pm logo

சின்னத்தம்பி எழுதிய
நாலு மந்திரி கும்மி


nAlu mantirik kummi
of cinnattampi
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சின்னத்தம்பி எழுதிய
நாலு மந்திரி கும்மி

Source:
நாலு மந்திரி கும்மி
பதிப்பாசிரியர் : புலவர். ச. திலகம், பி. லிட்., தமிழ்ப் பண்டிதர்,
சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம்,
தஞ்சாவூர்.
2004விலை : ரூ. 15-00
தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீட்டு எண். 468
-------------
நூற்பதிப்பு விளக்கக் குறிப்பு
நூற்பெயர் : நாலு மந்திரி கும்மி
பதிப்பாசிரியர் : புலவர். ச. திலகம், பி. லிட்.,
வெளியிடுபவர் : இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
வெளியீட்டு எண். : 468
மொழி : தமிழ்
பதிப்பு : முதற்பதிப்பு
வெளியீட்டு நாள் : செப்டம்பர், 2004
பக்கங்கள் : 52
அச்சிட்டோர் : சரசுவதி மகால் நூலகம்.
மெலிந்த அட்டை : கும்மிப்பாட்டு
விலை : ரூ. 15-00
--------------

வெளியீட்டாளர் முகவுரை

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்த்துறைப் பிரிவில் ஏறத்தாழ நான்காயிரம் ஏட்டுச் சுவடிகள் உள்ளன. பல்வேறு துறைச்சார்ந்த சுவடிகள் இவற்றுள் அடங்கும். அவ்வாறுள்ள சுவடிகளில் ஒன்றே “நாலு மந்திரி கும்மி' என்பதாகும். இந்நூலின் ஆசிரியர் "சின்னத்தம்பி' என்பவராவார். நாலு மந்திரி கதை என்ற பெயரில் பல ஏட்டுச் சுவடிகள் தமிழகத்திலும், பிற பகுதிகளில் உள்ள நூலகங்களில் இருந்தபோதும் இங்கு பதிப்பிக்கப்படும் சுவடி கும்மி வடிவில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறிய ஏட்டுச்சுவடியாயினும் சுவையான அறிவுபூர்வமான கருத்துக்களை எடுத்துக்கூறும் கதை அமைப்பு உள்ளது. இதனைச் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் திருமதி. ச. திலகம் என்பவர் செப்பமுற பதிப்பித்துள்ளார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

இந்த ஏட்டுச் சுவடியை சரசுவதி மகால் நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்த மேல் பகவதிபாளையம் திரு. ஆர். கருப்பையா என்பவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூல் பதிப்பிப்பதற்கு நிதியுதவி நல்கிய நடுவண் அரசுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூல் செப்பமுற பதிப்பிக்கக் காரணமாகத் திகழ்ந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் சரசுவதி மகால் நூலக நிருவாக அலுவலர் திரு. வே. இலட்சுமணன், M. A., நூலக வெளியீட்டு மேலாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் மற்றும் துறை சார்ந்த பணியாளர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

தஞ்சாவூர், 16-9-2004       டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ண ன், இ.ஆ.ப.,
சரசுவதி மகால் நூலகம்.       மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இயக்குநர்
---------------

முகவுரை

நெடுங்காலமாக மக்களிடத்திலே செல்வாக்குடன் வழங்கி வருகின்ற கதைகளாக எண்ணற்றவை அமைந்திருக்கின்றன. இவற்றில் வாய்மொழி கதை இலக்கியங்கள் என்று சொல்லத் தக்கனவாக, மரியாதை ராமன் கதைகள், ராயர் அப்பாஜி கதைகள், தெனாலிராமன் கதைகள் முதலிய வரிசையில் இந்நாலுமந்திரி கதையும் ஒன்றாகும்.

சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ்த் துறையில் சார்ந்த சுவடி எண் 112-ஆக நாலு மந்திரி கதை எனும் நூல் அம்மானை வடிவிலும், சுவடி எண் 1810-ஆக நாலு மந்திரி கதை கும்மி வடிவிலும் இரு நூல்கள் உள்ளன. இவற்றில் நாலு மந்திரி எனும் கும்மியே இங்கு பதிப்புப் பெறுகின்றது.
இச்சுவடி நூல் 47 ஏடுகளைக்கொண்டு, முழுமையாக உள்ளது. இதன் ஆசிரியர் சின்னத்தம்பி என்பவர் என்பதை

"வாசம் புகழ்சின்னத்தம்பித் தமிழுக்கு
வாக்கருள் வாய்பரமேஸ்வரியே"

என்ற பாடலடிகளால் அறியலாம். இச்சுவடியை நூலகத்திற்கு 5-7-90இல் கரூர் வட்டம், காக்காவாடி கிராமம், மேல் பகவதிபாளையத்தைச் சார்ந்த திரு. R. கருப்பையா என்பவர் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்.

இதுபோன்ற நாலு மந்திரி கதை என்ற சுவடிகள் பிற நூலகங்களிலும் உள்ளன. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் - சென்னையில் ஒரு சுவடியும், கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் - திருவனந்தபுரத்தில் பதினோரு சுவடிகளும், போடிலியன் நூலகம் - ஆக்ஸ்போர்டில் ஒரு சுவடியும், பிபிலாதேகு தேசிய நூலகம் - பாரீசு , பிரான்சில் இரு சுவடிகளும் ராயல் நூலகம் - கோபன் ஹேகன், டென்மார்க்கில் இரண்டு சுவடிகளும் உள்ளன. பாவடிவில் இந்நூலில் கூறப்பெற்றுள்ள கதைகளின் சுருக்கம் முன்கதைச்சுருக்கம் எனும் பகுதியில் கூறப்பெற்றுள்ளது.

"நாலு மந்திரி கும்மி' என்னும் இந்நூல் பதிப்பிக்க அனுமதியளித்த முன்னாள் நூலக இயக்குநரும், தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருமாகிய திரு. சி. கோசலராமன், இ. ஆ. ப., அவர்களுக்கும், இந்நாள் மாவட்ட ஆட்சியாளரும், நூலக இயக்குநருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் நூலக நிருவாக அலுவலர் திரு. வே. இலட்சுமணன், M. A., அவர்களுக்கும், வெளியீட்டு மேலாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், நூலக கணினி பிரிவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்       புலவர் ச. திலகம், தமிழ்ப்பண்டிதர்
----------------

கதைச் சுருக்கம்

மதுராபுரி என்னும் ஊரில் போதவாதித்தன், போதவிபூஷணன், போதவியாகரன், போதச்சந்திரன் என்னும் நால்வர் (மந்திரிகள்) வாழ்ந்து வந்தனர். அவர்கள் தென்மதுராபுரியின் அரசனான அழகேசன் என்பவனிடம் மந்திரிகளாக ஆன கதையைக் கும்மித் தமிழாகக் கூறுகிறேன். சண்முகன் துணையாகவும், நடமாடும் சிதம்பரநாதன் அருள்புரியவும், வீரபத்திரன் பாடித் துதித்த இக்கதையை நாட்டுப்புற மக்கள் கொண்டாடச் சின்னத்தம்பியாகிய யான் சொல்ல முற்படுகிறேன். எனக்கு நல்வாக்கு அருள்வாய் பரமேஸ்வரி என வேண்டி இக்கதையாசிரியர் கூறுகின்றார்.

போதவாதித்தன் முதலிய நால்வரும் காராவு வம்சத்தினர். அவர்கள் தென்மதுராபுரி நோக்கிக் கானகத்தில் நடந்து சென்றனர். அவ்வழியில் பருத்த கால்களையுடைய ஒட்டகம் ஒன்று சென்றிருத்தலை அதன் கால் சுவடுகளைக் கொண்டு அறிந்தார்கள். ஒட்டகத்தின் சொந்தக்காரன் ஒட்டகத்தைக் காணாமல் ஒரு மாதமாகத் தேடி அலைந்தான். இந்த மந்திரிகள் நால்வரையும் கண்டு விசாரித்தான்.

நால்வருள் ஒருவன் ஒட்டகம் மருந்து மூட்டையுடன் சென்றதா என்றான். ஒருவன் அதற்கு ஒரு கண் பொட்டையோ என்றான். ஒருவன் அதற்கு ஒரு கால் ஊனமோ என்றான். ஒருவன் அதன் வால் மிகவும் குட்டையானதோ என்றான். அவர்கள் கூறியனவெல்லாம் சரியாக இருந்தமையால் ஒட்டகக்காரன். ஆம், நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்று கூறி, அது எங்கே என்று கேட்டான். அவர்கள் நாங்கள் அதைக் கண்ணால் பார்க்கவில்லை. அதன் சுவடுகளைக் கண்டு சொன்னோம் என்றார்கள். ஒட்டகக்காரன் இதனை அவ்வூர் அரசனாகிய அழகேசனிடம் சென்று முறையிடுவோம் எனக்கூறி வாருங்கள் என அரசனிடம் அழைத்துச் சென்று முறையிட்டான்.
அரசன் அந்நால்வரையும் பார்த்து ஒட்டகத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் அதன் அடையாளங்களை எப்படிக் கூறினீர்கள். உள்ளபடி சொல்லுங்கள் என்று கேட்டான். அவர்களும் மகிழ்ந்து கூறத்தொடங்கினர்.

போதவாதித்தன் ஒட்டகம் சென்ற வழியில் ஒரு பக்கத்தில் மட்டும் இரை மேய்ந்து சென்றுள்ளது. அதனால் ஒரு கண் பொட்டை என்று அறிந்தேன் என்றான். போதவியாகரன் அது சென்ற பாதையில் ஈ கடித்த ரத்தம் சிந்தியுள்ளமை கண்டு அது வாலால் ஈக்களை ஓட்டமுடியாத அளவும் வால் குட்டையாக இருக்க வேண்டும் என்றறிந்தேன் மேலும், அதன் கால்கள் நன்கு பதியவில்லை . ஆதலால் அது கர்ப்பமாக இருக்கும் என்று அறிந்தேன் என்றான். போதவிபூஷணன், அது நடந்த பாதையில் ஒரு கால் சுவடு பதியவில்லை. அதனால் ஒரு கால் நொண்டி என்று உணர்ந்தேன் என்றான். போதச்சந்திரன் ஒட்டகத்தை ஈக்கள் கடித்த இரத்தம் சிதறி இருந்தமையால் அது பருமையானது என்று உணர்ந்தேன் என்றான்.

இவ்வாறு நால்வரும் யோசனை மிக்கவராய் அறிந்து கூறியதைக் கேட்ட அழகேச மன்னன் ஒட்டகத்தைத் தேடியவனிடம் 1000 பொன் கொடுத்து அவனை போகச் சொல்லிவிட்டு அந்நால்வரையும் தனக்கு வாசல் மந்திரியாக இருந்து அரச காரியம் பார்க்க ஆணையிட்டு அமர்த்திக் கொண்டான்.

அவர்கள் நால்வரும் மகாமாயி அம்பாளை வழிபட்டார்கள். அம்மையும் அவர்களை அன்போடு அழைத்தருளினாள். அம்மை ஒரு தீங்கு வரும் அரசனுக்கு என்றாள் உன்னுடைய அருளால் அதைத் தீர்ப்பேன். அது என்ன என்று போதவாதித்தன் கேட்டான் மகாமாயி, நாளைப் பொழுது அஸ்தமனமானபின் பதினாலு நாழிகைக்குப் பின் மன்னன் தன் மனைவியுடன் பஞ்சணையில் படுத்திருக்கும் போது ஒரு பாம்பு வந்து தீண்டும். பின் சம்பா அரிசியைப் போல நஞ்சை உமிழும் அதை உண்டால் உயிர் போகும். இதிலிருந்த மன்னன் தப்பினால் நெடுநாள் உலகத்தை ஆள்வான் என்றாள்.

அரண்மனையில் மன்னன் உண்ணுவதற்காக சாதம் கொண்டுவந்து படைத்தார்கள் போதவாதித்தன் வந்து அதை உண்ணவேண்டாம். ஒரு அதிசயம் நடக்கவுள்ளது என்றான். மூன்று படி அரிசியைச் சீலையில் முடித்துக்கொண்டுபோய் காளி சொன்னபடியே அரண்மனைக்குச் சென்று மன்னன் படுக்கையறையில் ஒளிந்திருந்தான். அரசனும், அரசன் மனைவியும் பஞ்சணையில் துயிலும் போது காளி சொன்னபடியே பாம்பு ஒன்று வந்தது. அதனைக்கண்ட போதவாதித்தன் அதனை வாளால் வெட்டினான். அதன் இரத்தத்துளி அரசியின் மார்பில் தெறித்தது. போதவாதித்தன் அதனைத் தன் சுண்டு விரல் நகத்தால் வழித்து. அவ்விரலைத் துண்டித்து மேலை கட்டிவைத்தான். அரசன் விழித்துப் பார்த்து, யாரடா என்று கோபத்துடன் கேட்க, அவன் போதவாதித்தன் என்றான். அரசியும் விழித்தெழுந்து, தன் மார்பில் பட்ட குறியைக் கண்டு, இவன் என் மார்பைத் தீண்டத்தகுமோ என்று சினந்து கூறினாள். அரசர் அவனுக்கு என்ன தண்டனைத் தருவதென்று யோசித்தான். இரண்டாம் சாமம் வந்தது.

அப்பொழுது காவல் புரிந்து கொண்டிருந்த மந்திரியாகிய போதச்சந்திரன் அவ்வழியே செல்லக்கண்டு, அவனை அழைத்து போதவாதித்தன் செய்த அடாத செயலைச் சொல்லி அவனைத் தண்டிக்கவேண்டும் என்றான்.

அதுகேட்ட போதச்சந்திரன் நல்லது, அரசே! கண்ணாற் கண்டதும் ; காதாற் கேட்டதும், கண்டபேர் சொல்வதும் ஒருகால் பொய்யாகவும் போகும். தீர்க்கமாய் விசாரிக்க வேண்டும் என்று கூறி, தீர விசாரியாமல் நேர்ந்த தீவினைகளைக் கேளுங்கள், அரசே! என்று கூறிக் கதையைச் சொல்லத்தொடங்கினான்.

பாஞ்சால தேசத்துள் ஒரு பட்டணத்தை வேடன் ஒருவன் ஆண்டுவந்தான். மாளவதேச மன்னனுக்குத் திறை செலுத்தப் பொருளில்லாமையால், கேதகாபுரி பட்டணத்தில் இலங்கை கேசவனென்று ஒரு செட்டியிருந்தான். அவன் சிங்கம் போல வளர்ந்தத் தன்னுடைய வெள்ளை நாயைக் கூட்டிக் கொண்டு சென்று செட்டியாரே யான் திரை செலுத்த ஆயிரம் பொன் வேண்டும். அதற்கு ஈடாக இந்தச் சிங்கத்தை ஒப்பிக்கின்றேன். வட்டியோடு முதலைக் கொடுத்துவிட்டு
மீட்டுக்கொள்கிறேன் என்று பணத்தைப் பெற்றுக்கொண்டு சிங்கத்திடம் நீ செட்டியிடம் நன்றியோடு நடந்துகொள் என்று கட்டளையிட்டுச் சென்றான்.

செட்டி கப்பல் வியாபாரம் செய்ய கப்பலேறி அயல்நாடு சென்றார். சிங்கத்திடம் காவல் காப்பாயாக என்று சொல்லிச் சென்றார். செட்டியார் அயலூர் சென்றபின் அவருடைய மனைவி ஒருவனிடம் கள்ளத் தொடர்பு கொண்டாள். அவன் தினமும் வீட்டிற்கு வந்து செல்வதைச் சிங்கம் பார்த்துக் கொண்டு தக்க வேளை வரட்டும் என்று நினைத்துப் பிணத்தை ஒருநாள் அந்தச் சோரனை கழுத்தில் கடித்துக் கொன்றது. செட்டியின் மனைவி பதறிப்போய் கொல்லையில் குழி தோண்டிப் புதைத்துவிட்டாள். அயலூரிலிருந்து செட்டியார் வந்தபோது அவர் மேல் விழுந்து புரண்டு தன் அன்பைக் காட்டிய சிங்கம் அவரைக் கொல்லைப்புறத்திற்கு அழைத்துச் சென்று குழியில் புதைத்த உடம்பைக் காட்டியது. செட்டியாரும் நடந்ததை ஊகித்து, மனைவியைத் துரத்திவிட்டான். சிங்கம் செய்த நன்றியை நினைத்து வேடன் எழுதித் தந்த முறிச்சீட்டை அதன் கழுத்தில் கட்டி நீ உன் எசமானனிடம் சென்று வாழ்க என அனுப்பினான்.

வேடன் செட்டியாருக்குக் கொடுக்கப் பணத்துடன் வருகிறான். நாய் தன் எதிரே வரக்கண்டு நீ செட்டிக்குத் துரோகம் செய்துவிட்டுத் தப்பி வருகிறாயா என்று கோபித்து அதை வெட்டிப் போட்டான். செட்டியிடம் சென்று சொன்னான். செட்டி பதறிப்போய் அது செய்த உபகாரத்தை மெச்சி நானே அனுப்பினேன். பாவி கொன்றுவிட்டாயே என்றான். தீராப்பழி வந்ததே என்று வேடன் உயிர் விட்டான். அது கண்டு செட்டியும் உயிர் விட்டான். இப்படி ஆராயமல் செய்த பழியினால் இறந்தவர்கள் என்றான். அரசனும் அவனை அனுப்பிவிட்டு போதவியாகரனை அழைத்து நீ செய்தது அடாத காரியம் நீ என்ன சொல்லுகிறாய் என்று கேட்டான்.

அப்பொழுது அவன் முன்பு நடந்ததொரு கதையைச் சொல்கிறேன். கேட்பீராக! என்று சொல்லி அரசே சந்திரகிரி என்னும் தேசத்தில் வாழ்ந்த ஒரு வேதியர் தம்பதிகள் கீறிப்பிள்ளை ஒன்றைப் பிள்ளையைப்போல வளர்த்தனர். பின்னர் அவர்களுக்கு ஒரு மைந்தன் பிறந்தான். அவனைத் தொட்டியிலிட்டு விட்டுக் கீறிப்பிள்ளையைக் காவலிருக்கும்படி சொல்லிவிட்டுக் கீரை அறுக்கக் கொல்லைப்புறம் சென்றாள் பார்ப்பணி. விதி காரணமாக அப்பொழுது ஒரு பாம்பு தொட்டியின் மேலிருந்து இறங்கக் கண்ட கீரிப் பாய்ந்து சென்று அதனைக் கடித்துக் கொன்றது. பின் கொல்லைப்புறம் சென்றது. அதனைப் பார்த்த பார்ப்பனி இது பிள்ளையைக் கொன்றுவிட்டு வருவதாக நினைத்து கீரை அறுக்கும் அரிவாளால் அதனை வெட்டினாள். அழுதுகொண்டு வீட்டில் வந்து பார்த்தபோது பிள்ளை சுகமாக இருப்பதையும் அருகில் பாம்பு கடிபட்டு இறந்து கிடப்பதையும் கண்டு ஐயோ பழி வந்ததே என்று கீரிப் பிள்ளையுடன் தானும் இறந்தாள். அதுகண்ட வேதியனும் மடிந்தான். அதனால் எதையும் தீர யோசித்துத் தீர்ப்பு வழங்கவேண்டும் என்றான். அரசன் அவனைப் போ என்று விடுத்தான்.

அப்பொழுது போதவிபூஷணன் அங்கு வந்தான் அரசன் அந்தப்புரத்திலே நடந்த நிகழ்ச்சியை
அவனிடம் கூறி என்ன தீர்ப்பு என்று கேட்டான். அதற்கு அவன் நன்கு ஆராய்ந்து தீர்ப்பளிக்கவேண்டும் என்று பின்வரும் ஒரு கதையை எடுத்துரைத்தான்.

மிதிலை என்னும் தேசத்தில் ஒரு பிறவிக்குருடன் இருந்தான். அவன் தன் மனைவியுடன் அவ்வூரை விட்டு அடுத்த ஊருக்குச் செல்லப் புறப்படுகையில் காட்டு வழியே செல்லும் போது ஒரு பாதகன் வந்தான். அதனைக் கண்ட அவள், அவன்மேல் ஆசை கொண்டு குருடனை விட்டுவிட்டு அவன் பின்னே சென்றாள். குருடன் தனியாய்த் தவித்துப் பசியால் வாடினான். அப்பொழுது காவேரிப்பட்டணத்தில் வசிக்கும் கலிங்கச்செட்டி என்பவன் தன் மனைவியுடன் மாமனார் வீட்டில் கோபித்துக்கொண்டு அவ்வழியே வந்தான். தான், குருடன் படும் துன்பத்தைப் பார்த்து, அவனுக்கு உணவு கொடுத்து அவன் கூறிய கதையைக் கேட்டு இரங்கித் தன் மனைவியை அவன்
கைக்கோலைப் பிடித்துக்கொண்டு அவனை அழைத்து வா என்று சொன்னான். இது நியாமில்லை என்று மனைவி கூறியும் கேளாமல் கட்டளையிட்டான். மூவரும் நடந்து கிங்கா தேசத்தைச் சென்றடைந்தார்கள். அங்கொரு செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார்கள்.

பின்னர் விசய நகரம் என்னும் ஊரைக் கடந்து செல்லும் போது குருடன், இவ்வூரில் கேள்வியில்லையா, ஞாயமில்லையா என்று கூக்குரலிட்டான். மக்கள் கூடி என்ன என்று கேட்டார்கள். குருடன் என் மனைவியுடன் நான் வந்து கொண்டிருந்தேன். இந்தச் செட்டி என் மனைவியைப் பிரித்து அழைத்துக்கொண்டு செல்கிறான் என்றான். மக்கள் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். குருடன் சொன்னவற்றை நம்பி, மன்னன் செட்டியை சிரச்சேதம் செய்யவும். செட்டி மனைவியை சுண்ணாம்புக் காளவாயில் போடவும் ஆணையிட்டான். தனித்து விடப்பட்ட குருடன் மனச்சாட்சி அவனை வருத்தியது. ஓரிடத்திலிருந்து செட்டி தன்னைத் தேற்றியதையும், அன்பாக உணவு படைத்துப் பட்டணத்திற்கு அழைத்து வந்ததையும் சொல்லிச் சொல்லி புலம்பினான். அதைக் கேட்டுக்கொண்டிருந்த தூதன் ஒருவன் ஓடிச்சென்று அரசனிடம் குருடன் புலம்பியதை எல்லாம் சொன்னான். அதைக் கேட்டு வருந்திய மன்னன குருடனைக் கொல்லச் சொன்னான். நாட்டில் அனேக சேதங்கள் விளைந்தன என்று போதவிபூஷணன் கூறினான்.

மறுநாள் காலை போதச்சந்திரன் வந்தான். அரசன் மந்திரிமார்கள் எல்லோரையும் அழைத்து சபை கூட்டிப் படுக்கை அறையில் நிகழ்ந்த நிகழ்ச்சியை எல்லாம் சொல்லி போதவாதித்தனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று கேட்டான். மந்திரிமார்கள் போதவாதித்தனை அழைத்து அரசன் சொன்னவற்றையெல்லாங்கூறி, என்ன சொல்கிறாய்? என்று கேட்டனர். அவன் காளிதேவி சொல்லியவற்றையும், தான் மறைந்திருந்து சர்ப்பத்தைக் கொன்றதையும், கொங்கையிற் சிந்திய குருதியைத்தான் நகத்தால் துடைத்ததையும் விளக்கிக் கூறினான். எல்லோரும் அதிசயத்து நாலு மந்திரிகளைப் பாராட்டினர். அரசனைப் பார்த்து நான் சொல்லும் கதையைக் கேளுங்கள் என்று மனுநீதி அமைச்சன் சொல்லுகிறான்.

கோசலை தேசத்தில் கோவிந்தன் என்றொரு வேதியன் வாழ்ந்து வந்தான். அவன் தானம் வாங்கிப் பிழைத்து வந்தான். அவன் மனைவி கிளி ஒன்றை வளர்த்தாள். தனக்குப் பிள்ளை இல்லாமையால் அதைப் பிள்ளை போல வளர்த்தாள். அதற்குப் பேசக் கற்றுக்கொடுத்தாள். ஒருநாள் சில கிளிகள் அந்த வீட்டுப்பக்கம் பறந்து சென்றன. வேதியன் கிளி, அவற்றைப் பார்த்து எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்டது. மங்கை என்னும் தீவில் சென்று மாங்கனி உண்ணப் போகிறோம் என்றன. இங்கே மாங்கனிகள் இருக்க, அங்கே ஏன் போகவேண்டுமென்று வேதியன் கிளி கேட்க, அந்த மாங்கனிகளைப் புசித்தால் கிழவரும் பதினாறு வயதாக இளமை பெறுவார்கள் என்றன. வேதியன் கிளி நானும் சென்று அந்த மாங்கனியைக் கொண்டுவந்து வேதியனுக்குத் தந்தால் என்னை வெகுநாள் பாதுகாப்பான் என்று நினைத்து, அவைகளுடன் சென்று ஒரு மாங்கனியைக் கொண்டுவந்து வேதியனிடம் தந்து அதன் சிறப்பைக் கூறியது.

வேதியன் தான் புசிப்பதைவிட நாட்டை ஆளும் ராசனுக்கு அளித்தால் நாடு செழிக்கும் என்று எண்ணி, அரசனிடம் சென்று கனியின் பெருமையைக் கூறிக்கொடுத்தான். அரசன் தான் மட்டும் உண்ணாமல் பூமியில் உள்ளோர் அனைவரும் உண்ண வேண்டுமென்று கருதி அதைப் பூமியில் விதைத்து மரத்தை வளர்த்தான். மரம் நன்றாக வளர்ந்து ஒரு கனி பழுத்தது. பழவினையால் ஒரு நாகம் அதனைக் கொத்தி விஷத்தைக் கக்கிவைத்துச் சென்றது. அதனை அறியாத அரசன் கனியைத் தன் குருவுக்குத் தர எண்ணி அவரை வரவழைத்து அன்போடு கொடுத்தான். அதனை அவர் உண்டதும் உயிர் போய்விட்டது. அரசன் அடங்காத கோபங்கொண்டு, வேதியனைக் கூட்டிவரச் செய்து நீ பிரம்மகோத்திரனாகையால் உன்னைக் கொல்லாமல் தண்டிக்கிறேன். என்று ஒரு கண்ணைப் பிடுங்கி விட்டுத் துரத்தினான். வேதியன், எல்லாம் இக்கிளியால் வந்தது எனச்சொல்லி, கிளியை அறுத்தெரிந்தான். கிளியும் செத்தது.

அவ்வூரில் ஒரு வண்ணாரக் குடியிலுள்ள ஒரு மாமியாளுக்கும் மருமகளுக்கும் ஓயாத சண்டை. மாமியார் மிகவும் நொந்துபோய், விஷ மாங்கனியைத் தின்று உயிரைவிட எண்ணி, அந்த மாமரத்திடம் வந்து பழுத்திருந்த ஒரு கனியைக் கொய்து உண்டாள். உடனே கிழப்பருவம் நீங்கிப் பதினாறு வயதுப் பெண்ணாகிவிட்டாள். மாமியாரைத் தேடி வந்த மருமகள் அவளைத் தெரியாமல் தன் மாமியைப் பற்றி விசாரிக்க அவள், நான் உன் மாமி. மாங்கனியை உண்டதனால் இளமையாகிவிட்டேன் என்றாள். இந்நிகழ்ச்சி ஊரெல்லாம் பரவியது. அரசன் அறிந்து மிகவும் வேதனைப் பட்டு வேதியனை அழைத்து, அவனிடம் மன்னிப்புக் கேட்டு, ஏராளமான பொன்னும் மணியும் கொடுத்தனுப்பினான். வேதியன் கிளியைக் கொன்ற பாவத்தை எண்ணி வருந்தி உயிரை விட்டான். அவன் மனைவியும் உடன் இறந்தாள். இதைக் கேட்ட அரசன் தன் பழியை எண்ணி மடிந்தான். அரசியும் உடன் மடிந்தாள். அரசனுக்குத் துணையாய் இருந்த பலரும் இறந்தார்கள். இப்படி அறியாமல் செய்த நீதியினால் பலர் இறந்தார்கள் என மனுநீதி மந்திரி கூறினான்.

இதைக்கேட்ட அழகேச மன்னன், போதவாதித்தனைப் பார்த்து, பசித்தார் முகம் பார்த்து பசியாற்றாத பழி வந்து சேர்ந்த கதையைச் சொல்கின்றேன் கேள் என்று கூறத் தொடங்கினான். விசயாபுரிப் பட்டணத்தில் வாழ்ந்த வேதியன் ஒருவன் தனது பாவந்தீரப் புண்ணிய நதிகளாட எண்ணி காவேரி ஸ்நானம் செய்வோம் என்று புறப்பட்டான். அவன் மனைவி அவனிடம் கட்டுச் சாதம் கட்டிக்கொடுத்து அனுப்பினாள். அவன் ஊரை விட்டுப் புறப்பட்டுப் பாச்சலூர்ப் பட்டணம் போய்ச் சேர்ந்து, வடபத்திரகாளி கோயில் அருகே வந்து அங்கே வடபாலிருந்த ஒரு மரத்தின் கீழிலிருந்து இளைப்பாறிப் பின் அங்கே ஓடிய நதியில் நீராடி உணவு உண்ண எண்ணிக் கட்டுச் சோற்றைப் பிரித்து உண்ணும்போது, துரைப்பட்டணம் என்னும் ஊரிலிருந்து ஒரு பார்ப்பனன் எழுபது வயதுடையவன் அந்த ஆலமரத்தருகே வந்தமர்ந்தான்.

வேதியன், அவனை ஏன் களைத்துப் போயிருக்கிறாய்? என்று கேட்க, அவன் அன்ன ஆகாரம் புசியாததால் மயக்கமாக உள்ளது. என்றான். வேதியன் கட்டுச் சாதத்தை அளிப்போமென்று அத்தண்ணீர்க் கரையில் வந்து
அமர்ந்தான். அப்போது ஊழ்வினை வந்து மூளவே, ஒரு கருடன், ஒருநாகத்தைக் காலில் பிடித்துக்கொண்டு மேலே பறந்தது. அதன் நஞ்சு தெறித்துக் கட்டுச் சாதத்தில் விழுந்தது. அதை அறியாத வேதியன் மரத்தடியில் பசி மயக்கத்தோடு படுத்திருந்த பார்ப்பனனை எழுப்பி அவனுக்கு அன்னமிட்டான். அதை உண்ட பார்ப்பனன் உயிர் போய்விட்டது.

உடனே, வேதியன் பாச்சலூர் அக்கிரகாரத்தில் சென்று, வயது முதிர்ந்த பார்ப்பனன் பசியால் மயங்கிக் கிடந்தான். நான் தயிர் அளைந்த கட்டுச் சாதந்தந்தேன். அதை உண்டவன் இறந்து போனான். அவனை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் என்று வேண்டினான். அவர்கள் இவனுடன் வந்து ஆலமரத்தடியில் இறந்து கிடந்தவனை, இவன்தான் கொன்று விட்டான். இவனைப் பிடித்துக் கோயிலில் அடையுங்கள் என்று அடைத்தார்கள். வேதியன் ஆறு நாள் பட்டினி கிடந்து வருந்தி, காளியின் பேரில் விஸ்தாரமாகப் பத்து கவிதைகள் பாடினான் .

அதனால் பாச்சலூர் கிராமத்தில் தீப்பிடித்துப் பட்டணம் வெந்தது. அப்பொழுது வடபத்திரகாளி கோயில் அருச்சகன், பிள்ளை மேல் ஆவேசம் வந்து கட்டுச் சோற்றில் கருடன் காலில் சிக்கிய பாம்பின் விஷம் விழுந்ததினால் அதை உண்ட பார்ப்பனன் இறந்தான் என காளி கூறியது. அதைக் கேட்ட பார்ப்பனர்கள், கோவிலில் அடைத்துவைத்திருந்த வேதியனை விடுவித்து, அவன் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டி, விடைகொடுத்து அனுப்பினார்கள் என்று மன்னன் கூறினான்.

போதவாதித்தன். இது என் தலைவிதி என்று எழுந்தான். மன்னன் பள்ளியறையில் கட்டிவைத்திருந்த, தன் விரலையும் வெட்டிய பாம்பையும் கொண்டுவந்து காட்டினான். அரசனும் மகிழ்ந்தான். அர்த்தராத்திரியில் தான் சுற்றிவரும் போது காளி சொன்னதையும், தான் செய்ததையும் எடுத்துரைத்தான்.

அதையெல்லாம் கேட்ட மன்னன், அழகேசன் பெண் பிள்ளை வார்த்தயைக் கேட்டு பேதையாகி விட்டேனே என நினைத்தான்.

இந்த உலகில் அந்நாளில் தன்னை ரட்சித்தவரிடத்து அன்பு செய்தார்கள் நல்லோர். காவேரி என்றொரு பட்டணத்தில் ஒரு மறையவன் தேவாதிதேவன் என்பான் பிராமண யாகம் செய்தான். அவனுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். மனைவி இறந்து போனாள். பிச்சை எடுத்துப் பிள்ளைகளைக் காப்பாற்றி வந்தான். ஊழ்வினையால் பிச்சை கிடைக்கவில்லை. காட்டில் சென்று மூங்கிலரிசியைக் கொண்டுவந்து சமைத்துப் பிள்ளைகளுக்கு அளித்துவந்தான். அவன் எங்கே போனாலும் பிள்ளைகள் அவன் வருகையை எட்டிப் பார்த்திருக்கும். பங்குனி மாச வெய்யிலில் ஒரு நல்லபாம்பு தீயில் சிக்கிக்கொண்டது. மறையவன் அதை எடுத்து வெளியிலே இட்டான். பாம்பு தனக்கு மிகவும் பசிக்கிறது என்றது. வேதியன் யான் என்ன செய்வேன், என்னிடம் ஒன்றுமில்லையே என்றான். உடனே பாம்பு நாகமணியைக் கொடுத்துப் பிள்ளைகளை வளர்த்துக்கொள் என்றது. வீட்டில் பிள்ளைகளிடம் நிகழ்ந்ததைச் சொன்னான். பின்னர் மணியைப் பிள்ளைகள் கையில் கொடுத்துவிட்டுப் பாம்பிடம் வந்து உன் பசிக்கு என்னையே புசிப்பாயாக என்று கூறினான். உடனே, பாம்பு நெருப்பிலிருந்து என்னைக் காப்பாற்றிய உன் கருணைக்கு மெச்சினேன் என்று கூறி ஜீவரத்தினத்தைக் கொடுத்து அதைப் பிள்ளைகளின் கையில் கொடுத்துவிட்டுத் தான் இறந்துபோனான். அந்த ரத்தினங்களை வைத்துப் பிழைக்கத் தெரியாமல் பிள்ளைகளும் மாண்டுபோயினர் என்றும் மன்னன் கூறினான்.

பின்னர் நாலு மந்திரிகளையும் யானை மேல் பவனிவரச் செய்து, ஆசனத்தில் அமர்த்தி அளவற்ற பொன்னும், மணியும் அளித்துத் தன் பிழைபொறுக்க வேண்டிக்கொண்டான். மன்னனும் நாலு மந்திரிகளும் பின் செழிப்பாக நாட்டை ஆண்டுவந்தார்கள்.
-----------------

நாலு மந்திரி கும்மி


காப்பு
செந்தமிழ் போற்றும் அளகாபுரிதனில்
      மந்திரி நாலுபேர் மீதினிலே
சந்தக் கும்மித்தமிழுரைக்கச்சிவ
      தந்தி முகம்பாதங்காப்பாமே.

நூல்

வையகந்தன்னிலே நாலுபேர் மந்திரி
      மார்க்கமெல்லாங்கும்மிப் பாட்டுரைக்கச்
செய்யும் படிக்கருள் செய்ய வடிவேலர்
      சேவடி பொற்பாதங் காப்பாமே.       1

பூலோகந்தன்னிலே நாலுபேர் மந்திரி
      போதவாதித்தனுடமீதில்
சாலோக முள்ளகும்மித்தமிழேநிதம்
சாற்றுறேன் வாலை துணையாக.       2

போதவாதித்தனும் போத விபூசணன்
      போதவியாகரன்போதச்சந்திரன்
மாதாள வீசு மதுராபுரிதனில்
      வாழ்ந்திருந்தார்சில காலமெல்லாம்.       3

தென்மதுராபுரியில் பிறந்தளகே
      சருடன் மந்திரியானகதை
சண்முகன் பாதந்துணையாக வென்று
      சாத்துறேன் கும்மித் தமிழாக!       4

ஆடுஞ் சிதம்பரநாதன் வரத்தருள்
      அய்யன்சுப்பிரமணியங் கைக்கொழந்தை
நாடெல்லாம் போற்றிடும் வீரபத்திரன் தமிழ்
      நாவலர் பாடித்துதித்திடவே.       5

தேசம் புகழவே பாடிவைத் தேன்தானும்
      தேவர் நகர்களி லாடிடவே
வாசம் புகழ்சின்னத்தம்பித் தமிழுக்கு
      வாக்கருள் வாய்பரமேஸ்வரியே.       6

ஆதியில் தென்மது ராபுரியில் இவர்
      சாதியில் காராளவம்முசத்தார்
பாதி மதிசூடும் நாதனைப் போற்றியே
      பாதையுங் கூடி நடந்தார்கள்.       7

பாதை வழியிலிவர்நடக்கப்பருங்
      காலானே ஒட்டகம் போயிருக்க
கோதையர் மோகனம் நாலுபேர் யோசனை
      கொண்டு வெளியில் நடக்கயிலே.       8

ஒட்டகந்தப்பி ஒருமாசம் அதை
      விட்டு அலைந்து பொருள்காரன்
அட்ட திசையெல்லாந் தேடி இவருடன்
      கிட்டவே வந்து உரைத்தார்கள்.       9

ஒட்டகம் இவ்வழி காணீர்க ளோவென்று
      உரைத்திட நாலுபேருமிருந்துக்
கட்டுடன் தப்பிய ஒட்டகம் ஒற்றைக்கண்
      பொட்டையோவென்று ஒருவன் உரைத்தான்.       10

சூலென்றொருவனுரைத்தானே முழங்கால்
      முடமென் றொருவனுரைத்தான்
கூழை வாலென்றொருவனுரைத்தான் மொழி
      கூரினதுஞ்சரி யாயிருக்கச்       11

சொன்ன அடையாளமும் சரிதானெனத்
      துய்யனே ஒட்டக மெங்கையென்றான்
கண்ணாலே ஒட்டகங் கண்டதில் லைத்தடங்
      கண்டுரைத் தோமென்று தான் மொழிந்தான். 12

பார்த்து உரைத்த மொழியேது நம்ம
      கோத்திரமாஅளகேசருடன்
சாத்துவோவாருங்களிம் மொழியையென்று
      நேர்த்தியாய்க் கூடி நடந்தார்கள்.       13

தங்கம்பொன் வெள்ளிபித்தாளை செம்பு
      சதுருடன் கூட்டியொன்றாயுருக்கிச்
சிங்காரமாக இருக்குமேழுசுற்றுச்
      செம்பொன் கோட்டை அள கேசருடன்       14

செப்பிய வார்த்தையைத்தான் கேட்டு அள
      கேசனும் யோசனையாயிருந்து
விற்பனமுள்ளவனென்று சொல்லி அப்போ
மெத்தவும் ராசன் மனமகிழ்ந்து       15

ஒட்டகங்காணுமென்றேயுரைத்தாலதுக்
      குள்ள அடையாள மேதுரைத்தீர்
நட்டணை செய்யாமல் நீங்களெல்லோரும்
      நவிலுமென்று ராசன் தான் கேட்க.       16

ராசனுரைத்த மொழி கேட்டு அப்போ
      நாலுபேர் மெத்த மனமகிழ்ந்து
போசன் பொற்பாதம்மிகப் பணிந்து அவர்
      புத்தி விசேஷமுரைத்தனரே.       17

போதவாதித்தனப் போது சொல்வான் ஒரு
      பாரீசங்கூடி இரைமேய்ந்து
பேதமை யாக நடக்க ஒருகண்ணு
      பொட்டையோவென்று உரைத்தனென்றான். 18

போத வியாகரன் தான் பணிந்து பாதை
      போகையிலே ஈக்கடித்தரத்தம் பாதை
வழியில் சிதறினதால் பெரும்
      ஒட்டகம் கூழைவால் என்றுரைத்தேன்.       19

போத வியாகரன் தான் பணிந்து பாதை
      போகையி லேதடந்தான்பதிய
சாதக மாக நடக்கவில்லை கெற்பம்
      தானென்று சொல்லி யுரைத்தேனென்றான்.       20

போத விபூசணன் தான்பணிந்து பாதை
      போகையி லேமூணு கால்பதிய
சாதக மாயொருகால்பதி யவில்லை
      தானொடு கால்முட மென்றுரைத்தேன்.       21

போதச்சந்திரனுந்தான்பணிந்து பாதை
      போகையிலேஈகடித்தரத்தம்
பாதைவழியே சிதறிய தால்பரு
      ஒட்டகங் கூழைக்காலென்றுரைத்தேன்.       22

இப்படியாகவே நாலுபேர் யோசனை
      [*]?கெறப்புலிலே உரைத்திடவே
செப்பம தான அளகே சனுமே அவன்
      விற்பன முள்ளவன் என்றுசொல்லிச்       23
----
[*] இச்சொல் இன்னதென்று விளங்கவில்லை.


சொல்லு மொழியாலே ஒட்டகந் தானும்
      தொடர்ந்தவர்க்காயிரம் பொன் கொடுத்துச்
சொல்லுமென்றே சொல்லித் தானனுப்பி அப்பால்
      செப்பினான் நாலுபேரைப்பாத்து       24

பாசத்துடன்வாசல் மந்திரகாரியம்
      பாத்து அதிகாரஞ் செய்யுமென்றார்
போசனத்துக்கொரு மாசம்பொன்னாயிர
      பொன்சம்பளவைத்துத்தான் கொடுத்து       25

நாலுபேர் மந்திரியாயிருக்க நல்ல
      ராசனனகேநாள் வாழ்ந்திருக்கப்
பாலும் பழமுண்டாகிய யோகமும்
      பங்கையம் போலே நிறைந்திருக்க       26

ராசனிருந்து அரசாள மந்திரி
      நாலு பேருமிருந்தான்வாழ்க
வாசினையாகவேதானிருக்கவினை
      வந்த வகைதனைக் கேளுங்களே.       27

பட்டணமஷ்த மிச்சவுடனே
பரிசோதினை பார்க்கவென்றேநினைந்து
கட்டழகனெனும் போதவாதித்தனும்
      பட்டணஞ்சுத்தி வருகையிலே.       28

பட்டணத்துக்கு வடபிறத்தில் வட
      பத்திரகாளிதன் கோவிலிலே
துஷ்ட்ட மகமாயி அத்தராத்திரி வேளை
      சோதினையாக அழுகலுற்றாள்.      29

பத்திரகாளி குரல் கேட்டு சிவ
      பத்த னெனும்போத வாதித்தனும்
சித்தங்கலங்காமல் பத்திரகாளிமுன்
      சென்று நடந்து சுருக்காக.       30

ஆரடி யம்மா அழுகிறது இங்கை
      அருமை இதோவந்து நிற்கிறேன் நான்
பாரடி யென்முகம் மாதாவேபர
      மேஸ்வரி என்றிரு தாள் பணிந்து.      31

சொன்ன மொழிதனைத்தான் கேட்டுச்சிக
      சோதி யெனும்பத்திரகாளியம்மாள்
இந்நேரம் என் முன்னே வந்தவன் ஆருநீ
      என்ன மனந்துணிவாகவந்தாய்.       32

காளியுரைத்த மொழி கேட்டுக்கரு
      ணாகரன் போத வாதித்தனுமே
சூலிகங்காளி மகமாயி யுந்தன்
      சொந்த அடுமையாய் வந்தவன் நான்.       33

சொந்த அடுமையாய் வந்தாக்கால்வகை
      சொல்லுவா நீயாகு என்மகனே
விந்தை பெருகும் அழகே சன்வாசல்
      மந்திரி போதவாதித்தனென்றான்.       34

வாடா மகனே யெனவுரைத்தாள்மக
      மாயியைச் சுத்தி அடிபணிந்து
தேடக் கிடையாத அம்பிகைக்கிக்குறை
      செய்த வகையெனக் கேயுரைப்பாய்.       35

போதவாதித்தன் அப்போது சொல்வானுரைத்திடவே
      பரிபூரணிமெத்த மனமகிழ்ந்து       36

என்துய ருன்னிடம் சொன்னதினால் என்ன
      என்ன வரும்போத வாதித்தனே
கண்துயில் மாயனுட தங்கை யேஉன்
      கருணையினானதைத் தீர்ப்பேனென்றான். 37

இந்தப் படிமந்திரிதான் கேட்க
      பரமேஷ்வரிமெத்த மனமகிழ்ந்து
கந்த மலர்க்குள் பத்திரகாளி
      கருணைபுரிந் தென்னைக் கேளுமென்றாள்.      38

மந்திரி போதவாதித்தனே நானும்
      வகையுடன் சொல்லுறேன் கேள்மகனே
சந்திர மாஅழ கேஸ்பரராசனும்
      தாரணிதன்னிலே வாழ்ந்திருக்கத்       39

தாயென்று என்னைப் பணிந்து கொண்டாய் நானும்
      தாழ்ச்சி இல்லாத மகிழ்ச்சி கொண்டேன்
தாயென்று வந்தாயே போத வாதித்தனே
      நானொன்று சொல்கிறேன் கேள்மகனே.       40

நாளை பொழுதஸ்த்த மானவுடன் இரண்டு
      நாழிகை ஈரேழு சென்றவுடன்
வேளைக் குதவிய பஞ்சணை மெத்தையில்
      வேந்தன் மனையாளுடன் படுக்க       41

சர்ப்ப மொன்று வந்து தீண்டுதுகாண்பின்னும்
      சாதனையாய்மறு தேசத்தாரும்
கர்ப்ப உடுவாயாகப் பொரியவல்
      கயச்சுருக்காநெஞ்சிலூடுருவிச்       42

சம்பா அரிசி நஞ்சாக வரும் அதைச்
      சாப்பிட்டாலும் உயிர்தான் போகும்
அம்பால் இதுதனை தீத்தாயானால் ராசன்
      ஆளுவான் பூலோக முள்ளமட்டும்.       43

என்று மகமாயி தானுரைக்க அப்ப
      இணையடி போற்றியே தான்பணிந்து
கண்டு மகமாயி தானுஞ் சொல்லமனம்
      காரணமாக நடந்தானே.       44

வந்துதே தேச உடுவரையுஞ்சம்பா
      வருக்க வரிசி பலகாரம்
இந்தப் படிக்கள கேசனிடத்தில்
      இன்பமாய்க் கொண்டு போய் வைத்தார்கள்.       45

கண்டு அரசன் மனமகிழ்ந்தானப்போ
      காட்டென்று போதவாதித்தனுமே
இன்று அதிசயந்தானிருக்க அய்யா
      யென்று மந்திரி சொல்ல ராசனுமே.       46

காரணமேதுகாண் மந்திரியே அதைக்
      காட்டென்று ராசன் மனமகிழ்ந்து
பார்மன்னன் விட்ட உடுவரை நாளை
      பார்க்கலாமென்றாரொரு பக்கம் வந்து       47

மந்திரி சொன்னதை ராசனுந்தான் வெகு
      சிந்தையில் மெத்த மனமகிழ்ந்து
எந்தவிதங் காணு மந்திரியே என்று
      ஏகினான் போசன சாலையிலே.       48

சம்பா அரிசி சமைந்திருக்க அன்னம்
      தான்பொசிக்கு ராசன் வேளையிலே
வேந்தன் விதியை விலக்கவென்று மந்திரி
      வேணுமே மூணுபிடி சாதமென்றான்.       49

அன்னமென்று மந்திரிதான் கேட்க
      அழகேசனு மூணு பிடிகுடுக்க
திண்னென்று சொல்லிகுடுத்த அன்னத்தையுஞ்
      சீலையில் வைத்து முடித்துக்கொண்டு       50

அன்று கதிரோன் மறைந்திடவே அன்று
      ராத்திரியே காளி சொல்படிக்கி
சென்று அரமணைதான் புகுந்து ராசன்
      தேவியு நித்திரை செய்யயிலே.       51

சர்ப்பம் வரக்கண்டு போதவாதித்தனும்
      தன்கையில் மந்திரவாளதினால்
விற்பனைமுள்ளவன் போத வாதித்தனும்
      வெட்டினான் ரெண்டு துண்டாகவேதான்.       52

வெட்டி விழுந்திடு பாம்பு ரெத்தங்களும்
      மெல்லி நல்லாள் கொங்கை மீதில் விடு
பட்ட பாடுகளு மிப்படி யோவென்று
      பார்த்து நின்று போதவாதித்தனும்       53

சுண்டு விரல் நெகத்தாலெடுத்துவிரல்
      துண்டா நறுக்கிமேல் கட்டிவைத்துக்
கண்டு ஆரடாவென்று கேட்கதேவி
      காரணன் போதவாதித்தனென்றான்.       54

ராசனைத்ததேவியுந்தானெழுப்பி
      நலமாச்சுது போத வாதித்தனுக்கு
காசு பொறாத பயலுமென் கொங்கையைக்
      கையினால் தொட்டானென்றேயுரைத்தாள் . 55

தேவியுரைத்த மொழி கேட்டு ராசன்
      சீக்கிரமாக யெழுந்திருந்து
பாவிப் பயல் செய்த ஞாயத்துக் கென்ன
      பாவினை செய்குவோமென்று சொல்லி       56

நிக்கிற போதுரெண்டாஞ்சாமக்காவல்
      நீதான் மந்திரி போதசந்திரன்
பக்குவ மேது மறியாமலப்போ
      பாரிசுத்திராசன் வீதிவந்து       57

வார்த்தையைக் கண்டங்கே ஆரடாவென்று
      வளுவினான் ராசள கேஷ்பரனும்
போறவனாரென்றுரைத்திட வேகாவல்
      போதசந்திர மந்திரி யென்றுரைத்தான்.       58

பெற்ற பிள்ளையிலு முற்ற பிள்ளையென்று
      பேரில் கெங்கு மறிந்திருக்கும்
சத்துருவாக நடத்திவைத்தான் உன்
      தமையனாம் போத வாதித்தனுமே.       59

சப்பிரமஞ்சக்கூடத்திலே எந்தன்
      தாரமும் நாமும் படுத்திருக்கத்
துர்ப்புத்தி யுள்ளவன் போதவாதித்தனும் என்
      தோசையை தொட்டிட நீதமுண்டோ .       60

எண்ணியரசனுரைத்திட வேமென
      தெண்ணியே போத சந்திரனுரைப்போன்
நன்று நன்றய்யாவே யென்று சொல்லி அந்த
      நாயகன் பாதம் பணிந்துரைப்பான்.       61

கண்ணாற் கண்டதுங்காதாற் கேட்டதும்
      கண்டபேர்விண்டதும் பொய்யாகும்
இன்னமும் பூலோகந்தன்னிலே ராசாக்கள்
      ஏதொன்றுந் தீர்க்கம் விளங்கவில்லை.       62

தீர்க்க விளங்காக்காரியத்தால் வந்து
      தீவினை மூண்டதைக் கேளுங்களே
மார்க்க முடன் சொல்லக் கேளுமய்யா வென்று
      மந்திரி சொல்லப் புகழ்ந்தானே.       63

பாஞ்சாலை என்றொரு தேசமய்யா அந்தப்
      பட்டணம் ஆண்டானொரு வேடன்
மாஞ்சையாயாளுமிடத்தில் பிளதேசம்
      மன்னனுக்குத்திரை செல்லாமல்       64

வெள்ளை போல நிறமுள்ள வனமிருக்க
      சிங்கத்தைக் கூட்டி நடந்தானே.       65

கேதகாபுரிபட்டனத்தி லங்கே
      கேசவ னென்றொரு செட்டியுண்டு
சாதக மாகிய வேடனு மப்போது.
      தயவாய் வணிகனிடமுரைப்பான்.       66

செட்டியாரையுங்கள் ராசனுக்குத்திரை
      செல்ல வேணுமொரு ஆயிரம் பொன்
வட்டி குடுத்துத் திருப்பும் வரைக்கும்
      வனமிருக சிங்கம தீடாக.       67

வைத்துக் கொள்ளுமென்று சீட்டெழுதிக் கய்யில்
      வாங்கினான் ஆயிரம் பொன்தனையும்
கைத்துணையான மிருக சிங்கத்தையும்
      கய்யில் கொடுத்தான் வணிகனிடம்       68

வாரும் வனமிருக சிங்கமுனைவைத்து
      வாங்கினேனேயொரு ஆயிரம் பொன்
சேரும் வரைக்கு மவரிடத்தில் சொன்ன
      சேதியைக் கேட்டிருந் தேவாழும்.       69

என்று புவிவேடன் நாய்க்கிப் புத்தி சொல்லி
      இன்பமாய்த் தன்னுடை தேசமதில்
சென்று திரவியந்தானெடுத்துப்பணஞ்
      சேகரஞ் செய்யற நாளையிலே.       70

வேடனரசனிடமிருக்க மிருக
      சிங்கம் வணிகனிடமிருக்க
பாடாவிதியாலே வந்த பழவினை
      பண்பாகச் சொல்லுகிறேன் கேளுமய்யா.       71

கப்பல் யாவாரமே செய்யவென்று செட்டி
      காரிய மாயவனசிங்கமதை
முப்பாலுஞ் சோறு முண்டு கொண்டு வீட்டைச்
      செப்பமுடன் காரு மென்றுரைத்தான்.       72

நல்லதென்று வனசிங்கஞ் சொல்லச் செட்டி
      நல்லதோர் வாரிதனிலேறி
வல்லமை யாகவே செட்டி பெண்சாதியும்
      வாகான சோரன் தனைச் சேர்ந்து       73

சோரன் நிதமும் வருகிறதும் இவள்
      சொந்தமாய்க் கூடி மருகிறதும்
வீரவனமிருக சிங்கமது கண்டு
      வேளை வரட்டுமென்றே இருந்து       74

வந்ததோர் ராத்திரி வீட்டில் புகுதவே
      மன்னைப் பிடித்துத்தான்கடித்து
சந்துகள் வேறதாய்த் தாழ்ந் தெரியத்
      தான் கண்டு செட்டி மனையாளும்       75

கையை முரித்து நெரித்துக் கொண்டு
      அவள்பின் கடையிலே குழிதோண்டி
அய்யயோ வென்று அவள் தூக்கிக்குழி
      ஆழத்தில் போட்டுப் புதைத்தாளே.       76

வீட்டில் திரவியந்தானிருக்கக்கடல்
      மேவிய செட்டி திரும்பிவந்து
தாஷ்ட்டீக மாய்வீட்டில் வந்திருக்க அப்போ
      சந்தோசமாயவன் சிங்கமது       77

கட்டி வணிகனைதான் பிரண்டு புழக்
      கடையி லோடியே ஊளை இட்டுச்
செட்டி இதேதென்று பார்க்கயிலே முன்னை
      செத்த பிணத்தை வெளியிழுத்து       78

மன்னை தனிலே கடித்தது வும் உயிர்
      மாண்டதுவும் வேண்டிச் சேர்ந்ததுவும்
என்னை அதுமுதல் அன்னைகண்பாராமல்
      இருந்தாளென்று உரைத்ததுவே.       79

நாயு முரைத்த மொழிகேட்டுச் செட்டி
      நாயகி தன்னை வரவழைத்து
வாயைக் கிழித்துத் துரத்திவிட்டுச்செட்டி
      வாரும் வனமிருக சிங்கமென்றான்.       80

வேட னெழுதிக் குடுத்த முரியையும்
      மெய்யுட னேசெட்டி தானெடுத்துச்
சோடி சமாய்வன சிங்கங் கழுத்திலே
      சொந்த முடன் போட்டுச் சொல்வானாம்.       81

எந்தனுக்கு நீதான் செய்த உபகாரம்
      எந்தன் சென்மத்திலு நான் மறவேன்
சிந்தை மகிழ்ந்து உன்தந்தை யிடத்திலே
      சேரும் வனமிருக சிங்கமென்றான்.       82

நாமின்று செட்டிக்கி நாணயங் கொண்டுபோய்
      நாயைத் திருப்புவோமென்று சொல்லிக்
காட்டுக்குள்ளே வேடன் தான்வரவே
      எதிர்கண்டு வனமிருக சிங்கமது.       83

சீட்டுக் கழுத்திலே போட்டுக் கொண்டு அப்போ
      சென்றுதான் வேடனைக் கண்டதுவே.       84

வந்த வனமிருக சிங்கமதை வேடன்
      வஞ்சனை செய்திப்போவந்து தென்று
அந்த இடத்திலே செடியில் கட்டிநாயை
      அறுத்துப் போட்டு நடந்தானே.       85

பட்டணம் சென்று இடவளி இல்செய்த .
      பாவினை செட்டி யிடம்புகல
கட்டி அழுது வணிகனுரைத்ததே
      காரணமாய்ப் பழிவந்து தென்று       86

வேடனுந்தானு மடிந்தானே செட்டி
      கூடஉயிரைவிடுத்தானே
தேடியலைந்த மொழி கேட்டு வேடன்
      தேவியுங் கூட மடிந்தாளே.       87

இப்படிக்கல்லோ இறந்தார்கள் முன்னே
      ஏதொன்றுந்தீர்க்க விளங்காமல்
அப்படிக் கல்லவோ வந்து முடியுமென்
      அய்யனே யென்று உரைத்தார்கள்.       88

போதச்சந்திர மந்திரி சொன்ன கதையைப்
      பொருத்த முடன்ராசன் தான் கேட்டு
நீதமுடன் சரிதானென்று ராசனும் நெஞ்சில்
      நினைந்து போம்மந்திரியென்றான்.       89

புத்தியென்று சொல்லித்தான் போனானப்போ
      போத வியாகரன் பட்டணத்தைச்
சுத்தி வந்து நின்று ராசனைக்கண்டுமே
      தோத்திரஞ் செய்தங்கே நிற்கயிலே       90

நின்றவன் தன்னையுந்தான் பாத்து ராசன்
      நீதான் போத வாதித்தனுமே
மண்டபமீதில் சப்பிறக் கூடமஞ்சத்தில்
      மங்கை யுடனே படுத்திருக்க       91

நித்திரை சோதித்து ராத்திரி வேளையில்
      பெத்த தாயென்று மறியாமல்
........ ......... .............. .......
      காரிழையைத்தொட நீதமுண்டோ .       92

என்னடா போதவியாகறனே யென்று
      சொன்னதெல்லாமந்திரிதான் கேட்டு
மன்னவன் பாதம் பணிந்து கொண்டு மூணு
      மந்திரி சொல்லப் புகுந்தானே       93

வாருமய்யா அழ கேஷ்பரனே இந்த
      வையகமாளுமனுவேந்தே
பாருல கில்வரு ஞாயங்களுமது
      பராபரமாக விளங்க வேணும். 94

ஏது பராபரஞ் செய்யாமல் அதில்
      இன்னபடி என்றறி யாமல்
சூது முன்னாலே விளைந்த கதை யொன்று
      சொல்லுறேன் கேளு மெனஉரைத்தான். 95

சந்திரகிரியொரு தேசமய்யா அந்தத்
      தாரணியில்லொரு வேதியனாம்
மந்திர வேத முறையறிந்து ஒரு
      மைந்தனில்லாமலிருந்தானே.       96

புத்திரவாஞ்சை பெரிதாகிக் கீரிப்
      பிள்ளையைத் தானீன்று பிள்ளையைப் போல்
எத்தேச காலமும் அய்யனு டன் தேவி
      ஏந்திழை கய்யுட னேவளத்தாள்.       97

கஞ்சமலரோன் கிருபையினால் கெற்பம்
      காரிழையீரைந்து தான் சுமந்து
மைந்தன் பிறந்து வளர்ந்திட வேபெத்த
      மாதாவு மெத்த மனமகிழ்ந்து       98

தொட்டியில் பிள்ளை படுத்திருக்கக் கீரிப்
      பிள்ளையும் பத்திரமாயிருக்கப்
பொட்டி எடுத்தரைக் கீரையறுக்கவே
      போயினாள் கொல்லலைக் கிணத்தருகே.       99

கொல்லை தனிலம்மாள் தானிருக்கக் கீரிப்
      பிள்ளையுந் தொட்டி இடமிருக்கத்
தொல்லை வினையாலே ஊழ்வினை வந்த
      துயரத்தைக் கேளுமென் அய்யாவே.       100

கெம்பீரமாய்ப் பிள்ளை மீதுறங்க ராகு
      கேதுவுந் தொட்டி இடமிறங்கத்
தம்பியைத் தீண்ட வருகுதென்று கீரி
      தானது பாய்ந்து கடித்திடவே       101

பாம்புகடி பட்டது சாகப் பெற்ற
      பாவி இடத்தி லிதுபோக       102

முன்னும் பின்னென்று மறியா மலவள்
      முக்கிய மாயொன்றும் பாராமல்
பன்னரு வாள்கையில் தானெடுத்துக்கீரி
      தன்னைப் பிடித்துக் கழுத்தறுத்தாள்.       103

கீரிதனையுங் கழுத்தறுத்து அந்தக்
      கேதகியாகிய மாபாவி
மாறியழுது பிரண்டு கொண்டு வீடு
      வாசல்வந்து தொட்டி பார்க்கயிலே       104

சர்ப்ப மிறந்து கிடக்கிறது பிள்ளை
      தானிருந்து விளையாடுறதும்
இப்படி யாய்ப்பழி வந்து தென்று அந்த
      ஏந்திழை பிள்ளையுடனிறந்தாள்.       105

ஆதி முடிவுக ளிப்படியோ வென்று
      அய்யனுங் கூட மடிந்தானே.       106

இந்தப் படிக்கல்லோ இறந்தார்கள் முன்னே
      ஏது பராபரஞ் செய்யாமல்
அந்தப் படிக்கல்லோ வந்து முடியுமென்
      அய்யனே யென்று உரைத்தானே. நாலு       107

மூணா மந்திரி போத லியாகான்
      முத்தமிழ் போல்கதை செப்பிடவே
ஆனாநீ போவென்றுரைத்திட வே அப்போ
      போதவி பூசனன் தானும் வந்தான்.       108

வந்தவன்ராசனைக்கண்டு வணங்கிட
      வாருங்காண்போத விபூசணனே
அந்தப் புரத்திலே போதவாதித்தன்வந்
      தாக்கினை செய்ததைக் கேளுங்களே. 109

மாதுடன் பஞ்சணைமெத்தையில் சப்பிர
      மஞ்சத்தில் நானும் படுத்திருக்கச்
சூதுசெய் ராத்திரி வந்தவன் யென்னுட
      தோகையைத் தொட்டிட நீதமுண்டோ .       110

மந்திரியென்னடாவென்றுரைக்க அந்த
      மன்னவன் பாத மடி தொழுது
செந்திரு மேவிய திண்புய னேசெக
      தீஷ்பரனே அழ கேஷ்பரனே.       111

பொல்லாதவன் போத வாதித்த னென்று
      புரிந்து தோதேசத்திருவுளத்தில்
உள்ளது வென்று மறிந்தாலுமதை
      ஒன்று பத்தாக விளங்க வேணும்.       112

ஒன்று பத்தாக விளங்காமலதில்
      உள்ள படியென்றறியாமல்
சொல்லு மொழியினால் கேட்டதினால் வந்த
      துன்ப மொருகதை கேளுமய்யா.       113

மிதிலை யென்றொரு தேசமய்யாகண்ணு
      மில்லாப் பிறவிக் குருடனுமே
காதலி போலவன் தேவியுடன் இந்தக்
      காசினியைவிட்டுத்தானடந்தான் 114

பாதி வழியிலே வந்திருக்கொரு
      பாதகன் அல்வழி தானடக்கக்
கோதையவளாசை கொண்டு பிறவிக்
      குருடனை விட்டு நடந்தாளே.       115

தேவி குருடனைத் தான் பிரியப்பர
      தேசியும் ஒத்தையாய்த்தான் பிரியப்
பாவிப் பயலாலே வந்திடுங் காரியம்
      பகரவுங் கேளுமென் அய்யாவே. 116

காவேரிப்பட்டணமீதிருந்து அங்கே
      கலிங்கஞ் செட்டியுந் தேவியுமாய்க்
கோரமாய் மாமனார் வீட்டிருந்து
      குருடட னருக்கும் வழிதனிலே      117

வந்து வணிகன் குருடன் புலம்பிய
      வார்த்தை யைக் கேட்டு அவனுரைப்பான்
பந்து முலையாளென் தேவி யுடனிந்தப்
      பாதை வழியாக வந்திருந்தேன்.       118

வெள்ளாள னென்றொரு மாபாவி எந்தன்
      மெல்லிய ரோடே அவன்புணர்ந்து
உல்லாசமாக நடந்தார்கள் நானும்
      ஒத்தையாய் ஆறுநாள் பட்டினியாய்       119

நின்று தவிக்கிறேன் காட்டுக்குள்ளே நீங்கள்
      நேசமாய் என்னையுந்தான்கூட்டிச்
சென்று நகர்மீதி லூட்டாலுங்களுக்கு
      செம்மம் உனக்குப் பலனாகும். 120

அந்தகன் சொன்ன மொழி கேட்டு செட்டி
      அன்னம் வயிறுரொம் பக்குடுத்துக்
கொந்து முலையாளைக் கோல்பிடித்துக் கொண்டு
      கூட்டிவா வென்றவன் சொன்னானே. 121

கூட்டிவா வென்றுரை செய்திட வேசெட்டிக்
      கோதையும் நாயகனைப்பாத்து
காட்டி லிருக்குங் குருடனைக் கட்டி நான்
      காசினியில் போக நாயமில்லை .       122

நாயகி சொன்னதைக் கேளாமல் செட்டி
      நன்மையு முண்டென்று தானினைந்து
தாயக மாகக் குருடனைக் கூட்டியே!
      தானும் வழியே நடந்தார்கள்.       123

சிங்கள தேசத்தில் போய் சேர்ந்து ஒரு
      செட்டியார் வீட்டிலே தானிருந்து
திங்களுதிக்கச் சமையல் பண்ணி அவர்
      திங்கக்கதிரோனுதித்திடவே       124

மூவருங்கூடி விசைய நகரமும்
      முந்தாவிப் பாதை வழிநடக்கக்
கேள்வியு மிவ்வூரில்லையோ வென்றந்தப்
      பாவி குருடனுரைத்தானே.       125

பாவி குருடனழுதிட வே அந்தப்
      பட்டணந்தன்னில் பலசனங்கள்
கூவி யழுத குருடனை யுஞ்செட்டி
      கோதையு மூவரையும் பார்த்து       126

ஏது அழுதது யென்றுரைக்க அப்பத்
      தூது (தீது) நினைந்த குருடனுமே
மாதுடனானும் வருகையி லேசெட்டி
      மையல் செய்து பெண்ணைத் தான் கூட்டி       127

என்னைவிட்டுப் போறாளென்றுரைக்கக் கூடி
      ஏகினார் ராசன் இடந்தனிலே
கண்ணுக் கெட்டான் சொல்லைத்தான் கேட்டிந்தக்
      கற்பனை ராசன் விளங்காமல்       128

செட்டியை வெட்டவேதானுரைத்துப் பெண்ணைக்
      கூட்டியே கண்ணாம் பறை படைத்தான்
மட்டக் குருடனும் ஒற்றையாகப் பின்னும்
      வார மனுசர் தெரியமல்       129

காட்டுக்குள்ளே செட்டி வந்தது வும் உயிர்
      காப்பாத்தி அன்னங் குடுத்ததுவும்
நாட்டுக்குள்ளே கூட்டி வந்ததுவும் நானும்
      நாரியையென் பெண்ணாளென்றதுவும்       130

நீதங் கெட்டராசன் கேட்டதுவு என்ன
      நீதி செட்டி வெட்டுப் பட்டதுவும்
சோதி முகத்தாளை நம்மிடஞ் சேரென்று
      சொல்லாமல் கண்ணாம் பறையடைத்தான்       131

பட்டினி ஆறுநாள் காட்டுக் குள்ளே
      பசித்திடு லெச்சிமி யாள் தனக்கும்
செட்டிக்கும் நான் செய்த துரோகமே எண்ணைக்குத்
      தீர்ப்பே னென்று சொல்லித்தான்புலம்ப       132

தூதுவ னோடிக் குருடனுரைத்ததைச்
      சொல்லவே ராசனுந்தான் கேட்டுத்
தீதுசெய் தோமென்று சொல்லியப்போ
      சொன்ன குருடன் தனைவதைக்கப்       133

பின்னாலே சேத மனேகமய்யா அதை
      என்னாலே சொல்ல முடியாது
கண்ணாலே கண்டு மிருந்தாலுமங்
      கருத்தா விளங்க வேணுமய்யா       134

மந்திரி போத விபூசணனுங்கதை
      மார்க்க முடன் சொல்லத்தான் கேட்டுச்
சந்திரன் போய்க்கதிரோனுதிக்கவும்
      ராசன் குழுவிலே வந்தானே.       135

ஆதி நாளை மந்திரிமார்க ளெல்லாரையும்
      அழைத்து வரச்சொல்லித்தானிருத்திச்
சோதி முகமுள்ள ராசனழ கேசனும்
      சொல்லும் வயனத்தைக் கேளுங்களே 136

ஆவி யுடலுயர் போலிருக்கு மங்கரு
      ணீக்கரே நீங்களுங் கேளுங்களே
தேவியும் நானும் பஞ்சணை மெத்தையில்
      சிங்காரமாகப் படுத்திருக்க       137

போத வாதித்தனும் வந்தானாம் யெந்தன்
      பொற்கொடியாள் கொங்கை தொட்டானாம்
கோதை பதறியே ஆரென்று கேட்கவும்
      போத வாதித்தன் நானென்றானும்       138

இப்படியாகக் கொத்த போத வாதித்தனை
      யென்ன சித்திராக்கினை செய்வோணும்
செப்பு மென்று ராசன்தான் கேட்க அப்பச்
      சித்தங் கலங்கியே யெல்லோரும்       139

போதவாதித்தனைத்தானழைத்து ராசன்
      போதினை யெல்லாமவற்குரைக்க
நீதி முறையாய் நடந்தாயே இந்த
      நிந்தனை யென்ன அறையுமென்றார்       140

மந்திரி மார்கலுரைத்திடவே போத
      வாதித்தன் முன்பின் நடந்ததெல்லாம்
தந்திரமாகவுரைத்திட வேயந்தத்
      தாரணி கேட்டு அனைவோரும்       141

பூருவ மாகிய மந்திரியே நீங்கள்
      புண்ணிய மான மனுநீதி
பாருலகிலழ கேஷ்பரராசனைத்
      பார்த்து மனுநீதி சொல்வானாம்       142

செம்மையாய் நீரு முரைத்தீரோ பெண்கள்
      சித்த மனம்போல் நடந்தீரே
நன்மை செய்யத் திம்மை யான கதையொன்று
      நானொன்று சொல்லுறேன் கேளுமய்யா 143

கோசலை என்றொரு தேசமய்யா அதில்
      கோவிந்த னென்றொரு வேதியனும்
மாசில்லாதொரு மேனியனு மந்த
      மாநிலத்தில் நெடு நாள் முதலாய்த்       144

தேகித னென்றொரு பேரெடுத்து அந்தத்
      தேசத்தில் பிச்சையுந்தானெடுத்து
ஆதியுடனே பிழைத்திருக்க அந்த
      ஆயிழைகிள்ளையுந்தான் வளர்த்தாள்.       145

கிள்ளை யென்று கிளிதான் வளர்த்தாள்
      கெற்பமில் லாத மலடியினால்
பிள்ளை போலே அதைத்தான் வளத்து அவள்
      பேசவு நன்றாய் வருத்தி வைத்து       146

பேசிய பேச்சைக்கிளிதானும் பெத்த
      பேதையிவளென்று தானறிந்து
பாசமுடனவள் வீட்டு மேல் நாலு
      பக்கமும் பாத்து இருக்கயிலே       147

பச்சைக்கிளிகளனேகமாய்க் கூடியே
      பாதையிலாகாசமாய்ப்பறக்கக்
கெச்சித மாயிது கூடப் பறந்து போய்க்
      கேட்டுது நீரெங்கே போரிரென்று       148

எங்கே போரிரென்று இதுகேட்க முன்னே
      யேகிய பச்சைக் கிளிகளெல்லாம்
மங்கை யெனுங்கடல் மீதிருக் குந்தீவில்
      மாங்கனிக்கிப் போற மென்று சொல்ல      149

வாரிகனிகள் புசிப்பானேன் இந்த
      வைய்யகத்தில் கனிதானிருக்க
பாரில் பெரியோர் பொசித்தாக்காலம்
      பதினாறுள்ள தேகம் பெறுவார்கள்       150

என்று கிளிகள் உரைத்திடு வேகூட
      ஏகி இதுவும் பறந்திடவே
சென்று கனிகள் அதுபொசிக்க இது
      தின்னாம லொருகனிதான் பிடிங்கி 151

அன்னை பிதாவும் பொசித்தாக்கல்பதி
      னாறுள்ள தேகம் பெறுவார்கள்
என்னைக்கி நம்மளைக் காப்பாத்து வாரென்று
      ஏகிக்கிளிவீட்டில் வந்ததுவே.       152

வீட்டில் கிளிகனி கொண்டு வர அதை
      வேதியன் கண்டு மனமகிழ்ந்து
தாட்டிக மாய்மறை யோனுக்கு முன்னந்
      தாரணையெல்லாமுரைத்ததுவே.       153

தாரணை யெல்லாங்கிளியுரைக்கக்கனி
      தாவென்று வேதியன் தான் வாங்கிப்
பாரெல்லாமாளுமென்ராசனுக் காமென்று
      பார்த்திபன் முன்கனிவைத்தானே. 154

ராசன் கனியையுந்தான் பார்த்து மறையோன்
      நவின்ற தெல்லாந்தான் கேட்டுப்
போசன் மனதுமிக மகிழ்ந்து இந்த
      பூமியுள்ளோர் பிழைத்திடவே       155

ஆவலுடனே மாமரத்தை வைத்தானது
      ஆகாச மட்டும் வளந்ததுவே
காவலுடன் கட்டாய்தான் பாத்தான் நிதங்
      காத்து வருகிற நாளையிலே       156

வேதியன் வீட்டில் கிளிஇருக்க
      வேந்தனிடமாமரமிருக்கப்
பாதி மதிசூடும் நாதனால் வந்த
      பழவினை மூண்டதைக் கேளுங்களே 157

மாவுமொரு கனிதான் பழுக்க ராகு
      கேதுவு மொருநாள் பார்த்திருக்கப்
பாவு பரிபகலோனுட காந்தியால்
      பாம்பு விசங்கனி வாங்கியதே. 158

பாரினில் சூரியன் காந்தியாலேயப்பப்
      பாம்பு விசங்கனி தோன்றிடாமல்
கூரிய மாங்கனி கொண்டுவாடாவென்று
      கொத்தவன் சொல்லப் புகுந்தானே.       159

தூதுவ ரோடிப் பிடிங்கிவர அதைத்
      தொல்லுலகிலுள்ளோர் பார்க்கவர
மாது புயன் குரு வோரைப் பெரியோரை
      மாங்கனியைத் தின்னு மென்றானே.      160

மாங்கனி யைக்குரு தான்பொ சிக்க உயிர்
      வாங்கியே மானுடம் போனதுவே
பொங்கியே ராசனும் வேதியன் பாவியை இப்
      போது கொண்டுவாவென்றுரைத்தான்       161

கொண்டு வந்து மறைவேதியனே உன்
      கோத்திர பிரும்மகுல மானதினால்
கண்டு உனைவிட்டேனென்று சொல்லி ஒத்தைக்
      கண்ணை பிடிங்கியே விட்டானே       162

வேதியன் கண்ணைப் பறிகொடுத்து வெகு
      வேகமாய் வீட்டுக்குத்தான் நடந்து
சாதனையாகநவை செய்தாயென்று
      கிளிதனைப் பிடித்துக் கழுத்தறுத்தான்.       163

கொத்தவன் முன்பின்னறியாமல் வேத
      கோவிந்தனு முன் பாராமல்
சித்தம் போலே கிளி செத்ததினால் வந்து
      தீவினை மூண்டதே கேளுங்களே.       164

பட்டணந்தன்னிலே வீற்றிருக்கும் பல
      சாதியி லேயொரு வண்ணாத்தி
கட்டி யுருண்டவள் மாமி மருமகள்
கையிணக்கம் செய்து கொண்டதினால்       165

மாமி மருகமள் மேல் பகைத்து நஞ்சு
      மாம்பழத்தைத் தின்று சாவமென்று
காமியவளும் பொசிக்கப் பதினாறு
      காரிகை போலே இருந்தாளே       166

ஆறு பத்துவயதுள்ளவள் மாங்கனி
      யாலே வயது பதினாறு
வேறுருவாய் மேனியாச்சு தென்று சொல்லி
      வேகமாய் மாமரங் கீழிருந்தாள்       167

கோபமாய்ப் போனவள் நஞ்சுமாங்கனிதின்று
      கொன்றுதோவென்றவள் கிட்ட வந்து       168

என்னுட மாமியார் சண்டையிட்டுவர
      இவ்வழி காணியோ என்றுரைத்தாள்
சொன்ன மருமகள் கட்டிக் கனிதின்று
      தோரணையெல்லாமறிந்தாளே.       169

உந்தனிட சண்டை இட்டதுவும் நன்
      உயிர்விடு வேனென்று வந்ததுவும்
இந்த மாங்கனியைத் தின்றதுவும் இவ்
      வயதாகிப் போகக்கண்டதுவும்       170

வார்த்தைகள் சொல்லிடு மாமியைக் கூட்டியே
      வாவென்று வீட்டில் கணவனிடம்
சாத்தினாளிந்த நடத்தையும் பூலோகம்
      தன்னிலே ராசனுங் கேட்டவுடன்       171

கேட்டுவண்ணாத்தியைக் கூட்டிவந்து ராசன்
      கிட்ட இருத்தி உரையுமென்றான்
நாட்டுக்கடங்காமலிருகுதய்யா அந்த
      நஞ்சு மாங்கனி தின்று சாவமென்று      172

என்னை மருமகள் வைத்துக்காகவே
      இறந்து போவோமென்றுதானினைந்து
தின்ன பழைய நிறம்போக வெகு
      தீர்க்கமாயாச்சுதென் தேகமெல்லாம்       173

மாங்கனியைத் தின்ன வண்ணாத்தி சொல்லராசன்
      மாங்கனியால் ரெண்டைக் கொண்டுவந்து
சா(ங்)க நிசமுள்ள பேரு திங்கமுன்
      சடலமும் போய்ப் பதினாறு 174

கண்டு அரசன் மனமகிழ்ந்து முன்னே
      கண்ணைக் கெடுத்த மறையோனே
சென்று கூட்டிவரச் சொல்லியே ராசனும்
      செப்பினான் வேதியனைப்பார்த்துப்       175

பார்த்துச் செய்யாத முறையாலே வந்த
      பாவம் பெரியோர் பொறுக்க வேணும்
தீர்த்துக் கொள்ளுமென்று ராசனுந்தான் வெகு
      செம்பொன் வரிசை கொடுத்தானே. 176

வேதியன் செம்பொன்னைத்தான் வாங்கியவன்
      வீட்டில் வந்து மனையாளிடத்தில்
பாதி மதியோன் செயலாலேகிளி
      பாவம் நமக்குப் பலித்ததென்று       177

என்று மறையோனிறந்தானே அது
      கண்டு மனைவியுங் கூடிறந்தாள்
நன்றுதானாச்சுது யென்று சொல்லியந்த
      ராசனுங்கூட இறந்தானே       178

ராசனிறந்திட தேவியும் பின் துணை
      யாகிய பேருக ளெல்லோரும்
போசனிறந்தபின்னமிருந்தாவதேன்
      போவென்று விட்டாருயிர்தனையும்      179

வச்சு பின்னாலே அறியாமல் செய்த
      வதைபழி போலே வந்துவிடும் 180

என்று மனுநீதி மந்திரி சொல்லவெகு
      இன்பமாய் ராசனழகேஷ்பரனும்
நன்றுதானென்று சபைதனிலே நாலு
      மந்திரி மாரையுந்தானழைத்துச் 181

சேரவே ராசனழ கேஷ்பரனைப் போத
      ஆதித்தனைப் பார்த்து உரைப்பாராம்
பாரில் பசித்தார் முகம்பாத்துப் பசியாற்ற
      பழிவந்து நேந்தகதை சொல்லுரேன் கேள். 182

தாப முடன்விசையாபுரிப்பட்டணம்
      தானிருந்து ஒரு வேதியனும்
பாவந்துலைக்கவே காவேரி ஸ்தானம்
      பண்ணுவோமென்று மனமகிழ்ந்து       183

ஆச்சி இடத்திலே சொல்லிக் கொண்டு அந்தப்
      பாறையை விட்டு நடந்தானே
தாச்சி இல்லாமல் நடந்தானே கட்டிச்
      சாதத்தைத் தோளில் தான் போட்டுப்       184

பாச்சலூர் பட்டணம் போய்ச் சோர்ந்துவட
      பத்திரகாளியோர் கோவிலிலே
ஆச்சி இருக்கு மந்திக்கோவில்வம்
      வால விருச்சத்தின் கீழாக       185

வேதியனுஞ்சிமைதானிறங்கிந்தி
      மீதினில் ஸ்தானங்கள் தானாடி
சாதம் பொசிக்க வருகையிலே ஒரு
      கற்பனை வந்ததைக் கேளுங்களே.       186

நாதன் கயிலாடு மேதுரைப் பட்டண
      தேசத்திருந்தொரு பாப்பானும்
ஏழுபத்துள்ள மறையவனும் அவன்
      ஏகிய ஆலாமரத்தில் வந்தான்.       187

இந்தப் பிராமணன் என்னவென்று கேட்க
      அன்னமில்லாமயக்க மென்றேயுரைத்தான்
அன்னமயக்கமென்றே யுரைக்கப் பாதி
      யாகவே கட்டுச்சாதம் அவிழ்த்து       188

முன்பசி தீர்த்து வருவோமென்று அய்யன்
      தண்ணீர் கரைதனில் தானுவந்து
அன்னமு அய்யன் பொசித்திடவே அந்த
      அய்யனும் ஆலில் படுத்திடவே.       189

ஒன்றுக்கு ஒன்றுந் தெரியாமல் வந்திடும்
      ஊழ்வினை கேளுமென் அய்யாவே
தாகமுடன் கெருடாழ்வாரும் ஒரு
      சர்ப்பத்தைக்காலில் பிடித்துக் கொண்டு      190

சாகவுஞ் சர்ப்பத்து நஞ்சுதெறித்துக்குறை
      சாதத்தின் மேலே விழுந்திடுமாம்
சர்பத்து நஞ்சு விழுந்திட வே அது
      தானறியாமல் மறையோனும்
உற்பனமாகயெழுந்திருந்து சாதம்
      உண்ணும் மறையோனைத்தானெமுப்பக் 191

கையிலே சாத்தைத்தான் போட அதை
      அய்யனு வாங்கி வயித்தில் விட
மெய்யெல்லா நஞ்சு பரந்தேறி உயிர்
      மேவியே மானிடம் போனதுவே       192

பாம்பு விசமென்றறியா மல் இவன்
      பாச்சலூர்பட்டணத்தாரிடம் போய்
வீம்பு பெருமறை யோரிடத்தில் இவன்
      விண்ணப்பஞ்செய்ததைக் கேளுங்களே       193

வயது சென்ற பிராமணனும் அன்ன
      மயக்க மாகவே படுத்திருந்தான்
தயிரு விட்டிடு கட்டிச்சாதங்கையில்
      தான் பொசிக்க விக்கித்தானிறந்தான்       194

நல்லடக்கஞ் செய்ய வேணுமென்று அந்த
      நாட்டிலுள்ள மறையோர்களையும்
எல்லோரும் ஆல மரத்தடியில் வந்து
      இறந்து கிடக்கிற பார்ப்பானைப்       195

பார்த்து மிவனே கொன்னவன் முதல்லப்
      பரிசெய்தானென்றவனைப்பிடித்துச்
சேத்து வடபத்திரகாளியுட கோவிலில்
      சென்று இவனைப் பிடித்தடைத்துப்       196

பத்திரகாளியுட கோவிலிலே இந்த
      பாப்பானும் ஆறுநாள் பட்டினியாய்
விஸ்த்தார மாகவே பத்துக்கவிதை
      விளம்பினான் பத்திரகாளியின் மேல்       197

பார்ப்பான் கவிதை படித்திட வேயந்தப்
      பாச்சலூர்பட்ட்ணம் வெந்திடவே
தாப்பா இருக்கும் வடபத்திரகாளியின்
      சன்னதி வேதியன் பிள்ளையின் மேல்       198

ஆவேசமாகவே வந்து சொல்லுமிவன்
      ஆல மரத்தினில் வந்ததுவும்
தாவி கெருடாழ்வார் வந்ததுவுஞ் சாதம்
      தன்னில் விசமும் கலந்ததுவும்       199

பத்திரகாளி உரைத்திடவே அந்த
      பாச்சலூர்ப் பார்ப்பாரனைவோரும்
சித்திரமாகப் பிராமணன் காலிலே
      தெண்டம் பண்ணிவந்தனுப்பிவைத்தார்.       200

பசித்தபேர் முகந்தூண்பாத்துப் பசியாத
      பழிவந்து நேர்ந்த தைப்போல
நேசத்தாரென்று ஒருவருண்டோவென்று
      நேசமாய்ப் போதவாதித்தனுமே       201

என்தலை மீதி லெழுத்திது வோவென்று
      எழுந்தானே போதவாதித்தனுமே.       202

கூட்டிவரச் சொல்லித்தானிருத்தி முன்
      கொலுவில் முடிந்திடுஞ்சாதந்தன்னை
ஊட்டியவனும் பொசிக்க விசமேறி
      ஒன்றுஞ் சொல்லாமல் மடிந்தானே       203

பின்னை யொருவனைக்கூட்டி வந்து
      பொரிஅம்பைத் திரக்க அவன்சாக
அன்னை படுத்திடும் பஞ்சன மெத்தை மேல்
      ஆங்காரமாய்ப் போத வாதித்தனும்       204

பள்ளியறையின்மேல் கட்டியே போட்ட
      பாம்பையும் சுண்டு விரல் தனையும்
அள்ளி வந்துராசன் முன்னே வைத்து இந்த
      அத்தாச்சி யெல்லாமறிந்திடவே       205

பாத்து அரசன் மகிழ்ந்திருக்க முன்னாள்
      பாவினை யெல்லாம் பணிந்துரைப்பான்       206

அத்த ராத்திரி பட்டணஞ்சுத்தியே
      அவசரமாக வருகையிலே
பத்திரகாளி அழுதது வும் அவள்
      பாதம் பணிந்து நான் கேட்டதுவும்       207

உத்திரவு இந்தத் தாரணையெல்லாம்
      உரைத்திட்ட நான்சினமேயெழுந்து
சுத்தமுடன் பரிசோதினையுங்காளி
      சொல்படி பாத்து நடப்பிவிக்க       208

இந்தப்படியல்லாம் வேறொன்றும் துர்ப்புத்தி
      ஏதோ நானொன்றும் செய்யவில்லை
அந்தப் படியெல் லாந்தன் கேட்டு
      அழகேசனு மெத்தவேதானும் மனமகிழ்ந்து       209

பெண்ணாப் பிறந்தவள் பேச்சைக் கேட்டுநாமும்
      பேதை யாகநினைந்து கொண்டோம்
சின்னப் படுத்த இருந்தோமே யென்று
      செப்புவான் ராசனழ கேஷ்பரனும்       210

ஆழிகள் சூழ்ந்த புவியிற்குள் ளேரெச்சித்
      தாரையும் பச்சித்தார் அந்நாளில்
கேளுங்கள் மந்திரி மார்களே யென்று
      அழகேசனுங்கதை உரைத்திடவே       211

காவிரி யென்றொரு பட்டண முண்டந்தக்
      காசினியிலொரு மாமறையோன்
தேவாதி தேவன் பிரம்மன் சியலாகச்
      செய்தான் அவருக்கு ஆறுபிள்ளை       212

ஆறும் பிறந்திட மாமறை யோன் தேவி
அந்நாள் மரணமாய்ப் போயிடவே       213

சித்தங் கலங்கியே வேதியனு மந்த
      தேசத்தில் பிச்சைகள் தானெடுத்துப்
பிள்ளைகள் ஆறையுங் காப்பாத்தி யிவன்
      கிள்ளை மொழிகள் அமந்தேத்தி       214

வல்லாண்மை யாக வருகையி லேவினை
      வந்தவகை கேளும் மந்திரியே       215

பட்டணத்தில் பிச்சை யெட்டா மல் ஒரு
      பாலவனத்திலேதானேகி
சட்டமுடனவன் மூங்கிலரிசியைத்
      தானெடுத்து வீட்டில் கொண்டுவந்து       216

தன்கையினாலே சமைத்துப் பிள்ளைகளைச்
      சாப்பாடு பண்ணியவன்பொசிப்பான்
எங்கேயவன் வெளியே போனாலும் பிள்ளை
      யெட்டி யெட்டியே பார்த்திருக்கும்       217

பங்குனி மாசங் கோரத்திலே அனல்
      பத்தியும் மூங்கிலு வேகையிலே
செங்கனி போலவே நல்லபாம் பானது
      தீயிலே பட்டுத் தள்ளாடிப்       218

பக்கத்திலே போனான் வேதியனும் நல்ல
      பாம்பு படுகிற துன்பங்கண்டு
பொக்கென்று கையினால் தூக்கியே கீழாகப்
      போட்டான்குளுந்த மணல் தனிலே       219

பாம்பையு பார்ப்பான் லெச்சிக்கவே அந்தப்
      பாம்பு அவனை வழிமறித்து
வீம்பாகப் போற மறையவனே பசி
      வேளை அகோரமிருக்குது காண்       220

முன்னே கட்டிக் கொண்டு பாம்பு சொல்ல மறையோன்
      முக்கண்ணன் தயவோயென்று சொல்லி
அன்னை இல்லாத கொழந்தைக்கு வேறொரு
      ஆதர வில்லை யென்று நினைத்து       221

நிக்கிற வேதியனைப்பார்த்து வெகு
      நேசமாய் நல்லபாம் பானதுவும்
பக்குவ மாகவே நிக்கிறமாய் நீ பசி
      யாகுதே வேதியாவென்றுரைக்கப்       222

பின்னை யெனக்கொன்று மில்லை அய்யா என்று
      பேதமை யாய்மறை யோனுரைக்கச்       223

சர்ப்பமுங் கேட்டு மனமகிழ்ந்து பார்ப்பான்
      தன்மையாய் நாக மணிகொடுத்துக்
கற்ப காலமும் பெரசிக்கப் பிள்ளைகள்
      கையில் கொடுத்து வாவெனவே       224

சத்தியம் பண்ணியே சற்பம் விட பாப்பான்
      தானடந்து பிள்ளைகையிலிடச்
சுத்தி வந்து பிள்ளைகள் கேட்கச்
      சொல்லுவான் மாமறை வேதியனும்       225

நீங்கள் பிழைக்கவே சொன்னது அம்மணி
      நீலத்தை யென்கையில் ஈய்ந்ததுவும்
என்று உரைத்து மறையவனும்வனம்
      ஏகியே சற்பமிடத்தில் வந்து       226

நின்றும் எனையும் பொசியுமய் யாவென்று
      நேசமாய் வேதியன் தானுரைக்கப்       227

பார்த்து மறையோனே நாகேந்திரனிந்தப்
      பாரவனத்தில் மடியாமல்
காத்து ரெட்சித்த பகவானே கொல்ல
      கர்மம் நினைந்தோமே யென்று சொல்லிச்       228

சீவரத்தினமிவன் கையில் கொடுத்துச்
      செத்தது நல்லபாம்பானதுவும்
பாவ நமக்குக் கிடைத்ததென்று பார்ப்பான்
      பாதை நடந்து மனையில் வந்து       229

பிள்ளைகள் கையிலே தான் கொடுத்து ஒன்றும்
      பேசாமல் வேதியன் தானிறந்தான்
வல்லமை செய்து பிழைக்காமல் பிள்ளை
      மாண்டுது வேதியன் பின்னுடனே       230

சொல்படி பெண்பிள்ளை பேச்சைக் கேட்டு வெகு
      தோசம் மனதில் நினைந்தோமே
வில்பிடி மாயன் கிருபையென்று அந்த
      வேந்தனு மெத்த மனமகிழ்ந்து       231

மந்திரி நாலுபேரைப் பாத்து வெகு
      வார்த்தை வணக்கமாய்த்தானுரைத்துத்
தந்திமேல் பவனி வாவென வேவெகு
      தானங்கள் சொர்ணங்கள் தூவிவரச்       232

சிம்மாசனத்தில் தானும் வைத்து வெகு
      செம்பொன் வருசைமிகக்கொடுத்து
நம்மாலே வந்த பிழைதமக்கு நீங்கள்
      நாலும் பொறுத்தே அருள்வீர்       233

கன்னிகாதானம் அனேகஞ்செய்தார்கோயில்
      கட்டிக்குளக்கரை வெட்டிவைத்தார்
வன்னிமரங்களனேகவைத்தார் இந்த
      மாநில மெல்லாம் புகழவைத்தார்.       234

ஆவி யொன்று கூடு ரெண்டாக
      அழகேசனு மந்திரி நால்பேரும்
செவ்வித மாகவே வாழ்ந்தார்கள்
      செகசோதி கிருபை யருளாலே .       235

செந்திரு வாழி திருவாழி இந்தத்
      தேசங்களெல்லாம் திரைவாழி
மந்திரி நாலுபேரும் வாழி அந்த
      மன்னவன் யெந்நாளுந்தான்வாழி.       236

சேதுபதி யருள் தான்வாழி திருச்
      செந்தூரு முகவன் தான் வாழி
மாது பதிகடலாடி வளர் சிங்கம்
      மன்னவன் வீரபத்திரன்வாழி
அந்தணர் வாழி புகழ்வாழி புவி
      ஆள்கின்ற ராசன் குலம் வாழி.       237
-------------

விசுவாசு வருசம் புரட்டாசி மாதம் 31 தேதி சொக்கம்பட்டியிலே இருக்கும் முத்தன் செட்டி மகன் நாலு மந்திரிகும்மியெழுதி நிறைந்தது. முற்றும். இந்த ஏடு எடுத்த பேர்கள் பிழை இருந்தால் திருத்திப் படித்துக் கொள்ள வேண்டியது. மறுபடியும் ஏட்டுக் காரனிடத்தில் கொடுக்க வேண்டியது.

தண்டாயுதபாணி துணை. முத்தாலம்மன் துணை. வயிரம்மாள் துணை.
-------------

This file was last updated on 28 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)