தமிழ் இணைய மாநாடு 2010 கண்காட்சி அறிவிப்பு
தமிழ்க் கணினி வளர்ச்சி குறித்த தமிழ் மென்பொருள் கண்காட்சி கோவையில் தமிழ் இணைய மாநாட்டில் பெறுவிருக்கின்றது. இக்கண்காட்சி பத்தாயிரம் சதுர அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட மென்பொருள் கூடங்கள் அமைக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் அனைத்துலகமும் ஈர்க்கும் அளவிற்கு மென்பொருட்கள், தமிழக அரசின் மின் ஆளுகை அரங்குகள், தமிழ் மல்டிமீடியா சிடி அரங்குகள், தமிழ் மென்பொருட்கள் இடம் பெறுவிருக்கின்றன. இக்கண்காட்சியின் வாயிலாக பொதுமக்கள் தமிழ் மென்பொருளையும் தமிழக அரசின் தமிழ் பயன்பாடுகள் மற்றும் அலுவலக செயல்பாடுகளையும் பயன்படுத்திப் பார்க்கலாம்.
உத்தமம் மற்றும் கணித் தமிழ்ச்சங்கம் என்ற தமிழ்க் கணினி அமைப்பும், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்தவிருக்கிறது. இக்கண்காட்சிப் பற்றி மேலும் தகவலுக்கு மா. ஆண்டோ பீட்டர் இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 16:52 )

கண்காட்சி அரங்கம்

