Kalevala - A Finland Epic -part III (verses 25-34)
(in tamil script, unicode/utf-8 format)

கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 25-34



தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத்
தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்)
Compiled by: Elias Lonnrot
Translated into Tamil by R.Sivalingam
Edited with an introduction by Asko Parpola


குறிப்புகள்
பாடல்களின் பொருளடக்கம்
கதாநாயகர்களின் பெயர்கள்
Introduction: Dr. Asko Parpola
அறிமுகம் (தமிழாக்கம்) டாக்டர் அஸ்கோ பார்பொலா
என்னுரை: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
கலேவலா - சொற்றொகுதி
கலேவலா - விளக்கக் குறிப்புகள்
கலேவலா - ஆதார நூல்கள்

Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu

C: Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.

பாடல் 25 - மணமகனும் மணமகளும் வீட்டில் வரவேற்கப்படுதல்  *



அடிகள் 1 - 382 : மணமகனையும் மணமகளையும் அவர்களுடன் சேர்ந்து வந்தவர்களையும் இல்மரினனின் வீட்டில் வரவேற்றல்.

அடிகள் 383 - 672 : கூட்டத்தினரைச் சிறப்பாக உபசரித்து உணவும் பானமும் வழங்குதல்; தலைவன், தலைவி, விருந்து நிகழ்ச்சியின் தலைவன், மணமகளின் தோழி, விவாகத்தில் கலந்து கொண்டோ ர் ஆகியோரைப் புகழ்ந்து வைனாமொயினன் பாடுகிறான்.

அடிகள் 673 - 738 : விவாகத்தில் கலந்துவிட்டுத் திரும்பும்போது வைனாமொயினனின் சறுக்கு வண்டி உடைகிறது; அதைத் திருத்திக் கொண்டு அவன் வீடு திரும்புகிறான்.



காத்தே யிருந்தனர் கனநீள் நேரமாய்
காத்தே யிருந்தெதிர் பார்த்தே யிருந்தனர்
பாவையோ டிணைந்த பரிவ(஡)ர வரவை
கொல்லன்இல் மரினனின் இல்லம தற்கு:
முதியவர் விழிகள் அருவிகள் ஆகின
சாளரத் தருகே தரித்தவ ரிருந்தால்,
இளைஞரின் முழங்கால் இறங்கிப் பணிந்தன
வாயி லவரெதிர் பார்த்தே யிருந்ததால்,

குழந்தைகள் கால்கள் குளிரில் விறைத்தன
சுவரின் அருகில் அவர்கள்நின் றிருந்ததால்,   10
காண்நடு வயதினர் காலணி சிதைந்தன
நீர்க்கரை யதிலே நெடிதலைந் திட்டதால்.
அடுத்தடுத் தணைந்த தினத்திலோர் காலை
அடுத்தடுத் தணைந்த தினத்திலோர் பகலில்
மரக்காட் டிருந்து வந்ததோர் சத்தம்
வண்டியின் ஓசை வந்தது புல்வெளி.

கவின்*லொக் காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகார் மனையாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"மகனின் சறுக்கு வண்டியே அதுதான்    20
வடநா டிருந்து வருகிறா னென்மகன்
தன்இள மனையாம் பெண்ணவ ளுடனே.

இந்நாடு நோக்கி இப்போ(து) வருகிறான்
இத்தோட் டத்து எழில்வெளி நோக்கி
தந்தையார் அமைத்த தனிவசிப் பிடத்தே
பெற்றவர் கட்டிய பெருவாழ் விடத்தே."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
விரைந்தே வந்து வீட்டினை யடைந்தான்
தந்தையார் அமைத்த தனிவசிப் பிடத்தை
பெற்றவர் கட்டிய பெருவாழ் விடத்தை;   30
வனக்கோழி வடிவ மணிகள் ஒலித்தன
இளமரத் தியைந்த ஏர்க்கால் தம்மிலே,
இன்குயில் வடிவில் இசைத்தன மணிகள்
மின்னும் வண்டியின் முன்னணி யத்தில்,
செதுக்கிய அணில்கள் திரிந்தன துள்ளி
**'மாப்பிள்' மரத்து வண்டியின் நுகத்தில்.

கவின்லொக் காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகார் மனையாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:   40
"ஊர்காத் திருந்தது ஒளிர்புது மதிக்கு
இளையோர் சூரிய உதய மதற்கு
பிள்ளைகள் **சிறுபழச் செடியார் தரைக்கு
நீர்காத் திருந்தது கீல்பட குக்கு;
அரைச்சந் திரற்கும் அதைநான் காத்திலேன்
அல்லது பானுவை அறவெதிர் பார்த்திலேன்
எனதுசோ தரனை எதிர்பார்த் திருந்தேன்
எனதுசோ தரனையும் என்மரு மகளையும்
காலையில் பார்த்தேன் மாலையில் பார்த்தேன்
எப்படி மறைந்தான் என்பதை யறியேன்,   50
வளர்சிறு பிள்ளையை வளர்க்கின் றானா
அல்லது மெலிந்ததைக் கொழுப்பாக் குவனா
எப்படியும் அவன் இங்குமீ ளாததால்
அவனும் உண்மையாய் அளித்துவாக் ககன்றான்
காண்அடிச் சுவடுகள் கலையுமுன் வருவதாய்
குளிர்ந்த சுவடுகள் அழியுமுன் வருவதாய்.

எப்போதும் காலையில் இருந்தேன் வழிபார்த்(து)
பலநாள் நெஞ்சில் நினைவா யிருந்தேன்
சகோதரன் வண்டி தான்உரு ளாததால்
சகோதரன் வண்டி தான்ஒலிக் காததால்   60
இந்தச் சிறிய முன்றிலின் பரப்பில்
இந்தத் தோட்டத் தியைகுறு வெளியில்;
வைக்கோல் ஆனதோர் வனப்பரி இருப்பினும்
வலியஈர்ச் சட்ட வண்டியா யிடினும்
ஒருவண்டி யென்றே உரைப்பன்நான் அதையும்
சறுக்குவண் டியெனச் சாற்றுவேன் உயர்வாய்
என்சோ தரனையஃ திங்கு கொணருமேல்
என்அழ கனையஃ தில்லம் கொணருமேல்.

எதிர்பார்த் திருந்தேன் எல்லாக் காலமும்
பகற்பொழு தெல்லாம் பார்த்துநா னிருந்தேன்   70
எதிர்பார்த் திருந்தேன் என்தலை சாய்வரை
தளர்குழற் குடுமி சரிந்து விழும்வரை
நேர்பார் வைவிழி சோர்வாம் வரையும்
என்சகோ தரன்வரு மெனநம் புகிறேன்
இச்சிறு முற்ற எழிற்பரப் புக்கு
இத்தோட் டத்து இயல்குறு வெளிக்கு;
இங்குவந் தவனும் இறுதியில் சேர்ந்தான்
இறுதியில் ஒருதரம் இதைச்செய் திட்டான்
செந்நிற முகத்தாள் சேர்ந்தரு குள்ளாள்
சிவந்தகன் னத்தாள் திகழ்ந்தரு குள்ளாள்.   80

மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
நுதற்சு(ட்)டிப் புரவியை இதம்செ(ல்)ல விடுவீர்
நல்லினப் பரியதைச் செல்லவிட் டிடுவீர்
பழக்கம் அதற்குள பதவைக் கோற்கு
தகுமதன் வழக்குடைத் **தானியத் துக்கு;
பொருந்தடுத் தெமக்கு விருந்தொன் றளிப்பீர்
ஏனையோர்க் களியும் எமக்கும் தாரும்
அனைத்துக் கிராமத் தவர்க்கும் தாரும்.

விருந்தெலாம் தந்து விரைந்து முடிந்தபின்
உரைப்பீர் எங்களுக் குமது கதைகளை    90
பகர்வதற் கொன்றிலாப் பயணம் முடிந்ததா
நலமாய்ச் சுகமாய் நடந்ததா வழிச்செலல்?
மாமியார் அவளிடம் போய்ச்சேர் கையிலே,
விரிபுகழ் மாமனார் வீடடை கையிலே?
அரிவையை யடைந்திரா? ஆட்சியைப் பிடித்திரா?
போர்க்குவந் தவரைப் புறம்கண் டீரா?
பலகைக் கோட்டையைப் பணிய வைத்தீரா?
எதிர்எழும் சுவரை இடித்துவீழ்த் தினீரா?
மாமியார் இடத்தடி வைத்தேகி னீரா?
எசமானன் இடத்தில்நீர் இருந்துகொண் டீரா?   100

இல்லாது வினாவல் இப்போ(து) பார்க்கிறேன்
உசாவல் இன்றியே உளத்தில் உணர்கிறேன்
நலமாய்ச் சுகமாய் நடந்தது வழிச்செலல்
சிறப்பாய் இனிப்பாய் செலவவர்க் கானது
பெற்றனர் வாத்துப் பிடித்தனர் ஆட்சி
போர்க்குவந் தவரைப் புறம்கண் டிட்டார்
பலகைக் கோட்டையைப் பணியவும் வைத்தார்
**பலகைச் சுவரைப் படியில் விழுத்தினார்
மாமியா ரிடத்தினிலே மகிழ்ந்திருக் கையிலே
இணையிலா மாமனார் இல்லத் திருக்கையில்;   110
பொன்னாம் வாத்துப் போந்தரு கிருந்தாள்
கோழிகக் கத்துக் கொள்அணைப் பிருந்தாள்
அருகிலே தூய அரிவையு மிருந்தாள்
அவனுடை ஆட்சியில் அமர்ந்தள்வெண் ணிறத்தாள்.

இப்பொ(ய்)யை இங்கு எவர்எடுத் தடுத்தார்?
கொடிய செய்தியைக் கொணர்ந்ததா ரப்பா?
மாப்பி(ள்)ளை வெறுங்கையாய் வருகிறார் என்று,
பொலிப்பரி அங்கே போனது வீணென?
மாப்பி(ள்)ளை வெறுங்கையாய் வரவி(ல்)லை யிங்கு
பொலிப்பரி அங்கே போந்தில துவீண்:    120
ஏதோஇருக் கிறது இழுத்துவ ரப்பரி
**'சணற்சடை' அசைவில் தரித்துள தர்த்தம்
ஏனெனில் வியர்த்து இருக்கிற து(நற்)பரி
நுரைத்துநிற் கிறது தரப்பரிக் குட்டி
**அளகுக் குஞ்சையிங் கழைத்துவந் ததனால்
இரத்த நிறத்தளை இழுத்துவந் ததனால்.

இப்போது வண்டியி லிருந்தெழு, அழகே!
தரமிகு பரிசே, சறுக்குவண் டியிலிருந்(து)!
நீயாய் எழுவாய் நினைக்கரம் தொடாமல்
எழுவாய் உதவிநீ இல்லா தெதுவும்    130
இளங்கண வன்உனை ஏந்திட வரலாம்
இரும்சிறப் புன்னவன் எழுப்பிட வரலாம்.

சறுக்குவண் டியின்மேல் தான்நீ யெழுந்து
வியன்புற வழியாய் வெளியே றுகையில்
பழுப்பு நிறத்துப் பாதையில் அடிவை
ஈரல் நிறத்துப் பூமியில் கால்வை
பன்றியின் நடையால் மென்மையாம் தரையில்
பன்றிக் கணங்கள் பதம்மிதி பூமியில்
ஆட்டுக் குழுதிரிந் தமைந்தமென் நிலத்தில்
திகழ்பரிப் பிடர்மயிர் தேய்படு பூமியில்.    140

தாரா அடிபோல் தரைமிசை அடிவை
வாத்தின் பதம்போல் வைப்பாய் வெளிகால்
முழுமையாய்க் கழுவிய முற்றப் பரப்பிலே
மட்டமாய்ப் பரந்தஇவ் வன்னமாம் நிலத்தில்
மாமனார் செய்தவிவ் வன்முற்றப் பரப்பிலே
மாமியார் படைத்தே வைத்தஇவ் விடங்களில்
சகோதரன் செதுக்கிய தன்தொழில் தலத்திலே
சகோதரி நீலத் தண்பசும் புல்நிலம்;
பாதம் மெதுவாய்ப் படிமிசை வைப்பாய்
மண்டபப் பலகைக்(கு) மாற்றுவாய் அதைப்பின்   150
மண்டபத் தூடே மற்றுநீ மேற்செல்
அங்கிருந் துள்ளே அதன்பின் இடம்பெயர்
புகழ்பெறும் கூரைப் புணர்தம் பக்கீழ்
இல்லத் தழகாய் இயைகூ ரையின்கீழ்.

இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
தாரா எலும்பால் தரையெலாம் மிசைத்தது
ஆரேனும் வந்தவ் வகல்தரை நிற்க,
ஒலித்தது பொன்இயை பொலிமனைக் கூரை
யாரேனும் வந்து நடப்பதற் கதன்கீழ்,   160
சாளரம் யாவுமே தனிமகிழ் வுற்றன
ஆரேனும் வந்து அமர்வதற் கவற்றில்.

இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
கதவில் கிறீச்சென கைப்பிடி ஒலித்தது
மோதிரக் கையினால் மூடப் படற்கு,
களஞ்சியக் கூடத்தும் கனவொலி எழுந்தது
சிறந்தமே லங்கி திகழழ **காட்கு,
என்றும் கதவுகள் இருந்தன திறந்தே
வருபவர் திறந்திட, வரவெதிர் பார்த்தே!    170

இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
சுழல்காற்று இவ்வறை சுழன்றுவீ சியது
யாரேனும் வந்தே நனிதுகள் துடைக்க,
கூடம் இடமொதுக்கி ஆயத்தம் கொண்டது
யாரேனும் வந்து நேரிற்சுத் தம்செய,
புத்தில்லக் குடில் புலம்பித் தவித்தன
யாரேனும் வந்தே நன்றாய்ப் பெருக்கிட.
இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்   180
மறைவாய் முன்றில்கள் மாறிவந் தனவிடம்
யாரேனும் வந்து நனிதுகள் பொறுக்கிட,
மாடங்கள் தாமாய் வந்தன கீழே
யாரேனும் வந்து நனியுள் நுழைய,
உயர்வளை வளைந்தது உத்தரம் பதிந்தது
இளம்மனை ஒருத்தியின் எழில்உடை களுக்கு.

இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
ஒழுங்கைசந் தெல்லாம் ஒலிசெய் தழைத்தன
யாரேனும் வந்து நடந்திடத் தம்மேல்,    190
மாட்டுத் தொழுவுகள் வந்தன நெருங்கி
யாரேனும் வந்து நற்சுத் தம்செய,
களஞ்சிய முற்றம் நகர்ந்து பின்போனது
வாத்தொன்று வந்து ஆற்றிடஅதில் தொழில்.

இன்றைக் கிங்கே இப்பகற் பொழுதில்
நேற்றும்அத் தோடு நேற்று முழுவதும்
வேளைகத் தியது வியன்பசு மாடு
காலையூண் கொடுப்போர் களைஎதிர் பார்த்து,
குதிரையின் குட்டிகள் குரல்கொடு கனைத்தன
யாரேனும் வந்து வீசிட வைக்கோல்,    200
வசந்தத்து ஆடு வலிதுகத் தியது
எதிர்பார்த்து மென்மேல் இரைவைப் போரை.

இன்றைக் கிங்கே இப்பகற் பொழுதில்
நேற்றும்அத் தோடு நேற்று முழுவதும்
அமர்ந்தனர் சாளரத் தனைத்து முதியரும்
காண்பிள் ளைகள்நீர்க் கரைகளில் திரிந்தனர்
அரிவைய ரோசுவர் அருகினில் நின்றனர்
நின்றனர் பையன்கள் நெடுங்கடை வாயிலில்
வருமிளம் மனைவியின் வரவினை நோக்கி
மணப்பெண் ஒருத்தியை மகிழ்ந்தெதிர் பார்த்து.   210

இப்போ(து) முன்றிலில் இருப்போர்(க்கு) வாழ்த்துக்கள்!
வெளியில் நிற்கும் வீரர்கள் யா(வ)ர்க்கும்!
உனக்கும் குடிசையே, உளோர்க்கும் வாழ்த்துக்கள்!
குடிற்கும், தங்கிக் கொண்டஅன் னியர்க்கும்!
கூடமே, உனக்கும்நீ கொண்டுளோர் தமக்கும்!
மிலாறுரிக் கூரை(க்கும்), மிகக்கீ ழுளோர்க்கும்!
மாடமே, உனக்குமுள் வாழ்வோர்(க்கும்) வாழ்த்துக்கள்!
பலகைநூ றி(ல்லிற்கும், படிந்துளசிறார்க்கும்!
வான்நிலா வாழ்த்துக்கள், மன்னனே வாழ்த்துக்கள்!
இளையநற் பரிவ(஡)ரம் எல்லோர்க்கும் வாழ்த்துக்கள்   220
ஒருபோ தும்முன் இருந்தில திங்கே
இருந்தில முன்னும் இருந்தில நேற்றும்
இவ்வித மொருகுழாம் இங்கிருப் பவர்போல்
எழிலுறும் மனிதர்கள் இங்கிருப் பவர்போல்.

மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
சிவப்புச் சிறுதுணி அவிழ்த்துப் போடுக
பட்டு முகத்திரை அப்பால் நீக்குக
கிளருமும் அன்புடைக் **கீரியைக் காட்டுக
காத்திருந் தீர்இதற் காயைந் தாண்டுகள்
எட்டாண்டு விரும்பி எதிர்பார்த் திருந்தீர்.    230

நீர்முயன் றிருந்தபொற் காரிகை கொணர்ந்திரா?
குயிலாள் ஒருத்தியைக் கொணர முயன்றிரே!
நீள்புவி வெள்ளை நிறத்தளைத் தெரிந்திரே!
சிவந்தகன் னத்தளை புனற்பெற இருந்திரே!

எவ்வினா வும்மிலா திப்போ பார்க்கிறேன்
கேள்வியே யிலாது கிளர்மனத் துணர்கிறேன்
குயிலாள் ஒருத்தியை கொணர்ந்தீர் உம்முடன்
நீலநல் தாரா நிதமும் காப்பினில்
உச்சியில் தளிர்த்தநற் புத்தம் புதுத்தளிர்
பலபசுந் தளிரதில் ஒரேயிளம் தளிரதை   240
சிறுபழச் **செடியிலே மிகப்புதுத் தழையதை
பலபுதுச் செடிகளில் ஒருபுதுச் **செடியதை."

அங்கொரு பிள்ளை அகல்தரை யிருந்தது
தரையிலே யிருந்தஅப் பிள்ளைசாற் றியது:
"இழுத்துவந்(த) தென்னநீ இனியஓ, சோதர!
அழகில்கீல் பூசிய அடிமரக் கட்டையாம்
தார்ப்பீப்(பா) பாதியதாம் சரிநீ ளத்தினில்
நூனாழி அளவாம் நுதலிய உயரம்.

அப்படி யப்படி அப்பாவி மாப்பிளாய்
இதைக்காத் திருந்தீர் இந்நாள் முழுதும்   250
தெரிவேன் நூறுபெண் சமன்என் றீரே
கொணர்வேன் ஆயிரத் தொருத்தி யென்றீரே;
நூறிலே நல்லளாய் நுவலஒன் றடைந்தீர்
அவலட் சணம்சமம் ஆயிரம் பெற்றீர்
காண்சதுப் புநிலக் **காகம் போலவும்
வேலியி லிருந்திடும் வெறும்**புள் போலவும்
வயல்களில் வைத்திடும் வெருளியைப் போலவும்
தருசி நிலக்கரிக் குருவியைப் போலவும்.

இத்தனை நாட்களும் என்னசெய் தாளவள்
கடந்தகோ டையிலே நடந்தது தானெது?   260
வன்னக்கை யுறையெதும் பின்னா திருந்திடில்
தூயகா லுறையெதும் தொடங்கா திருந்திடில்.
வெறுங்கையை வீசியே வீடு வருகிறாள்
நவில்மாமன் **இற்கு நற்பரி சின்றியே
அவள்கூடைச் சுண்டெலி சலசலத் தோடுதாம்
**'பெருஞ்செவி' பெட்டியுள் பரபரத் தோடுதாம்."

கவின்லொக் காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகிய மனையாள்
அதிசய மாம்இக் கதையது கேட்டு
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:   270
"என்னநீ சொன்னாய்? ஈனப் பிள்ளையே!
பிதற்றிய தென்ன? பதரெனும் பிறப்பே!
அறியலாம் பிறரது அதிசயச் செய்தி
இகழ்வுறும் செய்தியும் எங்கும் பரவலாம்
எனினுமொன் றரிவையாம் இவள்சார் பில்லையே
பகர்இவ்வில் வாழ்பவர் பற்றியும் இல்லையே.

தீயதோர் வார்த்தையை செப்பினாய் இப்போ(து)
வார்த்தையும் இப்போ(தே) வந்தது கொடியதாய்
ஒருநிசி வயதுறும் ஒருகன் றின்வாய்
ஒருபகல் வயதுறும் ஒருகுட் டியின்தலை;    280
மாப்பிள்ளை பெற்றது வன்னநல் நங்கையே
நனி**விழு நாட்டினால் கொணரப் பட்டவள்
பாதியே பழுத்த **சிறுபழம் போன்றவள்
ஒருகுன் றுதித்த **சிறுபழம் அனையவள்
அல்லது மரத்திலே அமர்ந்துள குயிலவள்
**பேரியில் தங்கிடும் ஒருசிறு புள்ளவள்
மிலாறுவின் எழிலுறும் வியன்சிறைப் பறவையாம்
'மாப்பிள்' மரத்தமர் ஒளிர்மார் புடையவள்.

ஜெர்மனி நாட்டிலும் எவரும் பெறவொணா
எஸ்தோனி யாவுக் கப்பால்(உம்) பெறவொணா  290
இந்த அரிவையின் இத்தனை அழகையும்
இந்த வாத்ததின் இனிமையின் தன்மையை
இந்த வதனத்து இதுபோல் எழிலினை
இந்தத் தோற்றத்தில் தெரிகின்ற மகிமையை
இந்தக் கரங்களில் இருக்கும் வெண்மையை
மென்மைக் கழுத்தில் வியப்பமை வளைவினை.

அத்துடன் வெறுங்கையாய் அரிவையும் வந்திலள்
கம்பளித் துணிகள் நம்புவிக் கொணர்ந்தவை
மேலங்கி வகைகளும் மிக்கன அவற்றுடன்
அகல்விரிப் புகளும் மிகச்சுமந் துற்றனள்.   300

பெண்ணுக்கு இங்கே திண்ணமாய் நிறைந்துள
சொந்தத் தறியின் தொழிலாம் பொருட்களும்
சொந்தராட் டினத்தில் விந்தைநெய் துணிகளும்
சொந்த விரல்நுனித் தோன்றிய வகைகளும்
வெள்ளை நிறத்தில் மிகுவகை ஆடைகள்
குளிர்கா லத்தில் கழுவிய உடைகளும்
வசந்த வெய்யிலில் வைத்துலர் துணிகள்
கோடை நிலவிலே காய்ந்தது முள்ளன:
நலமார் விரிப்புகள் சலசலத் தசையும்
தடித்த தலையணை பிடித்தநல் மென்மை   310
பட்டுத் துணிகள் பளபளத் தாடும்
கம்பளி யாடைகள் பைம்பொனா யொளிரும்.

நல்ல நங்கையே, நவிலெழி லணங்கே!
அழகிய செந்நிற அரிவையே, கேளாய்!
இல்லில்நீ நிறைவாய் புகழோ டிருந்தவள்
பிதாவின் வீட்டிலே மகளா யிருக்கையில்,
நிறைவாம் புகழோடு நிலைப்பாய் வாழ்வெலாம்
மருமக ளாக மணாளனின் மனையிலே.
துன்பப் படுதலைத் தொடங்கவும் வேண்டாம்
தொல்லைகள் வருமெனத் துணியவும் வேண்டாம்   320
அழைத்துனை வந்தது சதுப்புத் தரைக்கல
படர்ந்துனைக் கொணர்ந்தது படுகுழிக் கல்ல,
தானிய மேடிருந்(து) தனிக்கொணர் பட்டனை
இன்னுமோர் அதிகமாய் இருக்கும்தா னியவிடம்,
நீகொணர் பட்டனை 'பீரு'ள வீடிருந்(து)
'பீர்'இன்னும் மிக்குள வீடொன்று நோக்கியே.

நல்ல நங்கையே, நவிலெழி லணங்கே!
இப்போ துன்னிடம் இவ்விதம் கேட்கிறேன்:
இங்குநீ வருகையில் இதுகண் டனைகொல்
கதிர்த்தா னியத்திரள் கட்டிவைத் திருந்ததை    330
செறிகனக் கதிர்களைத் திரட்டிவைத் திருந்ததை?
அவையனைத் தும்மிவ் வகத்தையே சேர்ந்தவை
உயர்ந்தஇம் மாப்பிளை உழுததால் வந்தவை
உழுததால் வந்தவை விதைத்ததால் விளைந்தவை.
பாவையே, இளமைப் பருவப் பெண்ணே!
இப்போ துனக்கு இதனைக் கூறுவேன்:
இம்மனை நீவர எவ்வா றறிந்தையோ
அதுபோல் பழகலும் அறிந்தே யுள்ளாய்
இங்கே ஒருபெண் இருப்பது நல்லது
மருமகள் இங்கே வளர்வதும் நல்லது    340
**நிறைதயிர்ச் சட்டி நின்கரத் துள்ளது
வெண்ணெய்க் கிண்ண மெலாமுன துடமை.

ஒருபெண் ணிங்கே உறைவது நல்லது
ஒருகோழி யிங்கே வளர்வதும் நல்லது
சவுனாப் பலகையிங் ககலமா யானவை
அகத்தரைப் பலகைகள் அமைவன விசாலம்
தலைவர்கள் இனியர்நின் தந்தையைப் போல
தலைவிகள் இனியர்நின் தாயார் போல
புத்திரர் நல்லவர் போலநின் சோதரர்
நல்லவர் புதல்விகள் நின்சகோ தரிபோல்.   350

ஏதெனும் முனக்கு ஆசையேற் பட்டால்
வந்தால்ஏ தெனும் மனதில் விருப்பம்
உந்தை பிடிக்கும் உயர்மீன் போலோ
வேட்டைச் சோதரன் காட்டுக் கோழியோ
அதைமைத் துனரிடம் அடுத்துப் பேசேல்
மாமனா ரிடம்போய் மற்றதைக் கேளேல்
மாப்பிள்ளை யிடத்தே வந்துநே ராய்க்கேள்
உனைக்கொணர்ந் தவரிடம் உகந்ததைப் பெறுவாய்.
எதுவுமே இல்லையே இருக்குமக் காட்டில்
நான்குகால் களிலே நனிவிரை பிராணிகள்,   360
வானப் பறவைகள் மற்றெதும் இல்லையே
வியன்சிறை இரண்டினை விசிறிப் பறப்பவை,
அத்துடன் நீரிலும் மற்றெது மில்லையே
மிகவும் சிறந்திடு மீன்கணக் கூட்டம்,
உன்னைப் பிடித்தவர் பிடிக்கொணா ஒன்று
பிடித்தவர் பிடியா(தது) கொணர்ந்தவர் கொணரா(தது).

இங்கொரு மங்கை இருப்பது நல்லது
ஒருகோழி யிங்கே வளர்வதும் நல்லது
திரிகைக் கற்கிங் கவசர மில்லை
உரலைப் பெறற்கும் ஒருகவ லையிலை   370
தண்ணீர் கோதுமை தனையிங் கரைத்திடும்
நீர்வீழ்ச்சி நன்கே **தானியம் கலக்கிடும்
பாத்திரங் களைஅலை பதமாய்க் கழுவிடும்
அவற்றைக் கடல்நுரை ஆக்கிடும் வெளுக்க.

ஓ,நீ அன்புடை உயரிய கிராமமே!
விரிந்தஎன் நாட்டில் மிகச்சிறப் பிடமே!
கீழே புற்றரை மேலே வயல்நிலம்
இடைநடு வினிலே இருப்பது கிராமம்
இயல்கிரா மக்கீழ் இனிதாம் நீர்க்கரை
அந்தநீர்க் கரையில் அருமைநீ ருளது    380
வாத்துக்கள் நீந்த வளமிகு பொருத்தம்
விரிநீர்ப் பறவைகள் விளையாட் டயர்தலம்."

வந்தோர்க் குப்பின் வழங்கினர் பானம்
வழங்கினர் உணவு வழங்கினர் பானம்
ஏர(஡)ள மிருந்தன இறைச்சித் துண்டுகள்
அத்தொடு பணிய(஡)ர அழகிய வகைகள்
பார்லியில் வடித்த 'பீரு'ம் இருந்தது
கோதுமை யூறற் பானமு மிருந்தது.

புத்தாக்க உணவு போதிய திருந்தது
போதிய உணவும் போதிய பானமும்    390
தயங்கு செந்நிறச் சாடிகள் பலவிலும்
அழகிய கிண்ணம் அவைகள் பலவிலும்
நனிபிய்த் துண்ணப் பணியா ரங்கள்
விரும்பிக் கடிக்க வெண்ணெய்க் கட்டிகள்
வெட்டி யெடுக்க வெண்ணிற மீன்கள்,
துண்டு துண்டாக்க வஞ்சிர மீன்கள்
வெள்ளியில் அமைந்த வெட்டுக் கத்தியால்
தங்கத் தமைந்த தனியுறைக் கத்தியால்.

வாங்கப் படாத'பீர்' வழிந்தோ டிற்று
செலுத்தா **மர்க்காத் தேன்பெரு கிற்று   400
உத்தர உச்சி(யி)ருந் தோடிற் றுப்'பீர்'
பீப்பாவு ளிருந்து பெருகிற் றுத்தேன்
அருந்து'பீர்' இருந்தது அதரங்க ளூற
தேனங் கிருந்தது சேர்ந்துள மயங்க.

இங்கே குயில்போல் இனிதுயார் பாடுவார்?
பொருத்தம தான பொற்பா டகன்யார்?
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்
பாடல்கள் அங்கே பாடத் தொடங்கினன்
பாடல்கள் யாத்துப் பாடத் தொடங்கினன்   410
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"அன்புடைச் சோதர, அரியஎன் சோதர!
என்னொடு இணைந்த இனியசொல் வல்லவ!
நாவன்மை படைத்தவென் நல்லதோ ழர்களே
இப்போநான் புகல்வதை இனிதுகே ளுங்கள்
வாத்துக்கள் சேர்வது **வாய்க்குவாய் அரிது
கண்ணொடு சோதரி கண்ணைநோக் குதலும்
அருகரு கிருப்பதுவும் அரிதுசோ தரர்கள்
தோளொடு **தோள்தாய்த் தோன்றல்கள் நிற்பதும்   420
வறிதாய் வீணே மயங்கிடும் எல்லையில்
தெரியும் வடபால் செழிப்பிலா நிலத்தில்.

பாடல்கள் இவ்விதம் பாடத் தொடங்கவா?
பாடல்கள் யாத்துப் பாடத் தொடங்கவா?
பாடல்கள் பாடலே பாடகர் தொழிலாம்
கூவுதல் வசந்தக் குயிலின் தொழிலாம்
**நீலமா தர்க்குச் சாயம் அழுத்தலும்
**தறியமர் மகளிர்க்(கு) நெய்தலும் தொழிலாம்.

லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்   430
இரும்காட் டருமெரு திறைச்சியுண் நேரம்
சிறுகலை மான்ஊன் தின்றிடும் நேரம்;
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்
உயர்தா னியத்தில்நல் உணவுண் நேரம்
வாய்நிறை உணவை மகிழ்ந்துண் கையிலே?

லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்
ஒருகிண் ணம்நீர் உவந்தருந் துகையில்
**மரப்பட்டை ரொட்டி மகிழ்ந்துமெல் லுகையில்;   440
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்
தானியம் வடித்த பானம் பருகையில்
பார்லியில் செய்த 'பீர்'அருந் துகையில்?

லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்
வெளியே புகைபடி கூடார ஒளியில்
படிந்த கறைநிறை படுக்கை யதிலே;
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்    450
உயர்புக ழுடையஇவ் உத்தரத் தின்கீழ்
குறையா அழகுக் கூரையின் கீழே?

ஆடவர் இங்கே அமர்தல்நன் றாகும்
இனியபெண் மணிகள் இருப்பதும் நன்றாம்
'பீர்'நிறைந் திருக்குமிப் பீப்பாப் பக்கம்
தேன்நிறைந் திருக்குமிச் சாடியைச் சூழ்ந்து
எங்கள் அருகில்வெண் மீனின் நீரிணை
அருகில்வஞ் சிரத்தின் அகல்வலை வீச்சிடம்
உண்கையில் உணவெதும் ஒழிந்துபோ னதேயிலை
பபானம் பருகையில் பற்றா நிலையிலை.   460

ஆடவர் இங்கே அமர்தல்நன் றாகும்
இனியபெண் மணிகள் இருப்பதும் நன்றாம்
உறுதுய ரோடிங்(கு) உணல்கிடை யாது
கவனிப்(பு) ஒன்றிலாக் கழியும் வாழ்விலை;
உறுதுயர் இன்றியே உண்ணுதல் இங்குள
கவனிப்பு நிறைந்த கவின்வாழ் விங்குள
இந்தத் தலைவனின் எல்லாக் காலமும்
இந்தத் தலைவியின் இன்வாழ் நாளெலாம்.

இங்கே முதலில் எவரைப் புகழ்வேன்?
தலைவர் இவரையா தலைவி இவளையா?   470
வீரர் வழமையாய் மிகுமுன் பொழுதெலாம்
தலைவரைப் புகழ்ந்தே தனிமதித் தார்முதல்
தலைவர் அமைத்தவர் சதுப்பில் வசிப்பிடம்
வனத்தி லிருந்தொரு வசிப்பிட மமைத்தவர்
அகல்பெரு ஊசி(யி)லை அடிமரம் கொணர்ந்தார்
தாருவைத் துணித்துத் தலையுடன் கொணர்ந்தார்
அவற்றைநல் லிடத்தில் அமைவுடன் வைத்தார்
அவற்றை உறுதியாய் ஆங்காங்கு நிறுத்தி
உயர்ந்த குடிக்கு உயர்பெரும் வசிப்பிடம்
அழகுறும் தோட்டத் தமைத்தனர் வீட்டை;   480
கட்டினார் சுவர்மரக் காட்டினி லிருந்து
உத்தரம் பயங்கரக் குன்றிலுண் டானது
பல்குறுக் குமரம் பாறை நிலத்திலும்
சிறந்தசட் டமெலாம் சிறுபழப் புதரிலும்
**சிறுபழச் செடியுள திடரினில் பட்டையும்
உறைந்திடாச் சேற்றினில் பாசியும் பெற்றனர்.

வாழ்விடம் சரியாம் வகைகட் டியதும்
இருப்பிடம் சரியாம் இடத்தில் அமைந்தது
சுவர்வே லைக்குத் தோற்றினர் நூற்றுவர்
இல்லக் கூரையில் இருந்தனர் ஆயிரம்   490
இந்தவாழ் விடமதை இனிதாய் அமைத்திட
பகருமிந் நிலத்தைப் பரப்பி யமைத்திட.

ஆயினும் இவ்வா றமைந்தஇத் தலைவர்
வாழ்விடம் அமைத்து வருகையில் இவ்விதம்
கண்டது இவர்சிகை காற்றுப் பலதினை
கொடுங்கால நிலையைக் குழலும் கண்டது
அடிக்கடி இந்தநல் லழகிய தலைவரின்
கையுறை பாறைக் கல்லில் இருந்தது
தாருவின் கிளையில் தரித்தது தொப்பி
சேற்றில் காலுறை திணிந்து கிடந்தது.   500

அடிக்கடி இந்த அழகுநல் தலைவர்
காலையில் மிகஅதி காலைவே ளையிலே
மற்றைய மனிதர் வளர்துயி லெழுமுன்
கிராமச் சனங்கள் கேட்பதன் முன்னர்
அனல்வெப்ப மருங்கு அகல்வார் துயிலால்
குச்சியால் கட்டிய குடிசையில் எழுவார்
துரிகைகொண்டு வாரித் தலையை
பனித்துளி யால்விழி பாங்காய்க் கழுவுவார்.

அதன்பின் இந்த அழகுநல் தலைவர்
அறிந்த மனிதரை அகத்துள் கொணர்வார்   510
பாடகர் வாங்கில் பலர்மிக் கிருப்பர்
திளைப்போர் களிப்பில் திகழ்வர்சா ளரத்தே
மந்திரம் சொல்பவர் வன்னிலப் பலகையில்
மூலையில் இருப்பர் மாயம் செய்பவர்
சுவரின் பக்கம் தொடர்ந்து நிற்போரும்
வேலியோ ரத்தை மிதித்தகல் வோரும்
முன்றிலில் நீடு நடந்துசெல் வோரும்
நாட்டின் குறுக்கே நனிபய ணிப்பரும்.

தலைவரை முதலில் தனிப்புகழ்ந் திசைத்தேன்
தருணமிஃ தன்புத் தலைவியைப் புகழ்வேன்   520
தயாராய் உணவைச் சமைத்துவைத் ததற்கு
நீண்ட மேசையை நிறைத்து வைத்ததற்கு.

தடித்த ரொட்டிகள் படைத்தவள் அவளே
தகுபெரு மாப்பசை தட்டி யெடுத்தவள்
உவந்தவள் விரையும் உள்ளங் கைகளால்
அவளது வளைந்த ஐயிரு விரல்களால்
ரொட்டிகள் மெதுவாய்ச் சுட்டே எடுப்பாள்
விருந்தா ளிகளை விரைந்துப சரிப்பாள்
பன்றி இறைச்சியும் பலதொகை சேர்த்து
அத்துடன் மீன்பணி யாரமும் கலந்து;   530
கத்தியின் அலகுகள் மெத்த நழுவிடும்
உறைக்கத்தி முனையும் உடனாய் வழுவும்
வஞ்சிர மீனின் வன்தலை துணிக்கையில்
கோலாச்சி மீனின் கொழுந்தலை அறுக்கையில்.

அடிக்கடி இந்த அழகுநல் தலைவி
கவனம் மிகுமிக் கவின்அக மனையாள்
சேவல்இல் லாமலே தெரிந்தவள் துயிலெழ
கோழிக் குஞ்சுக் குரலிலா தேகுவாள்
உகந்தஇவ் வதுவை ஒழுங்காம் காலம்
பணியா ரம்பல பலசுடப் பட்டன   540
புளித்த மாவுறை முழுப்பதப் பட்டது
'பீரு'ம் வடித்துப் புர்த்தியா யிருந்தது.

சிறப்புறும் இந்தத் திகழ்நல் தலைவி
கவனம் மிகுமிக் கவினக மனையாள்
அறிவாள் 'பீரை' அரும்பதம் வடிக்க
பெருகவே விடுவாள் பெருஞ்சுவைப் பானம்
நுரைக்கும் முளைகள் நுண்தளிர் இருந்து
கூலத் தினிக்கும் ஊறலி லிருந்து
கவின்மர அகப்பையால் கலக்கவும் மாட்டாள்
கிடைத்தகாத் **தண்டினால் கிளறவும் மாட்டாள்  550
கைமுட்டி கொண்டு தானே கலக்குவாள்
தொட்டதன் கரங்களால் மட்டும் கிளறுவாள்
கவினார் புகையில்லாச் சவுனா வறையில்
சுத்தமாய்ப் பெருக்கித் துடைத்த பலகையில்.

இந்தநல் தலைவி என்றுமே செய்யாள்
கவனம் மிகுமிக் கவினக மனையாள்
அடித்து முளைகள்கூ ழாக்கவும் மாட்டாள்
கூலமா வூறலைக் கொட்டாள் நிலத்தில்
ஆயினும் சவுனா அடிக்கடி செல்வாள்
நடுநிசி நேரமும் நனிதனிச் செல்வாள்   560
ஓநாய் பற்றி உறாளாம் அச்சம்
வனவிலங் கெதற்கும் மனத்துப் பயப்படாள்.

இப்போ(து) புகழந்து இசைத்தேன் தலைவியை
பொறுங்கள் என் சிறந்த மனிதரைப் புகழுவேன்!
சிறந்த மனிதராய்த் திகழ்ந்தவர் எவரோ?
இன்றைய காட்சியின் இயக்குனர் யாரோ?
சிறந்தவர் கிராமச் சிறந்த மனிதராம்
காட்சியை நடாத்தும் பாக்கியம் பெற்றவர்.

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
அகன்ற துணிமே லாடையில் இருக்கிறார்   570
அவ்வுடை கைக்கீழ் அளவா யுள்ளது
இடுப்பின் பரப்பில் இறுக்கமா யுள்ளது.

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
ஒடுங்கிய நீண்ட உடையி லிருக்கிறார்
ஆடையின் விளிம்பு அதுமண் தொடுமாம்
ஆடையின் பின்புறம் அதுநிலம் படியும்.

மேற்சட்டை சிறிது வெளித்தெரி கிறது
எட்டிப் பார்க்கிற ததிற்சிறு பகுதி
நிலவின் மகளவள் நெய்ததைப் போன்று
ஈயத்து நெஞ்சாள் இயற்றிய தைப்போல்.   580

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
அரையினில் கம்பளி அமைந்தநற் பட்டி
ஆதவன் மகளவள் அமைத்தநற் பட்டி
மிளிர்நக முடையவள் மினுக்கிய பட்டி
தீயில் லாத காலம் நடந்தது
நெருப்பையே அறியா நேரம் நடந்தது.

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
கவின்பட் டிழைத்த காலுறை கால்களில்
காலுறைப் பட்டியும் கவின்பட் டானது
காலதன் பட்டிஒண் கவின்பட் டானது    590
எழிற்பொன் னாலிவை இழைக்கப் பட்டன
அலங்க(஡)ரம் வெள்ளியால் ஆக்கப் பட்டன.

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
கவினார் ஜேர்மனிக் காலணி கால்களில்
ஆற்றிலே அன்னம் அழகாய் மிதத்தல்போல்
வாத்துக் கரைகளில் வந்துநீந் துதல்போல்
தாராக் கிளைகளில் தரித்திருப் பதுபோல்
மரம்வீழ் காட்டில் இடம்பெயர் புட்போல்.

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
பொன்னிறத் தினிலே மென்சுருள் தலைமயிர்   600
தங்கப் பின்னலாய்த் தான்மிளிர் தாடி,
தலையில் மிலைந்த தனிநீள் தொப்பியோ
முகிலைத் துளைத்து முன்உயர்ந் திருந்தது
காடுகள் அனைத்தும் கவினொளி விதைத்தது
கொடுத்தும் நூறு கொள்ளவே முடியா
**மர்க்காஆ யிரத்திலும் வாங்கிட முடியா.

இப்போ புகழ்ந்தேன் என்சீர் மனிதரை
பொறுங்கள், மணமகள் தோழியைப் புகழ்வேன்!
மணமகள் தோழி வந்தளெங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததெங் கிருந்து?   610
மணமகள் தோழி வந்தளங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததங் கிருந்து
*தனிக்காக் கோட்டைத் தன்பின் புறத்தால்
*புதிய கோட்டைப் புணர்வெளிப் புறத்தால்.

அங்கிருந் தாயினும் அவளைப் பெற்றிலர்
அங்ஙனம் பெறற்கு ஆதாரம் சற்றிலை
மணமகள் தோழி வந்தளங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததங் கிருந்து
*வெண்கட லிருக்கும் வியன் நீரிருந்து
விரிந்து அகன்ற வியநீர்ப் பரப்பிருந்(து).    620

அங்கிருந் தாயினும் அவளைப் பெற்றிலர்
அங்ஙனம் பெறறற்கு ஆதாரம் சற்றிலை
திகழ்தரை **சிறுபழச் செடியொன்(று) வளர்ந்தது
படர்புதர் செந்நிறப் பழந்தரு **மொருசெடி
வளர்ந்தது ஒருபுல் வயலில் ஒளியொடு
பூத்தது பொன்னிறத் தொருபூ காட்டிலே
மணமகள் தோழி வந்தள்அங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அங்கிருந் தெடுத்தனர்.

மணப்பெண் தோழியின் வாய்அழ கானது
நுவல்பின் லாந்தின் **நூனாழி போன்றது,   630
உயர்மணத் தோழியின் உயிர்ப்புள விழிகள்
விண்ணகத் தொளிரும் விண்மீ னனையவை,
மணப்பெண் தோழியின் வளப்புகழ்ப் புருவம்
கடல்மேற் திகழும் கவின்நிலாப் போன்றவை.

தோன்றுமெம் மணப்பெண் தோழியைக் காண்பீர்
பூக்கழுத் தில்நிறை பொன்னிறச் சுருள்கள்
சென்னியில் நிறைய பொன்னிறக் கூந்தல்
தங்க வளையல்கள் தளிர்க் கரங்களிலே
பொன்னினால் மோதிரம் பூவிரல் களிலே
பொன்னினால் அமைந்த பொன்மணி காதிலே   640
தங்கநூல் முடிச்சுகள் துங்கவிற் புருவம்
முத்தலங் காரம் வித்தகக் கண்ணிமை.

நனிமதி திகழ்வதாய் நானும் எண்ணினேன்
பொன்னின் வளையம் மின்னிய போதினில்;
எல்லவன் ஒளிர்வதாய் எண்ணினேன் நானும்
சட்டையின் கழுத்துப் பட்டி ஒளிர்கையில்;
நாவாய் ஒன்று நகர்வதா யெண்ணினேன்
தலையில் தொப்பி தளர்ந்தசை கையிலே.

மணப்பெண் தோழியை வானாய்ப் புகழ்ந்தேன்
பார்க்க விடுங்கள் நோக்குமெல் லோரையும்   650
அனைவரும் இங்கே அழகா னவரா
முதியோர் எல்லாம் அதிமதிப் பினரா
இளைஞர்கள் எல்லாம் எழிலா னவரா
கூட்டத்தில் அனைவரும் கொள்சிறப் பினரா!

மற்றஎல் லோரையும் இப்போது பார்த்தேன்
அனேகமாய் அனைவரும் அறிந்தவர் தாமே
இங்கிப் படிமுன் னிருந்தது மில்லை
இருக்கப் போவது மிலையினி நிச்சயம்
கூட்டத்தில் அனைவரும் கொள்சிறப் பினராய்
அனைவரும் இங்கே அழகா னவராய்    660
முதியோர் எல்லாம் அதிமதிப் பினராய்
இளைஞர்கள் எல்லாம் எழிலான வராய்;
வெளுப்புறு முடையில் முழுப்பே ருமுளர்
உறைபனி மூடிய உயர்காட் டினைப்போல
கீழ்ப்புறம் எல்லாம் கிளர்புல ரொளிபோல்
மேற்பபுற மெல்லாம் மிளிர்வை கறைபோல்.

வெள்ளிக் காசுகள் மிகமலிந் திருந்தன
பொற்காசு விருந்தில் பொலிந்து கிடந்தன
முழுக்கா சுப்பை முன்றிலில் கிடந்தன
பணப்பை பாதையில் பரவிக் கிடந்தன   670
அழைக்கப் பட்ட அயல்விருந் தினர்க்காய்
அழைத்த விருந்தினர் அதிபெரு மைக்காய்."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அழிவிலாப் பாடலின் ஆத(஡)ரத் தூணவன்
வண்டியில் இதன்பின் வந்தே யேறினன்
திகழ்அகம் நோக்கிச் செய்தனன் பயணம்;
தன்கதை பற்பல தாழ்விலா திசைத்தான்
மந்திரப் பாடல்கள் மாண்புறப் பயின்றான்
ஒருகதை பாடினான் இருகதை பாடினான்
மூன்றாம் கதையும் முடிவுறும் போது   680
மோதிற்று பாறையில் முன்வண்டி விற்கால்
முட்டிற் றடிமரக் குற்றியில் ஏர்க்கால்
நொருங்கிச் சிதைந்தது பெருங்கவி வண்டி
பாடகன் விற்கால் ஊடிற்று வீழ்ந்தது
ஏர்க்கால் வெடித்து இற்றுப் பறந்தது
பலகைகள் கழன்று பரவின பெயர்ந்து.

முதிய வைனா மொயினன் மொழிந்தான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"இங்கே இருக்கும் இளைஞர்கள் மததியில்
வளர்ந்திடும் தேசிய மக்களின் மத்தியில்    690
அல்லது முதுமை அடைந்துளார் மத்தியில்
தளர்ந்தரு கிவரும் சந்ததி மத்தியில்
துவோனலா ஏகுவார் எவரெனு முளரோ
சாவுல குக்குப் போவார் உளரோ
துவோனலா விருந்து துறப்பணம் கொணர
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர
சறுக்கு வண்டியைச் சமைக்கப் புதிதாய்
வண்டியைத் திருத்தி வருபுதி தமைக்க?"

இளைஞரும் அத்துடன் இவ்விதம் கூறினர்
முதுமையுற் றோரும் மறுமோழி கூறினர்:   700
"இல்லை யிங்குள இளைஞரின் மத்தியில்
இல்லை முதியவர் எவரிலும் நிச்சயம்
உயர்குடி மக்களில் ஒருவரு மில்லை
வீரம் நிறைந்த வீரரில் இல்லை
வல்லவன் துவோனலா செல்லுதற் கொருவர்
இறப்புல குக்கு எழுவோர் ஒருவர்
துவோனலா விருந்து துறப்பணம் கொணர
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர
சறுக்கு வண்டியைச் சமைக்கப் புதிதாய்
வண்டியைத் திருத்தி வருபுதி தமைக்க."   710

முதிய வைனா மொயினன் பின்னர்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்
தானே மீண்டும் போனான் துவோனலா
படுமாய் வுலகு பயணம் செய்தான்
துவோனலா விருந்து துறப்பணம் கொணர்ந்தான்
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர்ந்தான்.

முதிய வைனா மொயினன் அதன்பின்
நீல நிறவனம் நிமிர்ந்தெழப் பாடினான்
அரியசிந் தூரம் அதிலெழப் பாடினான்
உகந்ததாய்ப் பேரி உயர்ந்தெழப் பாடினான்   720
அவற்றிலே யிருந்து அமைத்தான் வண்டி
அவற்றில் விற்கால் அமைத்தான் வகையாய்
ஏர்க்கால் அவற்றில் எடுத்தான் பின்னர்
நுகமரம் எல்லாம் இயற்றி முடித்தான்
சறுக்கு வண்டி திருத்தினான் இவ்விதம்
அப்புது வண்டியை அமைத்து முடித்தான்
புரவிக் குட்டியை அலங்கா ரித்தான்
மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது
ஏறிச் சறுக்கு வண்டியில் இருந்தனன்
ஏறி வண்டியில் இருந்து கொண்டனன்;   730
சாட்டைவீ சாமல் தனிப்பரி விரைந்தது
**மணிஅடி யிலாமலே வளர்பரி விரைந்தது
பழகிய சதுப்பு படர்நிலம் விரைந்தது
இரையுள்ள இடத்தே எழிற்பரி விரைந்தது
முதிய வைனா மொயினனைக் கொணர்ந்தது
என்றுமே நிலைத்த இசைப்பா டகனை
அவனது சொந்த அகல்கடை வாயில்
சொந்தக் களஞ்சிய முன்றிலின் முன்னே.



பாடல் 26 - லெம்மின்கைனனின் ஆபத்தான பிரயாணம்  *



அடிகள் 1 - 382 : தன்னைத் திருமணத்துக்கு அழைக்காத காரணத்தால் ஆத்திரம் கொண்ட லெம்மின்கைனன் வடநாட்டுக்குப் புறப்படுகிறான். அங்கு அவனுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் பற்றியும் முன்னர் அங்கு ஏற்பட்ட மரணங்கள் பற்றியும் கூறித் தாய் தடுத்தும்கூடக் கோளாமல் பயணத்தை மேற்கொள்கிறான்.

அடிகள் 383 - 776 : அவனுடைய பயணத்தின்போது பல ஆபத்தான இடங்களைக் கடக்க நேர்ந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாகத் தனது மந்திர அறிவினால் எல்லாவற்றிலும் வெற்றி காண்கிறான்.


அஹ்தி என்பான் அகல்தீ வுறைபவன்
பரந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்
உழுதுகொண் டிருந்தான் ஒருவயல் அவனே
உழுது புரட்டினான் ஒருவய லையவன்
அவனது செவிகள் அதிநுண் தகையன
கேட்கும் சக்தியும் கிளர்கூர் மையது.

கேட்டதோர் கூச்சல் கிராமத் திருந்து
ஏரிக்கு அப்பால் எழுந்தது சத்தம்
பனிக்கட்டி மீதில் பாதம் ஊன்றொலி
சமபுற் றரைமேல் சறுக்குவண் டியினொலி;   10
அவனுக் கொருநினை வப்போ துதித்தது
நெஞ்சிலோர் சிந்தனை நேரா யெழுந்தது;
வடபால் நிலம்திரு மணம்நடந் ததுவோ
எழும்குடி மனிதரின் இரகசியக் கூட்டமோ!
தன்வாய் கோணித் தலையைத் திருப்பினன்
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்
குருதியும் வடிந்து கொடிதிறங் கிற்று
காண்அபாக் கியவான் கன்னத் திருந்து;
உடனே தனது உழவினை நிறுத்தினான்
புரட்டலைப் பாதிப் புன்வயல் நிறுத்தினான்   20
எழில்நிலத் திருந்து ஏறினான் குதிரையில்
புறப்பட் டான்இல் போவதற் காக
அன்பு நிறைந்த அன்னையின் அருகே
பெரும்புக ழுறுதன் பெற்றோர் பக்கம்.

சென்றதும் அவ்விடம் செப்பினன் இங்ஙனம்
வந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தனன்:
"ஓ,என் அன்னையே, உயர்வய தினளே!
உணவினை விரைவாய் உடனெடுத் திடுவாய்
இங்கொரு பசியுளோன் இருக்கிறான் உண்ண
ஒருகடி கடிக்க உளம்கொள் பவற்கு;    30
அதேகணம் சூட்டை ஆக்கிடு சவுனா
அறையில்தீ மூட்டி ஆக்கிடு வெப்பம்
மனிதனைச் சுத்தமாய் மாற்றுமவ் விடத்தில்
தனிவிறல் வீரனைத் தயார்செயு மிடத்தில்."

அப்போது லெம்மின் கைனனின் அன்னை
உணவினைக் கொஞ்சம் உடன்விரைந் தெடுத்தாள்
பசியுறு மனிதன் பார்த்துண் பதற்காய்
ஒருகடி கடிக்க உளம்கொளு பவற்காய்
குளியல் குடிசையும் கொண்டது தயார்நிலை
ஆயத்த மானது அச்சவு னாவறை.   40

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
உணவினைக் கொஞ்சம் உடன்விரைந் தெடுத்தான்
அந்நே ரத்தே அடைந்தான் சவுனா
குளியல் அறையுளும் குறுகினன் அங்ஙனம்;
அங்கொரு **பறவை அலசிக் கொண்டது
செய்தது சுத்தம் திகழ்**பனிப் பறவை
தலையை ஒருபிடி சணலைப் போலவும்
கழுத்தையும் வெளுப்பாய்க் கழுவிக் கொண்டது.

வீட்டினுள் சவுனா விருந்தவன் சென்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:   50
"ஓ, என் அன்னையே, உயர்வய தினளே!
குன்றத் திருக்கும் குடிற்கே விரைவாய்
அங்கிருந் தெடுத்துவா அழகிய உடைகளை
மாசிலா ஆடைகள் வாகாய்ச் சுமந்துவா
நானே அவற்றை நன்கணி வதற்கு
என்னுடல் அவற்றை எடுத்துத் தரிக்க!"

விரைந்து அன்னையும் வினவுதல் செய்தாள்
மிகுவய துப்பெண் விசாரணை செய்தாள்:
"எங்கே செல்கிறாய் எந்தன் மகனே
**சிவிங்கிவேட் டைக்கா செல்லப் போகிறாய்    60
அல்லது காட்டெரு ததன்பின் சறுக்கவா
அல்லது எண்ணமா அணிலதை எய்ய?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தாய்!
சிவிங்கிவேட் டைக்குச் செல்லுதற் கில்லை
சறுக்கவு மில்லைத் தனிக்காட் டெருதுபின்
அல்லது இல்லை அணிலையும் எய்தல்:
வடநாட்(டு) விருந்து புறப்படப் போகிறேன்
இரகசியக் குடியர் இடம்போ கின்றேன்;   70
எழிலார் உடைகளை என்னிடம் கொணர்வாய்
கொணர்வாய் என்னிடம் குறைவிலா ஆடை
கடிமண வீட்டில் காட்சியா யிருக்க
விருந்து நிகழ்ச்சிக் கணிந்து நான்செல்ல."

தனது மைந்தனைத் தடுத்தாள் அன்னை
தனது மனிதனைத் தடுத்தாள் பெண்ணவள்
வேண்டாம் என்றனர் விளங்கிரு பெண்கள்
தடுத்தனர் இயற்கையின் தையலர் மூவர்
புறப்ப(ட்)டு லெம்மின் கைனன் போவதை
நிகழ்நல் வடபால் நிலவிருந் துக்கு.    80

மாதா இவ்விதம் மகனுக் குரைத்தாள்
பெருவய தினள்தன் பிள்ளைக் குரைத்தாள்:
"அன்பின் மகனே, அகலுதல் வேண்டாம்!
நேசமார் மகனே, தூரநெஞ் சினனே!
வைபவ விருந்து வடநாட் டுக்கு
குழுவினர் பலபேர் குடிக்கும் வைபவம்!
அங்கே நீயும் அழைக்கப் பட்டிலை
நீயோ அங்கே தேவைப் பட்டிலை."

குறும்பன் லெம்மின் கைனனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:   90
"அழைப்புக் கேகுவர் அதிஇழிந் தவர்கள்
அழைப் பில்லாமல் அரியோர் துள்ளுவர்;
அழைக்கப் பட்டவர் அம்நிலா வயதினர்
ஓய்வே இல்லா உயர்தூ துவராம்
தீப்பொறி சிந்தும் திகழ்வாள் அலகில்
குவிந்தொளி சிதறும் கூரிய முனையில்."

லெம்மின் கைனனின் அன்னையப் போது
தடுக்க முயன்றாள் தனையனை இன்னும்:
"வேண்டாம் வேண்டாம் விறல்என் மதலாய்!
வடபுல விருந்தில் வலிந்தே செல்லல்!   100
பயணத் தறிவாய் பற்பல அற்புதம்
மாபெரும் அதிசயம் வந்திடும் வழியில்
வன்கொடு மூன்று மரணம் நேர்ந்திடும்
மனிதனின் இறப்பும் வந்திடும் மூன்று."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வயோதிப மாதர்க்(கு) மரணம்என் றும்தான்
எல்லா இடத்திலும் இவர்க்கிறப் புத்தான்
இவைசார் அக்கறை இல்லைவீ ரர்க்கு
இவைபற்றி கவனமும் இல்லைஅ வர்க்கு    110
ஆயினும் அவைஅவை அங்ஙனம் நிகழ்க,
என்றன் காதில்நீ இயம்புவாய் கேட்க
எந்த மரணம் இனிமுதல் நிகழ்வது
முதலில் நிகழ்வதும் முடிவில் நிகழ்வதும்?"

லெம்மின் கைனனின் அன்னை மொழிந்தனள்
முதிய மாதவள் மொழிந்தாள் மறுமொழி:
"மரணம் பற்றி வழுத்துவேன் உள்ளதை
மனிதன் விருப்புபோல் மரணம் நிகழா
முதல்வரப் போகும் மரணம் மொழிவேன்
மரணம் இதுவே வருமுதல் மரணம்    120
சிறிதுதூ ரம்நீ செல்வாய் பாதையில்
பாதையில் ஒருநாள் பயணம் முடிப்பாய்
அப்போ(து) நெருப்பு ஆறொன் றெதிர்ப்படும்
அந்தஆ றுன்னெதிர் வந்தே அடுக்கும்
ஆற்றில்தீ வீழ்ச்சி அங்கே தோன்றிடும்
படர்தீ வீழ்ச்சியில் பாறைத்தீ வொன்(று)
பாறைத் தீவிலே பதிந்ததோர் தீமுடி
தீமுடி யதிலே தீக்கழு கொன்று
இரவில் அலகை எடுத்திடும் தீட்டி
பகலில் நகத்தைப் படுகூ ராக்கிடும்    130
அவ்வழி வந்திடும் அந்நிய மனிதர்க்(கு)
தன்வழி வந்திடும் தனிநபர் ஒருவர்க்(கு)."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"இந்த மரணம் அரிவையர் மரணம்
வல்வீ ரன்தன் மரணமே அல்ல
நல்லது அதற்கோர் நல்வழி காண்பேன்
ஏதெனும் நல்லதாய் எண்ணுவேன் கருமம்:
பரியொன்று தோன்றநான் பாடுவேன் **'அல்டரி'ல்
'அல்டரி'ல் மனிதனும் அமையநான் பாடுவேன்   140
என்னுடைய பக்கத் தேகுதற் காக
என்றன் முன்புறம் இனிதுற நடக்க;
தாரா போல்நான் மூழ்குவேன் அப்போ
அடியில் வாத்தாய் ஆழத் தேகுவேன்
கழுகின் கூரிய உகிர்களின் கீழாய்
**இராட்சசக் கழுகின் இகல்விரற் கீழாய்;
"ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தோய்!
இடையில்வந் தெய்தும் இறப்பினை நவில்க!"

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"இந்த மரணம் இரண்டாம் மரணம்    150
சிறிதுதூ ரம்நீ செல்வாய் பாதையில்
பயணம் முடிப்பாய் பகரிரண் டாம்நாள்
நெருப்புக் கணவாய் நேர்ப்படும் அப்போ
அதுஉன் பாதையில் அணுகும் குறுக்கே
வெகுதொலை கிழக்கில் மிக்குநீண் டிருக்கும்
வடமேல் எல்லையும் முடிவற் றிருக்கும்
கொதிக்கும் கற்களைக் கொண்டது நிறைய
எரியும் பாறைகள் இருக்கும் அதனுள்;
அதனுட் சென்ற ஆட்கள்பல் நூற்றுவர்
அதனுள் நிறைந்தவர் ஆயிரக் கணக்காம்   160
வாள்விற லார்எ(ண்)ணில் வரும்ஒரு நூறுபேர்
இரும்புப் பரிகள் இருக்குமோ ராயிரம்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"அதுவொரு மனிதனின் மரணமே அல்ல
அதுவொரு வீரனின் அழிவுமே யல்ல
ந(ல்)லது அதற்கொரு நனிசூழ் வெண்ணினேன்
நினைத்தேன் சூழ்ச்சியை நேர்வழி கண்டேன்
பாடுவேன் தோன்றிடப் பனித்திரள் மனிதன்
மிகுபலப் பனித்திரள் வீரனைப் பாடுவேன்  170
அனலின் நடுவிலே அவனைத் தள்ளுவேன்
அழுத்துவேன் பலமாய் அவனை நெருப்பில்
கொதிசவு னாவில் குளிப்பதற் காக
அத்துடன் செப்பில் அமைந்த தூரிகை;
மாறியப் போதே மறுபுறம் செல்வேன்
எரியின்ஊ டாக எனைக்கொடு போவேன்
எனது தாடியாங் கெரியா திருந்திடும்
சுருளுறும் தலைமுடி கருகா திருந்திடும்
ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தோய்!
இறுதிவந் தெய்தும் இறப்பினைப் பகர்வாய்!"   180

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"மொழியுமிம் மரணம் மூன்றாம் மரணம்
செல்லுவாய் இன்னும் சிறுதொலை பாதையில்
முடிந்திடும் இன்னொரு முழுநாள் இதிலிருந்(து)
வடபால் நிலத்து வாயிலை நோக்கியே
அந்தமா நிலத்து அமைகுறும் பாதையில்
உன்மீ தப்போ ஓரோநாய் பாய்ந்திடும்
அடுத்ததாய்க் கரடியும் அடித்திடும் உன்னை
வடபால் நிலத்து வாயில் தலத்தினில்
மிகவும் குறுகிய மிகச்சிறு ஒழுங்கையில்;   190
உண்டது இதுவரை ஒருநூற் றுவராம்
அழிந்து போனவர் ஆயிரம் வீரராம்
உனைஏன் அவையும் உண்டிட மாட்டா
காப்பில்லா உனைஏன் கடிதழித் திடாவாம்?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"செம்மறி யாட்டுக் குட்டியைத் தின்னலாம்
பச்சையாய்க் கிழித்துப் பலதுண் டாக்கலாம்
ஆயினும் முடியா அதுபல வீனரை
அல்லது சோம்பேறி யானவீ ரரையும்!   200
மனிதனின் பட்டிநான் நனிபூட் டியுளேன்
நனிபொருத் தியுளேன் மனிதனின் ஊசிகள்
வலிதுகட் டியுளேன் மறவரின் வளையம்
ஆதலால் நானும் வீழவே மாட்டேன்
*உந்தமோ என்பான் ஓநாய் வாய்களில்
பெரிதே சபிப்புறு பிராணியின் அலகில்.

இப்போ தோநாய்க்(கு) எண்ணினேன் சூழ்ச்சியொன்(று)
கரடிக்கும் கூடக் கண்டுளேன் ஓர்வழி
ஓநாய் வாய்க்கட் டுண்டிட விசைப்பேன்
கரடிக்கு இரும்புக் கட்டுறப் பாடுவேன்    210
தரைமட்ட மாக்கித் தரிபத ராக்குவேன்
சுளகிலே சலித்துப் துகளாக மாற்றுவேன்
இங்ஙனம் விடுவித் தென்னையே கொள்வேன்
இங்ஙனம் பயணத் தெல்லையை அடைவேன்."

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"எல்லையை இன்னும்நீ எய்தவே யில்லை!
அப்படிப் பயணித் தகலும் காலை
மாபெரும் அற்புதம் வரும்பய ணத்தில்
துயர அதிசயம் தோன்றிடும் மூன்று
மனிதச் சாவுக்கு வந்திடும் முவ்வழி;    220
அவ்விடத் தைநீ அடைந்திடும் நேரம்
நேர்ந்திடும் இன்னும் நெடுந்துயர்ச் சம்பவம்:
பயணித் தொருகுறும் பாதையில் செல்வாய்
வடநாட்டு முற்றம் வந்துநீ சேர்வாய்
அங்கொரு வேலி அமைந்திடும் இரும்பால்
அடைப்பு உருக்கினால் ஆனதும் வந்திடும்
நிலத்தினி லிருந்து நீள்வான் வரையிலும்
விண்ணிலே யிருந்து வியன்புவி வரையிலும்
ஈட்டிகள் செருகி இருந்திடும் அதனில்
வரிச்சுகள் நெளியும் புழுக்களால் ஆனவை   230
பிணைப்புண் டிருந்தன பெரும்பாம் பிணைத்து
கனபல்லிக் **கணத்தால் கட்டிய வேலியாம்;
வால்கள் இருப்பது வளைந்தசைந் திருக்க
மொட்டந் தலைகள் முழுதசைந் தாட
மண்டை ஓடுகள் வாய்உமிழ்ந் திருக்க
வாலெலாம் உள்ளே வருதலை வெளியே.

பூமியில் இருந்தவை புழுக்கள்வெவ் வேறாம்
வரிசையாய்ச் சர்ப்பம் விரியன் பாம்புகள்
மேலே நாக்குகள் சீறிக் கிடப்பன
கீழே வால்கள் ஆடிக் கிடப்பன;    240
அனைத்திலும் பயங்கர மான ஒன்றுளது
குறுக்கே வாயிலில் படுத்துக் கிடப்பது
நீண்டது வசிப்பிட மரத்திலும் நெடியதாய்
ஒழுங்கைக் கதவத் துயர்தூண் பருப்பம்
மேலே நாவினால் சீறிக் கிடக்கும்
மேலே வாயினால் மிகஇரைந் திருக்கும்
எதிர்பார்த் தல்ல எவரையும் வேறு
ஏழை உனையே எதிர் பார்த்தங்கு."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:   250
"அந்த மரணம் அதுகுழந் தையின்சா
அதுவொரு வீரனின் மரணமே யல்ல;
அனலை வசியப் படுத்தவும் அறிவேன்
தணலை அணைத்துத் தணிக்கவும் அறிவேன்
தடுத்துப் புழுக்களை நிறுத்தவும் அறிவேன்
அரவைத் திருப்பி அனுப்பவும் அறிவேன்;
நேற்றுத் தானே நிகழ்ந்த திச்சம்பவம்
விரியன் பாம்பு விளைநிலம் உழுதேன்
பாம்புப் பூமியைப் பாங்காய்ப் புரட்டினேன்
விளங்கிய எனது வெற்றுக் கைகளால்   260
விரியன் பாம்புகள் விரல்நகத் தெடுத்தேன்
தூக்கினேன் பாம்புகள் துணிந்தென் கைகளால்
பத்து விரியன் பாம்புகள் கொன்றேன்
அழித்தேன் நூறு கறுத்தப் புழுக்களை
ஆயினும் விரியனின் இரத்தமென் உகிர்களில்
பாம்பின் கொழுப்புப் படிந்தது கைகளில்;
ஆதலால் எனக்கு அதுநிக ழாது
என்றுமே இனிமேல் ஏற்பட மாட்டா
இராட்சசப் புழுவின் வாய்க்குண வாக
பாம்பொன் றின்வாய்ப் படுமிரை யாக:   270
நீசப் பிராணிகள் நீள்கரத் தெடுப்பேன்
கழுத்துக்கள் அனைத்தையும் முறுக்கிப் பிழிவேன்
விரியன் பாம்பினை வீழ்த்துவேன் ஆழம்
இழுப்பேன் தெருவின் ஓரம் புழுக்களை
வடநில முன்றிலால் வைப்பேன் அடிகளை
செல்வேன் முன்னே இல்லத் துள்ளே."

லெம்மின் கைனின் அன்னை கூறினள்:
"வேண்டாம், எனது வியன்மகன் வேண்டாம்!
வடபுல வசிப்பிட வழிச்செலல் வேண்டாம்!
வேண்டாம் சரியொலா வில்அமை வீட்டினுக்(கு)!   280

வன்**வார் வாளுறு மனிதர் அங்குளார்
போரின் படைக்கல வீரர்கள் அங்குளார்
குடித்துன் மத்தம் பிடித்த மனிதர்கள்
அதிகம் குடித்து அறக் கெட்டவர்கள்
ஏழையே உன்னை இனிச்சபித் திசைப்பார்
கூரிய அலகுறும் கொடுவாள் களுக்கு;
பாடப் பட்டனர் பலசீர் மனிதர்முன்
வெல்லப் பட்டனர் மிகவுயர் மனிதரும்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:   290
"நான்அங்கு முன்னர் நனிசென் றுள்ளேன்
வாபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
எனைப்பா டினரிலை லாப்பியர் எவரும்
என்னைச்சா டினரிலை எத்துர்யா மனிதரும்
நானே பாடுவேன் நவில்லாப் பியரை
சாடுவேன் துர்யா மனிதர்கள் தம்மையும்
அவர்கள் தோள்ஊடாய் அங்குநான் பாடுவேன்
தாடையின் ஊடாய்ச் சரியாய்ப் பேசுவேன்
சட்டைக் கழுத்து சரியிரண் டாம்வரை
மார்பு எலும்புகள் வலிதுடை படும்வரை."   300

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"ஓ,என் மைந்தா, அபாக்கிய வானே!
முன்னைய நிகழ்ச்சியை இன்னமும் நினைவாய்
பழையதைப் பற்றிப் புழுகியே நிற்கிறாய்
நீயங்கு சென்றது நிசம்தான் முன்னர்
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
தேங்கிய குளங்களில் நீந்திய துண்டுதான் பயின்றாய் **முட்செடி பலவுள குளங்களில்
இரையுநீர் வீழ்ச்சியில் இறங்கி விழுந்தாய்
பொங்கிப் பாயும் புதுநீ ரோட்டம்    310
துவோனிநீர் வீழ்ச்சியைத் தொட்டே அறிந்தாய்
அளந்தாய் மரண அகிலத் தருவியை
இன்றும் அங்குதான் இருந்திருப் பாய்நீ
ஆயினும் ஏழையுன் அன்னையால் தப்பினாய்.

நெஞ்சில்வை யப்பா நினக்குநான் மொழிவதை
வருகிறாய் நீயே வடபுல வசிப்பிடம்
உண்டு கழுமரம் குன்றுகள் நிறைய
முன்றில்கள் நிறைய முழுத்தூண் உள்ளன
நிறைய மனிதரின் தலைகள் அவற்றிலே
கழுமர மொன்றுதான் தலையிலா துளது   320
அக்கழு மரத்தின் அருங்கூர் முனைக்கு
உன்தலை கொய்தே உடனெடுக் கப்படும்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"மடையன் அவற்றால் மனத்துயர் கொள்வான்
தகுதியற் றவன்தான் தான்கவ னிப்பான்
ஐந்து ஆறுபோ ராட்டஆண் டுகளில்
கொடும்ஏழ் யுத்தக் கோடைகா லத்தில்
மறவன் அவற்றை மனதில் கொள்ளான்
தவிர்க்கவ<ம் செய்யான் தான்குறைந் தளவு;஠ 330
என்போ ராடை எடுத்துக் கொணர்வாய்
பழைய போராடையைப் பாங்காய்க் கொணர்வாய்!
எந்தையின் வாளை இனிநான் எடுக்கிறேன்
அப்பா வின்வாள் அலகைத் தேடுவேன்;
அதுவும் வெகுநாள் அருங்குளிர்க் கிடந்தது
இருந்தது மறைவாய் இயைபல் லாண்டு
அங்கே இதுவரை அழுதுகொண் டிருந்தது
தரிப்போன் ஒருவனை எதிர்பார்த் திருந்தது."

அங்ஙனம் யுத்த ஆடையைப் பெற்றனன்
படுபழம் போரின் உடையைப் பெற்றனன்   340
தந்தையின் நித்தியத் தனிவாள் எடுத்தனன்
தாதையின் போரின் தோழனைக் கொண்டனன்
பலகையில் அதனைப் பலமாய்க் குத்தினான்
நிலத்தில் குத்தி அலகைத் திணித்தான்:
திருப்பி வாளினைச் செங்கைப் பிடித்தான்
பழச்செடி முடியில் ஒருபுதுப் பறவைபோல்
அல்லது வளர்**சூ ரைச்செடி போல;
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வடபால் நிலத்து மனைகளில் அரிது
சரியொலாப் பகுதியின் தங்ககத் தரிது    350
அரியஇவ் வாளினை அளக்க முடிந்தவன்
இகல்வாள் அலகை எதிர்க்க முடிந்தவன்."

உருவினன் குறுக்குவில் உறும்சுவ ரிருந்து
உரமுறு கொளுவியில் இருந்தே ஒருவில்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"நானொரு மனிதனாய் நவில்வேன் அவனையே
நானொரு வீரனாய் நம்புவேன் அவனையே
எந்தன் குறுக்குவில் இழுப்பவன் தன்னை
வளைந்தஎன் வில்லை வளைப்பவன் தன்னை   360
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
அந்தச் சரியொலா அமையகங் களிலே."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
எழிலார் தூர நெஞ்சினன் என்போன்
அமர்க்காம் உடைகளை அணிந்து கொண்டனன்
சமர்க்காம் உடைகளைத் தரித்துக் கொண்டனன்
தன்அடி மைக்குச் சாற்றினான் இவ்விதம்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அறவிலைக் கெடுத்த அடிமையே கேள்நீ!
காசுக்குப் பெற்ற கூலியே, கேள்நீ!    370
அமர்க்காம் குதிரையை ஆயத்தம் செய்வாய்
போர்ப்பரிக் குட்டிக்குப் பூட்டு அணிகலன்
நான்விருந் துக்கு நலமுடன் செல்ல
கூளிக் குடியரின் கூட்டத் தேக!"

அந்த அடிமை அமைபணிச் சேவகன்
முன்னேர் விரைந்து முன்றிலை யடைந்து
அம்பரிக் குட்டிக் கணிகலன் பூட்டி
தீச்செந் நிறத்ததை ஏர்க்கால் பூட்டி
அங்கே யிருந்து அவன்வந் தியம்பினான்:
"என்வே லையைநான் இனிதே முடித்தேன்   380
ஆயத்த மாக்கினேன் அரியநும் பரியை
நற்பரிக் குட்டியை நன்கலங் கரித்தேன்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
புறப்பட் டேகப் புணர்ந்தது நேரம்
ஒருகை இணங்க மறுகை பிணங்க
நரம்புள விரல்பல வந்தம் செய்தன;
நினைத்தவா றவனே நேர்புறப் பட்டான்
அவதான மிலாதே அவன்புறப் பட்டனன்.

சேய்க்குத் தாயவள் செய்தாள் போதனை
மூத்தோள் பிள்ளையை முன்னெச் சரித்தாள்   390
உத்தரத் தின்கீழ் உயர்கத வருகே
கலயமும் கெண்டியும் கலந்தவைப் பிடத்தில்:
"எந்தன் மகனே, இணையிலா தவனே!
எனது குழந்தாய், இகலுரப் பிள்ளாய்!
நிதக்குடிக் குழுவிடம் நீசெல நேர்ந்தால்
எங்கே யாயினும் அங்ஙனம் நிகழ்ந்தால்
சாடியில் உள்ளதில் பாதியை அருந்து
கலயப் பாதியே கவனமா யருந்து
பெறட்டும் மற்றவன் அடுத்துள பாதியை
தீயமா னிடர்க்காம் தீதுறும் பாதி   400
சாடியின் அடியிலே சார்ந்துள புழுக்கள்
ஆழக் கலயத் தமைவன கிருமி."

போதனை இன்னம் புரிந்தாள் மகற்கு
தன்பிள் ளைக்குச் சாற்றினள் உறுதியாய்
தூரத்து வயல்கள் தொடுமுடி விடத்தில்
கடைசி வாயிற் கதவத னருகில்;
"நிதக்குடிக் குழுவிடம் நீசெல நேர்ந்தால்
எங்கே யாயினும் அங்ஙனம் நிகழ்ந்தால்
இருக்கையில் பாதி இருக்கையி லிருப்பாய்
அடியிடும் போது அரையடி வைப்பாய்   410
பெறட்டும் மற்றவன் அடுத்துள பாதியை
தீயமா னிடர்க்காம் தீதுறும் பாதி
அவ்விதம் வருவாய் அருமனி தனாய்நீ
நீமா றிடுவாய் நிகரிலா வீரனாய்
மக்கள்மன் றங்கள் மற்றுநீ செலலாம்
வழக்குகள் ஆய்ந்து வழங்கலாம் சமரசம்
வீரர்கள் நிறைந்த வியன்குழு மத்தியில்
மனிதர்கள் நிறைந்த கணங்களின் மத்தியில்."

பின்புறப் பட்டான் லெம்மின் கைனன்
அரும்பரி வண்டியில் அமர்ந்தவ னாக   420
சாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை
மணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்:
இகல்பரி வண்டியை இழுத்துச் சென்றது
உயர்பரி விரைந்து ஓடிச் சென்றது.

சற்றுநே ரம்மவன் சவாரியே செய்தான்
நற்சிறு பொழுதே நடத்தினன் பயணம்
பாதையில் கோழிப் பல்கணம் கண்டனன்
காட்டுக் கோழியின் கூட்டம் பறந்தது
பறவைகள் கூட்டமும் பறந்தே வந்தது
ஓடிச் சென்ற உயர்பரி முன்னே.    430

சிறுதொகை மட்டுமே இறகுகள் இருந்தன
காட்டுக் கோழியின் கவின்சிறை வழியில்
எடுத்தனன் லெம்மின் கைனனே அவற்றை
சேர்த்தே வைத்தனன் சிறுபை யொன்றிலே;
என்ன வருமென எவருமே யறியார்
பயணத் தென்ன நிகழுமென் றுணரார்
பயிலகத் தெதுவும் பயனுள தாகலாம்
அவசர தேவைக் கவைநலம் தரலாம்.

சிறிதே இன்னமும் செய்தனன் சவாரி
பாதையிற் கொஞ்சம் பயணம் செய்தனன்   440
அப்போ குதிரை நிமிர்த்திற் றதன்செவி
தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின.
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
அவன்தான் குறும்பன் தூர நெஞ்சினன்
சறுக்கு வண்டியில் தானே எழுந்து
சற்றே சரிந்து எட்டிப் பார்த்தனன்:
அன்னை சொன்னது அதுபோ லிருந்தது
சொந்தப் பெற்றவள் சொல்போ லிருந்தது
நிசமாய் அங்கொரு நெருப்பா றிருந்தது
குதிரையின் முன்னே குறுக்காய் எழுந்தது   450
ஆற்றிலே நெருப்பு வீழ்ச்சிதோன் றிற்று
பாய்வீழ்ச் சியில்தீப் பாறைத் தீவு
பாறைத் தீவிலே படியும் தீமுடி
நெருப்பு முடியிலோர் நெருப்புக் கழுகு
கழுகின் தொண்டையில் கனலே மூண்டது
வாயிலே தீவெளி வந்தது சீறி
இறகுகள் அனலாய் எங்கும் ஒளிர்ந்தன
தீப்பொறி சிதறி திசையெலாம் பறந்தது.

தூரநெஞ் சினனை தொலைவிற் கண்டது
லெம்மின் கைனனை நெடுந்தொலை கண்டது:   460
"எங்கப்பா பயணம் ஏ,தூர நெஞ்சின?
லெம்பியின் மைந்தனே, எங்கே எழுந்தனை?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வடபுல விருந்து, வழிப்புறப் பட்டேன்,
குடிக்கும் இரகசியக் குழுவிடம் போகிறேன்;
சற்று அப்பால் தள்ளியே நிற்பாய்
வழியினை விட்டே விலகியே நிற்பாய்
பயணியைப் போகப் பாங்குடன் விடுவாய்
லெம்மின் கைனனை விடுவாய் சிறப்பாய்   470
கடந்துசெல் தற்கு கடுகிநின் புறமாய்
உனக்கப் பாலே உடன்நடந் தேக!"

இவ்விதம் கழுகால் இயம்ப முடிந்தது
வியன்தீத் தொண்டையால் மெதுவாய்ச் சொன்னது:
"நானொரு பயணியை நனிசெல விடுவேன்
நிசமதிற் சிறப்பாய் லெம்மின் கைனனை
என்வா யுடா யேகுவ தற்கு
தொண்டையின் ஊடாய்த் தொடர்செல வுக்கு
அங்குதான் உன்றன் அகல்வழி செல்லும்
அங்கிருந் ததனுடை அமைநிலத் தேக   480
அந்தநீள் பெரிய அருவிருந் துக்கு
நிரந்தர மானதோர் நேரமர் வுக்கு."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
அதைப்பொறுத் ததிகம் அக்கறை யில்லை
சட்டைப் பையினில் தன்கை விட்டான்
சுருக்குப் பையினில் தொடுவிரல் நுழைத்தான்
காட்டுக் கோழியின் கறுப்பிற கெடுத்தான்
சிறிதே அவற்றை ம