும், நிகழ்வதும்
அருமைத் திராவிடப் பெரிய நாட்டைப்
பழந்தமிழகத்தைப், பார் அறிந்ததென்
மறவர் வையத்தை, இறவாப் புகழ்கொள்
மூவேந்தர் நாட்டை முழுவதும் மீட்போம்.
தென்தமிழ், கேரளம், தெலுங்கு, கன்னடம், துளு
என்னுமிவ் வைந்தில் ஒன்றுதான் தமிழகம்
என்று நான்கையும் எதிர்ப்பதா? எதிர்ப்பின
நம்முடன், நம்மூர் நம்தெரு வதனில்
தென்னண்டை வீட்டுத் தெலுங்கர் நிலை ஏது?
வடவண்டை வீட்டு மலையாளிகளைப்
பகைப்பதா? எதிர்ப்பாங்கு வீட்டுக்
கன்னடத்தாரைக் கடிந்து கொள்வதா?
அல்ல திவர்களை அவரவர் நாட்டுக்குத்
குடியேற்றுவதா? குடியேற்றிய பின்
இங்கெத்தனைபேர் தமிழர் இருப்பார்?

பெயர் மாறின் பொருள் மாறுமோ!

செந்தமிழ், கேரள, தெலுங்கு, கன்னடம், துளு
ஐந்து வகையில் அழைக்கப் பெறினும்
மாந்தர் வகையால் திராவிட மக்கள்நாம்!

மீட்சி

தென்குமரி வங்கம் திரைக்கடல் முப்பாங்கு
மன்னிய திராவிட வையத் துரிமையை
ஒருசிறி திழக்க ஒப்போம்; பெருநாட்டுப்
பெருந்தொகைப் பெரும்புகழ்ப் பெரும்பண்புடையார்
நாம் பிரிவோ மில்லை, பிரிந்தால் வாழ்வில்லை
பிரித்தாள எண்ணும் பிறர்க்கு வடிவில்லை,
கலைஒன்று, திராவிடர் கண்ட நாகரிக நிறை ஒன்று,
தாழைமுள் நிகர் நெல்லரிசிச் சோற்
றுணவொன்று! நடையுடை ஒன்று நமக்கெலாம்.
உறுதி ஒன்று திராவிட
மறவர் நாட்டை மீட்டு வாழ்வதே!
--------------

18. மெதுப்போக்குத் திராவிடனுக்கு முற்போக்குத் திராவடன் மொழிதல்

வாய்ப்பான வேளைய.டா அண்ணே... நீ
வால்குழைத்து வாழ்வதுண்டோ அண்ணே?
குர்ப்பான சேதி ஒன்று சொல்வேன்‌-- தி

ராவிடத்தை மீட்க முயல அண்ணே
காய்ப்பேறிப்‌ போனதடா அண்ணே... உன்‌
காட்டிக்‌ கொடுக்கும்‌ இழி தன்மை

தாய்ப்பால்‌ குடித்திருப்பாய்‌ அண்ணே. எனில்‌
தன்மானம்‌ போனதென்ன அண்ணே?
பண்டைத்‌ திராவிட. நா டண்ணே.-.-. இது
பாராண்ட தாயகமாம்‌ அண்ணே
கொண்டு வடக்கனி டம்‌ தந்‌ தே--- அங்குக்‌
கொடிதரக்க ஒப்பினையே அண்ணே
சுண்டைக்காய்‌ அதிகாரம்‌ பெற்றாய்‌ உன்‌
தூய்மையினை நீ அதற்கு விற்றாய்‌
வண்டியிலே ஏற்றிவிட்டாய்‌ மானம்‌... உன்‌
வாளெடுக்க நீ மறந்தாய்‌ அண்ணே .
உன்னருத்தி ராவிடத்தை அண்ணே--- அவர்‌
உருக்குலைக்க உனை அழைத்தார்‌ அண்ணே ப
‘sore திராவிடத்தில்‌ BT ws ri”? oF ost
றேன்‌ கேட்க நீமறந்தாய்‌ அண்‌ ணே?
இன்னவரும்‌ நாய்‌ நரிகள்‌ கையால்‌.--- நீ
சீரடைதல்‌ இல்லையடா அண்ணே

அன்னை உனை வேண்டுகின்றாள்‌ அ௮ண் ணே-- அவட்‌
காட்டிதர நீ வருவாய்‌ அண்ணே .

குயில்‌ 17--4--47
----------

19. திராவிட நாட்டுத் தொண்டால் வரும் இன்பம்

அவன்‌
பிறர்‌ நலம்‌ கண்டுநாம்‌ பொறாமை கொள்கிலோம்‌,
நிறைபொருள்‌ பெறினும்‌ குறைபாடு கருதும்‌
அவாவை உடையோம்‌ அல்லோம்‌; வெகுளியால்‌
எவர்க்கும்‌ தமை இயற்றுவோம்‌ இல்லை,
இன்னாத கூறலும்‌ இல்லை நம்‌ நா!
இந்நாள்‌ இந்நொடி வரைக்கும்‌ நல்லறம்‌
வழுவாது வாழ்க்கை நடத்துதல்‌ எண்ணிதான்‌
மகிழும்‌இவ்‌ வேளையில்‌, வண்டின்‌ இசையும்‌,
புகுகுளிர்‌ தென்றலும்‌, பூக்களின்‌ மணமும்‌ ட
௮ம்‌ மகிழ்ச்சியைப்‌ பெருக்கின! அன்றியும்‌, |
முத்துப்பல்‌ சிரித்தால்‌ முகமெலாம்‌ ரிக்கும்‌ உன்‌.
அத்து மீறிய அழகும்‌ இளமையும்‌
பழையபடி பழய படிடழுத்‌ தென்னை |
நிழலுறு காவிரி நீர்த்துறை போன்றதோர்‌
இன்பத்தில்‌ ஆழ்த்தின! அன்பின்‌ பொய்கையே!
அவள்‌
பிரியினும்‌ உன்‌ திரு வுருவம்‌என்‌ நெஞ்சில்‌
பிரிய வில்லை; எனினும்‌ அருகில்‌

நீவீர்‌ இருந்தால்‌ தான்‌என்‌ ஆவி
இருப்ப தாகும்‌, அருகில்‌ இருக்கவும்‌
குழுவிடில்‌ என்னுயிர்‌ தளிர்ப்பதாகும்‌. நான்‌
soe நீவீர்‌ தமிழ்பேசி யணைப்பின்‌
சொல்லொணா இன்பம்‌ தூய மணாளரே!
------------

20. ஒன்று சேர வேண்டும்

செந்தமிழை வளமாக்க உதவ வேண்டும்
தீ இந்தித் திணிப்பைஇனி மாற்ற வேண்டும்
முந்தவே கட்டாயக் கல்வி வேண்டும்
முற்றிவரும் சாதிவெறி ஒழிய வேண்டும்
இந்தநிலை யாங்களெலாம் எய்திவிட்டால்
எங்கள் வாழ்வுக்குவே றென்ன வேண்டும்,
இந்தியினை எதிர்க்கின்றோம் அதற்குப் பேர் தான்
இந்நாட்டுப் பிரிவினைக் கோரிக் கையாகும்.

செந்தமிழ் நாட்டின் மீதில் அள்ளி அள்ளிச்
செழுந்தீயை வீசுகின்ற வட புலத்தை
எந்தாயே என்றுநாம் அழைக்க மாட்டோம்
எள்ளளவு மனச்சான்றும் வடக்கர்க் கில்லை
முந்துங்கள் தமிழர்களே தமிழன் னைக்கு
முட்டுக் கட்டைகளாக அமைய வேண்டா
ஐந்தாறு கட்சிகளும் ஒன்று சேர்க்க
ஆவரும் இந்திவிட்டு மீளலாகும்.
--------------------

21. திராவிட நாட்டுப் பண்

வாழ்க வாழ்க வாழ்கவே
வளமது பெருக திராவிட நாடு! வாழ்க!

சூழ்தரு பரிதியின் ஒளிபடு குன்றம்
தோற்றம் பாடுபற் கூற்றைச் சாடுநர்
வீழ்புனல் அருவி ஆடிடும் மகளிர்
வேண்டிய நலமும் ஈண்டிய நாடு வாழ்க!

கத்தும் கடல்தரு முத்துக் குவியல்,
கமழும் கூந்தற் றமிழ்ப் பெண்கள்,
தித்தித் திடுமொழி மாதர் உலகைத்
தேற்றும் அறமேசெய் தமிழ் நாடு வாழ்க!

நளிர்புனல் நன்செய் விளைவுறு செந்நெல்
நறுநெய் தயிரோடு நிறைபடு சோறும்.
எளிமையை நீக்கும் ஈவோர் கூட்டம்,
எய்திய நாடு திராவிட நாடு வாழ்க!

பாடும் பறவை, விடுதலை விலங்கு,
கல்வகை மலர்கள் முல்லைக் கொடிகள்
காடும் கமழக் கை கோத்தாடும்
காதலர் அன்பு கனிவுறு நாடு வாழ்க!

தமிழும் தமிழ்தரு துளுவும் தெலுங்கும்
தகுமலை யாளம் கன்னட முதலா
அமைவுறு நாட்டைத் திராவிடம் என்றே
அறிஞர் போற்றும் அன்னை நாடு. வாழ்க!
------------

22 பெரியார் அறப்போர்

செயற்கருஞ்செயல்‌ செய்தல்‌ வேண்டும்‌!
பெறற்கரும்புகழ்‌ பெறுதல்‌ வேண்டும்‌!

பிறவியிற்‌ சாதி உண்டெனப்‌ பிதற்றியும்‌,

அறிவை அழித்தும்‌ ஒற்று ஈம அழித்தும்‌,
குமிழகம்‌--- உலகம்‌ உமிழக மாகி
ஒழியவும்‌, நாடொறும்‌ அழிவு செய்துவரும்‌
அயலான்‌ அடியை அடையப்‌ பெறுவது
செயற்கருஞ்‌ செயல்‌ செய்வ தாகுமோ?
பெநற்கரும்புகழ்‌ பெறுவ தாகுமோ?
குன்‌ இனம்‌, தன்மொழி, தன்நாடு, தன்கலை
இன்னவற்றின்‌ உயர்வை இழி9வனப்‌
பிறருளம்‌ மகழப்‌ பேசி வாழ்பவன்‌
துணவேந்த னாயினும்‌, தமிழன்‌ துறைக்குக்‌
தலைவ னாயினும்‌ அந்தத்‌ தமிழன்‌
செயற்கரு மூறு செய்தவ னாவான்‌,
பெறற்கரும்பழி பெற்றவ னாவான்‌.

ஆயிர மாயிரம்‌ ஆண்டுக ளாகத்‌
இய சாதி இந்‌ நாட்டைத்‌ இய்ப்பதை |
ஆயிர மாயிரம்‌ ஆண்டுக ளாகத்‌
குரய்வர்‌ முயன்றும்‌ தொலைத்தா ரில்லை!

அதனால்‌ இந்த அழகிய தமிழகம்‌
மதிப்பற்று வாழ்வு மயங்கி வருவதும்‌
உலகம்‌ அறிந்த ஒன்றாம்‌! இன்று
நிலையிற்‌ றமிழரை உயர்த்தவும்‌ நீங்கா ன க
மாசு நீக்கவும்‌ வந்த பெரியார்‌
அறப்போர்ப்‌ பறைமுழக்கு-- அதோ கேட்கின்றது!
தொல்சீர்த்‌ தமிழர்க்கு நல்ல வாய்ப்பிது!
செயற்கருஞ்செயல்‌ செய்தல்‌ வேண்டும்‌
பெறற்கரும்புகழ்‌ பெறுதல்‌ வேண்டும்‌!

கல்வி அமைச்சரோ செல்வ அமைச்சரோ
இயன்ற மட்டும்‌ பங்கை ஏற்க!

அப்பெரும்‌ போரில்‌ அறப்படை அணியில்‌
கடைசி வரிசையில்‌ காணும்‌ தொண்டனின்‌
செருப்புத்‌ துடைப்பதோர்‌ செயலை யேனும்‌
செய்க; அஃது செயற்கருஞ்‌ செயலே!
பெறுக அதனால்‌ பெறற்கரும்‌ புகழே!

ஆலைக்‌ காரர்‌ ஆகுக, அவர்தம்‌
தோலைக்‌ காசுக்குத்‌ தொலைப்பார்‌ போலப்‌
பெரியார்‌ அறப்போர்‌ பெரும திப்பினைச்‌
சிறிதென இளிப்பது நீக்கித்‌ திருந்தித்‌
தொண் டரொடு தொண்டு செய்து கிடக்க!

சட்டை மாட்டித்‌ தலைக்கணி செய்து
பட்டு டுத்துப்‌ பகட்டுமோர்‌ தமிழனும்‌
என்னினும்‌ தாழ்ந்தவன்‌ என்னும்‌ ஆரியன்‌
குன்னினும்‌ தாழ்ந்தவன்‌ நான்‌ நான்‌ நான்‌ எனும்‌
மடமை மாய்வ தெந்நாள்‌? அந்நாள்‌
இந்த நாள்‌: அரியது செய்க!
நந்தம்‌ பெரியார்‌ படையொடு நடக்கவே!
--------------

23. எவர் பெரியார் அவர் வாழ்க

சூமரி நாட்டின்‌ தமிழ்‌ நான்மறைகள்‌
அமிழ்ந்தன! வடவர்‌ மறைகள்‌ நிமிர்ந்தன?
தமிழன்‌ முதலில்‌ உலகஇனுக்‌ களித்த
அமிழ்துதோர்‌ தத்துவம்‌ ஆன எண்ணுூரல்‌
ANDES வடவரின்‌ அறிவுக்‌ கொவ்வாப்‌
பொய்ம்மைகள்‌ மெய்மைகள்‌ ஆகிப்‌ பொலிந்தன
அகத்தியன்‌ தொல்காப்பியர்‌ முதலானவர்‌
தகுதியும்‌ தமிழிற்‌ பெறுதிறம்‌ அருளிய
எண்ண ருங்‌ கண்ணிகர்‌ தமிழ்பாடும்‌ ஏடுகள்‌
மறைந்தன! வடவர்‌ தீயொழுக்க நூற்கள்‌
நிறைந்தன, இந்த நெடும்புகழ்‌ நாட்டில்‌!
“Ea செய்யற்க செய்யில்‌ வருந்துக,
ஏதும்‌ இனியும்‌ செய்யற்க? வெனும்‌
விழுமிய தமிழர்‌ மேன்மை நெஞ்செலாம்‌
கமுவரய்‌ எனுமொரு வழுவே நிறைத்தது.
“நல்குதல்‌ வேள்வி என்பது நலியக்‌
கொல்வது வேள்வி எனும்நிலை குவிந்ததே!
ஒருவனுக்‌ கொருத்திஎனும்‌ ‘sab’? ஒழிய
ஐவருக்‌ கொருத்தி எனும்‌ அயல்‌ நாட்டுக்‌
'குச்சுக்‌ காரிக்குக்‌ கோயிலும்‌ கட்டி
'மெச்சிக்‌ கும்பிடும்‌ நிலையும்‌ மேவிற்று.
மக்கள்‌ நிகர்‌ எனும்‌ மாத்தமிழ்‌ நாட்டில்‌
மக்களில்‌ வேற்றுமை வாய்க்கவும்‌ ஆனதே!
உயர்ந்தவன்‌ நான்‌ என்றுரைத்தான்‌ பார்ப்பான்‌!
------------

24. பெரியார் போர் வெல்லும்

சாதி ஒழிக எனக்கூவும் தாய்க் கோழி
தானே பற்றுக இளந்தமிழ்ப் புள்ளினம் (சாதி)

ஆதிப் பெருமை பெரியாரை அல்லால்
தமிழருக் களிப்பவர் வேறெவர் உள்ளார்? (சாதி)

ஏதடா கட்சிகள் இங்கே
எவ்வெவர் மூச்சுக்கும் மூச்சாய்
போதெல்லாம் தொண்டு செய்கின்றார்
போம்வழி போதலே அல்லாமல் வேறு
புகலிடம் தமிழருக் கெங்குண்டு தேறு -- (சாதி)

தீயபார்ப் புக்குப் படிந்த
தேவடி யாள்மக்கள் போலே
ஆயாது தீதுநெறிச் சென்றாய்
அம்மியா காவேரி ஆற்றுக்குத் தெப்பம்?
பெரியார் அடிச்சுவடு நன்மை பயக்கும். (சாதி)

நாய்குலைத் தாநத்தம் பாழாய்
நன்றறியாத உன்னால் என்ஆம்!
தூய்குரல் எவரும்ஒன் றென்று
தோன்றிற்றுக் கேள்அது நாம்பெற்ற செல்வம்
பெரியார் தொடங்கிய போர்ஒன்றே வெல்லும்! (சாதி)
----------------------

25. ஞாலப் பெரியார் பாதை

இசை செஞ்சுருட்டி தாளம்‌--ஆதி
விடுதலை இல்லாத போத. .மொழி
ஏது: -பண்டை
மேலான வரலாறும்‌ ஏது? நீ
விலக்கல்‌ இலாத தமிழ்‌ இலக்கியத்‌ தின்சல்லி
வேரும்‌ சிறிதும்‌ நிலைக்‌ காது.
கொடிநாட்டி வாழ்ந்தனை மண்ணி--லதை
| எண்ணித்‌ தமிழ்‌
எண்ணி-- அந்தக்‌
கொடியவரை நடுங்கப்‌ பண்ணி... கொடுங்‌
கோலைமுறித்த பின்புன்‌ வேலை முடிந்ததென்று
கொட்டடா முரசு நண்ணி!
. தாய்க்கு மகன்‌ செய்யும்‌ கொண்டும்‌---ஒன்‌
: றுண்டு-....நன்‌
றுண்டி--.தாய்‌
குளைநீக்க வேண்டும்‌ வெ குண்டு--.மேலும்‌
குமிழன்‌ நீ தமிழ்ப்பழங்‌ குடிக்கோர்‌ இழுக்கென்றால்‌
சாக்காடும்‌ உனக்குக்கற்‌ கண்டு.
பாக்கியம்‌ பெற்றவன்‌ நீதான்‌ Lob)
நீதான்‌..-9ங்கம்‌
நீதான்‌--இந்தப்‌
பாராண்ட மறத்தி உன்‌ தாய்தான்‌. தமிழ்ப்‌
பண்பாட்டை மிதிப்பவன்‌ பழிவாங்கப்பட வேண்டும்‌
சும்மா இருந்தால்‌ நீயோர்‌ நாய்தான்‌.
-----------

26. குடியரசில் இதுவோ கதி

கூவாயோ கருங்குயிலே
யாவரும் ஒன்றென்றே -- கூவாயோ?
ஏவலர் இந்தியர்கள் இரண்டாம் தொகுதி என்றார்
இக்குறை நீங்கிற்றென்றே இனிதாய் நன்றே (கூவாயோ)

குவலயத்தில் சமத்துவநிலை காட்டவந்த
பிரஞ்சுக் குடிஅரசின் நிழலில்,
இவனுயர்ந்தோன் இவன்தாழ்ந்தோன் என்றுரைத்தால்
யார்சகிப்பார் அந்த அழலை?

கவிந்திருக்கும் ஒரு குடைக்கீழ் உள்ளவரில்
சிலர்க்குநிழல்; சிலர்க்குவெயிலோ?
குவிந்த பொருளோ விஷயமோ சமமாக
அடையாத தெவ்வகையிலோ?

மேலவர் என்றோர் தொகுதி
மீதிப்பெயர்க் கோர்தொகுதி!
மேன்மைக் குடியரசில் இதுவோ கதி? (கூவாயோ)
-----------------------

27. புதுப் போர்

சாதி ஒழிய வேண்டும் என்பதும்
தமிழக விடுதலை வேண்டும் என்பதும்
குள்ளக் கருத்தா? வெள்ளம் போன்ற
தமிழர் நலத்துக்குத் தக்கன அன்றோ?

ஒழியாச் சாதி ஒழிய வேண்டும்
தமிழகம் அடிமை தவிர்தல் வேண்டும்
இன்னும்இக் கொள்கை எல்லாத் தமிழரின்
கொள்கை அன்றோ? இந்தக் கொள்கை
வெல்லு மாயின் எல்லாத் தமிழர்க்கும்
அல்லல் தீரும் இழிவும் அகலும்
என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா?
தமிழ்ப்பெரு மக்களே, சற்று எண்ணுமின்;

பெரியார் சொன்னார் பெரியார் ஆதலின்!
அரிய இவற்றை அவரை அல்லால்
எவரால் இங்கே சொல்ல முடிந்தது?
எவர் தாம் இதுவரை சொல்ல லானார்?
சொன்னார் பெரியார் என்பது மட்டுமா?
செய்தார் பெரியார் செய்வார் பெரியார்
என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா?

ஆயிரம் ஆண்டுகள் அகன்றன! வரலாறு
சாகவில்லை இருக்கக் கண்டோம்.
அவ்வர லாற்றில் ஓர் தமிழர் தலைவனைத்
கண்டதுண்டோ? காதுதான் கேட்டதா?
பெற்றோம் இன்றுதான் பெறற்கரும் பேற்றை!
பெற்றோம் இன்றுதான் பெரியார் தம்மை!

அன்புடையீரே அறிவுடைத் தமிழரே
பெரியார் எண்பது வயதும் பெற்றார்
இருக்கும் போதே விடுதலை எய்தலாம்
கட்சி வேண்டாம் கலகம் வேண்டாம்
எப்பிரி விற்கும் ஆட்படல் இன்னலே!
எல்லா மக்களும் இரும்புக் குண்டுபோல்
ஒன்று படுதல் வேண்டும் இன்றே!
நன்று பெறுதல் வேண்டும் அனைவரும்!

திராவிடர் கழகம் சிறிய தன்றே,
அஃது பெரியார்க் குரிய தன்றே,
சாற்றுவேன்: அஃது தமிழரின் உடைமை!
பொதுவாம் இயக்கம்! பொதுவாம் நிறுவனம்
அங்கி ருந்து கிளம்பும்! அரும்போர் நிறுவனம்!
பொதுப்போர்! புதுப்போர்! எழுக எழுக!
புதியதோர் தமிழ் உலகம்
இதோ! இதோ! வெல்க எழிற்றமிழ் நாடே !
---------------

28. எதுபிரிவினை மனப்பான்மை

பிண்ணாக்கு நிறம்! பிளவிலாக் குளம்புகள்
வெண்முகம்! நீள்காது! மிக மிக அழகு!

தெருவிற் புகுந்து தெருவில்என் வீட்டின்
அருகில் வந்ததும் அருமை! அருமை!

வீட்டினுட் புகுந்தது, காட்டுத்தழை என்று
சுவடிகள் துணிகளை மென்றுதின்றதும்
சொல்லொணாப் புதுமை! சொல்லொணாப் புதுமை.

வாய்தி றந்து வண்ணம் பாடித்
தூய்மையைத் துடைத்ததும் மெச்சத் தக்கது!

துணிவுடன் அடுக்களைச் சோற்றுப் பானையை
உருட்டி முழுதும் இனிதாய் உண்டதைப்
பார்க்கப் பார்க்கப் பார்ப்பார் கண்கள்
மகிழ்ச்சி மத்தாப் பாக விளங்கின!

தன்னுளத் தாங்காது வீட்டின் தலைவன்
வாய்பெருத்த வடக்குக் கழுதையே
வெளியே போநீ என்று விளம்பினான்.

இதுபிரிவினைமனப் பான்மை என்று
கத்துகின்றதே கழுதை
கத்துகின்றதே கத்து கின்றதே!
---------------

29. காமராசர் ஆட்சியில் ஓட்டை

கண்ணில் இடறி மண்ணைத் தூவும்
காட்டு நரி போலே -- மக்கள்
கருத்தி லெல்லாம் பத்த வச்சலர்
வருத்தம் தூவ லாலே -- பார்

கலக லத்தது கோட்டை -- ஊர்
காட்டு கின்றது சூட்டை -- அது
நலிய வைத்தது நாட்டை -- நம்

நல்லகாம ராசர் ஆட்சியின்
நடுவில் வந்தது பெரிய ஓட்டை!

திண்ணைத் தூங்கிப் பார்ப்பா -- னவன்
திரு நீற்றை அள்ளி -- நம்
நண் பமைச்சி ராம சாமி
மேல் எறிந்தான் துள்ளி -- அவன்

நடத்தை யெல்லாம் தப்பே -- தமிழ்
நாடெல்லாம்கசப்பே -- அப்
படுபா விகு திப்பே -- நம்

பத்தவச்சல னார்க்கு மட்டும்
அத்தனையும் மிக இனிப்பே!

மக்கள் நிகர் என்று கூட்டில்
வைத்திருந்த தேனைப் -- போய்
நக்குவதா கோயிலிலே
பிச்சைக்காரப் பூனை? -- தமிழ்

நாட்டை ஆள வந்தார் -- புகழ்
ஏட்டை யேன்ம றந்தார்? -- பழி
மூட்டை யேசு மந்தார் -- நம்

முத்தமிழ் மானம் போக்கப்
பத்த வச்சல மா பிறந்தார்?
தக்க தமிழ்த் தாயகந்தான்
தலை குனிய லாமா -- ஏன்
சரிநிகர் எல்லாரும் என்றால்
தருமம் கெட்டுப் போமா?

சாதி என்ற பண்டம் -- நம்
தாய கம்சுரண்டும்! -- அது
தீதுவைத்த குண்டம் -- இத்

தீச் செயலை ஆதரிப்போன்
செல்வம் சேர்க்க அலையும் முண்டம்.
-------------

30. நேருவின் ஆட்சி

நேருவின் ஆட்சி தீருகின்ற நாள்
நெருங்கிற் றென்று கொட்டடா முரசம்
சாரும் ஆரியர் வாழ வைக்கு மோர்
தன் விருப்பத் தனியாட்சி நோய் கொண்ட
(நேருவின் ஆட்சி)

இந்தி புகுத்தித் தமிழ் விளக்கவித்தான் தன்
இனத்த வர்க்கே செல்வம் குவித்தான்
செந்தமிழ் நாட்டார் வாழ்வைக் கவிழ்த்தான் -- இன்று
செல்வாக் கெல்லாம் இழந்து தவித்தான்.
(நேருவின் ஆட்சி)

தமிழகத்தின் பெருவரு மானம் -- எல்லாம்
வடவருக்குத் தான் செய்யும் தானம்!
தமிழ் நாட்டமைச்சர் எவர்க்கும் தன் மானம்
சற்றும் வேண்டாமாம் எள்ளள வேணும்
(நேருவின் ஆட்சி)

காங்கிரசுக்குத் தான் பெற்ற தங்கை -- தலைவி
காசில் விளையாடுகிறவள் தங்கை!
ஆங்காண் என்றூதினாள் தன் ஆணைச் சங்கைஇதோ
அவனே பூண்கின்றான் அவன்கால் விலங்கை.
(நேருவின் ஆட்சி)

சமநிலை நோக்கிடும் ஆட்சியின் மூலம் -- தன்
சமையமா? சாதியா? உமிழாதா ஞாலம்?
சுமை தாங்கி சுமையினைத் தனதென்ற காலம்
தொலைந்தது தொலைந்தது நாட்டில் எப்பாலும்
(நேருவின் ஆட்சி)
-----------------

31. இந்தித் திணிப்புச் சரியல்ல!

அமைதி வேண்டும் நாட்டினிலே
அன்பு வேண்டும் என்பார்
ஆழ மடுவில் நீரைக் கலக்க
வேண்டாம் என்று சொல்வார்.

தமிழகத்தில் இந்தி திணிக்கச்
சட்டம் செய்தார் அவரே
சாரும் குட்டையில் எருமை மாட்டை
தள்ளுகின்றார் அவரே!

சுமக்க வேண்டும் இந்தியினைப்
பொதுமொழியாய் என்பார்;
தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல்
தொலைய வேண்டும் என்பார்;

தமிழ்மொழியை அழிக்க வேண்டும்
என்றவரும் அவரே
தமிழகத்திலே புகுந்த
சாக்குருவிகள் அவரே!
-------------

32. இந்தி ஒழிக

தமிழ்வாழ்க தமிழ்வாழ்க என்று சொன்னான்
தாமரையின் வாய்மலர்ந்து தேனைப் பெய்தான்;
தமிழ் இதுபார் இன்றுதன் உள்ளங் காட்டி,
தன்னுயிரில் அதுகாட்டி, என்றன் தோளை
அமிழ்திதுவர எட்டியா என்று தொட்டாள்
அமிழ்தென்றேன் ஆம்என்றேன் மகிழ்ந்து நின்றேன்
கமழ்இமை கனியிதழும் தந்தாள் உண்டேன்
கண்திறந்தேன் வேறொருத்தி வருதல் கண்டேன்.

தமிழ்வீழ்க தமிழ்வீழ்க என்று சொன்னாள்
தமிழ்க்காதில் ஈயத்தை உருக்கி வார்த்தாள்
தமிழில்லை என்றுதன் உளத்தைக் காட்டி
தன்னுயிரிற் பகைகாட்டி என்றன் தோளை
அமிழ்திதுவா எட்டியா என்று தொட்டாள்
அப்பட்டம் எட்டிக்காய் அடியே என்றேன்
உமிழ் இந்தி நான் என்றாள்! ஒழிவாய் என்றேன்
ஒழிப்பவர்கள் ஒழிக்கட்டும் ஒழியேன் என்றாள்.
--------

33. இராசாசி வயிற்றெரிச்சல்

இராசாசி வயிற்றெரிச்சல்‌
உம்‌ நாடகம்‌ செல்லுமா ஈரியாரே?
சென்னை விலங்கு மருத்துவம்‌ செய்முறைக்‌
கல்லூரியின்‌ தமிழ்க்‌ கழகந்‌ தன்னைத்‌
தொடக்கம்‌ செய்த இராசாசி சொன்னார்‌?
“வெறுங்‌ கூச்சலிடுவதால்‌ சாதிவோர்‌ அறாது”*
பெரியார்‌ தாமும்‌, பெரியார்‌ கொள்கைக்‌
குரியார்‌ தாமும்‌, சாதிக்‌ கொள்ளை நோய்‌
ஒழிக்கும்‌ பணியில்‌ ஒய்விலா துழைப்பது
வையம்‌ அறியும்‌! மறுக்க ஓண்ணாது! —
வெறுங்கூச்ச லிடுவதாய்‌ இராசாசி விளம்பினா்ல்‌
ஆரைப்‌ பற்றி விளம்பிய தாகும்‌?
வெல்லும்‌ பெரியார்‌ வெறும்‌ பேச்சுக்காரரா?
வீரத்‌ தமிழர்‌ வெறும்‌ பேச்சுக்‌ காரரா?
முன்னாள்‌ நீர்‌ ஒரு முதலமைச்சராய்‌
இருந்தீர்‌ இந்தியைக்‌ கொண்டு வந்தீர்‌!
உமது வாலை ஒட்ட அறுத்தது
'பெரியார்‌ வெறும்‌ பேச்சுத்தானா? பேசுக.
அமைச்சுக்‌ கட்டிலும்‌ அரோகரா ஆனதே,
பெரியார்‌ வெறும்‌ பேச்சுக்காரரா? பேசுக!
சாதி கனவிலும்‌ தலைகாட்டாமல்‌
காதிலும்‌ சாதிக்‌ கதைகேளாமல்‌
ஒழிக்கப்‌ படுவதை உணர எண்ணினால்‌
விழிக்குக்‌ கறுப்புப்‌ கண்ணாடி வேண்டா?
“*ஓருவர்‌ மேல்‌ அன்பு வைத்தால்தான்‌
ஓழியும்‌ சாதி வெறுப்பால்‌ ஒழியாது” ”
அடியோடு மரத்தை அகற்ற எண்ணுவோன்‌
ஆணிவேர்‌ மேல்‌ அன்பு வைப்பானோ?
வன்புமிக்க சோறு விற்பான்மேல்‌
அன்பு வைத்த பெரியார்‌ அறிவுரை
என்னாயிற்று? நன்று கருதுக! |
பார்ப்பான்‌ என்ற பேர்ப்‌ பலகைதான்‌
போனதா புகலுக௧! இல்லையே! இல்லையே!
ஆயிரம்‌ தமிழர்‌, அன்புப்‌ போரில்‌
புழுவாய்த்‌ துடித்தனர்‌, போனதா பலகை?
எப்போது பலகை எடுக்கப்‌ பட்டது? ப
குப்பேது மின்றி எண்ணுக சற்றே!
விரிவாய்ப்‌ படித்ததாய்‌ விளம்பி நிற்பீர்‌,
அரிய அலுவல்‌ பார்த்தாய்ப்‌ பேசுவீர்‌,
ஆண் டில்‌ முதுமை அடைந்தேன்‌ என்பீர்‌,
**மக்கள்‌ நிகர்‌”£* எனும்‌ மிக்க சிறிய
பாடமும்‌ அறியாக்‌ குள்ள |
நாடகம்‌ செல்லுமோ நரியாரே? |
----------

34. வெல்க!

என்‌ தாய்நாடே! இன்தமிழ்‌ நாடே!

பொன்னிறக்‌ கதிர்விளை நன்செய்‌ வளத்தின்‌
தேன்மலர்‌ சோலையும்‌ தென்னையும்‌ வாழையும்‌
வானிடை உயரும்‌ மங்காச்‌ சிறப்பினை!
கனியென்று கட்டிக்‌ கரும்பென்று வையத்‌
குனியென்று செந்நெல்‌ தருவதோர்‌ வளத்தினை!
குன்றாப்‌ பயன்தரு குன்றுகள்‌ உடையை நீ!
இன்பமெனும்‌ புதுப்புனல்‌ ஆறுபாய்‌ எழிலினை!
காடுகள்‌ கழனிகள்‌ ஓடைகள்‌ புள்ளினம்‌

பாடும்‌ பொய்கை பலப்பல உடையைநீ!
மின்தரங்கு மணிகள்‌ மேவினை மாற்றுயர்‌
பொன்தாூங்கு நிலவறை பொன்றாத்‌ இருவினை!
உலட௫ஏனை அழைக்கும்‌ ஒளிமுத்துக்‌ கடல்கள்‌

இலகு பவழ இலக்குகள்‌ உடையை நீ!
இப்பார்‌ எல்லாம்‌ ஏந்துகை நிரப்பும்‌

உப்பளச்‌ செல்வம்‌ உதவும்‌ இறத்தினை! |
உழுவார்‌ மனப்படி மழைபெறும்‌ பேற்றினை!
ஒழியா தசையும்‌. தென்றல்‌ உடையை நீ
முகத்து நிலவு காட்டி மகளிர்‌

அகத்திறம்‌ காட்டி ஓழுகும்‌ அழகனை!

நாளை தூக்குக உலகை எனில்‌ இன்றே

வாளைத்‌ தூக்கும்‌ மறவர்‌ உன்‌ மக்கள்‌!

தத்துவ முதல்‌ நூல்‌ உலகுக்குத்‌ தந்தனை:
கத்திலா இலக்கியம்‌ கடலெனக்‌ கண்டனை!
அமிழ்தென ஒருபொருள்‌ உண்டெனக்‌ காட்டும்‌
குமிழ்‌ உன்‌ மூச்சும்‌ பேச்சும்‌ ஆம்‌எனில்‌

என்ன இல்லை உன்பால்‌?

அன்னாய்‌ அளப்பரும்‌ பரப்பினை வெல்கவே,
---------

35. கீழறுப்பான் வாழுவானா?

பெரியாரின் காலைப் பிடி
மரியாதை யாக நடி
பெரியாரை யேஒழிப்பாய் மறுபடி
பெருநாட்டில் நீதான்ஓர் உருப்படி ஆனால்
பெறப்போகின்றாய் இனிமேல் செருப்படி

மணம்செய்ய நீ கெஞ்சு
மணம் ஆன பின் மிஞ்சு
பிணிபோலும் தலைமைபெற உன்நெஞ்சு -- நம்
பெரியார்க்கே இடநினைக்கு மேநெஞ்சு -- அடடே
பின்விளைவை முன்எண்ணி நீ அஞ்சு.

விடுதலையில் விளை யாடு
கெடுதலையே நீ கேடு
படுகாலிப் பையாநீதான் மண்ணோடு -- மண்ணாள்
பழியோடு மறைந்துபோ கட்டோடு -- இங்குப்
பறக்குமோஉன் புதுக்கொடிதான் பிற்பாடு?

பீபீநூற் றுக்கு நூறு
பிரிந்தொழிந்தான் ஒரு வாறு
பீபீநூற் றுக்கைம்பதே முன்னேறு -- இங்குப்
பின்னும்எதற்கடா விளக்குமாறு?
பெரியார்க்கா சாத்த வந்தாய் வெண்ணீறு?
---------------------

36. மீட்சிப்‌ பத்து

பொன்னிலும்‌ மண்ணிலும்‌
பெண்ணிலும்‌ நெஞ்சைப்‌ புகுத்தலல்லால்‌
குன்னல நீக்கிப்‌ பெரியார்‌ |
நெறிறின்று தாய்நிலத்தை
முன்னுற மீட்டுத்‌ தமிழ்‌, கலை, |
வாழ்க்கைமுறை தழைக்கத்‌
குன்மானம்‌ காக்க வேண்டாமேர
அருமைத்‌ தமிழர்களே?
்‌ பாம்பாகச்‌ சீறும்‌ வடவரின்‌
பல்லைப்‌ புய்த்தலின்றி :
மேம்பாடு கோரி வெறும்‌
பாடுபட்டுக்‌ கஇடப்பதுண்டோ?
நாம்பாடு பட்டதெல்லாம்‌
விழலோ? தமிழ்நாட்டுரிமை
வேம்பா? அடிமை நிலைகரும்பா?
தமிழ்‌ மேன்மக்களே!
உணலுற்ற சோறும்‌ பறித்தான்‌!
குமிழின்‌ உயர்வழித்தான்‌/
மணலுற்ற தென்றான்‌ தமிழகம்‌!
செந்தமிழ்‌ மாணவரே
கதுணலற்ற வீட்டுக்குள்‌ தைப்பொங்கல்‌
பாடும்‌ தலைவருண் டா?
நுணலாதநாம்‌? தேவாங்கா? : ட
ஆமையா? சற்றே நுவலுவிரே! —
பூஃ7ச- வேறி

ஊர்ப்படம்‌ நீக்கிப்‌ பன்னாட்டுப்‌
| படத்தின்‌ உருஎரிக்கும்‌
தீர்ப்படங்கற்கும்‌ இணக்கம்‌
தாராமல்‌ திரைப்படத்திற்‌
போ்ப்படங்‌ காட்டிடும்‌ பெண்ணான
பத்தரை மாற்றுத்தங்க
வார்ப்படங்கண்டால்‌ மலைப்‌
படங்கான்‌ ஓர்‌ கலப்படமே!
யார்தாம்‌ தலைவா்‌? நல்வழி
காட்டுவோர்‌ யாவர்‌? இந்தாள்‌
யார்தாம்‌ தமிழரைக்‌ காக்கப்‌ ப
பிறந்தார்‌? இனிப்பிறவார்‌
யார்தாம்‌? அவர்‌ நம்‌ பெரியார்தாம்‌
இல்லைஎனில்‌ பிறகு
யார்தாம்‌ புகலுவீர்‌ யார்தாம்‌ |
புகலுவீர்‌ இத்நிலத்தே
மெய்யேந்தித்‌ தோளினில்‌ '
வேலேந்தி வாழ்ந்த தமிழரிடம்‌
கைஏந்தி, வேந்தரின்‌ காலேந்தி
ஏந்திக்‌ கயல்விழியால்‌
மையேந்தும்‌ மாதர்‌ இதழினை
மன்னர்கள்‌ உண்ண ஏந்திப்‌
்‌. பொய்யேந்தும்‌ ஆரியர்நாட்டில்‌
கோல்‌ஏந்தவும்‌ போந்தனரே.
மூந்தைக்கு முந்தை அதன்‌ முந்தை
ஆட்சிமுறை வகுத்த
எந்தைக்குத்‌ தந்‌ைத அவன்‌ |
தந்தையின்‌ தந்‌ைத பெற்ற புகழ்‌

கந்தைக்கும்‌ சோற்றுக்கும்‌
இல்லாமை தன்னிற்‌ கரைத்திடில்‌ என்‌
மைந்தரின்‌ மைந்தருக்கு வைப்பேன்‌
விடுதலை வாழ்வினையே.
- விழிக்குத்‌ தெரிந்த தமிழகம்‌
இல்லையாம்‌. மேலுமிந்த
மொழிக்குச்‌ சிறந்த தமிழ்முதல்‌
இல்லையாம்‌ முன்னவரின்‌ -
வழிக்கென்று யாதும்‌ வரலாறும்‌
இல்லையாம்‌ ஆரியரைப்‌
பழிக்குப்‌ பழிவாங்கல்‌ அன்னாரின்‌
ஆட்சி பறிப்பதுவே.
குமிழரின்‌ மேன்மை இகழ்ந்த
வடக்கர்தறுக்‌ கடக்கி
அமைந்தனர்‌ மூவேந்தர்‌?
அன்றே அவரை அழித்திருந்தால்‌
இமையம்‌ பிறந்திடு முற்பிறந்திட்ட
இன்பத்‌ தமிழைத்‌
குமது வடமொழி தந்ததென்றார்‌
அச்சழக்கார்களே!
நாவலந்‌ தீவே நமது! பிறகு
நமை அடைந்த
பாவிகள்‌ ஆரியர்‌ கூலியாய்க்‌
குற்றக்‌ குழுவினராய்‌
மேவினர்‌ நம்மடி. மெல்லவே
...... தீம்தலை மேலுமுற்றார்‌,
யாவையும்‌ வவ்வினர்‌ ஈவதுண்டோ
"தமிழ்‌ நாட்டையுமே!
------------

37. மிடிமை தீரக் கடமை புரிவீர்

காலை மலர்ந்தது செங்கதிர்‌ எழுந்தான்‌.
கண்‌ மலர்‌ வீரே உலஒல்‌ மாந்தரே!
வேலைதொடங்குவீர்‌ மெய்யான வழியில்‌
விருப்பமும்‌ குறிப்பும்‌ அறம்‌எனக்‌ கொள்வீர்‌
ஆலையிற்‌ கரும்புபோல்‌ வாடினர்‌ பல்லோர்‌
அவர்களை மீட்டல்‌ அறத்தின்‌ முதன்மையாம்‌
சோலையில்‌ குயில்கள்‌ பாடி, நலம்செயும்‌
துளிரன்றி ஆயிரம்‌ தேடுவ தில்லையே!
மக்களை நடத்தும்‌ சட்டமும்‌ நடப்பும்‌
மாய்த்திடும்‌ பசிதோய்‌ வளர்த்திடல்‌ அறிந்தீர்‌!
குக்கது நாடி. ஒற்றுமை வலியினால்‌
குகாரத்திட வேண்டிக்‌ கொடுத்திடுவீர்கள்‌
கொக்கும்‌ இரைபெற இருந்திடும்‌; வந்தால்‌
கொத்திடத்‌ தயங்கிப்‌ பத்திடல்‌ உண்டோ?
கைக்குள்‌ கொண்டுளீர்‌ மீட்டு மருந்தினை
கடமை புரிவிர்‌ எழுக தொண்டரே.

பாரதிதாசன்‌ குயில்‌ 10.9.67
--------------

38. அவர் செல்லும் பாதை

முன்னே போகும் குதிரை -- அதைத்
தன்ன தென்றார் நேரு!
முன்னை நாகரீகம் -- அறம்
முற்றிய பண்பாடு
நன்ற மைந்த நாடு -- நம்
நல்ல தமிழ் நாடு
தொன்மையான நாட்டை -- மிகச்
சுரண்ட வந்தார் நேரு.

சீக்கி யரின் நாடும் -- மற்றும்
சின்ன பல நாடும்
தூக்க முயற்ற போது -- முடி
சூடிக் கொண்ட நேரு!
பார்க்க நேர்ந்த போது -- ஓடிப்
பறந்திடுவார் நேரு!
ஏய்க்க வந்தார் நேரு! -- இந்தி
எவர்க்கும் வேண்டு மென்றே.

தில்லி யிலே குந்தி -- நேரு
செப்பு மொழி எல்லாம்,
நல்ல சட்ட மென்றார் -- அது
நமக்கு மென்று சொன்னார்.
எல்லை யற்ற நாளாய் -- இங்
கிருந்த தமி ழாட்சி
இல்லை என்று சொன்னார் -- அதை
யாவர் ஒப்பு வார்கள்?

படை யுடையார் நேரு -- அந்தப்
பதவி நிலை யாமோ!
குடம் உடைந்து போனால் -- அதன்
குற்றோ டெல்லாம் மண்ணே!
கமை விலைபோ காதே -- அது
கட்டித் தங்க மாமே
இடை நடுவில் நேரு -- அறம்
ஏற்று நடப் பாரா?
------------

39. போர் தொடங்கு!

கழுகான தில்லியின் கண்ணைப் பிடுங்கு!
காம ராசனே போரைத் தொடங்கு!
முழுது தமிழகம் உனை ஆதரிக்கும்
முத்தமிழ்க் கொடியினை வானில் விரிக்கும்!
(கழுகான தில்லியின்)

அழுதவர் உன்மக்கள் அரிசிக்குத் துடித்தார்
அன்பிலா வடக்கர் பழம்பாடம் படித்தார்
பழகினை பல்லாண்டு தில்லி யோடு
பழிகாரரால் வாழுமா தமிழ்நாடு!
(கழுகான தில்லியின்)

ஆட்சியின் அடிப்படை பார்ப்பனர் தந்நலம்;
ஆட்சியில் இருப்பதும் அதேபார்ப் பனகுலம்
காட்டி வந்துள மனப்பான்மை யாவும்
கருதும் நெஞ்சில் நெருப்பைத்தான் தூவும்.
(கழுகான தில்லியின்)

நீட்டத் தமிழர் துடிக்கும் துடிப்பை
நீக்குநீ நீக்குநீ வடவர் பிடிப்பை,
ஆட்பட்டோரின் அனமச்சராய் இராதே
ஆளும் தமிழரின் அரசென வாழ்கநீ!
(கழுகான தில்லியின்)
-------------

40. வருக போரே!

முந்நூ றாண்டின் பின்னே -- யாம்
முதலிற் காணும் போரே
தின்பாய் நல்ல கொலைகள் -- அந்தச்
சீனாக் காரர் தலைகள்.

இந்நாட் டாரின் வீரம் -- பார்
என்று காட்டும் போரே
செந்நாய் இதைக் கருதிக் -- குடிக்கும்
சீனாக்காரன் குருதி.

போருக்குத்தான் தோளை -- அவன்
பழைய வீர வாளை
பாருக் கெல்லாம் காட்டப் பண்
பாடி வந்த போரே!

ஊராசையால் வந்தான் -- அவன்
உண்மையை மறந்தான்
சீரழிந்தான் கள்ளன் -- அந்தச்
சீனாக்காரக் குள்ளன்.

இமயத்துக்கே வெற்றி -- யாம்
குமரிக்கு நல் வெற்றி!
கமழும் காவேரிக்கும் -- நற்
கங்கைக்குமே வெற்றி!

சுமை சுமையாய் வெற்றி -- யாம்
கமக்க எண்ணி வந்தாய்,
அமைதி காக்கும் போரே -- நல்
அறத்துக்குத்தான் வெற்றி!
-------------

41. சூயென்லாய் சீனரின் நோய்

சீன மக்களுக்கேற்பட்ட ஒரு நோய் சூயென் லாய்
சீர்பட்டு வருகின்றாள் உலகத்தாய் குரைத்தது நாய்!
பூனைக்குட்டி வரிப்புலியின் வாய் புகுந்தது போய் -- எம்
பொன்னாட்டுத் திறம் எண்ணாத ஒரு சேய் சூயென் லாய்!
மலையில் முட்டத் தலைமை பெற்றானா வெல்வானா!
வாழ்விற்கலை வாழ்வு பெற்றது சீனா வாழவைப்பானா?
வலைவீசிப் பிடிக்க வந்தானா நாங்கள் மீனா?
மண்ணாய்ப் போகும் நாளிது தானா செஞ் சீனா
புறமுதுகு காட்டாத நாடு -- பாரத நாடு
பூவுலகில் முதலில் வாளேடு பிறந்த நாடு!
அறங்காக்க வாழ்ந்திடு நாடு பொன்னாடு -- நல்
அறிவில்லாத சீனனை உயிரோடு புதைக்கும் நாடு!
-------------

42 வலை விரித்தான் ஆச்சாரி

போகாதே சாகாதே

வலைவிரித்தான் பார்ப்பானடா
மக்களெலாம் வருகஎன்பான்
கலையழித்தான் கண்ணிவைத்தான் போகாதே -- நாம்
கண்டபயன் போதுமினிச் சாகாதே!
நலிவுசெய்வான் பார்ப்பானடா
நாலுசாதி வாழ்க என்பான்
புலியடிப்பான் கறிக்காகப் போகாதே -- நீ
போனமட்டும் போதும் இனிச் சாகாதே!
பள்ளிஇரு பத்தாயிரம்
படிப்பவர்கள் படிக்காமல்
கொள்ளிவைத்தான் ஆச்சாரிதான் போகாதே -- அக்
கெள்ளைநோய்க்கு மருந்துமில்லை சாகாதே!
மதிதமிழர் ஒழியவேண்டும்
மடப்பார்ப்பான் வாழவேண்டும்
இதுதான்ஆச் சாரிஎண்ணம் போகாதே -- நீ
இதுவரைக்கும் பார்த்துவிட்டாய் சாகாதே!
பன்னாடைக் கட்சிகளும்
பழிவாங்கும் சின்னவரும்
என்கூட்டம் என்றுரைப்பான் போகாதே -- அவ்
வெறிமூட்டும் கூட்டத்தினாற் சாகாதே!
-------------

43. இந்திப் போர் மூளுக

இந்திக்குச் சிறை சென்ற ஆதித்தானார் வாழ்க!
இந்தியை எதிர்க்கும் மாணவர் வெல்க
இந்திஎன்று சாக்குருவிக் கூச்ச லிட்டார்
இராசேந்தி ரப்பிரசாத்! அவரே இந்த

செந்தமிழ்நாட் டிற்காலை வைத்தார் என்றால்
திருவடிக்குப் பூசைசெய்வார் தமிழர் ஆகார்!
எந்தமிழ்மேல் இந்தியினை ஏற்ற எண்ணும்
இடக்கரே வடக்கரே செல்வீர் என்றே
எந்தமகன் எதிர்த்தானோ அவனே நாட்டின்
எழில்மறவன்! தன்மானச் சிங்கம் என்பேன்.

துடைநடுங்கித் திராவிடமுன் னேற்றக் கண்ணீர்த்
துணிகளெல்லாம் கருங்கொடிகாட்டு வதாய்ச் சொன்னார்
படையுண்டு; வலியுண்டு மிகவே என்றார்
பதுங்கியது தவிர ஒன்றும் புரிந்த தில்லை?
உடலெல்லாம் பொருளெல்லாம் ஆவி எல்லாம்
உயர்தமிழுக் கேஎனுமா தித்த னார்தாம்
தடைசெய்வேன் கருங்கொடியால் என்றெழுந்தார்
தமிழ்கொல்லும், ஆளவந்தார் சிறையிற் போட்டார்.

நாம் தமிழர் இயக்கத்தார் நாமும் என்றார்
நாடாள்வார் அவரையும்தாம் சிறையிற் போட்டார்
நாம் தமிழர் இயக்கத்தார் நடுங்க வில்லை
நம் தமிழர்க்குச் சிறைஎன்றால் கற்கண் டென்றார்
மோந்துமோந் தயலடியை நக்கும் நாய்கள்
முகம்நாணி வீட்டுக்குள் புகுந்து கொண்டார்
வேந்தான பிரசாதை வெறுத்து ரைத்த
சிவஞான மேலோனும் வாழ்க நன்றே.

ஆதித் தனார்வாழ்க அவரி யக்கம்
நாம்தமிழர் அதுநாளும் வாழ்க! வாழ்க!
தீதுற்ற பிரசாத்தின் நெஞ்சு கண்டு
சீறுகின்ற தமிழகத்து மாணவர்கள்
சூதுற்ற ஆளவந்தார்க் கஞ்ச வேண்டாம்
தொடைநடுங்கி கள்பேச்சைக் கேட்க வேண்டாம்
ஓதுற்ற அன்னையாம் தமிழைக் காக்க
உறுதிக் கொள்க! போர் வெல்க! வெல்க நன்றே!
--------------

44. புதுவாழ்வு வேண்டும்

வாளைத் தூக்கித் வேலைத் தூக்கி
வந்து புகுந்த இந்தி -- நம்
வாழ்வைத் தூக்கி அடிக்குமடா
தமிழகத்தில் குந்தி!
தேளைத் தூக்கி மேற்போட்டான்
நாட்டிலேபொ ருந்தி -- நீ
செருப்பைத் தூக்கிப் போடவன்மேல்
உன் மனம்திருந்தி.

ஆளைத்தூக்கி ஆள்மேலே
போட்டான் வட மந்தி -- கீழ்
அறுப்பாரை அகற்றிவிட்டால்
கிழியும் அவன் தொந்தி!

தோளைத்தூக்கி உலகாண்டான்
செந்தமிழன் முந்தி -- தன்
தோலைத்தூக்க எலும்பில்லாமல்
துடிக்கலுற்றான் பிந்தி.

உலகுதோன்ற உடன்தோன்றி
நிலவும்தமிழ் நாடு -- தன்
உருத்தோன்ற முடியாமல்
சூழ்ந்துவிட்டார் கேடு!

சிலநாள்கள் இந்தநிலை
தீர்ந்திடும்பிற் பாடு -- நீ
செந்தமிழை என்னருமைத்
தாயென்று பாடு!

பலருள்ளார் தமிழ்மறவர்
தமிழாஉன் னோடு!
பழநாளின் ஆட்சியிலே
விளக்கடா உன்பீடு!

புலைஎழுப்பும் இந்திநாயின்
தலையில் ஒன்று போடு -- நம்
புதுவாழ்வைப் பழநாட்டில்
விடுதலையால் தேடு!
--------------

45. படித்தவன் அழுகை

உலகு தொடங்க உடன்தொடங் கியதாம்
இலகு தமிழர் வாழ்வுதான் இந்நாள்
ஆற்றல் இருந்தும் அறிவி ருந்தும்
வேற்றுமைப் பெரும்புயற் காற்றிற் சிக்கிய
சருகென வாழ்வு சரிந்து கிடக்கும்
பழுதினைச் சுவடியிற் படித்தவன்
அழுத கண்ணீர் அருவியிற் பெரிதே
-------------

46. வெல்வதுறுதி

குள்ள நரியாய்ப் பதுங்கி ஆச்சாரி
கொடுக்கும் குலக்கல்வித் திட்டம்
கள்ளப் பசப்புமொழியாகும் -- சுடு
காட்டை எண்ணுவரோ தமிழர்?
எத்தனின் ஏமாற்றுத் திட்டம் -- நமை
ஈடேறா தழிக்கின்ற திட்டம்;
செத்ததுவா தமிழ்க்ருதி -- தமிழா
சீறுக வெல்வதுறுதி!
காமராசரே இதைப் பொறுக்கோம் -- குலக்
கல்வியின் வேரை அறுப்போம்!
ஓமந்தூரர்தம் இடத்தில் -- நீ
உட்கார வேண்டும் திடத்தில்!
கோணற் கருத்துகள் போகும் -- வந்த
குறுக்குநூல் பாழ்எண்ணம் சாகும்!
ஆணவ ஆச்சாரி வீழ்க! -- தமிழ்
அண்ணலே நின் ஆட்சி வாழ்க!
------------

47. விடுதலை நம் உரிமை

கையோடு கைகோத்து வாரீர்
கழகத்தோழர்களே ஒன்று சேரீர்
பொய்யோடு வந்தவர்
புரட்டோடு வந்தவர்
புறங்காட்டி ஓடினர் பாரீர்!

எந்தக் கொடுமைகள் வீழ்த்தும்?
எந்தத் தடைச்சட்டம் தாழ்த்தும்?
உந்தும் விடுதலை
வேட்கை உரிமைகள்
ஒற்றுமை கண்டே வாழ்த்தும்.

விடுதலை வாழ்வுநம் உரிமை
வேங்கைபோல் நீஎழு! அடிமை
கெடுதலை தூள் படும்
கீழ்மைகள் மாண்டிடும்
கீழ்அறுப்பதெந்த எருமை?

முன்னோர்கள் ஆண்ட இந்நாடு
முச்சங்க முத்தமிழ் ஏடு
பின்னாளில் வந்தேறிக்
கூட்டம் சுரண்டினும்
பிழைத்தது, இனியில்லை கேடு!

தீங்கரசுக் கென்ன ஆட்சி
திராவிடர் கைகொள்ளும் மாட்சி
ஓங்கிடும் ஐந்தாண்டில்
உண்மை மொழியிது
பெரியார் உழைப்புக்கில்லை வீழ்ச்சி!

உழைப்பால் வருவது வெற்றி
உரிமை விடுதலைப்பற்றி
அழைத்தது சங்கொலி
ஆர்த்தது முரசொலி
ஆட்சி அதிகாரம் முற்றி!

கண்ணில் கல்வி விளக்கேற்று,
கைத்தொழில் வாழ்வுக்கு நாற்று
மண்ணில் பொது நலம்
மாண்புடி தமிழரால்
மண்டிற்று என்றசொல் ஊற்று!
---------

48. எங்கள் நாடு தனிநாடு

எங்கள் மொழி தனிமொழி
கொதிப்புள்ள வீரர்களே
கொள்கைமிகு தோழர்களே
மிதித்திடும் வஞ்சகரை வீழ்த்துவீர்!
'மேல்வருண' நஞ்சினரைத் தாழ்த்துவீர்!
மதிதமிழ் தன்மான
மறவரை நாடொறும் நீ வாழ்த்துவீர்!

பாடுபடும் பாட்டாளி
பணம் சுரண்டும் பொருளாளி
நாடுகெடும் இரண்டினத்தை மாற்றுவீர்!
நல்லுழைப் பாளர்களைப் போற்றுவீர்!
கேடுகெட்ட கொள்கையினர்
கீழ் அறிவு திருந்த அறிவூட்டுவீர்!

செந்தமிழை எண்ணாமல்
சேர்மொழிக்குப் பாய்விரிக்கும்
வந்தேறிகள் கங்காணிகள் ஓட்டுவீர்!
வரிப்புலிகள் நாங்களென்று காட்டுவீர்!
இந்தியாட்சி கொள்ளாதென்றே
எங்கள்நாடு தனி நாடென்றே நாட்டுவீர்!
------------

49. எரிமலைச் சீற்றம்

கடுஞ்சினம் மாந்தரைக் கண்குரு டாக்கும்
கண்ணோட்டம் அன்பினை நட்பினைத் தீர்க்கும்
கொடுவிலங் காக்கிடும் சுற்றம் பார்க்காது
கொண்ட கொள்கைகளைக் காத்திடும்போது!

படுகளம் படுகளம் இனிக்கும்கற் கண்டு
பைந்தமிழ் காப்பாய் நீ போர்க்குணம் கொண்டு!

இந்திக்குக் காட்டுக கொதிப்பை வெறுப்பை!
என்நாட்டார் உணரட்டும் தமக்குள்ள பொறுப்பை!
வந்தவர்க்கெல்லாம் நாம் இடம் தரமாட்டோம்
வலியவரும் போரில் புறங்காட்ட மாட்டோம்!

முந்துக முந்துக போர் எல்லைக் கோடு
முழுவெற்றி நமக்கென்று முழக்கிற்றன் போடு!

ஆட்பட்டிருப்பவர் நாமல்லர் கூறு
ஆளவந்தோம் தமிழ் ஆட்சியின் வீறு
நாட்கடத் தாது நம்கையில் உண்டு
நலிவுசெய் வார்களின் தலைக்குவை குண்டு!

மீட்பதென்றே எழும் எரிமலைச் சீற்றம்
வெற்றியின் வார்ப்பட வெற்றியின் தோற்றம்!
------------

50. வேங்கையே எழுக!

வேங்கையே நீ எழுக!
வெற்றித் தமிழைத் தொழுக!

ஓங்கியெழும் எரிமலைபோல்
உதவா மொழிமேல் விழுக!

இந்தியாமே இந்தி
இனவெறிகொள் இந்தி

வந்ததென்றார் வாள்எடு நீ
வாலறுக்க முந்தி!

ஆங்கிலத்தால் நாடு
அழிந்தது பண்பாடு

தூங்கவில்லை தமிழர்என்று
தோலை உரித்துப் போடு!

ஒருமைப்பாடு வேண்டி
உளறினான் ஓர் ஆண்டி

அருமைப்பாடு தெரியாதார்க்கு
அறிவு கொளுத்துத் தூண்டி!

தாய்மொழிதான் கண்கள்
தழுவும் மொழிகள் புண்கள்

நோய்மொழியை நுழைத்தால் சாவு
நூறாயிரம் எண்கள்!

இந்தியா ஒரு நாடு
என்பதே தப்பேடு

செந்தமிழர் நாடு வேறென்பதைச்
சீறிப் பெறுக பீடு!
-------------

51. தன் கையே தனக்குதவி

தன் கண்ணாலே பார்த்திட முடியும்
தன் காதாலே கேட்டிட முடியும்
தன் அறிவாலே உணர்ந்திட முடியும்
தன் காலாலே நடந்திட முடியும்
தன் கை தானே தனக்கரும் உதவி?
இது தான் உலகத்தியற்கை; இதனை
பொதுமொழி என்னும் புதுமொழிக் கெண்ணுக!

பிறன் கண்ணாலே பார்த்திட முடியுமா?
பிறன் காதாலே கேட்டிட முடியுமா?
பிறன் அறிவாலே உணர்ந்திட முடியுமா?
பிறன் காலாலே நடந்திட முடியுமா?
பிறமொழியாலே பேசலும் எழுதலும்
அறவொளி காணலும் அரிது! பேதமை!

இவைதாம் முடியும் என்றால், எவரும்
தாய்மொழி விட்டு பிறமொழி தழுவலாம்
ஆளவந்தர அதிகாரத்தால்
மாள நினைப்பது மடமைச் செயலே!
-------------

52. தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான்

தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்!
தமிழப் பகையாளனும் தானே பெயர்வான்! (தமிழ்)

தமிழுக்குத் தொண்டு
தரும்புலவோர்கள்
தமிழ்க்கனி மரத்தினைத்
தாங்கிடும் வேர்கள்!
கமழ்புது கருத்துக்குப்
பலபல துறைகள்
கற்றவர் வரவர
கவின்பெறும் முறைகள்! (தமிழ்)

எங்கும் எதிலுமே
தமழத்முதூட்டு
இங்கிலீசை இந்தியை
இடமிலா தோட்டு
திங்கள், செவ்வாய், புதன்
கோள்கட்குச் செல்வாய்
தேடரும் அறிவியல்
எண்ணங்கள் வெல்வாய்! (தமிழ்)
--------------

53. தீமை தீமை

வேற்றுமைக்குக் காரணங்கள் நிறங்கள் தாமா?
வேற்றுமைக்குக் காரணங்கள் மொழிகள் தாமா?
வேற்றுமைக்குக் காரணங்கள் இனங்கள் தாமா?

வேற்றுமைக்குக் காரணங்கள் இவைதாம் என்றால்,
போற்றுகிற -- மானுடமும் மனிதன் -- என்னும்
பொருள்மொழிகள் பொருளற்றுப் போய் விடாதா?

வேற்றுமைக்குக் காரணங்கள் இரண்டே -- ஒன்று
வியப்பூட்டும் கல்வி; மற் றொன்று பணம் என்பேன்.
கல்வியினால் மனிதரெலாம் நிறம் மறப்பார்;

கல்வியினால் மனிதரெலாம் மொழி மறப்பார்;
கல்வினால் மனிதரெலாம் இனம் துறப்பார்
கல்வியினால் நாகரிக வளர்ச்சி யுண்டு.

கல்வியினால் பண்பாட்டின் வாழ்வும் உண்டு
கல்வியினால் பணம்கூட கால்தூசாகும்.

கல்வியினால் மனிதமனம் ஒருமை காணும்
கல்வியதும் தாய்மொழியில் ஆழ்தல் ஒன்றே.

தாய்மொழியைக் கல்லாத ஒருவன் வேறு
தரைமொழிகள் கற்பதெலாம் வெறும் கூத்தாகும்.

தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்றாகும்
தாய்மொழியாம் தமிழ்மொழிவிட்டாள வந்தார்.

பாய் மரமே இல்லாத படகில், உள்ள
பயன் படுநல் துடுப்பெறிந்து பயணம் செய்ய

ஓய்வின்றி எல் லோரும் உகந்து செல்வோம்
ஒப்புகநீர் 'பொதுப்படகு' நமக் கென்கின்றார்.

இந்தியா ஒருநாடு நாமெல்லோரும்
இந்தியர்கள் என்பதனை ஒப்பா மக்கள்

இந்திஎனும் தனிமொழிக்குப் பகைவர் அல்லர்
இந்தியர் நாம் எனச்சுரண்டும் வடக்குத் தெற்கு

விந்தியத்திற் கிருபாங்கும் நடக்கும் சூழ்ச்சி
வேற்றுமைகள் வெறுக்கின்றோம ; ஒருமைப் பாட்டை;

எந்தமிழர் போலெவர்தாம் உலகில் சொன்னார்?
இந்திதிணி்ப் பிருதிசைக்கும் தீமை தீமை!

செந்தமிழைப் பொதுமொழியாய் ஆக்குதற்குச்
சிந்தித்த துண்டாநீர ? சீர் தமிழ்போல்

எந்தமொழி எளிதிங்கு? வேர்ச்சொல் மிக்க
எளியமொழி அரியமொழி தமிழே ஆகும்.
தந்தடிமை யாய்கிற்கும் ஆளவந்த
தமிழ் நாட்டு தலைவர்இதைத் துணிந்து சொல்லார்:

எந்தவகை யேனும்தம் பதவி காக்கும்
எண்ணத்தார்க் கேதறிவு? மொழியின் பற்று?

முந்துவட வாரியத்தை முறித்தவர்யாம்
மூவேந்தர் மரபுவழி வந்தவர் யாம்!

இந்திய நாட்டரசியலை ஒப்பவில்லை,
இந்திமொழி பொதுவாக்கல் விரும்பவில்லை.

அந்தஇழி செயல்செய்ய அடிமைக் கூட்டம்
ஆளுவார் பக்கத்தில் இருப்பதுண்மை,

வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலை வேண்டாம்.
விடுதலையால் கெடுதலையா தீமை தீமை!
-----------

54. சீறும் புலிகள் நாம்

நாட்டை ஆளப் பிறந்தவர் நாம் -- எந்த
நாளும் அடிமைப் படமாட்டோம்
கேட்டைச் சுமப்பதுவா மக்கள் -- நமைக்
கீழறுக்கும் அறியாமைகளின்
கோட்டை தகர்ப்பது நம்கடமை -- உழையா
குறுக்கு நூலினர் பாழ்மடமைப்
பூட்டை யுடைப்பது நம் ஆண்மை -- வரிப்
புலியே எழுந்துஆள் நம் மேன்மை!

ஆள நினைப்பவர் யாருக்குமே -- நாம்
ஆட்பட்டிருந்ததில்லை,
தாள முடியாத போர்களினால் -- பிற
சமய மதங்களின் வேர்களினால்
நீளத் துயின்றனம் பாழ்அடிமை -- நமை
நிமிரா தழித்தது ஆரியமே;
மீளப் பெரியார் பெருந்தொண்டு -- இடி
மின்னலாய்ப் பாய்ந்தது கட்டறுத்தோம்.

முத்தமிழ்க் குருதியில் சேர்ந்திருந்த -- பல
மூடத் தனத்தின் நஞ்செடுத்தார்
புத்தம் புதிய தமிழ்க்குருதி -- நம்
பொன்னுடல் புத்துணர்வு புத்துணர்ச்சி
எத்திசையும்பெற ஏற்றிவிட்டார் -- இனி
எங்குண்டு நம்மை எதிர்ப்பவர்கள்?
செத்தனர் செத்தனர் நமைமிதித்தோர் -- இனிச்
சீறும் புலிகள்நாம் வெல்பவர் யார்?
---------

55. இந்திப் பேயாட்டம்

திரும்பி வருகிறதாம் இந்திப் பேயாட்டம்
திராவிடர் திரும்புக எடுக்கும் நோய் ஓட்டம்!
திரும்பி வருகிறதாம் ...

கரும்பிருக்கையில் கசந்திடும் இந்தி -- எட்டிக்
காயையா விரும்புவர், தின்பர் வருந்தி
திருந்தி வந்திடும் செந்தமிழ்க் கல்வி -- இனிச்
செத்தெழ விடுவதோ போர்க்கெழு முந்தி!
திரும்பி வருகிறதாம் ...

வடக்கின் வாய்க்கொழுப்பால் முன்னொரு காலம்
வன்கல்லைச் சுமந்ததை அறியுமே ஞாலம்!
இடக்கினால் இந்தியால் இனிஅவர் ஓலம்
இடுவதும் இடர்வதும் அழிவுறும் -- கோலம்!
திரும்பி வருகிறதாம் ...

பெரியாரின் தொண்டர்கள் கொண்டஓர் சீற்றம்
பிழைபடும் அரசியல் போக்கினால் ஏற்றம்
வெறியாக மாறிற்றே அரிமாவின் தோற்றம்
விரைந்தெழு தமிழரை எதுவந்து மாற்றும்?
திரும்பி வருகிறதாம் ...

பத்தாண்டின் முன்னே பட்டதோர் பாடு
பாழ்பட்ட ஆட்சி மறந்ததோ சூடு?
முட்டாள்கள் என்றுமே முழுமூச்சினோடு
மோதி டப்பார்க்கிறார் முற்றுகை சுடுகாடு!
திரும்பி வருகிறதாம் ...
------------

56. அரிமா இடத்தில் நரிமாவா?

கொடியர் வடவர் இந்தியினைக்
குழந்தைக் கல்விக் கூடத்தில்
படிக்கச் சொல்லி நுழைக்கின்றார்
பாம்பின் நஞ்சை மறந்தழகு

வடிவில் மயங்கி வாழ்க்கையினை
மடித்துக் கொள்ளச் சொல்கின்றார்
ஒடிய அவர்தம் முயற்சிகளை
ஒடுக்கி நறுக்கித் துறந்திடுவீர்!

ஒத்துப் போகா உறவினர்கள்
உலகில் நமக்கிங் காரியரே
செத்துப் போன மொழியுடலில்
செழுமை யற்ற இந்திமொழி
பித்துப் பிடித்தே ஆட்சியினால்
பெருமைத் தமிழுக் கிடையூறாய்த்
தொத்திக் கொள்ளப் பார்க்கிறது
தொலைத்தல் தமிழர் கடனாமே!

அரிமா உலவும் காட்டினிலே
ஆரியம்போல் வாழ்கின்ற
நரிமா வுக்கும் இடமுண்டு
மறுக்க வில்லை நாம், ஆனால்
அரிமா இடத்தில் நரிமாக்கள்
அட்டகாசம் செய்வதுவா?
சரிப்படாது தமிழர்களே
சாய்ப்பீர் இந்தி நரித்தனத்தை!

எச்சிச் சோறு போலிந்தி
எல்லா மொழியின் கலப்படமாம்
அச்ச மிலாது நம்நாட்டில்
அமுதத் தமிழைக் கெடுப்பதுவா?
பிச்சைப் பதவிப் பித்தர்களைக்
காட்டிப் பிழைக்கும் எத்தர்களை
மிச்ச மிலாது செய்வதுவே
மேன்மைத் தமிழர்க் கழகாகும்!
-----------

57. இந்தித் திணிப்பு

இந்தி திணிப்பாராம் -- ஒருமையை
வந்து பிணிப்பாராம்

கந்தலைத் தைத்தஓர் காட்சியைப் போலுள
இந்திய தேசிய எண்ணத் துழல்பவர்

ஒற்றுமைக் குழைப்பவராம் -- மக்களின்
பற்றினுக் குழைப்பவராம்!

மொழிவழி மாநிலம் முற்றும் பிரித்தபின்
அழிவை விளைத்தவர் உறவை அறுத்தவர்

நாட்டை வருந்தாராம் -- மொழி
ஏட்டைத் திருந்தாராம்!

பத்தாண்டின் முன்னே பத்தாம் பசலிகள்
செத்தோம் பிழைத்தோம்என் றோடிய தீயர்கள்

இந்தி திணிப்பாராம் -- ஒருமையை
வந்து பிணிப்பாராம்!
--------------

58. இந்தி எதற்கு?

சீர்மிகுந்த நாட்டினிலே இந்தி எதற்கு?
சிக்கலினை வளர்ப்பதற்கு ஆட்சி எதற்கு?
ஊர்கள்தோறும் வடவர்இந்தி ஓட்டம் எதற்கு?
ஒற்றுமையைக் கெடுப்பதற்கு ஆட்சி போதாதோ?

சூழ்ச்சியொடும் இந்தியினைக் கொணர்வ தெதற்கு?
தொல்லையினை விலைகொடுத்து வாங்கல் எதற்கு?
வெற்றிபெற்ற தமிழிருக்க இந்தி எதற்கு?
வீரர்களின் தோள்திணவால் வீழ்ச்சியுறற்கா.

கற்பதற்கு வழிகளில்லை கலகம் எதற்கு?
காப்பதற்குத் திட்டமில்லை கருத்துமில்லையே,
தெம்பில்லாத மக்களிடை தீமை எதற்கு?
திராவிடத்தில் ஒற்றுமையைத் தீர்ப்பதெதற்கு?

வம்புசெயும் தீங்குவட இந்தி எதற்கு?
வளரும்இளம் தலைமுறையை ஒழித்துக் கட்டவா?
அருவருப்பு வறுமையினை அறுக்க மாட்டாமல்
அதிகார வாள்எடுத்தே அச்சுறுத்தல் ஏன்?

கரும்பிருக்க கனியிருக்க வேம்பும் எதற்கு?
கன்னித்தமிழ் இருக்க இந்திக் கழுதை எதற்கு?
தாழ்வுயர்வு மாறவில்லை சாதி சமயத்தின்
தறுதலைகள் ஒடுக்கவில்லை தலைமை எதற்கு?

வாழ்வுயர்த்தும் தாய்மொழியின் வன்மை இருக்க
வடமொழியின் வைப்பாட்டி இந்தி எதற்கு?
கமழ்உரிமை விடுதலையின் கட்ட விழ்க்காமல்
கலக நச்சுக் கண்ணீர்ப்புகை இந்தி கலப்பதேன்?

தமிழ்மொழிக்கே உலகையாளும் தகுதியிருக்கு
தமிழ்மகனே இந்திப்பாம்பின் தலையை நறுக்கு!
-----------

59. குருதி பொங்கினால் ...

குருதிபொங்கினால் தயங்காது -- தமிழ்க்
குருளைக் கூட்டங்கள் மயங்காது:

இருப்பதல்லது
தமிழோடு இறப்பதென்றிடும்

கொள்கை மறவர் உயிர் தயங்காது!
உண்மையின் கண்கள் இமைக்காது -- அற
உணர்வுத் தோள்களும் பொறுக்காது!

அண்டும் பிறமொழி
ஆதிக்கப் போரினில்

ஆளவந்தர் குரல் நிலைக்காது!

கோளரிகள் மனம் சலிக்காது -- சிறு
குள்ள நரித்தனம் பலிக்காது!

ஆள நினைப்பவர்
அற்பமொழித்திணிப்

பத்தனையும் எரிமலைமுன் நிலைக்காது!
விடியலில் கருக்கலுக் கிடமேது?
விளைச்சலில் களைகளைப் பிடுங்காது

கிடப்பவர் அல்லர்யாம்
தமிழர்கள் வீரம்.

கிளர்ச்சியில் வெல்லா தொடுங்காது!
-----------

60. காற்றை விதைத்துப் புயலை அறுக்காதீர்

எங்களின் வாழ்வும் எங்களின் வளமும்
எங்கள் தாய்மொழி இன்தமிழ்ச் செல்வமே!

தமிழ்எங்கள் உயிர், தமிழ்எங்கள் உடல்
தமிழ்வாழ்வதனால் யாம்வாழ்கின்றோம்!
தமிழ்எம் உணர்வு! தமிழ்எம் உணர்ச்சி!
உண்ணும் உணவும் பருகும் நீரும்
தமிழே! தமிழே, சாவா மருந்து!
தேனின் இனிமை! செழுமலரின் மணம்!

தமிழ்தான்
எங்களின் கூர்வாள், எங்களின் கேடயம்
எஃகில் காணா வலிமையின் இருப்பு!
நீரின் தெளிவு! நெருப்பின் சுடர் தீ!

காலப் பழமையால் வைரம் பாய்ந்தது!
நாகரிகத்தின் நாற்றங் காலது!
எம்மொழிக்கும் அது ஈடிணையற்ற
செம்மொழி! உலகச் சிந்தனைக்கெல்லாம்
ஊற்றாய்த் துலங்கும் உண்மையின் பைஞ்சுனை!

அதனில் இந்தி நஞ்சைக் கலப்பது
பொதுமை நோக்கிப் புதுமைக்கேகும்
மக்களை மாய்க்கும் மடச்செயல் ஆகும்.
சிக்கல் நெருப்பில் எண்ணெய்யைச் சேர்ப்பதா?
தீமையின் விளைவு தீமையே,
காற்றை விதைத்துப் புயல்அறுக்காதீர்!
----------

61. இந்தியை எதிர்ப்போம்

செந்தமிழ்த்தாய் அழைத்தாள் எம்மைச்
செந்தமிழ்த் தாய் அழைத்தாள்
வரும் இந்திக்குளம் பதைத்தாள்
எங்கள் தோள் வெற்றித் தோள்; இங்கு
வந்தால் பகைப்படை தூள்! தூள்! தூள்!

எங்களை நோக்கிச் சொன்னாள் வந்தால்
இந்தியை நீக்கச் சொன்னாள்
தண்டிப்போம் கண்டிப்பாய்
எங்கே வாழ்வ தந்த நாய்? நாய்? நாய்?

பைந்தமிழைக் காப்போம்
எங்கள் பைந்தமிழைக் காப்போம்
இந்திப் பட்டாளத்தைத் தீர்ப்போம்.
பதுங்கோம் ஒதுங்கோம்
முந்திடும் வேங்கைகள் நாம்! நாம்! நாம்!

இருக்கும் தமிழ்ச்சோலை நாம் இருக்கும் தமிழ்ச் சோலை
தனில் இந்திக் கென்ன வேலை?
இங்கினிமேல் கால் வைத்தால்
உரிந்துபோம் உடம்பின் தோல்! தோல்! தோல்!
---------

62. எல்லாத் துறையிலும் இந்தி ஒழிக

இந்தியினை மாணவர்கள் வெறுக்க வேண்டும்
இந்தியினைப் படிப்பதற்கு மறுக்க வேண்டும்
இந்தி சொல்ல வருவோரைச் சிரிக்க வேண்டும்
இந்தி வைத்த தேர்தலினை முறிக்க வேண்டும்
இந்திபடிக் காதவர்க்கோ அலுவல் இல்லை
என்றுரைத்தால் அவ்வரசை ஒழிக்க வேண்டும்
இந்தியிலே தாள் கண்டால் கிழிக்க வேண்டும்
இந்தியுள்ள பலகைகளை உடைக்க வேண்டும்.

அஞ்சலட்டை தனிலிந்தி காணப்பட்டால்
அனைவர்க்கும் முன்வைத்தே எரிக்க வேண்டும்

நெஞ்சத்தில் இந்திமொழி பரப்பு கின்ற
நிறுவனத்தின் மூடுவிழா நடத்த வேண்டும்
நஞ்சுகாண் இந்தி என்று சொல்லும் போது
நமதென்று செல்லுகின்ற நாயைக் கண்டால்
அஞ்சாது தமிழறத்தால் திருத்த வேண்டும்
ஆளவந்தார் சிறைஎன்றால் மகிழ வேண்டும்.

தமிழ்காத்தல் மாணவரின் சொந்த வேலை
தாம் நினைத்தால் ஆளவந்தார் எந்த மூலை?
உமியன்றோ இங்குவந்த இந்தி மேதி
ஒன்றுபட்டால் மாணவர்கள் தெரியும் சேதி
உமிபறக்கும் மாணவர்கள் மூச்சு விட்டால்
இந்திஎனும் எச்சிலைதான் என்ன ஆகும்?
சிமிழ்க்காமல் பார்த்தாலே இந்தி சாகும்
திருவாசகம்பாடி முடிக்கலாகும்.
-----------

63. தமிழர் ஓங்கினர் வாள்

தாலமுத்து நடராசனைத்
தந்ததும் போதாதா? -- அவனுயிர்
வெந்தது போதாதா?

ஆளவந்தார் தமிழரை
அடித்ததும் போதாதா -- சிறையில்
மடித்ததும் போதாதா?

இந்தியினால் உங்கள் தீ
எண்ணம் நிறைவேறுமா? -- தமிழர்
எண்ணம் நறைவேறுமா?

செந்தமிழ்ப் படைப் புலிகள்
சீறிப் புறப்படல்பார் -- தடை
மீறிப் புறப்படல் பார்!

விருப்பிலா நஞ்சை
வேண்டிப் புகுத்துகின்றீர் -- உரிமை
தாண்டிப் புகுத்துகின்றீர்!

உருப்பட மாட்டீர்கள்
ஒடிந்ததும் சட்டங்கள் தூள் -- கோடித்
வதமிழர்கள் ஓங்கினர் வாள்!
----------

64. அடிமைத் தமிழன் தொல்லை

அவனுக்கு வை எல்லை
அடிமைத் தமிழன் தந்தானே தொல்லை
ஆரியப் பாம்புக்குச் சட்டத்தின் பல்லை!

குடிகேடர் என்கின்ற
குற்றத்தின் சொல்லை
கொண்டானே தந்தானே
கொடுமைக்கோர் அளவில்லை.

மாண்புப் பெரியாரைச் சிறையினில் அடைத்தார்.
மானத் தமிழரின் தலையினை உடைத்தார்.

காண்கின்ற கண்ணில்லை
கருத்தில்லை மக்களைப் புடைத்தார்
காட்டிக் கொடுத்தார்க்குக்
காசுகள் படைத்தார்!

ஊர்வல மாதரைத் தடியாலே தடுத்தார்
உயிரன்புத் தாயர்க்குத் தொல்லைகள் கொடுத்தார்.
யார்பொறுப்பார் இனி
தீப்பந்தம் எடுத்தார்
ஆள்வோரின் சட்டத்தில்
தீயினை மடுத்தார்!
தமிழனே தமிழர்க்குச் செய்தானே கொடுமை
தாங்குவ தில்லைநாம் தடுப்பது கடமை.
உமிழ்ந்திட்டோம் எச்சிலை
திருந்தட்டும் அடிமை
உதவாக்கரைக் கென்ன
அமைச்சென்ற உடைமை?
-----------

65. வடக்கின் இடக்கு அடக்கு

இந்திப் பகையை எழுப்பிவிட்டது ஏதும் கெட்ட வடக்கு
செந்தமிழா இன்னுமென்ன சிறுத்தையிடம் இடக்கு
வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சும் வெறித்தனத்தை அடக்கு!

இந்திஎனும் வெறிநாயை ஏவி விட்டது வடக்கு
சொந்தநாட்டில் சொந்தமொழி தொல்லைப் படா தடக்கு,
கந்தகத்தில் தீயை வைத்தார் கனன்றெழுந்து மடக்கு!

இந்திமொழி அதிகாரத்தேள் ஏந்திவரும் கொடுக்கு
வந்தேறிகள் சூழ்ச்சிகெட வாகைப்போரைத் தொடக்கு
முந்துவட ஆட்சிஎலும்பு முரிந்தொடிய அடக்கு!
---------

66. புறப்பாட்டுப் பாடு

கோட்சேக்கள் கூட்டம் கொணர்ந்து இந்தி
கொலைகாரர் கொள்கையை நடுங்கச் செய் முந்தி!

ஆட்பட்டிருந்திடோம் அடிமைப்படோம் என்றே
ஆர்த்தெழு போர்த்தொடு அனல்காற்றாய் உந்தி!

ஆரிய மாயையால் அழிந்ததே நாடு
ஐந்தாம் படைக்கெல்லாம் அமைச்சென்ன கேடு?

சீரிய வாழ்வுண்டு செந்தமிழ்ச் சீற்றம்
தீயரைத் தீய்க்கட்டும் புறப்பாட்டுப் பாடு!
-------------

67. வரலாற்றில் வெற்றிகொள்

தில்லித் திமிருக்கோர் மறுப்பு
திராவிடர் காட்டுக வெறுப்பு
தொல்லைக்குமேல் தொல்லை
சுமைசுமையாய்த் தந்தால்
துடுக்குத்தனங்களை நறுக்கு!

இந்திமொழிக்கென்ன திணிப்பு
ஏன்வேண்டும் இந்தியப் பிணிப்பு?
வந்தேறிகள் சொல்லும்,
வடக்காட்சி ஒப்பிட்டோம்
வகுப்போம் தெற்கெல்லைத் துணிப்பு!

வடக்குக்கு நாமில்லை அடிமை
வாழ்த்திடுவோம் தாழ்ந்திடோம் மிடிமை
இடக்குச் செயுமிந்தி
எம்மொழி எம்இனம்
ஏறிமிதிப்பது கொடுமை.

தொற்றுநோய் ஒட்டுணி வடக்கு
தொல்லைத்திடப் போர்ப்படை தொடக்கு
ஒற்றுமை கொண்டவர்
ஓங்கிய எண்ணத்தார்
உருப்பட தீப்பகை அடக்கு!

பெற்றுவிடவேண்டும் நாடு
பிரிவுற வேண்டும்தென்னாடு
வெற்று நினைவிலே
வேங்கை மறவரே
வெற்றிகொள் வரலாற்றினோடு!
----------

68. இந்தி முக்காலமும் இல்லை என்று முழங்கு

இன்றைக் கெழாமல் நீ
என்றைக் கெழுந்திப்

பன்றியைக் கொன்றழிப்பாயோ; -- பகைப்
பார்ப்பை ஒழித்தழிப்பாயோ?

இப்பொழுது தொழாமல் நீ
எப்பொழு தெழுந்திந்திக்

குப்பையைத் தீய்த்திடுவாயோ? -- வஞ்சக்
குணத்தாரை மாய்த்திடுவாயோ?

இந்நொடி எழாமல் நீ
எந்நொடி எழுந்திந்தி

மந்தியைத் துறத்திடுவாயோ? -- தமிழ்
மாங்கொல்லை புரந்திடுவாயோ?

இக் காலத் தெழாமல் நீ
எக் காலத் தெழுந்திந்தி

முக்காலத் தில்லை என்றுரைப்பாய் -- வெற்றி
முழக்குக முழக்குக சிறப்பாய்!
---------------

This file was last updated on 22 August 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)