Etext input, proof reading, HTML version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to kalyan@geocities.com
© Project Madurai 2000
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
மின்னுரையாக்கம், பிழைதிருத்தம், உயருரைக் குறிமொழியாக்கம், நூலறிமுகம் : முனைவர். கு. கல்யாணசுந்தரம்
இம்மின்னுரை தகுதர தமிழெழுத்துக்களிலாக்கப் பெற்றது. எனவே, இதனைப் படிக்க தங்களுக்கு தகுதர
தமிழ்
எழுத்துரு தேவை. பல்வேறு கணனி இயக்குதளங்களுக்கு தகுதர எழுத்துக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.
இவற்றைப் பின்வரும் வலையகங்களில் ஏதாவதொன்றிலிருந்து தங்களால் தருவிக்கவியலும்.
http://www.tamil.net/tscii/
http://www.geocities.com/Athens/5180/tsctools.html
மேலதிக உதவிக்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி kalyan@geocities.com, kumar@vt.edu
© மதுரைத் திட்டம் 2000
மதுரைத் திட்டம் தமிழ்ச் செவ்விலக்கியங்களை மின்னுரைவடிவில், தளையின்றி ஊடுவலையின் மூலம் பரப்பும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முனைப்பாகும். இத்திட்டம் குறித்த மேலதிக விபரங்களைப் பின்வரும் வலையகத்திற் காணலாம். http://www.tamil.net/projectmadurai
இம்மின்னுரையை, இம்முகப்புப் பக்கத்திற்கு மாற்றமின்றி, தாங்கள் எவ்வழியிலும் பிரதியாக்கமோ, மறுவெளியீடோ செய்யலாம்.
4. முல்லை
நிலம் :காடும் காடு சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஆற்றி இருத்தலும் அதன் நிமித்தமும்.
கருங்கடல் மாந்திய வெண்தலைக் கொண்மூ
இருங்கடல்மா கொன்றான்வேல் மின்னிப் - பெருங்கடல்
தன்போல் முழங்கித் தளவம் குருந்தனைய
என்கொல்யான் ஆற்றும் வகை. (93)
பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேர
இகல்கருதித் திங்கள் இருளைப் - பகல்வர
வெண்ணிலாக் காலும் மருள்மாலை வேய்த்தோளாய்
உள் நிலாது என்ஆவி யூர்ந்து. (94)
மேல்நோக்கி வெங்கதிரோன் மத்தியநீர் கீழ் நோக்கிக்
கால்நோக்கம் கொண்டழகாக் காண்மடவாய் - மானோக்கி
போதாரி வண்டெலாம் நெட்டெழுத்தின் மேல்புரிய
சாதாரி நின்றறையுஞ் சார்ந்து. (95)
இருள்பரந்(து) ஆழியான் தன்னிறம்போல் தம்முன்
அருள்பரந்த ஆய்நிறம் போன்றும் - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும் பையர அல்குலாய்
வேல்போலும் வீழ் துணைஇ லார்க்கு. (96)
பாழிபோல் மாயவன்தன் பற்றார் களிற்றெறிந்த
வாழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழி
மான்மாலை தம்முன் நிறம்போல் மதிமுளைப்ப
யான்மாலை ஆற்றேன் நினைந்து. (97)
வீயும் வியப்புறவின் வீழ்துளியால் மாக்கடுக்கை
நீயும் பிறரொடும்காண் நீடாதே - ஆயும்
கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
குழலாகிக் கோல்சுரியாய்க் கூர்ந்து. (98)
பொன்வாளால் காடில் கருவரை போர்த்தாலும்
என்வாளா என்றி இலங்கெயிற்றாய் - என் வாள்போல்
வாள்இழந்த கண்தோள் வனம்பிழந்த மெல்விரலும்
நாள்இழந்த எண்மிக்கு நைந்து. (99)
பண்(டு)இயையச் சொல்லிய சொற்பழுதால் மாக்கடல்
கண்(டு)இயைய மாந்திக்கால் வீழ்த்(து) இருண்(டு) - எண்திசையும்
கார்தோன்றக் காதலர் தேர்தோன்றா தாகவே
பீர்தோன்றி நீர்தோன்றும் கண். (100)
வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான்
வண்டினம் வாய்வீழா மாலையும் - வண்டினம்
ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத
வாராத நாளே வரும். (101)
மான்எங்கும் தம்பிணையோ(டு) ஆட மறிஉகள
வான்எங்கும் வாய்த்து வளம்கொடுப்பக் - கான்எங்கும்
தேனிறுத்த வண்டோடு தீதா எனத்தேராது
யானிறுத்தேன் ஆவி இதற்கு. (102)
ஒருவந்தம் அன்றால் உறைமுதிரா நீரால்
கருமம்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான்
பட்டின்றே என்றி பணைத் தோளாய்! கண்ணீரால்
அட்டினேன் ஆவி அதற்கு. (103)
ஐந்துருவின் வில்லெழுத நாற்றிசைக்கும் முந்நீரை
இந்துருவின் மாந்தி இருங்கொண்மூ - முந்துருவின்
ஒன்றாய் உருமுடைத்தாய் பெய்வான்போல் பூக்கென்று
கொன்றாய்கொன் றாய்என் குழைத்து. (104)
எல்லை தருவான் கதிர் பருகி யீன்றகார்
கொல்லைதரு வான்கொடிகள் ஏறுவகாண் - முல்லை
பெருந்தண் தளவொடுதம் கேளிரைப்போல் காணாய்
குருந்(து)அங்(கு) ஒடுங்கழுத்தம் கொண்டு. (105)
என்னரே ஏற்ற துணைப்பிரிந்தார் ஆற்றென்பார்
அன்னரே யாவர் அவரவர்க்கு - முன்னரே
வந்(து)ஆரம் தேங்கா வருமுல்லை, சேர்தீந்தேன்
கந்தாரம் பாடுங் களித்து. (106)
கருவுற்ற காயாக் கணமயிலென்று றஞ்சி
உருமுஉற்ற பூங்கோடல் ஓடி - உருமுற்ற
ஐந்தலை நாகம் புரையும் மணிக்கார்தான்
எந்தலையே வந்த(து) இனி. (107)
கண்ணுள வாயின் முலையல்லை காணலாம்
எண்ணுள வாயின் இறவாவால் - எண்ணுளவா
அன்றொழிய நோய்மொழிச்சார் வாகா(து) உருமுடை வான்
ஒன்றொழிய நோய்செய்த வாறு. (108)
என்போல் இகுளை! இருங்கடல் மாந்தியகார்
பொன்போல்தார் கொன்றை புரிந்தன - பொன்போல்
துணைபிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார்,
இணைபிரிந்து வாழ்வர் இனி. (109)
பெரியார் பெருமை பெரிதே இடர்க்காண்
அரியார் எளியரென்(று) ஆற்றாப் - பரிவாய்த்
தலையழுங்க தண்தளவம் தாம்நகக்கண்(டு) ஆற்றா
மலையழுத சால மருண்டு. (110)
கானம் கடியரங்காக் கைம்மறிப்பக் கோடலார்
வானம் விளிப்பவண்(டு) யாழாக - வேனல்
வளரா மயிலாட வாட்கண்ணாய்! சொல்லாய்
உளராகி உய்யும் வகை. (111)
தேரோன் மலைமறையத் தீங்குழல் வெய்தாக
வாரான் விடுவானோ வாட்கண்ணாய்! - காராய்
குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும்
விருந்தோடு நிற்றல் விதி. (112)
பறியோலை மேலொடு கீழா இடையர்
பிறியோலை பேர்த்து விளியாக் - கதிப்ப
நரியுளையும் யாமத்தும் தோன்றாரால் அன்னாய்!
விரியுளைமான் தேர்மேல்கொண் டார். (113)
பாத்துப் படுகடல் மாந்திய பல்கொண்மூக்
காத்துக் கனைதுளி சிந்தாமைப் - பூத்துக்
குருந்தே! -பருவங் குறித்துவளை நைந்து
வருந்தேயென் றாய்நீ வரைந்து. (114)
படுந்தடங்கண் பல்பணைபோல் வான்முழங்க மேலும்
கொடுந்தடங்கண் கூற்றுமின் ஆக - நெடுந்தடங்கண்
நீர்நின்ற நோக்கின் நெடும்பணை மென்தோளாட்(கு)த்
தேர் நின்ற(து) என்னாய் திரிந்து. (115)
குருந்தே! கொடிமுல்லாய்! கொன்றாய்! தளவே!
முருந்தேய் எயிறொடுதார் பூப்பித்து - இருந்தே,
அரும்(பு)ஈர் முலையாள் அணிகுழல்தாழ் வேய்த்தோள்
பெரும்பீர் பசப்பித்தீர் பேர்ந்து. (116)
கதநாகம் புற்றிடையக் காரேறு சீற
மதநாகம் மாறு முழங்கப் - புதல்நாகம்
பொன்பயந்த வெள்ளி புறமாகப் பூங்கோதாய்!
என்பசந்த மென்தோள் இனி. (117)
கார்தோன்றிப் பூவுற்ற காந்தள் முகைவிளக்குப்
பீர்தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல் - நீர் தோன்றித்
தன்பருவம் செய்தது கானம் தடங்கண்ணாய்!
என்பருவம் அன்(று)என்றி இன்று. (118)
உகவும்கள் அன்றென்பார் ஊரார் அதனைத்
தகவு தகவனென்(று) ஓரேன் - தகவேகொல்
வண்துடுப்பாயப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய்
வெண்குடையாம் தண்கோடல் வீந்து. (119)
பீடிலார் என்பார்கள் காணார்கொல் வெங்கதிரால்
கோடெலாம் பொன்னாய்க் கொழுங்கடுக்கைக் கோடெலாம்,
அத்தம் கதிரோன் மறைவதன்முன் வண்டொடுதேன்
துத்தம் அறையும் தொடர்ந்து. (120)
ஒருத்தியான் ஒன்றல பல்பகை என்னை
விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருத்தில்
மடல்அன்றில் மாலை படுவசி ஆம்பல்
கடலன்றிக் காரூர் கறுத்து. (121)
கானம் தலைசெயக் காப்பார் குழல்தோன்ற,
ஏனம் இடந்த மணிஎதிரே - வானம்
நகுவதுபோல் மின்ஆட நாண்இல்என் ஆவி
புகுவது போலும் உடைந்து. (122)
இம்மையால் செய்ததை இம்மையே ஆம்போலும்
உம்மையே ஆமென்பார் ஓரார்காண் - நம்மை
எளியர் எனநலிந்த ஈர்ங்குழலார் ஏடி
தெளியச் சுடப்பட்ட வாறு. (123)
------
5. மருதம்
நிலம் : வயலும் வயல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஊடலும் ஊடல் நிமிர்த்தமும்.
செவ்வழியாழ்ப் பாண்மகனே! சீரார்தேர் கையினால்
இவ்வகை ஈர்த்துய்ப்பான் தோன்றாமுன் - இவ்வழியே
ஆடினான் ஆய்வய லூரன்மற்(று) எங்கையர்தோள்
கூடினான் பின் பெரிது கூர்ந்து. (124)
மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! மண்யானைப் பாகனார்
தூக்கோல் துடியோடு தோன்றாமுன் - தூக்கோல்
தொடியுடையார் சேரிக்குத் தோன்றுமோ சொல்லாய்
கடியுடையேன் வாயில் கடந்து. (125)
விளரியாழ்ப் பாண்மகனே! வேண்டா அழையேல்
முளரி மொழியா(து) உளரிக் - கிளரிநீ
பூங்கண் வயலூரன் புத்தில் புகுவதன்முன்
ஆங்கண் அறிய உரை. (126)
மென்கண் கலிவய லூரன்தன் மெய்ம்மையை
எங்கட்(கு) உரையாது எழுந்துபோய் - இங்கண்
குலம்காரம் என்(று(அணுகான் கூடும்கூர்த்(து) அன்றே
அலங்கார நல்லார்க்(கு) அறை. (127)
செந்தா மரைப்பூ உற நிமிர்ந்த செந்நெல்லின்
பைந்தார்ப் புனல்வாய்ப்பாய்ந்(து) ஆடுவாள் - அந்தார்
வயந்தகம்போல் தோன்றும் வயலூரன் கேண்மை
நயந்தகன்(று) ஆற்றாமை நன்று. (128)
வாடாத தாமரைமேல் செந்நெற் கதிர்வணக்கம்
ஆடா அரங்கினுள் ஆடுவாள் - ஈடாய
புல்லகம் ஏய்க்கும் புகழ்வயல் ஊரன்தன்
நல்லகம் சேராமை நன்று. (129)
இசையுரைக்கும் என்செய் திரம்நின் றவரை
வசையுரைப்பச் சால வழத்தீர் - பசைபொறை
மெய்ம்மருட்(டு) ஒல்லா மிகுபுனல் ஊரன்தன்
பொய்ம்மருட்டுப் பெற்ற பொழுது. (130)
மடங்(கு)இறவு போலும்யாழ்ப் பண்பிலாப் பாண!
தொடங்குறவு சொல்துணிக்க வேண்டா - முடங்கிறவு
பூட்டுற்ற வில்ஏய்க்கும் பூம்பொய்கை யூரன்பொய்
கேட்டுற்ற கீழ்நாள் கிளர்ந்து. (131)
எங்கை யரில்உள்ளா னேபாண! நீபிறர்
மங்கை யரில் என்று மயங்கினாய் - மங்கையரில்
என்னா(து) இறவா(து) இவணின் இகந்தேகல்
பின்னாரில் அந்தி முடிவு. (132)
பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு. (133)
கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ
பழமை பயன்நோக்கிக் கொல்லோ- கிழமை
குடிநாய்கர் தாம்பல பெற்றாரில் கேளா
அடியேன் பெற்றா அருள். (134)
என்கேட்டி ஏழாய்! இருநிலத்தும் வானத்தும்
முன்கேட்டும் கண்டும் முடிவறியேன் - பின்கேட்டு
அணியிகவா நிற்க அவன்அணங்கு மாதர்
பணியிகவான் சாலப் பணிந்து. (35)
எங்கை இயல்பின் எழுவல் யாழ்ப் பண்மகனே!
தங்கையும் வாழும் அறியாமல் - இங்கண்
உளர உளர உவன்ஓடிச் சால
வளர வளர்ந்த வகை. (136)
கருங்கோட்டுச் செங்கண் எருமை கழனி
இருங்கோட்டு மென்கரும்பு சாடி - அருங்கோட்டால்
ஆம்பல் மயக்கி அணிவளை ஆர்ந்(து) அழகாத்
தாம்பல் அசையினவாய் தாழ்ந்து. (137)
கன்றுள்ளிச் சோர்ந்தபால் காலொற்றித் தாமரைப்பூ
வன்றுள்ளி அன்னத்தை ஆர்த்துவான் - சென்றுள்ளி
வந்(து)ஐ,ஆ என்னும் வகையிற்றே மற்றிவன்
தந்தையார் தம்மூர்த் தகை. (138)
மருதோடு காஞ்சி அமர்ந்துயர்ந்த நீழல்
எருதோடு உழல்கின்றார் ஓதை - குருகோடு
தாராத்தோ(று) ஆய்ந்தெடுப்பும் தண்ணம் கழனித்தே
ஊராத்தே ரான்தந்தை ஊர். (139)
மண்ணார் குலைவாழை உள்தொடுத்த தேன்நமதென்(று)
உண்ணாப்பூந் தாமரைப் பூவுள்ளும் - கண்ணார்
வயலூரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்
மயல் ஊ ரரவர் மகள். (140)
அணிக்குரல்மேல் நல்லாரோ(டு) ஆடினேன் என்ன
மணிக்குரல்மேல் மாதராள் ஊடி - மணிச்சிரல்
பாட்டை இருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே
யாட்டை இருந்துறையும் ஊர். (141)
தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை
புண்கயத் துள்ளும் வயலூர ! - வண்கயம்
போலும்நின் மார்பு புளிவேட்கைத்(து) ஒன்(று)இவள்
மாலும்மா றாநோய் மருந்து. (142)
நல்வயல் ஊரன் நறுஞ்சாந்(து) அணிஅகலம்
புல்லிப் புடைபெயரா மாத்திரைக்கண் - புல்லியார்
கூட்டு முதலுறையும் கோழி துயிலெடுப்ப
பாட்டு முரலுமாம் பண். (143)
அரத்தம் உடீஇ, அணிபழுப்பப் பூசிச்
சிரத்தையால் செங்கழுநீர் சூடிப் - பரத்தை
நினைநோக்கிக் கூறினும் நீமொழியல் என்று
மனைநோக்கி மாண விடும். (144)
பாட்டார வம்பண் அரவம் பணியாத
கோட்டரவம் இன்னிவை தாங்குழுமக் - கோட்டரவம்
மந்திரம் கொண்டோங்கல் என்ன மகச்சுமந்து
இந்திரன்போல் வந்தான் இடத்து. (145)
மண்கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியராய்
எண்கிடந்த நாளான் இகழ்ந்தொழுகப் - பெண்கிடந்த
தன்மை யழியத் தரள மூலையினாள்
மென்மைசெய் திட்டாள் மிக. (146)
செங்கண் கருங்கோட்(டு) எருமை சிறுகனையால்
அங்கண் கழனிப் பழனம்பாய்ந்(து) - அங்கண்
குவளையம் பூவொடு செங்கயல்மீன் சூடி
தவளையும்மேற் கொண்டு வரும். (147)
இருள்நடந்த(து) அன்ன இருங் கோட்(டு) எருமை
மருள்நடந்த மாப்பழனம் மாந்திப் - பொருள்நடந்த
கற்பேரும் கோட்டால் கனைத்துதன் கன்றுள்ளி
நெற்போர்வு சூடி வரும். (148)
புண்கிடந்த புள்மனுநுன் நீத்தொழுகி வாழினும்
பெண்கிடந்த தன்மை பிறி(து)அரோ - பண்கிடந்து
செய்யாத மாத்திரையே செங்கயல்போல் கண்ணினாள்
நையாது தான்நாணும் ஆறு. (149)
கண்ணுங்கால் என்கொல் கலவையாழ்ப் பாண்மகனே!
எண்ணுங்கால் மற்(று(இன்(று) இவளடுநேர் - எண்ணின்
கடல் வட்டத்(து) இல்லையால் கல் பெயர் சேராள்
அடல் வட்டத்(து) ஆர்உளரேல் ஆம். (150)
சேறாடுங் கிண்கிணிக்கால் செம்பொன்செய் பட்டத்து
நீறாடும் ஆயதிவன் இல்முனா - வேறாய
மங்கையரின் ஆடுமோ மாக்கோல்யாழ்ப் பாண்மகனே!
எங்கையரின் ஆடலாம் இன்று. (151)
முலையாலும் பூணாலும் முன்கண்தாம் சேர்ந்த
இலையாலும் இட்ட குறியை - உலையாது
நீர்சிதைக்கும் வாய்ப்புதல்வன் நிற்கும் உனைமுலைப்பால்
தார்சிதைக்கும் வேண்டா தழூம். (152)
துனிபுலவி ஊடலின் நோக்கு(எ)ன் தொடர்ந்த
கனிகலவி காதலினும் காணேன் -முனிஅகலின்
நாணா நடுங்கும் நளிவய லூரனைக்
காணாஎப் போதுமே கண். (153)
சிறப்புப் பாயிரம்
முனிந்தார் முனி(வு) ஒழியச் செய்யுட்கண் முத்துக்
கனிந்தார் களவியல் கொள்கைக் - கணிந்தார்
இணைமாலை யீடிலா இன்தமிழால் யாத்த
திணைமாலை கைவரத் தேர்ந்து.
திணைமாலை நூற்றைம்பது முற்றிற்று
----------