Kalevala - A Finland Epic (in tamil script, unicode format)

கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்



தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத்
தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்)
Compiled by: Elias Lonnrot
Translated into Tamil by R.Sivalingam
Edited with an introduction by Asko Parpola


குறிப்புகள்
பாடல்களின் பொருளடக்கம்
கதாநாயகர்களின் பெயர்கள்
Introduction: Dr. Asko Parpola
அறிமுகம் (தமிழாக்கம்) டாக்டர் அஸ்கோ பார்பொலா
என்னுரை: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
கலேவலா - சொற்றொகுதி
கலேவலா - விளக்கக் குறிப்புகள்
கலேவலா - ஆதார நூல்கள்

Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu

ன Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.

பாடல் 36 - குல்லர்வோவின் மரணம்  *



அடிகள் 1-154 : குல்லர்வோ போருக்கு ஆயத்தமாகித் தன்
குடும்பத்தாரிடம் விடை பெறுகிறான். அவனுடைய தாய் மட்டும்
அவனைப் பற்றியும் அவன் எங்கே போகிறான் என்பதைப்
பற்றியும் அவன் இருப்பானா இறப்பானா என்பதைப் பற்றியும்
எண்ணி வருந்துகிறாள்.

அடிகள் 155-250 : குல்லர்வோ உந்தமோவின் தோட்டத்துக்கு
வந்து எல்லோரையும் வீழ்த்தி எல்லா வசிப்பிடங்களுக்கும் தீ
வைத்து அழிக்கிறான்.

அடிகள் 251-296 : அவன் வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது
வீட்டில் யாருமே இல்லாமல் வெறுமையாக இருக்கிறது.
ஆனால் அங்கே ஒரு கிழட்டுக் கறுப்பு நாய் மட்டும் நிற்கிறது.
வேட்டையாடி வாழ்வதற்காக அந்த நாயுடன் காட்டுக்குள்
போகிறான்.

அடிகள் 297-360 : காட்டுக்குச் செல்லும் வழியில், முன்னொரு
நாள் தனது சகோதரியைச் சந்தித்து அவளுடன் தகாத
முறையில் நடந்து கொண்ட இடத்துக்கு வருகிறான். அங்கே
மனச்சாட்சியின் உறுத்தலினால் தனது வாளினாலேயே தனது
உயிரை மாய்க்கிறான்.



குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை
அங்ஙனம் போர்க்கு ஆயத்த மாயினன்
சமர்ப் பாதைக்குத் தயாராய் நின்றனன்;
வருமொரு கணத்தே வாளைத் தீட்டினன்
அடுத்ததில் ஈட்டியை ஆக்கினன் கூர்மை.

இவ்விதச் சொற்களில் இயம்பினள் அன்னை:
"வேண்டாம் பாக்கிய மேயிலா என்மகன்
பெரும்போ ரொன்றைப் பெற்றிட வேண்டாம்
வாட்களை மோத வழிச்செல வேண்டாம்! 10
காரண மின்றியே கடும்போர்க் கேகுவோன்
சண்டையைத் தொடங்கித் தானாய் வைப்பவன்
அவனும் போரில் அழிக்கப் படுவான்
கொடும்போ ரில்லவன் கொல்லப் படுவான்
வெவ்வாள் களாலவன் வீழ்த்தப் படுவான்
அதிர்வாள் அலகினால் அழகிக்கப் படுவான்.

ஆடொன்று மீதுநீ அமருக் கெழுகிறாய்
ஆட்டுக் கடாவிலே அமர்பொரச் செல்கிறாய்
வெள்ளாடு விரைவில் வென்றிட வும்படும்
கடாவும் அழுக்கில் கடிதுவீழ்த் தப்படும் 20
நாயொன்றில் ஏறிநீ நண்ணுவாய் வீட்டை
தவளையின் மீதுதான் முன்றிலை யடைவாய்."

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அப்படி யாயில்நான் அமிழேன் சேற்றில்
அல்லது வீழேன் அகல்பசும் புற்றரை
அல்லது அண்டங் காகத் தகத்தில்
அல்லது காகம் அண்மிவா ழிடங்களில்
போர்க்களத் தில்நான் போய்அமிழ் வேளையில்
போர்க்கள மீதில் போய்வீழ் வேளையில். 30
மாள்வது போரின் வழிமிகச் சிறந்தது
வாள்களின் மோதலில் வீழ்வதும் நல்லதே!
அமரெனும் நோயோ அதுமிக இனியது
திடீரென அதிலே செல்வான் பையன்
வருந்ததுத லின்றி விரைந்தவன் செல்வான்
நலிவு றாமலே நடுநிலம் வீழ்வான்."

இவ்விதச் சொற்களில் இயம்பினள் அன்னை:
"போருக்கு நீபோய்ப் பொன்றுவ தானால்
உன்தந் தைக்கு உறமிஞ் சுவதெது
வயதாம் அவரது வறியநாட் களிலே?" 40

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"தொழுவத் தெருவின் குவைச்சா கட்டும்
தோட்டத்து வீழ்ந்து தொடுசா வவுறட்டும்."

"உன்அன் னைக்கு மிஞ்சுவ தெதுவோ
வயதாம் அவளது வறியநாட் களிலே?"

"மாளட் டும்கை வைக்கோற் கட்டுடன்
மாட்டுக் கொட்டிலில் மூச்சடைக் கட்டும்."

"உன்சகோ தரற்கு மிஞ்சுவ தெதுவோ
இனிவரப் போகும் நனிநாட் கழிக்க?" 50

"அவனைக் காட்டை அடைந்திட விடலாம்
காண்தோட் டவெளிக் கைவிடப் படலாம்."

"உன்சகோ தரிக்கு மிஞ்சுவ தெதுவோ
இனிவரப் போகும் நனிநாட் கழிக்க?"

"கிணற்று வழியவள் கிடந்துசா கட்டும்
தோய்க்கும் துறையவள் ஆழ்ந்து போகட்டும்."

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
வீட்டை விட்டே விரைந்தே எழுந்தான்
உரைத்தான் தந்தைக் கொருசொல் இவ்விதம்:
"விடைபெற் றேன்என் னுடையன் பெந்தையே! 60
நிகழுமா எனக்காய் நீங்கள் அழுவது
அங்கிறந் தேனென அறியவும் நேர்ந்தால்
எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால்
அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"

இந்தச் சொற்களில் இயம்பினார் தந்தை:
"அறிந்துனக் காய்நான் அழப்போவ தில்லை
அங்கிறந் தாயென அறியவும் நேர்ந்தால்
பெற்றுக் கொளலாம் பிறிதொரு மகனை
இன்னமும் மிகமிக இயைசிறப் பினனை
பாரில் பெருந்திறன் படைத்ததோர் மகனை." 70

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஆம்உமக் காய்நான் அழப்போவ தில்லை
இறந்துநீர் போனீர் என்பதை அறிந்தால்;
இதுபோல் தந்தையை இவ்விதம் பெறுவேன்:
களிமண் வாயும் கல்லிலே தலையும்
சேற்று நிலத்துச் **சிறுபழக் கண்களும்
வாடிக் காய்ந்த வறுபுல் தாடியும்
**அலரிக் கவர்த்தடி யாகிய கால்களும்
மக்கி மடிந்த மரத்திலே தசையும்!" 80

சோதரற் பார்த்துச் சொன்னான் அவன்பின்:
"விடைபெற் றேனென் னுடைச்சோ தரனே!
நிகழுமா எனக்காய் நீயும் அழுவது
அங்கிறந் தேனென அறியவும் நேர்ந்தால்
எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால்
அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"

சகோதரன் இந்தச் சொற்களில் சாற்றினன்:
"அறிந்துனக் காய்நான் அழப்போவ தில்லை
அங்கிறந் தாயென அறியவும் நேர்ந்தால்
பெற்றுக் கொள்ளலாம் பிறிதொரு சோதரன் 90
இன்னமும் மிகமிக இனியசோ தரனை
இரண்டு மடங்கு எழிலார் ஒருவனை."

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஆம்உனக் காய்நான் அழப்போவ தில்லை
இறந்துநீ போனாய் என்பதை அறிந்தால்;
இதுபோல் சோதரன் இவ்விதம் பெறுவேன்:
கல்லிலே தலையும் களிமண் வாயும்
சேற்று நிலத்துச் **சிறுபழக் கண்களும்
வாடிக் காய்ந்த வறுபுற் கேசமும் 100
**அலரிக் கவர்த்தடி யாகிய கால்களும்
மக்கி மடிந்த மரத்திலே தசையும்!"

சொன்னான் பின்னர் சோதரிக் கவனே
"விடைபெற் றேனென் னுடைச்சோ தரியே!
நிகழுமா எனக்காய் நீயும் அழுவது
அங்கிறந் தேனென அறியவும் நேர்ந்தால்
எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால்
அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"

இவ்வாறு சோதரி இயம்பினள் சொற்களில்:
"ஆம்உனக் காய்நான் அழப்போவ தில்லை 110
ஆங்கிறந் தாயென் றறியவும் நேர்ந்தால்
பெற்றுக் கொள்ளலாம் பிறிதொரு சோதரன்
இன்னமும் மிகமிக இனிய சோதரனை
இன்னமும் விவேகம் இயைந்த ஒருவனை."

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஆம்உனக் காய்நான் அழப்போவ தில்லை
இறந்துநீ போனாய் என்பதை யறிந்தால்;
இதுபோற் சோதரி இவ்விதம் பெறுவேன்:
கல்லிலே தலையும் களிமண் வாயும் 120
சேற்று நிலத்துச் **சிறுபழக் கண்களும்
வாடிக் காய்ந்த வறுபுற் கூந்தலும்
குளத்து **அல்லிக் கொழுமலர்ச் செவிகளும்
உடலொன்று பின்னர் **'மாப்பிள்' மரத்திலும்!"

அதன்பின் உரைத்தனன் அன்னைக் கிவ்விதம்:
"அன்னையே, என்றன் அன்புமிக் குடையளே!
என்னைச் சுமந்தஎன் எழிலார் அணங்கே!
கருவில் தாங்கிய கனகம் அனையளே!
நீங்கள் அழுவது நிகழுமா எனக்காய்
அங்கிறந் தேனென் றறியவும் நேர்ந்தால் 130
எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால்
அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"

இவ்விதச் சொற்களில் இயம்பினள் அன்னை
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"அன்னையின் மனத்தை அறியமாட் டாய்நீ
அன்னையின் இதயம் அதையுண ராய்நீ
ஆமப்பா, உனக்காய் அழுவேன் நானும்
அங்கிறந் தாயென அறிந்தஅவ் வேளை
என்மனு மத்தியில் இருந்துநீ பிரிந்தால்
அருமினம் பிரிந்து ஆழ்ந்஡ய் என்றால்: 140
வெள்ளம் வரும்வரை வீட்டில் அழுவேன்
அகத்தின் தரையில் அலையெழ அழுவேன்
வழிகள் எங்ஙணும் வளைந்த உடலுடன்
தொழுவம் அனைத்திலும் தொடுகூன் முதுகுடன்;
பனியைக் கட்டியாய்ப் படைக்க அழுவேன்
பனிக்கட்டி மாறி படிவெறி தாகும்
பின்னர் வெறுந்தரை வியன்பசும் நிலமாம்
பசுமை நிலம்பின் வெளுறியே போகும்.

எனக்கழ முடியா நிலையுள எதுவெனில்
வருந்த முடியா வகைநிலை எதுவெனில் 150
மக்கள் மத்தியில் மிக்கழு வதுவாம்
அழுவேன் ரகசிய மாய்ச்சவு னாவில்
அமரும் வாங்கில்நீர் அதுவழிந் தோட
சவுனாப் பலகையில் தவழ்அலை எறிந்தெழ."

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை
இசைப்பா டலுடன் ஏகினான் போர்க்கு
களிப்புடன் அவனும் கடும்போர்க் கேகினன்;
இசைத்தனன் சேற்றில் இசைத்தனன் தரையில்
பசும்புற் றரைகளில் பண்ணெதி ரொலித்தனன் 160
பெரும்புல் வெளிகளில் பெருமுழக் கிட்டனன்
வைக்கோல் நிலத்தினில் வந்தொலி யெழுப்பினன்.

ஒருபுதி னம்தொடர்ந் தோடியே வந்தது
செய்தி வந்தவன் செவியில் விழுந்தது;
"உந்தை இறந்தனர் உன்றன தில்லம்
வளர்புகழ் பெற்றவர் மரணித்து வீழ்ந்தனர்
ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க
இறந்தவ ருடைய ஈமக் கிரியையை!"

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
கூறினன் அவன்தான் கூறினன் பதிலுரை: 170
"இறந்தா ரவரெனின் இறந்துபோ கட்டும்!
எம்மகத் துள்ளது எழிலார் பொலிப்பரி
அவரைப் பூமிக் கதனில் கொண்டுபோய்
கல்லறை யொன்றில் கட்டிவைக் கட்டும்!"

செல்லும் போதினில் சேற்றி லிசைத்தனன்
வெட்டிச் சுட்ட வெளியினி லொலித்தனன்
ஒருபுதி னம்தொடர்ந் தோடியே வந்தது
செய்தி வந்தது செவியில் விழுந்தது;
"இல்லத்(தில்) உன்றன் சோதர னிறந்தனன்
நினைஈன் றோர்பி(ள்)ளை நெடுந்துயி லாழ்ந்தனன் 180
ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க
இறந்தவ னுடைய ஈமக் கிரியையை !"

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
கூறினன் அவன்தான் கூறினன் பதிலுரை:
"இறந்தான் அவனெனில் இறந்து போகட்டும்!
அங்குள வீட்டினில் அழகிய பொலிப்பரி
அவனைப் புமிக் கதனில் கொண்டுபொய்
கல்லறை யொன்றில் கட்டிவைக் கட்டும்!"

சேற்றினில் நடக்கையில் சென்றனன் இசைத்து
தாருவின் இடைகுழ லூதிச் சென்றனன் 190
ஒருபுதி னம்தொடர்ந் தோடடியே வந்தது
செய்தி வந்தவன் செவியில் விழுந்தது:
"இல்லத்(தில்) உன்றன் சோதரி யிறந்தனள்
நினைஈன் றோர்பி(ள்)ளை நெடுந்துயி லாழ்ந்தனள்
ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க
இறந்தவ ளுடைய ஈமக் கிரியையை!"

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
கூறினன் அவன்தான் கூறினன் பதிலுரை:
"இறந்தா ளவளெனில் இறந்துபோ கட்டும்!
எம்மிடம் வீட்டிலே இருப்பது பெண்பரி 200
அவளைப் பூமிக்கு அதனில் கொண்டுபோய்
கல்லறை யொன்றில் கட்டிவைக் கட்டும்!"

எழிற்புற் றரைமேல் இசைத்துச் சென்றனன்
வைக்கோல் நிலத்தில் மகிழ்ந்தொலித் தேகினன்
ஒருபுதி னம்தொடர்ந் தோடியே வந்தது
செய்தி வந்தவன் செவியில் விழுந்தது:
"உந்தனன் பான உயர்தா யிறந்தனள்
இனியஉன் தாய் இறந்தே வீழ்ந்தனள்
ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க
அவளை ஊர்மக்கள் அடக்கம் செய்வதை!" 210

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,நான் அதிர்ஷ்டம் ஒன்றிலாப் பையனே
இறந்தே போனதால் என்னுடை அன்னையும்
திரைத்துணி செய்தவள் களைத்து ஓய்ந்தனள்
வீழ்ந்தனள்மே லாடை விசித்திரம் வரைந்தவள்
நூல்கநளை நீளமாய் நூற்றே வைப்பவள்
நூற்புக் கழியை நொடியிழுத் தசைப்பவள்;
இறுதிநே ரத்தில் இல்லைநான் அருகில்
ஆவி பிரிகையில் அவளயல் நானிலை 220
மரணும் வந்ததா வன்குளிர் வந்ததால்
அல்லதூண் ரொட்டி அதுஇலா தானதால்!

மனைக்கழு வட்டும் மாண்டவள் உடலினை
தண்ணீர் ஜேர்மனிச் சவர்க்க(஡)ரம் கூட்டி
பின்பட் டுத்துணி **நன்குசுற் றட்டும்
சணல்நூல் வண்ணத்துத் துணியில்வைக் கட்டும்
செல்லட்டும் எடுத்தாங்கே சேர்பூமி அவளைப்பின்
அவளைக் கல்லறை அடக்கி மூடட்டும்
புலம்பலின் ஒலியொடு புவியுள்ஏ கட்டும்
இறங்கட்டும் கல்லறை இனியபாட் டிசையொடு 230
இல்லத்துக் கினும்நான் ஏகிடு நிலையிலை
திருப்பிக் கொடுபட்ட திலையுந் தோக்கினும்
வீழ்த்தவும் படவிலை வெந்தீ மானுடன்
அழிக்கவும் படவிலை அதிகெடு மானுடன்."

இசைத்த படியே ஏகினன் சமர்க்கு
உந்தோநாட் டுக்கு உவகையோ டேகினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,முது மனிதனே, உயர்மா தெய்வமே!
எனக்கொரு வாள்இங் கினிது தருவையேல்
அதிலும் சிறப்பாம் அலகுள ஒன்றினை 240
ஒருமுழக் குழுவுக் குரைக்கும் அதுவகை
ஒருநூறு பேர்க்கு உறுநிகர் நின்றிடும்."

பெற்றனன் ஒருவாள் நச்சிய வாறே
அனைத்திலும் சிறந்த அலகு படைத்ததை
அதனால் ஓரினம் அனைத்தும் வீழ்த்தினன்
உந்தமோ என்பான் உறுகூட் டழித்தனன்;
மனைகளை எரித்து மாற்றினான் சாம்பராய்
அழித்து அனைத்தையும் ஆக்கினன் துகள்துகள்;
கற்களை அடுப்பங் கரையிலே விட்டனன்
முற்றத்து விட்டனன் முதுஉயர் பேரியை. 250

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
இப்போ திரும்பினன் இல்லம் நோக்கி
கால மாகிய கவின்பிதா வசிப்பிடம்
பெற்றவர் வாழ்ந்த பெருந்தோட் டவெளி;
வந்ததும் வெற்று வசிப்பிடம் கண்டனன்
திறந்ததும் கண்டனன் தெரிபாழ் இல்லம்;
அணைத்திட ஒருவரும் அங்கே வந்திலர்
இருகரத் தேற்க எவருமே யங்கிலர்.

அடுப்புக் கரியில் அவன்கை வைத்தனன்
அடுப்பின் கரியோ அதிகுளிர்ந் திருந்தது; 260
அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன்
அன்னையும் உயிரோ டங்கிலை யென்பதை.

கையை நுழைத்துக் கணப்பில் பார்த்தனன்
கற்கள் குளிராய்க் கணப்பில் இருந்தன
அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன்
தந்தை உயிரொடு தானிலை யென்பதை.

விழிகளை வலம்வர விட்டனன் நிலத்தில்
படர்தரை பெருக்கப் படாமல் இருந்தது
அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன்
சகோதரி உயிரொடு தானிலை யென்பதை. 270

பார்தனன் நீர்த்துறைப் பக்கம் சென்று
தோணிகள் எதுவுமே துறையினில் இல்லை
அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன்
சகோதரன் உயிரொடு தானிலை யென்பதை.

அவனங் கப்போ அழவே தொடங்கினன்
ஒருநாள் அழுதனன் இருநாள் அழுதனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஓ,அன் பான உயர்ந்தஎன் அன்னாய்!
எனக்காய் இங்குநீ எதனை விட்டனை
நீடுமிப் பூமியில் நீவாழ் காலம்? 280

ஆயினும் அன்னாய் அதைநீ கேட்டிலை
விம்மிநான் உந்தன் விழிகளில் அழுகையில்
புலம்பிடும் வேளையுன் புருவத்தி லேநான்
கூறியுன் சிரத்தில் குறைமுறைப் படுகையில்."

கல்லறை யிருந்து நல்லதாய் எழுந்தனள்
மண்ணின்கீ ழிருந்து நன்னினை வுறுத்தினள்:
**" 'முஸ்தி' நாயினை விட்டுச் சென்றுளேன்
வேட்டைக் கதனுடன் வெளிச்செல லாமதால்;
கூடஉன் நாயினைக் கொண்டுநீ சென்றிடு
காட்டினுள் அங்குநீ வேட்டைக்(கு) ஏகிடு 290
அடர்ந்த அடவியின் அதனுட் புறம்செல்
வனத்தின் வனிதையர் வாழிடத் துக்கு
நீல்நிறப் பெண்கள் வாழ்முற் றத்தே
தேவ தாருவின் செறிகோட்(டை) எல்லை
ஆகா ரப்பொருட்கள் அங்கே பெறற்கு
வனத்தின் ஆடலை தினம்நா டிப்பெற!"

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
கூடவே தன்நாய் கொண்டே சென்றனன்
தெருவின் வழியே சென்றான் நடந்து
அடர்ந்த அடவியை அடைதற் காகவே 300
சிறுதொலை அங்ஙனம் சென்றிடும் நேரம்
சிறுதொலை பாதையில் அடிவைத் தேகையில்
அந்தத் தீவதன் அகலிடம் வந்தனன்
நிகழ்ச்சி நடந்தஅந் நிலையம் வந்தனன்
பாவையின் கற்பைப் பறித்த இடத்தே
தன்தாய் ஈன்றளைத் தான்கெடுத் தவிடம்.

அழுதுகொண் டிருந்தாங் கெழிலார் புல்நிலம்
புலம்பிக்கொண் டிருந்தது புலர்இன் வனவெளி
வருந்திக்கொண் டிருந்தது வளரிளம் புற்கள்
பொழிந்தன கண்ணீர் புல்வெளி மலர்கள் 310
பாவையின் கற்பைப் பறித்தகா ரணத்தால்

தன்தாய் ஈன்றலைத் தானே கெடுத்ததால்
இளம்புல் எதுவும் இலையே முளைத்ததும்
வளர்ந்ததே யில்லை வளர்புல் வெளிமலர்
எழுந்ததே யில்லை எழியஅத் தலத்தில்
அந்தக் கொடிய அகல்நிலப் பரப்பிலே
பாவையின் கற்பைப் பறித்த இடத்திலே
தன்தாய் ஈன்றளைக் கெடுத்தவத் தரையிலே.

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உருவினன் கடிதில் உயர்கூ ரியவாள் 320
அதனைப் பார்த்தனன் அதனைத் திருப்பினன்
அதனைக் கேட்டனன் அதனை உசாவினன்;
அந்தவாள் விருப்பை அவனே கேட்டனன்
அவ்விதம் அதற்கு அமைந்ததா எண்ணம்
குற்றம் புரிந்த கொடுந்தசை யுண்ண
பாவம் புரிந்த சோரியைப் பருக.

மனிதனின் மனதை வாளும் அறிந்தது
நாயகன் நினைவை நல்வாள் உணர்ந்தது
இந்தச் சொற்களில் இயம்பிற் றதுவிடை:
"நச்சிய அதனை நான்ஏன் உண்ணேண் 330
குற்றம் புரிந்த கொடுந்தசை ஏனுணேன்
பாவக் குருதியை பருகேன் ஏன்நான்?
தனிக்குற் றமிலாத் தசையையும் உண்பேன்
கொள்பாவ மிலாக் குருதியும் குடிப்பேன்."

குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை
வாளின் பிடியை வயலுள் தள்ளினன்
பசும்புற் றரையில் பாய்ச்சினன் கைப்பிடி
மார்புக் கெதிராய் வாட்கூர் திருப்பினன்
தன்னைக் கூர்மேல் தானே செலுத்தினன் 340
அவ்விதம் இறப்பினை அடைந்தனன் அவனே
தன்மர ணத்தினைத் தழுவிக் கொண்டனன்.

இளைஞன் ஒருவனின் இறப்புமற் றிதுவே
நாயகன் குல்லர்வோ நாடிய மரணம்
நாயகன் ஒருவனின் நவில்கடை முடிவு
உயர்பாக் கியமில் ஒருவனின் மரணம்.

முதிய வைனா மொயினனப் போது
இறந்தான் அவனென அறிந்தஅவ் வேளை
இறந்தான் குல்லர்வோ என்பதைக் கேட்டதும்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 350
"வருங்கா லம்வாழ் மக்களே வேண்டாம்
கோணலாய்ப் பிள்ளையை பேணலும் வேண்டாம்
மூடத் தனமாய்த் தாலாட்(ட) யாரும்
எவரும் அந்நியர் இயைதுயி லாக்க!
கோணலாய் வளர்த்த குமாரன் எப்போதும்
மூடத் தனமாய்த் தாலாட் டும்சிறான்
விடயம் பொதுவாய் விளங்கவே மாட்டான்
மனிதனின் மனதை மற்றவன் பெற்றிடான்
வயோதிபம் வரையும் வாழ்ந்தா லுமவன்
உரமுறும் உடலை உடைய னாயிடினும்." 360



பாடல் 37 - பொன்னிலும் வெள்ளியிலும் மணமகள்  *



அடிகள் 1-162 : இல்மரினன் தனது இறந்த மனைவிக்காக வெகுகாலம்
அழுகிறான். பின்னர் மிகவும் பிரயாசைப்பட்டுப் பொன்னிலும் வெள்ளியிலும்
- ஆனால் உயிர் மூச்சு இல்லாத - ஒரு மணமகளை உருவாக்குகிறான்.

அடிகள் 163-196 : இரவிலே தனது பொன் மணமகளின் அருகில் உறங்குகிறான்.
அந்தப் பொன்னுருவின் எந்தப் பக்கமாய் அவன் உறங்குகிறானோ அந்தப்
பக்கம் குளிராய் இருப்பதைக் காலையில் உணருகிறான்.

அடிகள் 197-250 : இல்மரினன் அந்தப் பொன் மணமகளை வைனாமொயினனுக்குக்
கொடுக்கிறான். வைனாமொயினன் அதனை ஏற்க மறுத்து, அதிலிருந்து வேறு
பயனுள்ள பொருட்களைச் செய்யும்படி அல்லது பொன்னை விரும்பக்கூடிய மக்கள்
வாழும் வேறு நாடுகளுக்கு அனுப்பும்படி கூறுகிறான்.



அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
அழுதான் மனைவிக் காய்முழு மாலையும்
அழுதான் இரவிலும் அவன்துயி லின்றியே
அழுதான் பகலிலும் அவனுண் ணாமல்
புலம்பினன் எழுந்து புலர்வை கறையில்
எறிந்தனன் பெருமூச் செல்லாக் காலையும்
இளமைப் பெண்ணவள் இறந்தே போனதால்
கல்லறை அழகியைக் கட்டி விட்டதால்.

அவனது கையில் அசைந்ததே யில்லை
செப்பினில் செய்த சுத்தியல் அலகு, 10
ஒலியெழ வில்லை உழைக்கும் தொழில்தலம்
கடந்து முடிந்ததோர் கால மாதமாய்.

கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"அபாக்கியப் பைய(ன்)நான் அறிந்திலன் எதையும்
எப்படி இருப்பது எங்ஙனம் வாழ்வது;
இரவிலே உட்கார்ந் திருப்பதா துயில்வதா
நீண்டதோ இரவு நேரமோ துயரம்
நிறைந்தது தொல்லை குறைந்தது உடற்பலம்.

என்மாலை வேளைகள் ஏக்கம் நிறைந்தவை
என்காலை வேளைகள் எல்லாம் மனத்துயர் 20
இரவில் இருப்பது இன்னல் மட்டுமே
துயில்விட் டெழுவது துன்பம் அதைவிட
எழில்மா லைப்பொழு(து) **ஏக்கம் கொண்டிலன்
வருகாலை வேளை மனத்துயர் கொண்டிலன்
மற்றைய போதும் மனத்துயர் கொண்டிலன்;
அன்புக் குரியளால் அடைந்தேன் ஏக்கமே
மனதுக் கினியளால் மனத்துயர் பெற்றேன்
கரும்புரு வத்தளால் கடுந்துயர் கொண்டுளேன்.

இங்கே இப்போ இத்தகு நாட்களில்
மனச்சோர்(பு) மட்டும் மனத் தெழுகிறது 30
நள்ளிராத் தோன்றும் நனவிலாக் காட்சிகள்
கைதொட்ட இடத்தில் காண்பது வெறுமை
கரம்பட்ட இடத்தில் காண்பது பொய்மை
இடுப்பின் கீழே இரண்டு புறத்திலும்."

கோதையில் லாமல் கொல்லன் வாழ்ந்தனன்
வாழ்க்கைத் துணையிலா வயோதிப மடைந்தனன்;
மாதமோர் இரண்டு மூன்றுமா யழுதான்
ஆமப்பா, அதன்மேல் நாலாம் மாதம்
பொன்னைக் கடலில் பொறுக்கியே யெடுத்தான்
அலையில் கொஞ்சம் அள்ளினான் வெள்ளி; 40
மரத்துண்(டு) சிலதை மற்றவன் சேர்த்தான்
மரத்துண்(டு) சறுக்கு வண்டிமுப் பதிலாம்;
எரித்து மரத்தைக் கரித்துண் டாக்கி
கொல்லுலை கரித்துண் டுள்ளே திணித்தான்.

தன்னிடத் திருந்த தங்கம் எடுத்தான்
அத்தொடு வெள்ளியும் அவன்தேர்ந் தெடுத்தான்
திகழ்இலை யுதிர்ருதுச் செம்மறி அளவிலே
கடுங்குளிர் ருதுமுயல் கனத்தின் தரத்திலே
தங்கத்தை வெப்பத் ததனுள் திணித்து
வெள்ளியும் வைத்தான் வியனுலைக் களத்துள் 50
அடிமைகள் கொண்டு அங்கே செய்தனன்
அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால்.

அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர்
அழுத்தலைச் செய்தனர் அங்கடை கூலிகள்
கையுறை எதுவும் கையிலில் லாமல்
எவ்வித முக்கா(டும்) இன்றியே தலையில்;
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
கொல்லுலைக் கருமமாய்க் கூடவே இருந்தனன்
தங்கத் தோருருத் தான்பெறற் காக
வெள்ளியில் மணமகள் வேட்டெடுப் பதற்காய். 60

அடிமைகள் ஒழுங்காய் அங்கூத வில்லை
அழுத்தவும் இல்லை அக்கூ லிகளே
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உலைக்களம் தானே ஊதுதல் செய்தான்;
ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினன்
அவ்விதம் மூன்றாம் முறையுமாய் ஊதினன்
எட்டி உலைக்களத் தின்உட் பார்த்தான்
கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான்
உலைக்களத் தென்ன உருக்கொ(ண்)டு வருமென
ஊடுரு வியெது ஊதுலை வருமென. 70

ஒருசெம் மறியா டுதித்தது உலையிலே
உலையிலே இருந்தது வந்ததூ டுருவி
தங்கத்தோ(ர்) ரோமம் தனிச்செப்(பில்) இ(ன்)னொன்று
வெள்ளியில் மூன்றாம் விதரோம மிருந்தது;
அதற்காய் ஏனையோர் அதிகளி கொண்டனர்
ஆயின்இல் மரினனோ அதாற்களி அடைந்திலன்.

கொல்லன்இல் மரினன் கூறின்ன் இவ்விதம்:
"ஓநாய் ஒன்றே உனையெதிர் பார்த்திடும்
எதிர்ப்பார்த் தேன்பொன் னில்வாழ் துணையை
இருந்தேன் காத்துநான் இணையொன்(று) வெள்ளியில்." 80

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
செம்மறி ஆட்டைச் சேர்த்தனன் நெருப்பில்
மேலும் கொஞ்சம் மிகுபொன் னிட்டான்
நிறையும் வரையும் நிறைத்தான் வெள்ளி
ஊதுதல் அடிமைகள் உதவியால் செய்தான்
அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால்.

அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர்
அழுத்தலைச் செய்தனர் அங்கடை கூலிகள்
கையுறை எதுவும் கையிலில் லாமல்
எவ்வித முக்கா(டும்) இன்றியே தலையில்; 90
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
கொல்லுலைக் கருமமாய்க் கூடவே இருந்தனன்
தங்கத் தோருருத் தான்பெறற் காக
வெள்ளியில் மணமகள் வேட்டெடுப் பதற்காய்.

அடிமைகள் ஒழுங்காய் அங்கூத வில்லை
அழுத்தவும் இல்லை அக்கூ லிகளே
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உலைக்களம் தானே ஊதுதல் செய்தான்;
ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினன்
அவ்விதம் மூன்றாம் முறையுமாய் ஊதினன் 100
எட்டி உலைக்களத் தின்உட் பார்த்தான்
கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான்
உலைக்களத் தென்ன உருக்கொ(ண்)டு வருமென
ஊடுரு வியெது ஊதுலை வருமென.

உலையிருந் துதித்தது ஒருபரிக் குட்டி
ஊடுரு வியதது ஊதுலை யிருந்து
தங்கப் பிடர்மயிர் தலையோ வெள்ளி
காற்குளம் பனைத்தும் கவின்செம் பானவை;
அதற்காய் ஏனையோர் அதிகளிகொண்டனர்
ஆயின்இல் மரினனோ அதாற்களி அடைந்திலன். 110

கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"ஓநாய் ஒன்றே உனையெதிர் பார்த்திடும்
எதிர்ப்பார்த் தேன்பொன் னில்வாழ் துணையை
இருந்தேன் காத்துநான் இணையொன்(று) வெள்ளியில்."

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
குதிரைக் குட்டியைக் கொடுகனல் தள்ளினன்
மேலும் கொஞ்சம் மிகுபொன் னிட்டான்
நிறையும் வரையும் நிறைத்தான் வெள்ளி
அடிமைகள் கொண்டு அங்கூதல் செய்தனன்
அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால். 120

அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர்
அழுத்தலைச் செய்தனர் அங்கடை கூலிகள்
கையுறை எதுவும் கையிலில் லாமல்
எவ்வித முக்கா(டும்) இன்றியே தலையில்;
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
கொல்லுலைக் கருமமாய்க் கூடவே இருந்தனன்
தங்கத் தோருருத் தான்பெறற் காக
வெள்ளியில் மணமகள் வேட்டெடுப் பதற்காய்.

அடிமைகள் ஒழுங்காய் அங்கூத வில்லை
அழுத்தவும் இல்லை அக்கூ லிகளே 130
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உலைக்களம் தானே ஊதுதல் செய்தான்;
ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினன்
அவ்விதம் மூன்றாம் முறையுமாய் ஊதினன்
எட்டி உலைக்களத் தின்உட் பார்த்தான்
கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான்
உலைக்களத் தென்ன உருக்கொ(ண்)டு வருமென
ஊடுரு வியெது ஊதுலை வருமென.

உதித்தனள் ஒருபெண் உலையினி லிருந்து
ஒருபொற் கூந்தலாள் ஊதுலை யிருந்து 140
தலையோ வெள்ளி தலைமயிர் தங்கம்
அவளது உடலோ அழகில் மிளிர்ந்தது;
அதற்காய் ஏனையோர் அதிதுய ருற்றனர்
ஆயின்இல் மரினனோ அடைந்திலன் துயரம்.

அதன்பின் கொல்லன் அவ்வில் மரினன்
தட்டியோர் பொன்னுருத் தானே யமைத்தனன்
தட்டியோய் வின்றித் தானிரா வமைத்தனன்
உயிர்த்திடப் பொழுதிலா துழைத்தனன் பகலும்;
பாவைக் கதன்பின் ப(஡)தங்கள் செய்தனன்
செய்தனன் கால்கள் செய்தனன் கைகள் 150
ஆயினும் கால்களை அவள்மேல் உயர்த்திலள்
அணைக்கவு மில்லை அவள்கரம் திருப்பி.

தன்பெண் ணுக்குச் சமைத்தான் காதுகள்
ஆயினும் செவிகள் அவைகேட் டிலவே;
அவ்விதம் வாயை அழகாய்ப் பொருத்தினன்
உயிரோ(ட்)ட விழிகளும் உறுவெழில் வாயும்
வாயோ மொழியெதும் வழங்கவு மில்லை
இனிதாம் பார்வையும் இல்லை விழிகளில்.

கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"இவளொரு சிறந்த ஏந்திழை யாவாள் 160
இவளாற் சொற்களை இயம்ப முடிந்தால்
நெஞ்சோடு நல்லதோர் நீள்நா விருந்தால்."

பின்னர் தனது பெண்ணைக் கொணர்ந்தனன்
அருமையாய்ச் செய்த அமளித் திரைக்குள்
மென்மையாய்ச் செய்த வியன்தலை யணையில்
பட்டினால் இயற்றிய படுக்கையின் மீது.

அதன்பின் கொல்லன் அவ்வில் மரினன்
வெப்ப மாக்கினன் விரும்பிக் குளிப்பறை
சவர்க்க(஡)ரச் சவுனா தயாரா யாக்கினன்
இலைக்குச்(சித்) தூரிகை எடுத்தனன் தயாராய் 170
தொட்டி மூன்றினில் சுத்தநீ ரெடுத்தனன்
அந்தப் **பறவையை அங்கே கழுவினன்
நற்சுத்த மாக்கினன் நவவெண் **குருவியை
பொன்னின் களிம்புகள் போகக் கழுவினன்.

கொல்லனும் அதன்பின் குளித்தான் நிறைவாய்
தன்னைக் கழுவினான் தன்விருப் பளவும்
நீளமாய்ப் படுத்தான் நேரிழை அருகில்
அருமையாய்ச் செய்த அமளியின் திரைக்குள்
உருக்கிலே செய்த உயர்கூ டாரம்
இரும்பினால் செய்த இன்வலை யமைப்புள். 180

அங்கே கொல்லன் அவ்வில் மரினன்
அன்றே வந்த அம்முத லிரவில்
சிலபோர் வைகளைத் திண்ணமாய்க் கேட்டான்
தயாரா யாக்கினான் சட்டைப் போர்வைகள்
இரண்டோ மூன்றோ இருங்கர டித்தோல்
ஐந்தோ ஆறு அமளி விரிப்புகள்
படுப்பதற் காய்த்தன் பாவைத் துணையுடன்
தனது தங்கத் தனியுரு வத்துடன்.

அப்புறம் உண்மையில் வெப்பம் இருந்தது
போர்வைச் சட்டைப் புறமா யவனது; 190
ஆனால் இளம்பெண் அவளது பக்கம்
தங்கத் தமைந்த தன்னுருப் பக்கம்
குளிராய் வந்தது கூறுமப் பக்கம்
குளிரில் கடினமாய்க் கூட விறைத்தது
கடலின் உறைபனிக் கட்டியா யானது
திண்மைப் பாறையாய்ச் சேர்ந்திறு கிற்று.

கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"இதுவோ எனக்கு ஏற்றது அல்ல;
வைனோ நாடு வனிதையைக் கொ(ண்)டுபோய்
அ(வ்)வைனா மொயினற் காதர வாக்கலாம் 200
அவன்முழங் காலில் ஆயுள் துணையாய்
அவனது அணைப்பில் அமையக் கோழியாய்.

வைனோ நாடு வனிதையைக் கொணர்ந்தான்
அங்ஙனம் அவ்விடம் அடைந்ததன் பின்னர்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓகோ, முதிய வைனா மொயின!
இதோஉனக் கிங்கோர் ஏந்திழை யிருக்கிறாள்
உனைக்கவ னிக்கவோர் உயர்எழில் மங்கை
வீண்பேச் சுரைக்கும் வியன்வா யுளளலள்
அகலமா யிதழ்கள் அமைந்தவ ளல்லள்." 210

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உருவ மீதுதன் உறுவிழி வைத்தனன்
தங்கத்து மீதுதன் கண்கள் செலுத்தினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எதற்காய் இதனை என்னிடம் கொணர்ந்தாய்
பொன்னிலே புனைந்தவிப் புதுமா(ய) **வுருவை?"

கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"வேறு எதற்கு? மிகுநலத் துக்கே!
ஆயுள்நாள் துணையாய் ஆகநின் முழங்கால்
ஒருகோழி யாக உன்அணைப் பினிலே." 220

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"ஓ,நற் கொல்லஎன் நேசச் சோதர!
தீக்குள் நீயே திணிப்பாய் நின்பெண்
எல்லா விதமாம் இயல்பொருள் செய்வாய்
அல்லது எடுத்து அகல்நா டிரஷ்ஷியா
ஜேர்மனி நாட்டுக்(கு) நீநின் உருவினை
பணமுளோர் போட்டி போடுவர் மணக்க
உயர்ந்தோர் பெண்ணுக்(கு) உறுபோர் புரிவர்;
எனது இனத்துக் கிதுஇணை யல்ல
எனக்கே கூட இதுபொருந் தாது 230
தங்கத் தானதோர் தகுபெண் எடுப்பது
ஆம்வெள்(ளி) உருவுக் கக்கறை கொள்வது."

அங்ஙனம் தடுத்தான் அ(வ்)வைனா மொயினன்
மணப்பெணைத் தவிர்த்தான் *அமைதிநீர் மனிதன்
வளரும் தலைமுறை மனிதரைத் தடுத்தான்
வளர்ந்து வருவோர் வழியினைத் தவிர்த்தான்
தங்கத் துக்காய்த் தலைவணங் குதலை
வெள்ளிக் காக வீண்தடு மாறலை;
இனிவரும் சொற்களில் இவ்விதம் மொழிந்தான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 240
"பாக்கிய மற்ற பையன்காள், வேண்டாம்!
இப்போ வளர்ந்துயர் இகல்வீ ரர்களே!
செல்வந்த ராகநீர் திகழ்ந்த போதிலே
அல்லது செல்வமற் றமைந்த போதிலும்
என்றுமே உங்கள் எவ்வாழ் நாளிலும்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்
தங்கத்தி லான தையலர் எடாதீர்
கொளாதீர் அக்கறை வெள்ளி உரு(வு)க்கு
தங்கத் தொளியோ தவழ்குளி ரானது
வெள்ளியின் மினுக்கம் மிகுசீ தளமாம்." 250



பாடல் 38 - வட நாட்டிலிருந்து இல்மரினனின் புதிய மணமகள்
 *



அடிகள் 1-124 : இல்மரினன் வடநாட்டுக்குச் சென்று தனது முன்னாள்
மனைவியின் தங்கையைத் தனக்கு மணம் செய்து தரும்படி கேட்கிறான்.
ஆனால் அவனுக்கு ஓர் இகழ்ச்சியான மறுமொழியே கிடைக்கிறது.
அதனால் அவன் கோபமடைந்து பெண்ணைக் கவர்ந்து வீடு நோக்கிப்
புறப்படுகிறான்.

அடிகள் 125-286 : அந்தப் பெண் வழியில் இல்மரினனை அவமதித்துப்
பேசியதால் அவன் சினம் கொண்டு அப்பெண்ணைக் கடற்பறவை
ஆகும்படி சபித்துப் பாடுகிறான்.

அடிகள் 287-328 : இல்மரினன் வீட்டுக்குத் திரும்பி வந்து சம்போவைச்
செய்து கொடுத்ததால் வடநாட்டு மக்கள் எவ்வளவு மகிழ்வுடன்
வாழ்கிறார்கள் என்பதையும் மணப்பெண் பெறும் பொருட்டுத் தான்
வடநாட்டுக்குச் சென்று தோல்வி அடைந்ததையும் வைனாமொயினனுக்குக்
கூறுகிறான்.



அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
தான்தொலை எறிந்தனன் தங்கப் பதுமையை
வெள்ளியி லான வியன்பெண் உருவை
அம்பரிக் குட்டிக் கணிகள் சூட்டினன்
மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது
அவனே ஏறி அமர்ந்தனன் வண்டியில்
வண்டியில் ஏறி வசதியா யமர்ந்தனன்;
எடுத்தனன் முடிவு எழுந்தே ஏகிட
அத்துடன் எண்ணம் அவனும் கொண்டனன் 10
வடநா டேகி வாஞ்சையாய்க் கேட்க
வடபுலம் வாழும் வனிதைமற் றவளை.

ஒருநாட் பயணம் ஒழுங்காய் நடந்தது
இருநாட் பயணம் இனிதாய் முடிந்தது
மூன்றா வதுநாள் முன்வரு போதினில்
வந்து சேர்ந்தனன் வடபால் முற்றம்.

லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
முற்றப் பரப்பினில் முன்தான் வந்தாள்
அங்கு வந்துரை யாடத் தொடங்கினள்
அடுத்துத் திரும்பினள் அவள்வின வற்காய் 20
எங்ஙனம் தன்மகள் இருக்கிறாள் என்று
இனியவள் எவ்விதம் இருக்கிறாள் என்று
மணாளன் வீட்டில் மருமக ளாக
மாமியார் இல்லில் மனைவியே யாக.

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"என்றன் மாமியே, இப்போ(து) வேண்டாம்!
வேண்டாம் அதுசார் வினவுதல் இப்போ(து) 30
எங்ஙனம் வாழ்கிறாள் என்பதை உன்மகள்
எவ்விதம் இருக்கிறாள் என்பதை உன்மகள்!
மரணம் ஏலவே வாய்க்கொண்ட தவளை
வந்து சேர்ந்தது வன்கொடும் முடிவு
இருக்கிறாள் புவியுள் என்சிறு பழமவள்
பசும்புற் றரைக்குளே படுப்பளென் அழகி
கரும்புரு வத்தள்புற் களின்நடு வினிலே
வெள்ளி நிகர்த்தவள் வைக்கோல் மத்தியில்.

அடுத்தஉன் மகளுக் காகநான் வந்துளேன்
உன்இளம் பெண்ணுக்(கு) ஓடியே வந்தேன்: 40
அன்புஎன் மாமியே, அவளைநீ தருவாய்,
அடுத்த உன்மகளை அனுப்புவாய் என்னொடு,
மனைவிஎன் முந்தியள் வாழ்ந்தஅவ் விடத்தே
அவளுடைச் சோதரி அமர்ந்தஅவ் விடத்தே."

லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அதிர்ஷ்டம் அற்றநான் அடாச்செயல் செய்தேன்
பாக்கியம் அற்றநான் பழிபெரி தாற்றினேன்
வாக்களித் தென்மகள் வழங்கிய நேரம்நான்
தவமகள் உன்னிடம் தந்திட்ட போதிலே 50
உறங்கவே தந்தேன் உளஇளம் வயதிலே
அழகுசெங் கதுப்பினாள் அழியவே விட்டேன்:
ஓநாய் வாய்க்குள் ஒப்படைத் தாற்போல்
கத்தும் கொடிய கரடியின் அலகினுள்.

இப்போ நான்தரேன் இரண்டாம் மகளை
அடுத்த மகளையும் அனுப்புதற் கில்லைநான்
உன்றன் குப்பை ஒட்டடை பெருக்க
சுரண்டி எடுத்திடத் துகள்கள்ஒட் டியதை;
அதனிலும் என்மகள் அவளைக் கொடுக்கலாம்
என்றன் உரமுறும் எழில்பிள்ளை யிடலாம் 60
இரைந்து பாயுமோர் இகல்நீர் வீழ்ச்சியில்
புகைந்து சுழிக்குமோர் புகுநீர்ச் சுழியில்
மரண உலகின் **வளமீன் வாய்க்குள்
துவோனிக்கோ லாச்சித் தொல்மீன் பற்களில்."

அதன்பின் கொல்லன் அவ்வில் மரினன்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கி
தனது சுருண்ட தலையினை யசைத்தான்;
துணிவாய்த் தானே தொடர்ந்தில் புகுந்து
கூரையின் கீழே கொண்டே நன்நடை 70
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"என்னிடம் வருவாய் இப்போ பெண்ணே!
உனது சகோதரிக் குரிய இடத்தே
மனைவிஎன் முந்தியள் வாழ்ந்த இடத்தே
ரொட்டி- தேன் சேர்ந்ததைச் சுட்டே யெடுக்க
'பீர்'ப்பா னத்தைப் பின்வடித் தெடுக்க!"

பெருநிலத் திருந்தொரு பிள்ளைபா டிற்று
பாடிய தோடு பகர்ந்தது இவ்விதம்:
"எம்கோட்(டை) யிருந்துபோ, எதும்பய னற்றவா!
அந்நியோய், யி(வ்)வாயி லிருந்தே யகல்வாய்! 80
இக்கோட்(டை) பகுதியொன் றிடித்தே முடித்தனை
கோட்டையைச் சிறிதே கொடிதா யழித்தனை
முன்னொரு முறைநீ வந்தநே ரத்தில்
அகல்இக் கதவுநீ அடைந்தநே ரத்தில்.

பெண்நீ, சகோதரி, பேசுதல் கேட்பாய்!
மணமகன் கண்டு மயங்கிட வேண்டாம்
மாப்பிளை வாயில் வருமொழி கேட்டு
அவனது பாத அழகினைப் பார்த்து!
மாப்பிளை முரசு ஓனாய் முரசு
நரியின் வளைந்த நகங்கள் பையிலே 90
கக்கத் திருப்பவை கரடியின் நகங்கள்
குருதியுண் போரின் கொலைவாள் இடுப்பில்
அதனால் சீவுவார் அழகிய உன்தலை
முதுகை வெட்டி முதற்கிழித் திடுவார்."

பெண்ணவள் தானே பேசினள் இவ்விதம்
இல்மரி னன்எனும் கொல்லன் தனக்கு:
"புறப்பட் டுன்னுடன் வரற்குநா னில்லை
அடாச்சிறு மதியரில் அக்கறை யெனக்கிலை;
கொடிதுமுன் முடித்த கோதையைக் கொன்றனை
அழகென் சோதரி அழித்தே மாய்த்தனை 100
அங்ஙனம் என்னையும் அழிக்க முயலுவாய்
என்னையும் அவ்விதம் என்றுமே மாய்க்கலாம்;
பாரப்பா இந்தப் பாவையும் இப்போ(து)
எதிர்பார்த் திருக்கிறாள் இனியகீர்த் தியனை
அழகார் உடலுறும் அருந்தரச் சோடியை
சுந்தரன் ஒருத்தனின் வண்டியை நிறைத்திட
மிகமிகச் சிறப்பாம் விரும்பிட மடைந்திட
இகமதில் மிகஉயர் இருப்பிடம் சேர்ந்திட
அல்லஓர் கொல்லனின் அக்கரி இல்லம்
மூடன் ஒருவனின் மூள்அன லிடமல." 110

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்;
அக்கணத் துடனே அரிவையைப் பற்றினன்
இருகரம் வளைத்து இறுகப் பிடித்தனன்
பனிப்புயல் போல பாய்ந்தனன் வெளியே
சறுக்கு வண்டியில் மிடுக்கோ டேறினன்
அரிவையை வண்டி அதனுள் திணித்தனன்
வனிதையைத் திணித்து வண்டியுள் அடைத்தனன் 120
அவனே புறப்பட லாயின னுடனடி
அவன்புறப் படற்கு ஆயத்த மாயினன்
பரிக்கடி வாளத் தொருகை இருந்தது
மறுகை மங்கையின் மார்புக் காம்பினில்.

காரிகை அழுதனள் கத்திப் புலம்பினள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
**"சிறுபழத் துக்குச் சென்றேன் சதுப்பு
**சேம்பங் கிழங்குக் கேகினன் சேற்றிடை
தொலைவே னங்குநான் துடிக்குமோர் கோழியாய்
அகாலத் திறப்பேன் அங்கொரு பறவையாய். 130

கொல்லஇல் மரின, சொல்லும் மொழிகேள்!
இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
வண்டியை உதைப்பேன் துண்டுதுண் டாக
சறுக்குவண் டியினை நொருக்குவேன் துகளாய்
என்முழங் காலால் இடிப்பேன் பொடிப்பட
காலால் அடித்துக் கடுந்துக ளாக்குவேன்."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அதனால் தான்கொல் லனின்ரதப் புறங்கள்
இரும்பைக் கொண்டு இயற்றப் பட்டது 140
தாங்கி உதைகளைத் தப்புதற் காக
புத்தெழிற் கன்னியின் போரினைத் தாங்க."

காரிகை அப்போ கத்திப் புலம்பினள்
அம்செப்பு **வாரணி அவள்முறை யிட்டனள்
விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்
உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
ஆழிமீ னாயெனை யாக்கிடப் பாடுவேன்
ஆழவெண் மீனாய் அலையில்மா றிடுவேன்." 150

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கோலாச்சி மீனாய்க் குமரிபின் தொடர்வேன்."

காரிகை அப்போ கத்திப் புலம்பினள்
அம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள்
விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்
உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை 160
அடவியுட் சென்று அங்கே மறைவேன்
**கீரியாய்ப் பாறைக் கீழ்க்குழி புகுவேன்."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
**நீர்நாய் வடிவாய் நின்பின் தொடர்வேன்."

காரிகை அப்போ கத்திப் புலம்பினள்
அம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள்
விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்
உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள் 170
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
மேகப்புள் ளாய் உயரமேற் பறப்பேன்
மேகப் பின்புறம் மிகமறைந் திருப்பேன்."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கழுகுரு வெடுத்துக் கன்னிப்பின் தொடர்வேன்."

அதன்பின் பயணம் அமைந்தது சிறுதொலை
பாதையில் கொஞ்சம் பகர்தொலை கழிந்தது 180
அப்போ குதிரை நிமித்திற் றதன்செவி
தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின.

ஒண்டொடி தலையை உயர்த்திப் பார்த்தனள்
ஒருகா லடித்தடம் உறுபனிக் கண்டனள்
இவ்வா றுசாவினள் இவ்வா றியம்பினள்:
"இப்போ தோடிய தெதுவாம் குறுக்காய்?"

கொல்லனில் மரினன் கூறினன் இவ்விதம்:
"இப்போ குறுக்காய் ஏகிய ததுமுயல்."

பெருமபாக் கியவதி பெருமூச் செறிந்தனள்
பெருமூச் செறிந்தனள் பெரிதும் சோர்ந்தனள் 190
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஐயகோ, எளியதோர் பிறப்பா யினன்நான்
நன்றிருந் திருக்கும் நானிவ்வா றிருந்தால்
சிறப்பிருந் திருக்கும் செயலிவ்வா றிந்தால்
விரைமுயல் வழித்தட மீதிருந் திருந்தால்
**'வளைந்தகால்' சுவட்டின் வயமிருந் திருந்தால்
மணஞ்செய வருமிவன் வண்டியி லிலாமல்
மிகச்சுருங் குமுகன் மெத்தையி லிலாமல்
ஏனெனில் முயல்ரோமம் இதில்மிக நன்று
வியன்முயல் வாயோ மேலும் சிறப்பு." 200

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
தன்இதழ் கடித்துத் தலையைத் திருப்பி
தொடர்ந்து வண்டியைத் துடிப்பாய்ச் செலுத்தினன்;
பாதையில் கொஞ்சம் பகர்தொலை கழிந்தது
குதிரை மீண்டும் செவிநிமிர்த் திற்று
தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின.
ஒண்டொடி தலையை உயர்த்திப் பார்த்தனள்
ஒருகா லடித்தடம் உறுபனிக் கண்டனள்
இவ்வா றுசாவினள் இவ்வா றியம்பினள்:
"இப்போ தோடிய தெதுவாம் குறுக்காய்?" 210

கொல்லனில் மரினன் கூறினன் இவ்விதம்:
"இப்போ குறுக்காய் ஏகிய ததுநரி."

பெருமபாக் கியவதி பெருமூச் செறிந்தனள்
பெருமூச் செறிந்தனள் பெரிதும் சோர்ந்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஐயகோ, எளியதோர் பிறப்பா யினன்நான்
நன்றிருந் திருக்கும் நானிவ்வா றிருந்தால்
சிறப்பிருந் திருக்கும் செயலிவ்வா றிந்தால்
ஒருநரி(யின்) வண்டியில் சவாரிசெய் திருந்தால்
இருந்தால் ஓய்விலா விரைந்திடும் வண்டி 220
மணஞ்செய வந்தவன் வண்டியி லிலாமல்
மிகச்சுருங் குமுகன் மெத்தையி லிலாமல்
ஏனெனில் **ஓரியின் ரோமம்மிக் குகந்தது
நரியதன் வாயோ நனிமேற் சிறப்பாம்."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
தன்இதழ் கடித்துத் தலையைத் திருப்பி
தொடர்ந்து வண்டியைத் துடிப்பாய்ச் செலுத்தினன்;
பாதையில் கொஞ்சம் பகர்தொலை கழிந்தது
குதிரை மீண்டும் செவிநிமிர்த் திற்று
தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின. 230
ஒண்டொடி தலையை உயர்த்திப் பார்த்தனள்
ஒருகா லடித்தடம் உறுபனிக் கண்டனள்
இவ்வா றுசாவினள் இவ்வா றியம்பினள்:
"இப்போ தோடிய தெதுவாம் குறுக்காய்?"

கொல்லனில் மரினன் கூறினன் இவ்விதம்:
"இப்போ குறுக்காய் ஏகிய தோநாய்."

பெருமபாக் கியவதி பெருமூச் செறிந்தனள்
பெருமூச் செறிந்தனள் பெரிதும் சோர்ந்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஐயகோ, எளியதோர் பிறப்பா யினன்நான் 240
நன்றிருந் திருக்கும் நானிவ்வா றிருந்தால்
சிறப்பிருந் திருக்கும் செயலிவ்வா றிந்தால்
இளைத்தோ டோ நாய் வழித்தடத் திருந்தால்
**'நீள்முக'த் தடிசுவட் டிலேயிருந் திருந்தால்
மணஞ்செய வந்தவன் வண்டியி லிலாமல்
மிகச்சுருங் குமுகன் மெத்தையி லிலாமல்
ஏனெனில் ஓநாய் ரோமம்மிக் குகந்தது
ஓநாய் வாயோ உயர்மேற் சிறப்பாம்."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
தன்இதழ் கடித்துத் தலையைத் திருப்பி 250
தொடர்ந்து வண்டியைத் துடிப்பாய்ச் செலுத்தினன்;
இரவில் புதிதாம் எழிலூ ரடைந்தனன்.

வழிச்செல வதனில் வந்த களைப்பினால்
அங்கே கொல்லன் அமைதியாய்த் துயின்றான்
பெண்ணையின் னொருவன் **புன்னகை யூட்டினன்
அவளது கொழுநன் அறத்துயில் நேரம்.

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
காலைநல் நேரம் கண்விழிப் புற்றதும்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்; 260
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்
நினைத்து அவனே உரைத்தான் இப்படி:
"இப்போ தேநான் இசைக்கத் தொடங்கவா?
இத்தகை மணப்பெ(ண்)ணை இப்போ பாடவா
வனத்துக் காக வனத்ததன் சொந்தமாய்
அல்லது புனலுக் காய்ப்புனற் சொந்தமாய்?
வனத்தின் சொந்தமாய் வனிதையைப் பாடேன்
ஏனெனில் வனத்துக் கின்னல்உண் டாகும்,
புனலதன் சொந்தமாய்ப் பூவையைப் பாடேன்
புனலிலே மீனினம் போகும் ஒதுங்கியே; 270
வெவ்வாள் அலகதால் விரைந்தே வீழ்த்துவேன்
அரிந்தென் வாளால் அழித்தே விடுவேன்."

வாளும் மனிதனின் வார்த்தையை அறிந்தது
நாயகன் சொல்லை நன்றாய் உணர்ந்தது
உரைத்தது ஒருசொல் உரைத்தது இவ்விதம்:
"என்னைப் படைத்தது இதற்கா யல்ல
மாதரைக் கொன்று மாய்ப்பதற் கல்ல
எளிய பிறவியை ஒழிப்பதற் கல்ல."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
இப்போ துண்மையாய் எழுந்தான் பாட 280
கோபம் கொண்டு கூறத் தொடங்கினன்
பாடினன் **கடலின் பறவையாய்த் தன்பெண்ணை
உயர்ந்த பாறையில் ஓய்ந்துபோய்த் தங்க
நீர்க்கற் பாறையில் நின்றுகீச் சிட்டிட
கடல்முனைப் பரப்பில் கத்தியே திரிய
காற்றின் மோதலில் கலங்கித் திரிய.

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
தனது வண்டியில் தானே ஏறி
வண்டியைச் செலுத்திச் சென்றனன் தொடர்ந்து
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்; 290
தன்சொந்த நாடு தான்பய ணித்தனன்
தானே பழகிய நாட்டைவந் தடைந்தனன்.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சந்திக்க வந்தனன் தான்பா தையின்முன்
வந்ததும் இவ்விதம் வார்த்தை தொடங்கினன்:
"சகோதர, கொல்ல தகைஇல் மரின!
உள்ளனை எதற்கு உறுதுயர் மனத்துடன்
உயர்ந்த தொப்பிஏன் உற்றது சரிவாய்
வடபால் நிலத்தி லிருந்தே வருகையில்
வடபால் நிலத்தவர் வாழ்வெலா மெப்படி?" 300

கொல்லன்இல் மரினன் கூறினன் இப்படி:
"எத்தகு வாழ்வு இருப்பது வடபுலம்
அங்கே சம்போ அரைக்கிற தென்றும்
சுடரும் மூடியும் சுழன்றே வருவதாம்
உண்பதற் காக ஒருநாள் அரைக்கும்
விற்பனைக் காக மறுநாள் அரைக்கும்
சேமிக்க மனையில் திகழ்மூன் றாம்நாள்.

நானே சொன்னதை நவில்வேன் திரும்ப
சொன்னதை மீண்டும் சொல்வேன் ஒருமுறை
எத்தகு வாழ்வு இருப்பது வடபுலம் 310
சம்போ அங்கே தானிருப் பதனால்!
அங்கே உழுவார் அங்கே விதைப்பார்
வளரும் அனைத்து வகைகளும் உளவே
என்றென்று மங்கே இருப்பது அதிர்ஷ்டம்."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சகோதர, கொல்ல தகைஇல் மரின!
எங்கே விட்டனை இளம்உன் மனைவியை
எவ்விடத் தில்உன் எழிலார் மணப்பெண்
வெறும்கை யுடனே மீண்டிங் குற்றனை
வந்து சேர்ந்தனை வனிதையில் லாமல்?" 320

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அந்தப் பெண்ணை அப்படிப் பாடினேன்
கடலின் பாறையில் ஒருகடற் பறவையாய்;
கத்தித் திரிகிறாள் கடற்பு(ள்)ளாய் இப்போ
கூவித் திரிகிறாள் குரைகடற் பறவையாய்
நீர்க்கற் பாறையில் கீச்சிட்ட டலைகிறாள்
பாறைக் குன்றில் படர்கிறாள் அலறி."



பாடல் 39 - வடநாட்டின் மீது படையெடுப்பு
 *



அடிகள் 1-330 : வடநாட்டுக்குச் சென்று சம்போவை அபகரித்துக்
கொண்டு வரத் தன்னுடன் வருமாறு வைனாமொயினன் இல்மரினனைக்
கேட்கிறான். இல்மரினன் சம்மதித்ததால் படகில் வடநாட்டுக்குப்
புறப்படுகின்றனர்.

அடிகள் 331- 426 : வழியில் சந்தித்த லெம்மின்கைனன் அந்த
இருவரது பயண நோக்கத்தை அறிந்து தானும் அவர்களுடன்
செல்ல முன் வருகிறான். அவனை அவர்கள் ஏற்றுக் கொண்டதால்
மூன்று தோழர்களும் பயணத்தைத் தொடருகின்றனர்.



நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஓகோ, கொல்ல உயர்இல் மரின!
வடநாட் டுக்குப் புறபட் டேகுவோம்
நல்லசம் போவை நாமே பெறற்கு
பிரக(஡)ச மூடியைப் பெரிதும் பார்க்க!"

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"சம்போ என்பதை நாம்பெறற் கில்லை
சுடரும் மூடியும் கொணருதற் கில்லை 10
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
செறிபுகார் நாடாம் சரியொலா விருந்து;
எடுத்தெழிற் சம்போ ஏகவும் பட்டது
ஒளிரும் மூடியும் உடன்போ யடைந்தது
வடநிலக் குன்றின் மணிமுக டதன்மேல்
செப்பினா லமைந்த செம்மலைக் குள்ளே
பூட்டினள் ஒன்பது புட்டுகள் போட்டு;
இறங்கின ததைச்சூழ்ந்(து) இகல்வல் வேர்கள்
ஒன்பது மடங்கிலோர் **ஆறடி யாழம்;
அன்னையாம் பூமியில் அதிலொன் றிறங்க 20
மற்றவேர் நீர்க்கரை வழிமருங் கிறங்க
மூ(ன்றா)ம்வேர் சென்றது முதுவில் மலைக்குள்."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சோதரக் கொல்ல, துணைச்சோ தரனே!
வடபுல நாடு புறப்பட் டேகுவோம்
அச்சம் போவை அடைதற் கேநாம்
கப்பல் ஒன்றைக் கட்டுவோம் பெரிதாய்
எடுத்துவந் திடலாம் அதிற்சம் போவை
ஒளிரும் மூடியும் உடனே கொணரலாம்
வடநிலக் குன்றதன் மணிமுகட் டிருந்து 30
செப்பினால் இயைந்தசெம் மலைகளி லிருந்து
பூட்டிய ஒன்பது பூட்டினி லிருந்து."

கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"படர்தரைப் பயணம் பாதுகாப் பானது
பிசாசுபோ கட்டும் பெருங்கடல் மீது
இகல்அகல் ஆழியில் இறப்புவந் திடட்டும்!
சுழற்காற் றங்கே சுற்றிய டிக்கும்
புயற்காற் றங்கே புறமெடுத் தெறியும்
விரல்கள் துடுப்பை மிகவலிந் திழுக்கும்
தொடும்உள் ளங்கை **தண்டைப் பிடிக்கும்." 40

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"படர்தரைப் பயணம் பாதுகாப் பானது
பாதுகாப் பானதும் படுகடி தானதும்
அத்துடன் சுற்றிய அதிதொலைப் பயணம்;
மகிழ்ச்சியைத் தருவது வலிக்குநீர்த் தோணி
அசைந்து மரக்கலம் அலைமிதந் தகல்வது
பரந்தநீர்ப் பரப்பை **பளீச்சிடச் செய்வது
தெளிந்தநீர்க் கடலில் செலுத்துதல் கப்பல்:
காற்றுப் படகுதா லாட்டிச் செல்லும்
அலைகள் தோணியை அசைத்துச் செலுத்தும் 50
மேல்காற் றூர்ந்து மெதுவாய் நகர்த்த
தென்காற் றதனைச் செலுத்தும் முன்னே
அதுவும் அவ்விதம் அமைவத னாலே
உண்மையில் நீகட லோடியே யல்ல
ஆதலால் தரைவழி யாகலாம் பயணம்
நீர்க்கரைப் பக்கமாய்ப் போராடிச் செல்லலாம்.

எனக்கொரு புதுவாள் இனிதடித் தெடுப்பாய்
தீப்பொறி யலகு திகழ்வாள் செய்வாய்
வேட்டை நாய்களை ஓட்டுவேன் அதனால்
விரட்டி அடிப்பேன் வியன்வட புலவினம் 60
சம்போ பெறற்குச் சாரும் சமயம்
குளிர்ந்தவக் கிராமம் குறுகும் பொழுது
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
செறிபுகார் நாடாம் சரியொலா விடத்து."

அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
இரும்பைத் திணித்தான் விரும்பி நெருப்பில்
கொஞ்ச உருக்நக் கொடுங்கன லுள்ளே
கைப்பிடி யளவு கனகமும் போட்டான்
விரிகை யளவு வெள்ளியும் சேர்த்தான் 70
ஊதுதல் அடிமைகள் உதவியால் செய்தான்
அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால்.

அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர்
கூலிக்கு வந்தோர் குறைவிலா தழுத்தினர்:
இரும்பும் கூழாய் இளகியே வந்தது
உருக்கும் களியாய் உருகியே வந்தது
வெள்ளியும் நீராய் மின்னலா யிற்று
தங்கம் அலையாய்த் தான்கொதித் திட்டது.

அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
லகவின் அழிவில்லாக் கைவினைக் கலைஞன் 80
எட்டி உலைகளத் தின்உட் பார்த்தான்
கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான்:
வாளொன்று பிறந்து வந்தததைக் கண்டனன்
உருவாகி வந்ததை உயர்பொன் முனையுடன்.

அந்தப் பொருளை அனலிருந் தெடுத்தான்
நல்லஅப் பொருளை நனிகரத் தெடுத்தான்
பட்டடைக் **கற்குப் படும்உலை யிருந்து
சம்மட்டி **கட்குத் தகுசுத்தி யற்கு
விரும்பிய வாறே வெளிர்வாள் தட்டினன்
அதிமிகச் சிறந்த அலகுறும் வாளினை 90
தங்கத்தி னாலே தகுமுருப் பெற்றனன்
அலங்க(஡)ரம் வெள்ளி யதனால் செய்தனன்.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அவ்விடம் வந்தனன் அதனைப் பார்க்க
தீப்பொறி அலகு திகழ்வாள் எடுத்தனன்
தனது வலக்கரம் தானே பெற்றனன்
அதனைப் பார்த்தனன் அதனைத் திருப்பினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"மலர்ந்தஇவ் வாளொரு மனிதனுக் கேற்றதா
தரித்திருப் போற்குத் தகுந்ததா இவ்வாள்?" 100

ஆம்,ஒரு மனிதனுக் கதியுகப் பிவ்வாள்
தரித்திரிப் போற்குத் தகுந்தது இவ்வாள்
ஏனெனில் அதன்முனை எழில்நிலாத் **திகழ்ந்தது
வாளின் பக்கம் வயங்கினன் கதிரோன்
வியன்கைப் பிடியிலே விண்மீன் மின்னின
அலகினில் பரியொன் றழகாய்க் கனைத்தது
குனிந் தொருபுனை குமிழ்கத் திற்று
உறையில் நாய்நின் றுரக்கக் குரைத்தது.

அதன்பின் சுழற்றினன் அவனது வாளை
இரும்பினா லான இகல்மலை வெடிப்பில் 110
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இப்போ இங்கே இந்தநல் வாளினால்
வெற்பையும் கூட வெட்டிப் பிளப்பேன்
பாறையைக் கிழித்துப் பகுப்பிரண் டாக்குவேன்."

அவனே கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எங்ஙனம் நானும் இலாதோன் பாக்கியம்
எதனால் ஏழை என்னைக் காப்பேன்
கவச மிடுவேன் கவின்வா ரமைப்பேன்
அகல்நிலம் நீரின் அபாயத் திருந்து? 120
கவச மிட்டே கடிதெனை மூடவா
இரும்புச் சட்டையை ஏற்றணிந் திடவா
உருக்குப் பட்டியால் உடன்மூ டிடவா?
கவச(த்தில்) மனிதன் கடினமாய் இருப்பான்
இரும்புச் சட்டை ஏற்றது அதனிலும்
உருக்குப் பட்டி உறுவலு அதிகம்."

புறப்படப் போகும் பொழுதும் வந்தது
வெளிப்புறப் பாட்டு வேளையும் வந்தது
முதிய வைனா மொயினன் முதல்வன்
அடுத்தவன் கொல்லன் அவன்இல் மரினன் 130
ஒருபரி பெறவே உடன்புறப் பட்டனர்
சணல்பிடர்ப் **புரவியைத் தாமே தேடினர்
ஒருவரு டப்பரிக்(குக்) கடிவளம் பட்டியில்
துரகத் தணிகலன் தோள்களில் இருந்தன
இருவரும் தேடினர் இகல்பரி ஒன்றினை
தளிர்மரத் தூடாய்த் தலையினைப் பார்த்தனர்
எங்ஙணும் கவனமாய் ஏகியே தேடினர்
நீல நிறத்து நீள்வனம் சுற்றியே;
பொழிலொன் றினிலே புரவியைக் கண்டனர்
**தாருவின் நடுவினில் சணற்பிடர்ப் புரவியை. 140

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அடுத்தவன் கொல்லன் அவ்வில் மரினன்
அழுத்திப் புட்டினர் அம்பொற் றலையணி
ஒருவரு டப்பரிக் குறுவாய்க் கடிவளம்
அதன்பின் பயணம் அவர்கள் தொடங்கினர்
நீர்க்கரை யோரமாய் நிகர்இரு மனிதரும்
கேட்டதோர் அழுகுரல் நீர்க் கரையிருந்து
படகுத் துறைமுறைப் பாடது கேட்டது.

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 150
"அங்கொரு அரிவை அழுதுகொண் டிருக்கிறாள்
கோழியொன் றழுது குமைகிற தங்கே
எதுவெனப் பார்க்கவங் கேகிட லாமா
அருகிலே சென்று ஆராய லாமா?"

அவனே அருகில் அடிவைத் தேகினன்
பக்கம் சென்றனன் பார்ப்பதற் காக;
அழுதுகொண் டிருப்பது அரிவையு மல்ல
குரல்கொடு புலம்புதல் கோழியு மல்ல;
அதுஒரு தோணி அழுதுகொண் டிருந்தது
முன்ஒரு படகு முறைப்பா டிட்டது. 160

முதிய வைனா மொயினன் மொழிந்தான்
படகின் பக்கம் படர்ந்ததும் கேட்டான்:
"எதற்கு அழுகை இரும்மரப் படகே
**உகைமிண்டுப் படகே உன்முறைப் பாடேன்
பலகையால் படைக்கப் பட்டதால் அழுகையா
உகைமிண் டுரமாய் உற்றதால் அழுகையா?"

மரத்தின் படகு வருபதில் சொன்னது
உகைமிண்டுப் படகு உரைத்தது இவ்விதம்:
"படகின் விருப்பம் பாய்புனற் செல்வது
உருகு**தார் புசிய உருளையி லிருந்து 170
காரிகை விரும்புவள் கணவனின் வீடே
பிறந்த இல்லமே உயர்ந்ததா யிருப்பினும்;
ஏழைப் படகுநான் அழுகிறேன் அதற்காய்
துயர்ப்பட்ட தோணி முறைப்படு கின்றேன்
அழுகிறேன் புனல்எனைச் செலுத்துவோற் காக
அழுகிறேன் ஓட்டுவோற் காய்அலை களில்எனை.

எனைக்கட் டியபொழு தியம்பப் பட்டது
எனைச்செய்த போது இசைக்கப் பட்டது
போர்க்கப்ப லொன்று ஆக்கப் படு(கிற)தென
அமர்க்கப்ப லொன்று அமைக்கப் படு(கிற)தென 180
என்னை நிறைத்து இரும்பொருள் கொணர
நிறையத் திரவியம் நிரப்பி வரவென;
போருக்கு நானோ போனதே யில்லை
பயணித்து நான்பொருள் பலகொணர்ந் ததுமிலை.

தரங்கெட்ட வேறு சரியிலாப் படகெலாம்
என்றுமே போருக் கேகின் றனவே
அமருக்கு நகர்ந்து அவைசெல் கின்றன,
பயணிப்பு மும்முறை படர்கோ டையிலே
நிறையப் பணத்தை நிரப்பிக் கொணர
நிறையத் திரவியம் நிரப்பிக் கொணர; 190
நானோ திறமையாய் நன்கமை படகு
பலகையோர் நூறினால் படைத்தநற் படகு
கழிவுத் துண்டில்நான் **உழுத்துப் போகிறேன்
நிதம்செதுக் கியவிடம் நீண்டே கிடக்கிறேன்;
மிகக் கேவலமாய் விளைநிலப் புழுக்கள்
வளையப் பட்டியில் வசித்திடு கின்றன
காற்றினிற் பறக்கும் கடுங்கொடும் பறவைகள்
கூடுபாய் மரத்தில் கொண்டமைக் கின்றன
தனிவனம் வாழும் தவளைகள் கூட
தொடுமுன் அணியத்தில் துள்ளித் திரிவன; 200
இருந்திருக் கும்இரு மடங்கிதில் நன்றாய்
இரண்டு மூன்று மடங்குநன் றாகும்
மலையில்ஊ சியிலை மரமா யிருந்தால்
தேவதா ராகச் செழும்புற் றரையில்
ஒருஅணில் ஓடி உலாவரக் கிளைகளில்
குட்டிநாய் தரையில் சுற்றியே வரற்கு."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அருமரப் படகே அழுதிடல் வேண்டாம்
உகைமிண்டுப் படகே உழன் றரற்றாதே 210
போர்க்கு விரைவில் போவாய் பயணம்
நகர்ந்து சமர்க்கு நன்குசெல் வாய்நீ.

இறைவனின் படைப்பாய் இருந்தால் தோணிநீ,
ஆண்டவன் படைப்பாய் அளிப்பவர் கொடையாய்,
முன்னணி யத்தை முகிழ்புனல் செலுத்து
பக்கத்தை அலையின் பக்கமாய் திருப்பு
கைமுட்டி எதுவும் கடிதுனைத் தொடாமல்
கரங்கள் எதுவும் கடந்துனிற் படாமல்
வன்தோள் எதுவும் வழிகாட் டாமல்
படுபுயம் எதையும் பயன்படுத் தாமல்." 220

மரத்தின் படகு மறுமொழி சொன்னது
உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது:
"என்வேறு பெரிய இனத்தால் முடியா
என்சகோ தரப்பட கெதாலும் முடியா
தள்ளப் படாமலே தண்புனற் செல்வது
அனுப்பப் படாமலே அலைகளிற் போவது
கைமுட்டி கொண்டு கடிது தொடாமல்
திகழ்புயம் கொண்டு திருப்பப் படாமல்."

முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"தண்புனல் நான்உனைத் தள்ளியே விட்டால் 230
மகிழ்ந்தோட முடியுமா வலிக்கப் படாமலே
இடும்துடுப் புதவி எதுவும் இன்றியே
துளியும் தண்டு வலித்தலே யின்றி
பாயிலே காற்றுப் படியா திருக்கையில்?"

மரத்தின் படகு மறுமொழி சொன்னது
உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது:
"என்வேறு பெரிய இனத்தால் முடியா
எந்தன் குழுவெவ ராலும் முடியா
விரல்வலிக் காமல் விரைந்ததே யில்லை
இடுதுடுப் புதவி எதுவும் இன்றியே 240
துளியும் தண்டு வலித்தலே யின்றி
பாயிலே காற்றுப் படியா திருக்கையில்."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"மகிழ்ந்தோட முடியுமா வலிக்கப் பட்டால்
உறுதுடுப் புதவியும் உனக்கே யிருந்தால்
தொடர்ந்து தண்டு வலித்தல்**நிற் கிருந்தால்
பாயிலே காற்றுப் படிந்துகொண் டிருந்தால்?"

மரத்தின் படகு மறுமொழி சொன்னது
உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது: 250
"நிச்சயம் எனது மற்ற இனத்தவர்
எனது சகோதர எழிற்பட கெல்லாம்
உறுவிரல் வலிக்கையில் ஓடிச் சென்றன
இடுத்துடுப் புதவிகள் இருந்த போதிலே
தண்டு வலித்தல் தான்தொடர்ந் திருக்கையில்
பாயிலே காற்றுப் படிந்துகொண் டிருக்கையில்."

முதிய வைனா மொயினன் அதன்பின்
வருபரி தரையில் மணலில் விட்டனன்
கழுத்துப் பட்டியை கட்டினன் மரத்தில்
கடிவா ளத்தைக் கட்டினன் கிளையில் 260
தண்ணீ ருக்குள் தள்ளினன் தோணி
படரலை மிதந்த படகைப் பாடினன்
பெருமரப் படகைப் பின்னர் கேட்டனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"படுவலி வளையப் பட்டியின் படகே!
உரமாம் உகைமிண் டுயர்மரப் படகே!
பொருள்நிறைத் தேகப் பொருத்தமா யிருப்பையா
பார்வைக்கு நன்றாய்ப் படுவது போலவே?"

மரத்தின் படகு மற